Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, November 02, 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்..!!

தமிழகத்தை ஆள்பவர்கள் அறிவுசார் சமூகத்தை அறவே விரும்பவில்லை என்பது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்விற்கு அளவேதுமில்லையோ என்ற வேதனை தான் மிஞ்சுகிறது... மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் செலவிடும் நேரத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக சிறிதேனும் செலவிடக்கூடாதோ என்ற எண்ணமே எஞ்சுகிறது!!!

சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அறிவு சார் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படு என்ற அறிவிப்பு நமது நெஞ்சில் வந்து நெருப்பாய் மோதுகிறது...

முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை என்கிறார்கள்....

இதோ ஒரு உதாரண பின்னூட்டம்...

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது!!

என்ன ஒரு கொடூரமான கண்ணூட்டம்...


இந்த வாசகத்தை படிக்கும் போதே நரகலைத்தின்றதோர் உணர்வு வருகிறது...இவர்களின் அரசியல் ஜால்ராவிற்காக உலகளாவிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையையே மாற்றத்தலைப்படுகிறார்கள் இவர்கள்....

அதே பக்கத்தில் வந்திருந்த அறிவுசார் பின்னூட்டமொன்றும் உங்கள் பார்வைக்கு.!!!

This is purely unethical and against education. This place is opt for library because Anna University and IIT are located near to Library. If the government is really interested to provide medical care means they can appoint doctors and worker in government hospitals instead of doing this type of conversions. This is purely actions against DMK party not for the benifit of peoples. All student communities and educationalist like this library. ADMK goverment may avoid this typed of actions in future. I too vote ADMK party for the last election but disappointed. Kindly think for the people not againt DMK.

யாழ்ப்பாணத்தில் ஆயிரமாரயிரம் புத்தகங்களை அழித்ததாலேயே விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்த தமிழர்களின் உணர்வு எங்கே போயிற்று..

என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழ் மக்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களோ அடியேன் நான் அறியேன்..

தமிழகம் , முட்டாள்களின் தேசமாக மாறிக்கொண்டே வருவதில் மெத்த வருத்தம்....தமிழினம் மெல்ல இனிச்சாகும்....அதை வேடிக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!!!

(பின்னூட்டங்களை அனுமதியில்லாமல் எடுத்தாண்டதற்கு உரியவர்கள் மன்னிக்க!!)

Saturday, October 22, 2011

ஆனந்தவிகடனின் அல்ப அலப்பறை!!


அய்யாமாரே , அம்மாமாரே...

சவுக்கியமா? ஆனந்த விகடனின் அல்ப அலப்பறை பற்றிய இந்தப்பதிவு நகைச்சுவைக்காக இடப்பட்டத்தல்ல...சிந்திப்பதற்காக இடப்பட்டது....

நாம் மட்டுமல்ல , அப்பத்திரிக்கையும் தான்....

வெறும் சினிமாவை வச்சி மட்டுமே கல்லா கட்டுவது ஆனந்தவிகடனும் , குமுதமும் , குங்குமமும் என்பது தெரிந்த செய்திதான்..

இதுல பாருங்க சார் . தனியா சினிமா ஸ்பெஷல் போடறாங்களாம்..!



முன்னாள் குத்தாட்ட நடிகை இந்நாள் முதல்வர்.......முன்னாள் பைட் ஏக்டர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்...இதையெல்லாம் பாத்துமாடா பத்திரிக்கைகள் திருந்த மாட்டேங்குது???? தமிழகத்தின் இழிவுக்கு காரணம் சினிமா..அதை விட்டொழியுங்கள் மக்களே.!!


Thursday, August 25, 2011

அதிமுக ஆட்சியின் முதல் நூறு நாட்கள்!

இந்நாட்டின் மன்னர்களாகிய மக்களும் ,
சனநாயகத் தூண்களாகிய தின, வார, மாதப் பத்திரிக்கைகளும் ,
ஊழல், அராஜக , குடும்ப ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியாளர்களும்,
அரசியலில் சினிமாவா? அரசியல்வாதிகள் சினிமா எடுப்பதா என்று அன்றாடம் அராஜகத்திற்கெதிராக பொங்கியெழுந்த புது இளைஞர்களும்
வேண்டி விரும்பி , தாழ்மையுடன் கொண்டுவந்த அதிமுக ஆட்சிக்கு ஆயுசு நூறு நாள் ஆகிறது.!!

இதுவரை ஊழலே செய்திருக்காத ' அம்மா ' அவர்களே நீங்கள் தான் இந்த தமிழ்த்திருநாட்டை தங்கவளம் கொழிக்கச் செய்ய வேண்டும் என்று 'ஊரான் காசில் வாங்கிக்கட்டிய கொடநாட்டு' மாளிகையில் உடன்பிறவா சகோதரி சகிதம்  உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி வந்து முதலமைச்சராக்கி ஆயிற்று ஒரு நூறுநாள்.

இதுகாறும் பொதுச் சொத்துக்களையே அபகரித்திருக்காத புரட்சித்தலைவி 'டான்சி' புகழ் ஜெயலலிதா அவர்களின் சிறுதாவூர் பங்களா முன் 'நில அபகரிப்புப் போராட்டம் நடத்தி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி மகிழ்ந்த கம்யூனிஸ்டுகளின் ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டம் வெற்றியடைந்து ஆகிறது நூறு நாள்.!!

குடும்ப ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் , மனைவி மச்சினன் சகிதம் வாளெடுத்துப் போராடிய சினிமாச் சிங்கம் விஜய்காந்த் எதிர்க்கட்சி ஆகி ஆகிறது நூறு நாள்.!!

அளவிட முடியாத சாதனைகளை , அள்ளிட முடியாத நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த நூறுநாட்களை மறந்திட முடியுமோ? மக்களின் மனதில் பசுமரத்தாணியாய பதிந்து கிடக்கும் அம்மாவின் அரிய சாதனைகளைச் சொல்லிட இந்த வலைப்பூதான் போதுமோ?

தலைமைச்செயலகத்தைத் தரிசாக்க பல நூறு கோடி  பணம் வீண்.....அம்மா ஆட்சியைத்தவிர வேறெந்த மடையன் ஆட்சியில் இது போன்று மக்கள் பணம் வீணடிக்கப்படும்?இஃதொன்று போதாதா அம்மாவின் ஆட்சிசிறப்பிற்கு?

சமச்சீர் கல்வி புத்தகம் சரியில்லையென்று  2மாதம் பள்ளிக்குழந்தைகளின் படிப்பை வீண்டித்த அம்மாவைப்போன்ற அற்புத சக்தியைத் தவிர வெறெவரால் முடியும்?



ஆண்டாண்டுகாலமாய் இருந்த மின்வெட்டை ஆட்சிக்கு வந்தவுடன் ச்சூ மந்திரக்காளி போட்டு தீர்த்துவைத்த பெருமையைத் தான் என் சொல்வது?

அகில பாரதமும் பாராட்டும் வண்ணம் , சிவில் வழக்குகளுக்காக அதில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் கைது செய்யும் அரசியல் சாசனத்திற்கெதிரான செயல்கள் அம்மாவின் ஆட்சி தவிர வேறெங்கும் நடப்பதற்கான வாய்ப்புதான் ஏது?

அடிப்படைச் சட்ட ஞானம் இல்லாமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தவறுதான் என்று அரசு வழக்கறிஞ்ரே ஒத்துக்கொள்ளும் அளவிற்கு பெருமைமிகு அமைச்சர்களைக் கொண்ட துக்ளக் அரசின் சாதனைகளைத்தான் என்னென்பது?

அதிகாரிகளை சேலத்திலிருந்து மாற்றலாகி சென்னைக்குச் ரயிலேறி போய்ச் சேருவதற்குமுன் மதுரைக்கு மாற்றியடிக்கும் கோமாளிக்கூத்துக்களின் பெருமைகளைத்தான் என்னவென்று சொல்லிச் சொல்லிப் புகழ்வது?

ஈழத்தாய் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றி அகில உலகையும் திரும்பிப்பார்க்க வைத்து புரட்சித்திலமான பெருமையைப் பற்றி ஸ்பெஷல் பதிவே போடலாம்!!

நில அபகரிப்பு அவசரச் சட்டத்தை அதிமுக சொம்புகளுக்கு மட்டும் செல்லாததாக்கிச் செய்த புரட்சி பற்றி பேசினால் இன்னொரு நூறு ஆள் ஆகிவிடும்!!!

ஆக, வளமும்  , செல்வமும் கொழிக்கும் இந்த மாதம் மும்மாரி பெய்யும் அதிமுக அம்மா ஆட்சிக்கு நூள் ஆகிறது......

ஆட்சிக்கு மட்டுமா நூறு நாள்....அம்மாவின் சொத்துக்குவிப்பு  வழக்கிலும் தான் நூறு வாய்தாவுக்கு மேல் ஆகிறது...

மென்மேலும் ஓங்குக அம்மாவின் புகழ்....
வளர்க அம்மாவின் செல்வம் ( சிறுதாவூர் , கொடநாட்டு , ஹைதராபாத் திரடசை தோட்டத்தையும் தாண்டி....)

வாழ்க மக்கள்...வளர்க மக்களாட்சி.........

Tuesday, March 22, 2011

ஒரு தேர்தல் சவால்! ஓட்டுப்போடுங்க சார். !

அன்பு வலையுலக வாசகப் பெருமக்களுக்கு ,நீண்ட நாட்களாக எமது மனதில் அரித்துக்கொண்டேயிருக்கும் கேள்வியினை உங்கள் வாக்கெடுப்பிற்கு விடுகிறேன். தமிழ்மணம் , தமிழிஷ் இவற்றில் வாக்கே கேட்காத நான் கீழ்க்கண்ட வாக்கெடுப்பில் உங்கள் பங்கெடுப்பினையும் , அதற்கான உங்கள் கருத்தையும் அறிய விளைகிறேன். முன்கூட்டிய நன்றி!!

 

திமுகவைத் தோற்கடிக்கத் துடிப்பவர்களில் முதலிடம் பிடிப்பது யார்?

Thursday, March 17, 2011

பிரபலங்கள் ஆதரிக்கும் கட்சி!

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளும் ,  நடிகர் , நடிகைகளும் பிரபலமானவர்கள்.........பதிவுலகத்தைப் பொறுத்தவரை சில பல நடுநிலையான பதிவர்களே பிரபலங்கள்....அவர்களது நடுநிலையான அதிமுக ஆதரவு நிலைப்பாடு  வெகு பிரசித்தம்.

பத்துக்கட்டுரைகள்  எழுதினால் அதில் ஒன்பது திமுகவை எதிர்க்கும்,கலைஞரை  வசைபாடும் நடுநிலைக்கட்டுரைகளாகவே இருக்கும்..

அத்தகைய பிரபலங்கள்/ பிரபல பதிவர்கள் ஆதரிக்கும் கட்சியான அதிமுகவின் , அதன் தலைவியின் அருமையை, பெருமையை அவர்களின் வாயாலேயே கேட்பதன்  மூலம்   அவர்களின்  நிலையினை மக்கள் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!

ஸ்டார்ட் மீயுசிக்.

கலைஞர் கருணாநிதியைப் போலவே ஆட்சி நடத்தும் தகுதியே இல்லாத புரட்சித் தலைவி ஜெயலலிதா, கட்சி நடத்தும் தகுதியும் தனக்கு இல்லாததை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்..!


இவர் கணிப்பில் கட்சி நடத்தும் தகுதியே இல்லாத  ஜெ....ஆட்சி நடத்தினால் எப்படி இருக்கும் என்று மக்கள் தான் சொல்லவேண்டும்!

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுவதற்கு முன்பு வரையிலும் தமிழினத்தின், தமிழகத்தின் பொது எதிரியான கருணாநிதி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றுதான் தமிழகமே நம்பிக் கொண்டிருந்தது.

இவரது கணிப்புப்படி தமிழினத்தின் , தமிழகத்தின் பொது எதிரியை கூட்டணி சேர்ந்துதான் எதிர்க்கவேண்டுமோ? ஒருவேளை இவர் கருணாநிதியை பற்றி    சொல்பவை உண்மை எனில் மக்களே அவர்களை ஏன் புறக்கணிக்க மாட்டார்கள்?...எதற்கு கூட்டணி???


தனது கட்சிக்காரர்களை மட்டும்தான் ஜெயலலிதா இதுவரையில் மதிக்காமல் இருந்திருக்கிறார் என்றால், இப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அதேபோல் நினைத்துவிட்டார்..! ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இதுதான் வித்தியாசம்..!
 
 
தனது வீடு திறந்த வீடு என்பதை வெளிக்காட்டி தமிழகத்தின் கலாச்சாரத்திற்கேற்றவாறு, நாகரிகமான முறையில் யார் வந்தாலும் வரவேற்கிறார் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாவோ தான் சந்திர மண்டலத்தில் குடியிருப்பதைப் போல காட்டிக் கொண்டு இறுக மூடிய வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு பொது வாழ்க்கைப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்..!

நிறைய சந்தோஷம்......அதிமுக சார்பான மறைமுக அஜெண்டா வைத்திருக்கும்   நடுநிலையாளர்களைக் கூடகருணாநிதி கவர்ந்திருக்கிறார் .
 

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு ஒன்று சேரும் அனைத்துக் கட்சிக்காரர்களையும்

இங்கே தான் உண்மையான சுயரூபம் வெளிப்படுகிறது........இது மட்டுமே ஒரே கொள்கை இவர்களுக்கு....ஊழல், இலவசம் , குடும்ப ஆதிக்கம் இதுவெல்லாம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மட்டுமே!



ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். அதனை பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்று நேற்று பட்டவர்த்தனமாக சி.பி.ஐ.யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இதனைவிடவும் மிகக் கேவலமான ஒரு விஷயம் தமிழகத்து மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் இதுவரையில் நடந்ததில்லை..!

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் , தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தாரே அதெல்லாம் கேவலக்கணக்கில்  சேர்த்தியில்லையா? பொம்மையாக ஜீரோ.பன்னீர்செல்வத்தை  இயக்கினாரே? இது கேவலமில்லையா? அப்பேர்ப்பட்ட செயலலிதாவை முதல்வராக்க தூக்கிப்பிடிக்கும் உங்கள் செயல் கேவலமில்லையா....??


ஊழல் விஷயத்தில் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சில வருடங்களுக்கு முன்புவரையிலும் முன்னணியில் இருந்தார்.


அஹாஹஹாஹாஹஹ......இதுதான் என்னை மிகவும் கவர்ந்த அறிவுப்பூர்வமான வாசகம்.....!! சிலவருடங்களுக்கு முன்புவரை ஆட்சியில்  இருந்தார் , அதனால் ஊழல் புகார்.......இப்ப கொடநாட்டில் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறார் ,,,,,இப்படி எப்படி ஊழல் புகார் இருக்கும்???



இன்னொரு பக்கம் இத்தனை வருடங்களாக தனக்கென்று எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக் கொண்டு ஆதரவை அளித்து வந்த வைகோ தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார். தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!
 
 
முழுதும் ஒத்துப்போகிறேன்....வருத்தம்தான்..நேரம் தாண்டிவிட்டது...இல்லாவிடில் தாய்க்கழகம் வைகோவை அரவணைத்திருக்கும்..........செயலலிதாவின் பாசிசம் பற்றிப் பேச மேடையாவது கிடைத்திருக்கும் அவருக்கு!

ஊர்க் காசை அடித்து உலையில் போடும் வித்தையில் கரை கண்ட முதல் தமிழகத்து அரசியல் பெண்மணி என்ற கெட்ட பெயரோடு ஜெயலலிதா ஜெயிலுக்குள் வாசம் செய்யப் போவதும் உறுதிதான்..! இத்தனை விஷயங்கள் தனக்காகக் காத்திருக்கும்போது அதனை எதிர்கொள்ள எத்தனை ராஜதந்திர விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்..? கருணாநிதியிடம் இத்தனை நாட்களாக அரசியல் நடத்திய ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொண்டதுதான் என்ன..?

நல்லது , இதன் மூலம் உ.த. சார் சொல்லவிளைவது ஆட்சிக்கு வந்து வழக்குகளை தமக்கு சார்பாக முடித்துக்கொள்வதை விட்டுவிட்டு கூட்டணிக்கு  ஆப்பு வைக்கிறாரே ஜே.. ...ஆக, ஊழலோ , ஊழல் வழக்குகளோ கவலை இல்லை....ஆட்சிக்கு ஜெ வந்து அவர் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்!!
  .....அவ்வளவு மட்டுமே....!!! 
 
கருணாநிதியின் மீதான , பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சனங்களின் மீதான  பரம்பரை எதிர்ப்பு வியாதி இவர் போன்ற நடுநிலைவியாதிகளை பீடித்திருக்கிறது... அது அவரது இன்னொரு பதிவில் தெளிவாக வெளிப்படுகிறது...
 
இப்படிச்சொல்கிறார் அவர்...
 


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, துறைமுகம், கொளத்தூர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என்ற சென்னை தொகுதிகளெல்லாம் இருக்கும் நிலையிலேயே தாத்தா, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு ஓடிப் போயிருக்கும் விஷயத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது..!

ஜெயல்லிதா தன் சமுதாய    மக்களை நம்பி ,ஸ்ரீரங்கம் ஓடிப்போனதை  அவர் காதில் கொஞ்சம் போடுங்களேன்....ஆண்டிப்பட்டி இல்லேன்னா தேனி , உசிலம்பட்டி இல்லையா?அங்கு ஏன் அவர் போட்டியிடவில்லை.....
இஹிஹிஹிஹி....இதைத்தான் செலக்டிவ் அம்னீசியா என்பார்களோ???

நமக்கு உண்மைத்தமிழன் சார் மீது தனிப்பட்ட எந்தக்காழ்ப்புணரவும் இல்லை...இது முழுதும் அரசியல்ரீதியான   எதிர்வாதங்களே......எப்போதும் போல் நண்பர்களாகவே சண்டையிட்டுக்கொள்வோம்....
 
ஆனால், நடுநிலை  வேசம் மட்டும் போடாதீங்க உ.த சார்...!! தாங்க  முடியலை!!
 
ஸ்டாப் த மியுசிக்!!!

கலைஞர்...ஜெ....மலையும் மடுவும் !

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.....ஜெ என்ற அகம்பாவம் பிடித்த , திருந்தாத அரசியல் தலைமையின் சாயமும் வெளுத்துப்போயிருக்கிறது....!!

திமுக என்ற பாரிய அரசியல் இயக்கத்திற்கும் , அந்தக் காலம் தொட்டே தனிநபர் சொத்தாக விளங்கும் அதிமுகவிற்கும் உள்ள பாரிய வித்தியாசம் இங்கே வெளிப்பட்டு நிற்கிறது...

கூட்டணி தர்மத்தின் பால் 2 இடங்களுக்கு முஸ்லீம் லீக் ஒத்துக்கொண்ட பிறகும் மூன்று தொகுதிகளை மீண்டும் தந்த திமுக எங்கே...முதலில் ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு பின்பு கார்த்திக்கை கழட்டிவிட்ட அதிமுக எங்கே?

காங்கிரஸ் , பாமக , விடுதலைச் சிறுத்தைகள் , கொங்கு முன்னேற்றக் கழகம் , முஸ்லீம் லிக் என்று அனைத்துக்கட்சிகளுடனும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டு அவர்களுக்கான தொகுதியையும் ஒதுக்கிக்கொடுத்துவிட்டு இன்னமும் தமது வேட்பாளர் பட்டியலை வெளியிடாத திமுக எங்கே?

கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடே முடியாத போது தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக எங்கே?

அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்பதன் அடிப்படை கூடத்தெரியாத இந்த அதிமுகதான் இன்றைய எதிர்க்கட்சி...வென்றால் ஆளுங்கட்சி...

அகங்காரம் , ஆணவம் , திமிர் இவற்றின் மொத்த உருவம் தான் ஜெயலலிதா என்பது வெகுபலர் அறிந்ததே......வெல்வோமா , இல்லையா என்று தெரிவதற்கு முன்னமே இப்படிக் கூட்டணிக்கட்சிகளை அலட்சியப்படுத்துவது முறையா? ஒருவேளை வென்றால்...

கம்யூனிஸ்டுகளும் , விசயகாந்தும் வேண்டுமானால் பணிந்து போகலாம்..அவர்களுக்காவது இத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டது...ஆனால் மதிமுக?? அன்றும் இன்றும் என்றுமே பரிதாபத்திற்குரியவராகவே தோற்றமளிக்கிறார் அவர்...அதற்கு அவர் மட்டுமே காரணம்....

5 ஆண்டுகளுக்கு முன் இதே நிலை ஏற்பட்டது அவருக்கு..ஆனால் அதற்கு கலைஞர் காரணமில்லை....அவரே தான் காரணம்......கூடுதலாகச் சில தொகுதிகள் வேண்டுமென்பதற்காக தன்னை 19 மாதம் சிறை வைத்த அம்மாவுடன் சேர்ந்ததுதான் அவரது இத்தனை இழிவுக்கும் காரணம்...

மாற்றுக்கட்சிகளை மதிப்பதில் கலைஞர் மலை....இழிவுபடுத்தும் ஜெ மடு.!!

மாற்றுக்கட்சிகளின் கருத்தைக் காது கொடுத்துக்கேட்பவர் கலைஞர்.......கேட்பதே தன் கவுரவக்குறைச்சல் என்றெண்ணுபவர் ஜெ..!!

மாற்றுக்கட்சித்தலைவர்களையும் தன் அருகழைத்து தள்ளாத வயதிலும் மதிப்பவர் கலைஞர்....அவர்களை அமரக் கூடச் சொல்லாதவர் ஜெ.!!

திருமங்கலம் பார்மூலா , அழகிரி கண்டுபிடித்ததாகச் சொல்லும் அரசியல் அடிப்படை தெரியாதவர்களுக்கு "சாத்தான் குளம்" யாருடைய பார்முலா என்று சொல்லமுடியுமா?

ஊழலைக் கண்டுபிடித்ததே கலைஞர் என்று ஒப்பாரி வைக்கும் பார்ப்பன ஊடகங்களே...இன்றைக்கும் கலைஞர் மீதான உறுதியான ஊழல் குற்றச்சாட்டொன்றை சொல்லமுடியுமா?? ஆனால் , மலைமலையாக குற்றச்சாட்டுக்கள் குவிந்துகிடக்கும் ஊழல் அரசியல்வாதியான ஜெ எப்படி மாற்றாக முடியும்??

எவ்விதத்தில் பார்த்தாலும் கலைஞர் ஒர் மலை....ஜெ. ஒரு மடு..!!

அன்றாடம் கலைஞரைக் கரித்துக்கொட்டுவதிலேயே காலம் கழிக்கும் அதிமுகவின் உண்மைத்தொண்டன் "உண்மைத்தமிழன் (???) " போன்றவர்கள் திமுகவிற்கு மாற்றாக காட்டுபவர்களின் தகுதி இதுதான்....!!

Thursday, March 03, 2011

ஆனந்தவிகடனின் அதர்ம யுத்தம்.!

பத்திரிக்கைகள் நடுநிலையாக இருக்க வேண்டும்.......அல்லது கலைஞர் தொலைக்காட்சி அல்லது செயா  தொலைக்காட்சி அல்லது நமது எம்.ஜி.ஆர் என்ற பெயரில் நாம் இந்தக்கட்சி சார்பானவர்கள் என்று சொல்லிக்கொள்ள  வேண்டும்...

அந்த விடயத்தில் "தினமலர் மற்றும் துக்ளக்" எப்போதும் தெளிவாகவே இருக்கும்.....நாம் அன்றும் , இன்றும்  என்றும் அவாளுக்கு ஆதரவு என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவை அவை...

ஆனால், நடுநிலைமை என்ற பெயரில் இன்று விகடன் குருப் "திமுக"  எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறது    என்று சொல்கிறார்கள்....அதை      நம் பதிவர்கள் சுட்டியும் காட்டுகிறார்கள்!!! 

தி.மு.க வை எதிர்த்து ஆனந்த விகடன் தர்ம யுத்தம்..? 

 

ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

தோழர் ரஸீம் கஸாலியின் ஆனந்த விகடனின் அடிப்படைக்கணக்கே தவறு என்கிறார்...

உண்மைதானே? 130 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி  வாங்கும் வாக்குச்சதவீதத்தையும்  , 182 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி வாங்கும் வாக்கு சதவீதத்தையும் எப்படி  ஒப்பிட முடியும்? இந்த அடிப்படை கூட தெரியாமல் ஒரு பெரிய பத்திர்க்கை தவறான தகவல்களை சொல்வது தவறல்லவா?

 

இதுபற்றி நண்பர் கொக்கரக்கோவின் பின்னூட்டம் இந்தப்பதிவில்


வணக்கம் சதீஷ்குமார், ஆ.வி, ஜூவி, வகையறாக்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை ஜெ. ஆதரவு நிலையை எடுத்திருக்கின்றன. ஜூனியர் போஸ்ட் காலத்திலிருந்தே இவைகளைப் படித்துவரும் என் போன்றவர்களுக்கு இது நன்றாகப் புரியும். அவர்கள் போட்டிருக்கும் இந்த கணக்கு அடிப்படையிலேயே தவறு என்பது அவர்களுக்கும் நன்றாகப் புரிந்து தான் இருக்கும். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டை அப்பாவி வாசகர்களிடம் நடுநிலை போர்வையோடு திணிக்கும் செயலை வெற்றிகரமாக செய்து கொண்டுமிருக்கிறார்கள். அந்தக் கணக்கை கீழ் வருவது போல் தான் போட வேண்டும். எல்லா கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் பொழுது, ஒரு கட்சி வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை மொத்த தொகுதிகளான 234 வுடன் பெருக்கி, அதை அக்கட்சி நின்ற தொகுதியால் வகுக்கும் பொழுது வருமே ஒரு விடை அது தான் ஒருவேளை அக்கட்சி 234 தொகுதிகளில் நின்றிருந்தால் அக் கட்சி பெறும் மொத்த வாக்கு சதவிகிதம் ஆகும். உதாரணத்திற்கு தி.மு.க நின்ற தொகுதிகள் = 132 மொத்த தொகுதிகள் = 234 132 இல் வாக்கு சதவீதம் = 26.46% ஆகவே 26.46 x 234 / 132 = 46.90% அ.தி.மு.க நின்ற தொகுதிகள் = 188 மொத்த தொகுதிகள் = 234 188 இல் சதவீதம் = 32.64% ஆகவே 32.64 x 234 / 188 = 40.62% எனவே 2006 தேர்தலில் தி.மு.க வாங்கிய வாக்கு சதவிகிதம் = 46.9% அ.தி.மு.க வாங்கிய வாக்கு சதவீதம் = 40.62% இப்பொழுது புரிகிறதா? விகடன் சொல்வது போல் பயப்படுகின்ற தி.மு.க தலைமையா மூன்று சுற்றுகளாக காங்கிரஸை அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியும்?! ஒவ்வொரு சுற்று பேச்சு வார்த்தையின் முடிவிலும் ஒவ்வொரு கூட்டனி கட்சியாக அழைத்து தன்னிச்சையாக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியும்?

நேர்மையில்லாத இவர்கள், தமது மறைமுக அஜண்டாவிற்காக உழைக்கும் இவர்களை பத்திரிக்கையாளர்கள் என்றழைப்பது தகுமோ?

 ****

அடுத்த அதர்ம யுத்தம் , காங்கிரஸின் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வட இந்திய ரெடிப்.காம் வெளியிட்டிருக்கும் ஜோக்...தமிழ்நாட்டில் 70  இடங்கள் தான் திமுக கூட்டணிக்காம்...அதை ஒட்டிய திரு.சுரேஷ்குமார் பதிவில் படித்த  சில பின்னூட்டங்கள் .....!!!

மாதவன் said...

கோவை, ஈரோடு , திருப்பூர்,சேலம் , தர்ம்புரி, நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல்,நீலகிரி மாவட்டங்களில் புதிதாக திமுகவில் இணைந்திருக்கும் கொமுக அத்துணை கணக்குகளையும் மாற்றி எழுதப்போகிறது...காரணம் அது கடந்த தேர்தலில் வாங்கியிருக்கும் வாக்குகள்!!!

உதாரணத்திற்கு கோவையை எடுத்துக்கொள்வோம்! கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸுக்குமுள்ள ஓட்டுவித்தியாசம் 40000 மட்டுமே...ஆனால், கொமுக பெற்ற ஓட்டுக்கள் 130000 , தேமுதிக பெற்ற 70000 ஓட்டுக்களைக் கழித்தாலும் கூட 20000 ஓட்டுக்கள் அதிகமிருக்கிறது....இதேபோலத்தான் கொங்குமண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணக்கு மாறுகிறது..டெல்லியில் உக்கார்ந்து ஆராய்ச்சி செய்யும் கம்பெனிகளுக்கு கொமுக என்ற கட்சீயைப்பத்தியே தெரியாது, ஹிஹிஹிஹிஹிஹி.!!

1 RAMASUBRAMANIAN. K BSP 2937
2 SELVAKUMAR.G.K.S BJP 37909
3 NATARAJAN.P.R. CPM 293165
4 PRABHU.R INC 254501
5 ESWARAN.E.R KNMK 128070

அதனால் தான் 2 சீட்டு , 3 சீட்டு என்று பத்திரிக்கைகள் சொல்லும்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் கொமுகவிற்கு 7 சீட்டுக்கள் கொடுத்திருக்கிறார் கலைஞர்......

பொறுத்திருந்து பாருங்கள்.....கூடவே கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்குள்ள மு.கண்ணப்பன்,திருப்பூர் மாவட்டத்தில் கோவிந்தசாமி , ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமி, சேலத்தில் செல்வகணபதி , கரூரில் சின்னச்சாமி என்ற பெருந்தலைகள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்..

சும்மா வீட்டில் உட்கார்ந்து திமுக கனவு காணவில்லை...கடந்த மூன்றாண்டுகளாகவே அறிவியற்பூர்வ கணக்கின்மூலம் சட்டசபைத்தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டது அது..பற்றாக்குறைக்குச் செம்மொழி மாநாடு...கோவை நகரெங்கும் பளபளக்கும் சாலைகள்....திருப்பூருக்கு தனிமாவட்ட அந்தஸ்து , திருப்பூர், ஈரோடு இவைகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம் என்று பணிகள்...

சும்மா கொடநாட்டில் தூங்கிவிட்டு வந்து தேர்தலின் போது மட்டும் பிரச்சாரம் செய்யும் கட்சி திமுக அல்ல நண்பரே.

ஆக, கொங்குநாட்டில் சமன் செய்கிறது......வடமாவட்டங்களில் பாமக , வி.சி ஆதரவுடன் முந்துகிறது....இதுதான் நிலைமை....!!!

நினைவிருக்கட்டும், போனமுறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்தமுறை திமுக கூட்டணியில்!!!
பத்திரிக்கைகள் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் கட்சிகள் மக்களை முட்டாள்களாக்குகின்றன என்று சொல்லிக்கொண்டு , தமது மறைமுக அஜண்டாவை மக்கள் மீது  திணிக்கின்றன....


கடந்தமுறையை விட இம்முறை தேர்தல் களம் வித்தியாசமாகவே  இருக்கிறது.....பலம் வாய்ந்த இரு   அணிகள்  மோதுகின்றன...கூட்டணி பலம் இங்கே சமநிலையில் இருக்கும்போது , ஆளுங்கட்சிக்கெதிரான எதிர்ப்பு மற்றும் ஆளுங்கட்சியின் பணிகள் இவைகளே முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன...அதில் அடித்தட்டு மக்களின் தேவைகளைத் தேடித்தேடி பூர்த்தி செய்திருக்கும் திமுகவே முந்தப்போகிறது...

எந்தக் கருத்துக்கணிப்புகளும் இங்கே செல்லுபடியாகப் போவதில்லை........!!

Thursday, February 24, 2011

பிரபல பதிவர்கள் படிக்க விரும்பாத ஒரு செய்தி.!

எல்லா செய்திகளையும் அக்குவேறாக , ஆணிவேறாக ஆராய்ந்து   பதிவெழுதும் சிலருக்கு  பிடிக்காத செய்தி ஒன்று ஒரு சில (உண்மையாகவே ஒருசில) பத்திரிக்கைகளில் மட்டும்  வந்திருக்கிறது..


நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமும் கருணாநிதியையும் , அவர்தம் அரசையும் குறைகூறிப் பொழுது போக்குபவர்களுக்கும்  , உலகத்தின் சிறந்த முதல்வர் நரேந்திர மோடி என்று பில்ட் அப் காட்டுபவர்களுக்கும் பதில் சொல்லும் அந்தச் செய்திதான் என்ன?

பிரபல வட  இந்திய  ஆங்கிலத் தொலைக்காட்சியான சி.என்.என். ஐ.பி.என் வழங்கும் இந்தியாவின் சிறந்த மாநிலம் ( CNN-IBN's Diamond states award ) விருதினை தமிழகம் பெற்ற செய்திதான் அது.


ஒட்டுமொத்த விருதினை தமிழகம் பெற்றதோடு மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. 



இதுபற்றிய செய்தி.
சென்னை: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின், சிறந்த இந்திய மாநிலத்திற்கான வைர மாநில விருது தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த விருதை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு வைர மாநில விருதுகள் வழங்கி வருகிறது.

2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், தமிழ்நாடு-இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் 23.2.2011 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற சிறப்புமிகு விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் துணைத்தலைவர் அமீத் அன்சாரி அவர்கள், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் வழங்கியதுடன், முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குத் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறும் கூறினார்.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருதுகளை -முதல்வர் கருணாநிதியிடம் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார்.

இந்நிகழ்வின்போது, நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவு அமைச்சர் எ.வ.வேலு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கான நீதிபதிகள் யார்...? தேர்வு செய்த முறையென்ன?

The selection process for ‘IBN7 Diamond States Awards 2011’ was a credible multi-pronged approach involving secondary data from authentic sources and primary data from a nationwide research exercise conducted by Nielsen, the research partner for the awards. KPMG, the independent Knowledge Partner managed the process, methodology and the data for arriving at the best states for the various categories of the awards.

The list of parameters in each category were evaluated by the best journalistic brains in the country from IBN18 Network Editorial Board & the Outlook Editorial Board comprising of Raghav Bahl, Rajdeep Sardesai, Ashutosh, Vinod Mehta & Neelabh Mishra. A five member jury comprising well-known personalities drawn by different walks of life, deliberated on the categories, criteria and parameters to finalize the framework of selection and ranking of states across the different categories.

The Jury included eminent citizens like Dr. Bimal Jalan – Former RBI Governor & Chairman of the Jury, Mr. M Damodaran – Former Chairman SEBI, Dr. Bakul H Dholaki - Former Director IIM-A, Mr. TSR Subramanium – Ex- Cabinat Secretary, Govt of India, Dr. Shaibal Gupta – Secretary Asian Development Research Institute.

At the occasion, Rajdeep Sardesai, Editor-in-Chief, IBN18 Network said, “IBN7 Diamond States Awards celebrate excellence in human and social development among Indian states. They truly signify the diamond standard for good governance in India. These winners have been arrived at through a rigorous and credible evaluation process.”

Ashutosh, Managing Editor, IBN7 added, “We congratulate the states, on this wonderful acknowledgement of their work. Their story illustrates not only the Indian dream but also their mission to improve the human and social standards of the country.”

ALCHEMIST Group, one of India’s fastest growing publicly traded Conglomerates with interests in Food Processing, Hotels & Resorts, Restaurants, Road Technologies and Healthcare is the presenting sponsor for the awards.
முழுச்செய்திக்கு இணைப்பினை அழுத்தவும்!



Winners of IBN7 Diamond States Awards 2011
Category Best Big State Best Small State
Citizen Security Tamil Nadu Sikkim
Core Infrastructure Gujarat Delhi
Education Kerala Himachal Pradesh
Employment Andhra Pradesh Mizoram
Environment N/A Jammu & Kashmir
Healthcare Kerala Goa
Poverty Reduction Chhattisgarh Himachal Pradesh
Water and Sanitation Tamil Nadu Tripura
Women Empowerment Tamil Nadu Nagaland 

குடும்ப ஆட்சியை வீழ்த்த கூட்டணி : பண்ரூட்டியார்..!!

அ.தி.மு.க., வுடன் கூட்டணி மக்கள் விருப்பம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க., சார்பில், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர் ராஜன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும், அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாலை 5.30 முதல் 7 மணி வரை நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் கட்சித்தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்குப்பின் அமையும் ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் எதுவும் தே.மு.தி.க.,விடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.  நன்றி தினமலர்!


கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சுதீஷ்....அப்பாலிக்கா பிரேமலதா மேடம் , இவுக எல்லாம் யாரு பண்ரூட்டி சார்??

கேட்கறவன் கேனையா இருந்தா எலி ஏரோப் ப்ளேன் ஓட்டுமாம்....

சுத்துங்க...சுத்துங்க...மக்கள் கேட்குற வரைக்கும் சுத்துங்க...

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு...ஆனா இப்படி எல்லாம் ஃசோக் அடிக்கக் கூடாதப்பா...!!! இதையும் கிண்டலடிச்சி துக்ளக் பத்திரிக்கைல கேள்வி-பதில் வருமா வராதா? ?

Wednesday, February 23, 2011

சொத்துக்குவிப்பு வழக்கில் தப்பிக்க அதிமுக நீதிபதியிடம் பேரம்?

மக்கள் திமுக  ஆட்சி மீது வெறுப்பாக இருக்கிறார்கள்...ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான்.......ஊழலற்ற ஆட்சிக்கு அப்பழுக்கற்ற புரட்சித்தலைவிதான் வேண்டும் என்று வலையுலக இரத்தத்தின் இரத்தங்களும் , இன்னபல வலையுலகப் புரட்சியாளர்களும் , பத்திரிக்கைகளும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்...

அவர்களுக்கெல்லாம் "டான்சி" நிலம் பற்றியோ இல்லை பிற ஊழல்களைப்  பற்றியோ நாம் சொல்லி அப்பழுக்கற்ற  புரட்சித்தலைவியை அவமானப்படுத்துவது நம் நோக்கமல்ல..

அத்தகைய ஊழல்களிலிருந்து வெளியே வர  அம்மாவின்  தொண்டர் திரு.மைத்ரேயன் அவர்கள் ஒருவரிடம் அவர் தான் நீதிபதி  என்று நினைத்து பேரம் பேசியிருக்கிறாராம்....அந்தப் போலி நீதிபதியை  பிடித்துவிட்டார்களாம்...இப்படியொரு செய்தியை தினமலர் வெளியிட்டிருக்கிறது.....


மதுரை: பெங்களூருவில் நடக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க மைத்ரேயன் எம்.பி.,யிடம் பேரம் பேசிய போலி நீதிபதி முத்து விஜயகுமார் (52) மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த இவர், மேலூர் கோர்ட்டில் ஜூனியர் பெய்லீப்பாக பணியாற்றுகிறார். கடந்த 2006ல், எழுமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவின் மகன், மருமகனுக்கு மதுரை கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 45 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்தார். இவரை மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜேசுஜெயபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்ட போது, வேலை மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான 15 விண்ணப்பங்கள், மூன்று மொபைல் போன்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முகவரி, போன் எண்கள் கொண்ட புத்தகம், கார் "சைரன்' இருந்தது. அவரை தீவிரமாக விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், கமிஷனர் பாரி உத்தரவிட்டனர்.

எம்.பி.,யிடம் பேச்சுவார்த்தை: கடந்த ஜனவரியில், அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, "நான் நீதிபதி தினகரன் பேசுகிறேன். ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து தருகிறேன்' என முத்து விஜயகுமார் பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து 10 நாட்களில் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.நன்றி : தினமலர்

அவர் பேசியதாலேயே ஜெயலலிதா புழக்கடை  வழியாக வெளியே வர முயற்சிக்கிறார் என்று  நாம் சொல்லவில்லை...ஆனால், அத்தகைய பேர்வழியிடம் தொடர்ந்து நான்கு முறை திரு.மைத்ரேயன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ( தெரிந்து இவ்வளவு...தெரியாதது???) என்றால் அதுபோன்ற முயற்சிகளில் அம்மாவின் ஆதரவின்றி எப்படி முடியும் என்பதே நமது கேள்வி!!!!

சிக்கிக்கொண்டது போலி நீதிபதி மட்டும்தானா?

Monday, February 21, 2011

உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்....!

ரொம்ப நாளாவே மனச அரிச்சிகிட்டுக் கீற விஷயமுங்கோ , அதுனால கேட்டுப்புடலாம்னு இருக்கேன்.!

ஸ்பெக்டரமை  சி.பி.ஐ. ஆராய்ஞ்சதை விட அதிகமா ஆராய்ஞ்சி கிழித்திருக்கும் உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்!!

அடிப்படையான கேள்விகள் என்பதால் ஒதுக்கிவிடாமல் என்னைப் போன்ற பாமரனுக்கு புரியும் படி விளக்கிச் ( ஸபீனா பவுடர் போட்டாலும் ஓக்கே...விம் பார் போட்டாலும் ஓக்கே.!!!) சொன்னால் நலம்!

2 ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன? அது செல்போன் கண்டுபிடிச்சாப்ல இருந்தே இருக்கா? இல்லன்னா அதுக்கு முன்னாடி எப்படி செல்போன் உபயோகிச்சாங்க?

நாம உபயோகப்படுத்தற எல்லா செல்பேசிகளிலும் 2ஜியை உபயோகப்படுத்துறோமா? அப்படீன்னா , அது கரீக்டா இன்னா வேலை செய்யுது?  இல்லேன்னா சுமார் எத்தினி சதவீதம் பேர் 2ஜி உபயோகிப்பாங்க?

ஜி.எஸ்.எம் ந்னா இன்னா? சி.டி.எம்.ஏன்னா இன்னா? அதுக்கும் 2ஜிக்கும் தொடர்ப்பிருக்கா?

இப்ப 3ஜின்னு ஒரு டெக்னாலஜி வந்திருக்கே , இத வச்சி இன்னா பண்ணலாம்.....? 

பல லட்சம் கோடி நஷ்டம்ங்கிறாங்களே.......ராசாவுக்கு முன்னாடி யாரும் 2ஜியே பேசலையா...அதுமூலமா வருசா வருசம் வந்த லட்சக்கணக்கான கோடி ரூவா வருமானத்தை இந்தியா கவுருமெண்டு எந்த பேங்க்க்குல போட்டிச்சி? அதுக்கெல்லாம் எங்க கணக்கு? ( நன்றி , பட்டாபட்டியோட பதிவுல வந்த பின்னூட்டம்!)

ஒரு வேளை ராசாவுக்கு முன்னாடி அந்த ஸ்பெக்டரத்த ஒதுக்கீடு செய்யவே இல்லன்னா ,   பல லட்சம் கோடிக்கு போகும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்யாம அது மூலமா கவுருமெண்டுக்கு வந்த நட்டத்துக்கு யாரு பொறுப்பு?


கடேசியா ஒரு கேள்வி......"ராசாவை" ஒரு கருவியா உபயோகப்படுத்தினாங்கன்னே வச்சிக்கிடலாம்....அவரை உங்களால் தண்டிக்க முடியும்? ஆனா அதுமூலமா பலனடைஞ்ச கார்ப்பரேட் கனவான்களை என்ன செய்யலாம்? ஏன்னா அவுங்களுக்குத்தான் இதில் பெரும்பங்கு.....ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் "ராசா"வை மட்டுமே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பது உண்மையிலேயே சமூகத்தின் மீதான அக்கறையா இல்லை உங்கள் காழ்ப்புணர்வா?

பதில்  சொல்ல் விருப்பமிருந்தா நீங்க சொல்லலாம்....இங்கேயே பின்னூட்டத்திலும் சொல்லலாம்..இல்லை தனிப்பதிவிட்டும் சொல்லலாம்....உங்களை பதிலையொட்டியே நாம் மீண்டும் பேசமுடியும்!!

பதில் படிக்கும்படியும் இருக்கலாம்..இல்லையென்றால் உங்களின் வழக்கமான ஸ்டைலின் நீளத்துக்கும் இருக்கலாம்...படிக்க நான் ரெடி , இந்த ஒருமுறையாவது முழுதும் !!!

ஹிஹிஹி....

ஆவலுடன்

உங்கள் அன்புத்தம்பி...

Friday, February 18, 2011

அரசியற்களம்! முந்தும் திமுக!

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுவதிலும், உங்களையெல்லாம் சந்திப்பதிலும் மகிழ்ச்சி.

நன்று...தமிழகம் மீண்டுமொரு தேர்தலைச் சந்திக்கிறது.....தேர்தல் சூழலில் பெரிதான  விவாதக்களமோ இல்லை விடயங்களே இல்லாமல் வித்தியாசமான தேர்தலாகவே இருக்கிறது...

திமுக, காங்கிரஸ் , பாமக , விடுதலைச்சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஓரணியாக நிற்கின்றன.

இந்த அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி இன்னபல சின்னச்சின்ன கட்சிகள் இடம் பெற வாய்ப்புக்கள் உண்டு.....

அதிமுக அணி இன்றைய சூழலில் குழப்பத்தில் தத்தளிப்பதாகவே தெரிகிறது....பொதுவாக அந்த அணி இப்படி அமையலாம்...

அதிமுக , தேமுதிக , மதிமுக,மூ.மு.க., ம.ம.க,நா.ம.கட்சி,இந்திய குடியரசுக்கட்சி  ,புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள்...!!

திமுகவிற்கு தனது இலவசத்திட்டங்களும் , அங்கிங்கெனாதபடி எங்கும் சீர்திருத்தப்பட்ட கிராமச்சாலைகளும் ,விவசாயக்கடன் தள்ளுபடியும் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.........

காங்கிரஸுக்கோ ராகுலின் வருகையால் உத்வேகம் பெற்றிருக்கும் இளைஞர் காங்கிரஸூம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.....

பாமகவோ பெண்ணாகரம் தேர்தலில் இரண்டாம் இடம்   பெற்ற நம்பிக்கையில் திமுகவுடன் இணைந்து களம் காண்கிறது.

விடுதலைச்சிறுத்தைகளுக்கான வாக்குவங்கி வடமாவட்டங்களில் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதிமுக கணிசமான மாவட்டத்தலைவர்களை திமுகவிடம் இழந்திருந்தாலும் இன்னமும் கூட தனித்துவத்தை  இழந்துவிடவில்லை......இரட்டை இலைக்கான குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியுடன் ஆட்சிக்கெதிரான வாக்குக்களும் நிச்சயமாக கூடுதல் பலமே.

வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் கேப்டன்....ஒருவேளை விஜயகாந்த் அதிமுக அணியில் சேருவாரானால் அவருக்கு தற்போது கிடைக்கும் நடுநிலை வாக்குகள் சிதறிப்போகும் என்பது என் கணிப்பு.....எப்போதுமே இரு கட்சிகளையும் விமர்சித்து "எனக்கு ஒரு வாய்ப்புக்க்கொடுங்க" என்று ஓட்டுக்கேட்கும் விஜயகாந்த் இப்போது இரட்டை இலைக்கு வாக்குச் சேகரித்தால் மக்கள் அதை எங்ஙனம் எடுத்துக்கொள்வார்கள் என்பது  ஆய்வுக்குரியது.!


இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரையும் இழந்து பரிதாப நிலையில் களம் காணும் கட்சி வைகோவின் மதிமுக.....அதிகம் பேசவேண்டிய  நிலையில் அவரும் இல்லை...அவரது கட்சியும்  இல்லை...


எப்போதுமே  அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் முக்குலத்தோரின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கப்போவது புதிய தமிழகத்துடனான கூட்டு என்பது  என்   வத்தலக்குண்டு நண்பரொருவரின் கருத்து....!

ஆக , தமிழகத்தை மூன்று மண்டலமாகப் பிரித்தால்  ஒருவேளை முடிவு எப்படி இருக்கலாம் என்பதற்கான என் கணிப்பு...


சென்னை + வடமாவட்டங்கள்.......

பாமக, வி.சி. பலத்துடன் பாரம்பரிய திமுக வாக்குகளுடன் இலவசத்திட்டங்களும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக திமுக கூட்டணியே இருக்கப்போகிறது...

அதிமுக+தேமுதிக + மக்களின் ஆளுங்கட்சி அதிருப்தி கூட்டணி சர்வநிச்சயமாக சரியான போட்டியைக்கொடுக்கும்...ஒருவேளை தேமுதிகவுடனான கூட்டணி இல்லையென்றால் அனேகமாக அனைத்துத்தொகுதிகளும்  திமுகவிற்கே செல்லும்!

தென்மாவட்டங்கள்...

என்னதான் மூவேந்தர் முன்னேற்றக்கழகமும் , கார்த்திக்கும்,  புதிய  தமிழகமும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டாலும் , தலித்களும் முக்குலத்தோரும் ஒரணிக்கு  வாக்களிப்பதில் சிரமம் இருக்கிறது....ஆனாலும் , அழகிரியின் சமிபத்திய அதிருப்தியும், சரத்குமார்  இணைந்தால் கொண்டுவரும் நாடார் ஓட்டுக்களும் அதிமுக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பிலிருப்பதாக கணிக்க வைக்கிறது.....

ஒருவேளை அழகிரி பார்முலா முழுவீச்சில் வேலை செய்தால் சரிசமமான போட்டி இருக்கலாம்.......கிராமங்கள் நிறைந்த இந்த பெல்ட்டில் ஸ்பெக்டரமோ ஊழலோ தேர்தல் விடயமாக இருக்கப்போவதில்லை என்பதுவும்  ஒரு கூடுதல்  பாயிண்ட்.

கொங்குமண்டலம்...

எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவான இந்த மண்டலம் இம்முறை எப்படி இருக்கப்போகிறது...

அதற்குமுன் செல்லுமுன் கடந்த தேர்தலைவிட மாறுபட்ட காட்சியொன்று இங்கே இருக்கிறது...இப்போது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியொன்று வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது....ஆரம்பித்த ஒரே வருடத்தில் அனேக பாராளுமனறத்தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளை வாங்கிக்குவித்த கட்சியான இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...

ஒட்டுமொத்த தமிழகத்தில் இன்றைய சூழலில் மிகவும் முன்னேறிய சமுகமாகவும் , பொருளாதார வளம் மிக்கவர்களாகவும் கருதப்படும் கவுண்டர்களின் கடசி எந்தக்கூட்டணியில் இடம்பெறும் என்பதையிட்டு முடிவுகள் மாற வாய்ப்புண்டு...

ஒருவேளை கொமுக ,  திமுக கூட்டணியில் இடம்பெறுமானால் சரிசமமான போட்டியே  நிலவும்.....தனித்து நிற்குமானால் அது ஆட்சிக்கெதிரான வாக்குக்களைப் பிரிப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கே  சாதகமாக இருக்கும்.......கொங்குமண்டலத்தின் அனேக சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிமுகவினர் என்பதும் அவர்களின் பாலான  அதிருப்தியும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ் ஆக அமையும்...கொங்கு மண்டலத்தின் தலித்களின் பெருமபாலானவர்கள் அருந்ததியர் என்பதுவும் அனேகர் அதிமுக ஆதரவாளர்கள் என்பதுவும் தெரிந்த ஒன்றே. அவர்களுக்கான உள் ஒதுக்கீடு ம், செம்மொழி மாநாடும் திமுகவிற்கு கணிசமாக வாக்குக்களை பெற்றுத்தரும் என்பதுவும் என் கணிப்பு!

ஒருவேளை அதிமுக, தேமுதிக , மதிமுக ,கொமுக இணைந்தால் கொங்கு மண்டலத்தில் இலை மலருவதைத் தவிர்க்க முடியாது...!!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பற்றிய பெரிதான அரசியல் அறிவு எனக்கு இல்லை.

வடமாவட்டங்களில் திமுக முந்துவதும், தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில்  சரிசமமான போட்டியும் தற்சமய நிலவரமே...

கூட்டணிக்கணக்குகள் மாறும்போது கணிப்பும் மாறும்..அணிகள் இறுதியாகும்போது இன்னொருமுறை அலசுவோம்...