Showing posts with label த்தூ. Show all posts
Showing posts with label த்தூ. Show all posts

Wednesday, November 02, 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்..!!

தமிழகத்தை ஆள்பவர்கள் அறிவுசார் சமூகத்தை அறவே விரும்பவில்லை என்பது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்விற்கு அளவேதுமில்லையோ என்ற வேதனை தான் மிஞ்சுகிறது... மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் செலவிடும் நேரத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக சிறிதேனும் செலவிடக்கூடாதோ என்ற எண்ணமே எஞ்சுகிறது!!!

சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அறிவு சார் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படு என்ற அறிவிப்பு நமது நெஞ்சில் வந்து நெருப்பாய் மோதுகிறது...

முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை என்கிறார்கள்....

இதோ ஒரு உதாரண பின்னூட்டம்...

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது!!

என்ன ஒரு கொடூரமான கண்ணூட்டம்...


இந்த வாசகத்தை படிக்கும் போதே நரகலைத்தின்றதோர் உணர்வு வருகிறது...இவர்களின் அரசியல் ஜால்ராவிற்காக உலகளாவிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையையே மாற்றத்தலைப்படுகிறார்கள் இவர்கள்....

அதே பக்கத்தில் வந்திருந்த அறிவுசார் பின்னூட்டமொன்றும் உங்கள் பார்வைக்கு.!!!

This is purely unethical and against education. This place is opt for library because Anna University and IIT are located near to Library. If the government is really interested to provide medical care means they can appoint doctors and worker in government hospitals instead of doing this type of conversions. This is purely actions against DMK party not for the benifit of peoples. All student communities and educationalist like this library. ADMK goverment may avoid this typed of actions in future. I too vote ADMK party for the last election but disappointed. Kindly think for the people not againt DMK.

யாழ்ப்பாணத்தில் ஆயிரமாரயிரம் புத்தகங்களை அழித்ததாலேயே விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்த தமிழர்களின் உணர்வு எங்கே போயிற்று..

என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழ் மக்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களோ அடியேன் நான் அறியேன்..

தமிழகம் , முட்டாள்களின் தேசமாக மாறிக்கொண்டே வருவதில் மெத்த வருத்தம்....தமிழினம் மெல்ல இனிச்சாகும்....அதை வேடிக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!!!

(பின்னூட்டங்களை அனுமதியில்லாமல் எடுத்தாண்டதற்கு உரியவர்கள் மன்னிக்க!!)

Saturday, October 22, 2011

ஆனந்தவிகடனின் அல்ப அலப்பறை!!


அய்யாமாரே , அம்மாமாரே...

சவுக்கியமா? ஆனந்த விகடனின் அல்ப அலப்பறை பற்றிய இந்தப்பதிவு நகைச்சுவைக்காக இடப்பட்டத்தல்ல...சிந்திப்பதற்காக இடப்பட்டது....

நாம் மட்டுமல்ல , அப்பத்திரிக்கையும் தான்....

வெறும் சினிமாவை வச்சி மட்டுமே கல்லா கட்டுவது ஆனந்தவிகடனும் , குமுதமும் , குங்குமமும் என்பது தெரிந்த செய்திதான்..

இதுல பாருங்க சார் . தனியா சினிமா ஸ்பெஷல் போடறாங்களாம்..!



முன்னாள் குத்தாட்ட நடிகை இந்நாள் முதல்வர்.......முன்னாள் பைட் ஏக்டர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்...இதையெல்லாம் பாத்துமாடா பத்திரிக்கைகள் திருந்த மாட்டேங்குது???? தமிழகத்தின் இழிவுக்கு காரணம் சினிமா..அதை விட்டொழியுங்கள் மக்களே.!!


Monday, July 12, 2010

த்தூ....!

-: file photo :-

செய்தி ஒன்று

சென்னை: வன்முறையைத் தூண்டியதாக பேசிய வழக்கில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில்  சீமான் கலந்து கொண்டார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானை போலீசார் தேடி வந்தது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேச வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


செய்தி இரண்டு

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி.
கோவை : தமிழகத்தில் மினி எமர்ஜென்சி சூழ்நிலை நிலவுகிறது. என்னதான் அடக்குமுறையைக் கையாண்டாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டுதான் இருப்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.


செய்தி மூன்று

சென்னை: கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டார்.

செய்தி - நான்கு

 தமிழக மீனவர்களைத் சிங்களக் கடற்படை தாக்கவில்லை...இலங்கை அரசு பதில்.......ஆனால் இந்திய அரசின் பதில் என்ன?  தெரியவில்லை. அல்லது இந்திய அரசு எதுவும் சொல்வதே இல்லை....


செய்தி - ஐந்து

இதோ , மீனவர்கள் மீதான தாக்குதலை அரசு அதிகாரிகளே உறுதிப் படுத்துகிறார்கள் என்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டிருக்கிறது.......இந்திய அரசின் நிலையென்ன , இலங்கை அரசின் மறுப்பிற்கு சரியென்று பதில் அளிக்கிறார்களா இல்லை தவறென்கிறார்களா?
Fifty fishermen from Tamil Nadu were injured when they were attacked allegedly by Sri Lankan Naval (SLN) personnel while fishing off Katchathivu Island, PTI reported Sunday, citing Indian Fisheries department officials.

source : tamilnet

இந்தப் பதிலைக் கூட பெற்றுத்தரவில்லையென்றால் திமுகவிற்கு எதற்கு மத்திய மந்திரி பதவிகள்?? எதற்கு மாநில அரசு??? சீமானைக் கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமா?


த்தூ....!!!!