Tuesday, November 17, 2009

தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்


[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 04:44.28 AM GMT +05:30 ]



முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக  அழுவதாகப் புலம்புகிறார்.

இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-

மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை

இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.

நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.


  "இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.


இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.

இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani - November 18,2009)


கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது  "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப்  புதுக் கதை பேசுகிறார்.


வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.


இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.


இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள். 


இந்த ரணில் விக்கிரமசிங்கதான் .  தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.


விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை  நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர். 


மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.


இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான்  தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள்.  இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும்  அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.


விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.


இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார்.

இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும்  விடுதலையில் (17-11-2009)  வந்த செய்தி.


கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.
எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
நக்கீரன்

நன்றி : தமிழ்வின்

Wednesday, November 11, 2009

சிறிலங்காவிடம் போர்க்கப்பல்களை திருப்பிக்கேட்கிறது இந்தியா.!

சிறிலங்காவின் டெய்லி மிரர் பத்திரிக்கை தலைப்பிலிருக்கும் செய்தியை இவ்வாறு வெளியிட்டிருக்கிறது.


India wants warships it lent to Sri Lanka returned

  
The Indian Coast Guard is uncertain about getting back two warships that it leased out to the Sri Lankan Navy in 2007 on an annually renewable contract. The two vessels, Coast Guard Ship (CGS) Varaha and CGS Vigraha, equipped with helicopters and rapid-fire machine guns, were leased out when Colombo was preparing for the offensive against the Liberation Tigers of Tamil Eelam (LTTE). But now the Sri Lankan Navy appears to be clueless about the Coast Guard’s demand for returning the warships and renamed the Varaha as Sagara and the Vigraha as Sayurala. Sri Lankan Navy spokesperson Captain Athula Senarath said on phone from Colombo that his country was grateful to India for making the two vessels available to it.
ஈரோட்டில் பிடிப்பட்ட  டாங்கிகள் இலங்கைக்குப் போகிறது என்றோம்..

இல்லையென்றார்கள்...!

கோவையில் பிடிப்பட்ட இராணுவ வாகனங்கள் இலங்கைக்குப் போகிறது என்றோம்

இல்லையென்றார்கள்...!

இரண்டு இந்தியர்கள் , அனுராதபுர தாக்குதல்களில் காயம்  பட்டார்கள்...அவர்கள்  இந்திய ரேடார்களை இயக்கினார்கள் , இது இலங்கைக்குச் செய்த உதவி என்றோம்....

இல்லை போருக்கான ஆயுத உதவிகளைச் செய்யவில்லை.....வெறும் தற்காப்பு உதவிகளைத் தான் செய்தோம் என்றார்கள்..

இப்போது இந்த இரண்டு போர்க் கப்பல்களை கொடுத்திருந்தார்களாம். அதை திருப்பிக் கேட்கிறார்களாம்.

போர்க் கப்பல்கள் என்ன கேடயங்களா ? தற்காப்புக் கருவிகளா ?


இப்படி பொய்க்கு மேல் பொய் சொல்லி தமிழகத் தமிழர்களை மடையர்களாகவும் , முட்டாள்களாகவும் மாற்றத் துடிப்பது ஏன்?

இவர்களின் அதிகாரப்பூர்வ தமிழக ஏஜெண்டாக  முதல்வர் கருணாநிதி மாறிப்போனது ஏன்?

இதே முதல்வர் கருணாநிதி அவர்கள் அன்று சொன்னது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிகிறது.....

"போருக்கு உதவி செய்யவில்லை" என்று இந்திய அரசு பலமுறை சொல்லிவிட்டது என்றார்...

இப்போது என்ன சொல்கிறார்..????

கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும்..!!!

இப்போது வந்திருக்கிறது.........


அடப்பாவிகளா.............உங்கள் விளையாட்டுக்கு நாங்கள் தான் கிடைத்தோமா? தமிழர்கள் தான் கிடைத்தார்களா?

இனியும் நியாயம் இந்திய அரசின் மூலம்தான் கிடைக்கும் என்று சொல்லித் திரிபவர்கள் யார் என்று அடையாளம்  கண்டு கொள்வது அவசர அத்தியாவசியம் என்று இன்னொரு  முறை கட்டியம் கூறுகிறது இந்தச் செய்தி.!

Tuesday, November 03, 2009

நெஞ்சு பொறுக்குதிலையே - தினமணி கட்டுரை!



இனப்படுகொலையாவது ஒன்றாவது? - தமிழவன்.
.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.

  சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார்.

  அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொருவரிடமும் இலங்கையில் நடக்கும் அநியாயத்தைக் கூறினார். யாரும் முதலில் செவிமடுக்கவில்லை. அந்த இளம் எம்.பி.யின் பிடிவாதத்தால் கடைசியில் மக்கள் உரிமைக் கமிஷன் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அந்த எம்.பி.யின் கருத்துகளைக் கேட்டது.

  அப்படி லட்சியத்துடன் செயல்பட்ட எம்.பி. யார் தெரியுமா? இன்று இலங்கையின் அதிபராக ஐ.நா. மக்கள் உரிமைக் கமிஷனால் கண்டிக்கப்படுகிற சாட்சாத் மகிந்த ராஜபட்சதான். அவருடைய நண்பர்கள், இன்று மகிந்தாவிடம் எல்லா பழைய லட்சியங்களும் போய்விட்டன, அவருடைய மீசையையும் அவருடைய கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரத்தையும் தவிர என்கின்றனர்.

  சில நாள்களுக்கு முன் வந்துள்ள செய்தியில் யுத்தத்திற்கான எல்லா சட்டதிட்டங்களையும் புறக்கணித்ததோடு தன் சொந்த நாட்டு மக்கள் போர் அபாயத்திலிருந்து ஒதுங்கி இருந்த இடங்களில்கூட தாக்குதல் நடத்திக் கொலை பாதகச் செயல்புரிந்த இலங்கை அரசு தண்டனைக்குரியதாக பல மேற்கத்திய நாடுகளாலும் கருதப்படுகிறதென்ற செய்தி வந்துள்ளது. யுத்தத்தால் படுகாயமுற்ற மக்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் இலங்கை அரசு சுமார் 30 முறை தாக்குதல் தொடுத்தது என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

  யுத்தம் நடந்த இடத்தில் தன் சொந்த நாட்டு நிருபர்களையோ வெளிநாட்டு நிருபர்களையோ இலங்கை அனுமதிக்காததால் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இது நடந்தது. இலங்கை அரசு கொடுக்கும் செய்தி மட்டும் தான் வெளியில் வந்தது. ஐ.நா.வின் பிரதிநிதிகளையோ, செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகளையோ, யுத்தம் நடந்த இடத்தில் அனுமதிக்கவில்லை என்பது அகில உலகத்திற்கும் இன்று தெரிந்துவிட்டது என்று துணிந்து எழுதியவர் "ஸன்டேலீடர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்களவர். தனது அரசு தவறு செய்கிறது என்று கூறியதால் அவர் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் திரண்டு இதற்குக் கண்டனம் தெரிவித்தது.

  சமீபத்தில் திசைநாயகம் என்பவர் இலங்கை அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து அனைத்து உலகினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

  பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாதியாக இருந்த மகிந்த தான் இவ்வளவு கொடுமைகளுக்கும் தலைமை தாங்குபவர். அன்று அரசு ராட்சசனாக மாறிவிட்டது என அறிந்து நியாயம் கேட்கப் போன ஒரு மனிதர்தான் இன்று ராட்சசனாக மாறி தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக தனது நாட்டின் ஒரு பகுதியினரின் இனப்படுகொலைக்குக் காரணமானவர் என்று உலக நாடுகளால் குற்றம்சாட்டப்படுகிறார்.

  எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் இரண்டரை லட்சம் மக்கள் தனிமைச்சிறையில் தனது குடும்பத்திலிருந்தும், பிள்ளைகள், ஊரார் உற்றாரிடமிருந்தும் பிரிக்கப்பட்டுக் கம்பி வேலிகள் இட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  ஏன் அவர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யவில்லை என்று உலகினர் கேட்டபோது, யுத்தம் நடந்ததால் பூமி எங்கும் கண்ணி வெடிகள் உள்ளன என்ற பதிலைக் கொடுத்த இலங்கை அரசு, சமீபத்தில் 50 ஆயிரம் மக்களை விடுதலை செய்யப் போகிறோம் என்றது. அப்படி என்றால் கண்ணி வெடிகளால் தான் தமிழ் மக்களைச் சிறை வைத்துள்ளோம் என்ற வாதம் தவறுதானே! பொய்தானே! உலகையும் உலகத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காகக் கூறிய பொய்க்காரணம் தானே!

  இலங்கையின் அரசியலோடு இந்தியாவின் ஒரு பகுதியின் அரசியல் பின்னிப் பிணைந்தது தமிழ்மொழியால். இந்த அடையாளம் இன்றைய தமிழ்ச் சந்ததியினரின் மூதாதையரால் கட்டமைக்கப்பட்டது.

  தமிழர்கள் ஒரு வரலாற்று நியதியின் பாற்பட்டவர்கள். இந்த வரலாற்று நியதி இன்று சிதற ஆரம்பித்துள்ளது. பாரதி, பிஜி தமிழர்களுக்காகப் புலம்பியதும், பாரதிதாசன், தென்னாசியத் தமிழர்களுக்காகப் புலம்பித் தீர்த்ததும் இந்த நியதியில் விழுந்த அடியை உணர்ந்ததால்தான்.

  சமீபத்தில் தமிழ் மக்களில் சுமார் 50,000 பேர் நம் எல்லோரின் கண்முன் செத்து மடிந்தது வரலாறு. இது சாதாரணம் என இன்று நினைத்துள்ளவர்கள் கணிப்பு தவறு. சுமார் 20 பேர் புரிந்த தற்கொலை ஏதோ ஒன்றுக்கான அறிகுறி. தமிழ் மக்களை இனி இந்தியா கவனிக்காது என்ற உற்பாதங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன.

  இலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டாலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை.

  ஜெர்மனியும் ஆர்ஜென்டினாவும் இலங்கை அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி பணம் கொடுக்கும் முடிவை எடுக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகுதான் 2009 ஜூன் மாதம் இப் பணம் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டது.

  இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகளானாலும் இரண்டையும் நடத்த வேண்டிய முறையில் நடத்த இலங்கைக்குத் தெரிகிறது. இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் வேண்டிய அளவு உதவி செய்ததுபோலவே பாகிஸ்தான் (நூறு மில்லியன் டாலர்) ஈரான் (450 மில்லியன் டாலர்) லிபியா (500 மில்லியன் டாலர்) மனித உரிமையற்ற ராணுவ ஆட்சி நடைபெறும் பர்மா (50,000 டாலர்) ஆகியன பல்வேறு முறையில் உதவுகின்றன; அல்லது உதவ முன்வந்துள்ளன.

  மலேசியாபோல எந்த இன அடையாளத்தையும் அங்கீகரிக்காத நாடாக இலங்கை தன்னை உருவமைக்க நினைக்கிற சூழலில் ஒரு பெரிய அடி சமீபத்தில் இலங்கைக்கு விழுந்திருக்கிறது. தமிழர்களைச் சித்திரவதை செய்து வருகிற இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் என்று அழைக்கப்படும் வியாபார ஒப்பந்தம் மூலம் இந்தப் பேரிடி விழுந்துள்ளது. அதாவது 2005-ம் ஆண்டிலிருந்து சுங்கவரி இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை, துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. சுமார் ஒரு லட்சம் இலங்கை மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்த துணி ஏற்றுமதியில் சுமார் ஆயிரம் மில்லியன் யூரோ அளவு வியாபாரம் நடக்கிறது. இலங்கையின் கைகளில் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்திருப்பதால் இந்த வியாபார உடன்படிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

  இதற்காக ஐ.நா.வின் மக்கள் உரிமைக் கமிஷனர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்தால் போதும் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு உடன்பட இலங்கை மறுக்கிறது. இந்தியா இலங்கையை அது எது செய்தாலும் ஆதரிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறதுபோலும்.

  அதாவது ஐ.எம்.எப். நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்காவிடில் இந்தியா அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இச்செய்தி ஓர் ஆங்கில நாளிதழில் (அக்.22. 2009) வந்துள்ளது. இலங்கையின் துணை நிதியமைச்சர் சரத் அமுனுகாமா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இச்செய்தியை உறுதியும் செய்திருக்கிறார்.

  இப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று. நம் அரசு பணத்தில் மிதக்கிறது என்று. நம் நாட்டில் ஏழை விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்வதில்லை என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது.

  இனி தமிழர்களை வதைக்காதே என்று எங்கோ இருக்கிற வெள்ளைக்கார ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக்கூட வியாபாரத் தடையை ஏற்படுத்த முடியாது. பணக்கார இந்தியா இருக்கவே இருக்கிறது, பண உதவி செய்ய!

  இலங்கை அரசு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. முள்கம்பிவேலி முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட செயல் இலங்கைக்கு ஏற்படுத்திய அபகீர்த்தியைப் போக்க ராஜபட்ச அவருடைய தமிழக நண்பருக்குக் கடிதம் எழுதித் தீர்த்துக் கொண்டார். தமிழக நண்பர், பத்துப் பேர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஐரோப்பியர்களின் கவனத்தைச் சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். நாங்களே குறை சொல்லாதபோது ஐரோப்பியனே உனக்கென்ன கவலை?

  மக்கள் உரிமை, "ஜீனோûஸட்' என்னும் இனப்படுகொலை, தமிழ் மக்களின் உரிமை என்பதெல்லாம் ஐரோப்பியர்கள் நேரம் போகாததால் கண்டுபிடித்த விஷயங்கள்!

  நெஞ்சு பொறுக்குதில்லையே...!

(கட்டுரையாளர்: போலந்து நாட்டு வார்ஸô பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்).

Tuesday, October 27, 2009

வணக்கம் திருமா…..இன்னொரு முண்டம் பேசுகிறேன்…!

தனிப்பட்ட முறையில் நமக்கு திருமாவளவன் அவர்கள் மேல் நமக்கு எந்தக் கோபமும் இல்லை. வாழ்ந்து முடித்த தலைவர் கூட பதவியைப் பிடித்துக் கொண்டு தமிழினத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கிற சூழலில் , மகன் மந்திரி ஆன பிறகும் கூட , நாடாளுமன்றத்தில் , சட்டமனறத்தில் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகள் ஆன பிறகும் கூட எங்கே தாவலாம் என்று காத்திருக்கும் தமிழின உணர்வாளர்கள் மிகுந்திருக்கும் இத்தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துகிற ஒருவர் அவர்களது உரிமைகளுக்காகப் போராடுகிறேன் என்று சொல்லுகின்ற ஒருவர் இந்த அளவேனும் தனது குரலை உயர்த்திச் சொல்லுகிறாரே என்று சந்தோஷம் தான் பட்டோம்.


நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திருமா எடுத்த நிலையில் கூட எந்தவித வருத்தமும் இல்லை…..நிறைய முறை நாம் வைகோவின் மீதும் , நெடுமாறன் மீதும் , சீமான் மீதும் புலிகளின் தமிழ்த்தேசிய போராட்டத்தை , தமிழீழத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தை தமிழினத்தின் நலனை எக்காலமும் விரும்பியிருக்காத ஜெயலலிதாவிடம் ஒரு தேர்தல் பிரச்சினையாக அடகு வைத்து விட்டார்களே என்ற ஆற்றொணாக் கோபம் கொண்டிருந்தோம். அதற்கு சற்றே மேம்பட்ட நிலையைத் தான் திருமாவளவன் எடுத்தார் என்றே எண்ணினோம்.!


ஆனால் காலம் பாருங்கள் ....இன்று அவரது நிலைமையை விமர்சித்து ஒரு பகீரங்கக் கடிதத்தை எழுதும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.


வணக்கம் திருமா அவர்களே.....


உப்புக்கொஞ்சம் அதிகம் போட்டுச் சாப்பிடுகிற காரணத்தால் நாங்கள் நலமாயில்லை......! நீங்கள் நலமாய் இருக்கிறீர்களா?


ஒருவாரமாக மனது கடும் உளைச்சலில் இருக்கிறது. எண்ணியவற்றை எழுத்தாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று கை பரபரத்தது.  இனி இதோ எம் எண்ணங்கள் உங்கள் பார்வைக்கு....( பகீரங்கக் கடிதம் , வேண்டுகோள் , விமர்சனம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளூம் உரிமையை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.)


முள்வேலிக்குள் மூணு லட்சம் சனம் தவிக்கிற ஒரு சூழலில் , நீங்கள் இலங்கைக்கு தூதுக்குழுவில் இடம்பெற்று சென்ற போது எல்லோருக்குமே ஒரு இயல்பான எதிர்ப்பார்ப்பு எழுந்தது.எல்லோருக்குமே ஒரு மெலிதான நம்பிக்கை பிறந்தது.

எல்லோருக்குமே உங்கள் மூலம் நமது மக்களின் அவல நிலை வெளிப்பட்டு விடாதா என்ற ஏக்கம் இருந்தது.

தோழர் திருமா ….


நீங்கள் ஒத்துக்கொண்டாலும் , ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த எதிர்ப்பார்ப்பை வீணடித்து விட்டீர்கள் என்பதுதான் உண்மை…


தோழர் தி்ருமா….

நீங்கள் என்னதான் இப்போது சப்பைக் கட்டு கட்டினாலும் எங்களின் அந்த நம்பிக்கையை சிதைத்து விட்டீர்கள் என்பதே உண்மை.


தோழர் திருமா……


நீங்கள் இப்போது என்னதான் வீரம் பேசினாலும் எங்கள் ஏக்கத்தை , தவிப்பை புரிந்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டீர்கள் என்பதே உண்மை…


அதை விடுத்து உங்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் திருமாவை விமர்சிப்பவர்கள் எல்லோரும் தலையற்ற முண்டங்கள் என்று பதிவிடுகிறீர்கள்….! விமர்சிப்பவர்களை நீங்கள் இப்படி விமர்சிப்பதன் மூலம் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்வதன் அர்த்தம் என்ன? அத்தகைய விமர்சிக்கும் ஒரு முண்டமாகவே என்னையும் கருதிக்கொள்ளூங்கள்...! எங்களுக்கு பெரியார் விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தைக் கொடுத்திருக்கிறார்..!


பகுதி – 2 ஐ பார்க்கச் சொல்லி வேறு மேற்கோள் காட்டியிருந்தார்கள்…….அதில் என்ன சொல்கிறீர்கள்????


தினமலரில் விமர்சித்த முண்டத்திற்கு இதுதான் பதில் என்று சொல்லியிருக்கிறீர்கள்.!


அங்கே போய் ராஜபக்சே கொடுத்த பஜ்ஜி , சொஜ்ஜியை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருமே சாப்பிடக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தார்கள் என்கிறீர்கள்…அதன் மூலம் உங்களைப் பற்றி மட்டும் நியாயப்படுத்தவில்லை…..யாரையெல்லாம் நியாயப்படுத்துகிறீர்கள் தெரியுமா?


தோழர் திருமா …..கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள்….அது யார் எழுதியது தெரியுமா?


சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களைக் காட்டிலும் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்ட தமிழர்களின் எண்ணிக் கை அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் சித்ரவதை முகாம், ஹிட்லரின் சித்ரவதை இருட்டறைகளை விட கொடுமையானது என்பது உலகின் கணிப்பு. இந்த சித்ரவதை முகாம்களில், சிங்களவர்கள் துன்புறுத்தப்படுவதில் லை. மாறாக விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களே துன்புறுத்தப்படுகின்றனர்.

        அது யாருடைய குரல் தெரியுமா?

இதோ இணைப்பினைக் கொடுக்கிறேன்…..படியுங்கள்….


உங்களோடு பத்து எம்.பிக்களில் ஒருவராக வந்த அழகிரி என்கிற காங்கிரஸ் எம்பியின் குரல் அல்லவா அது? காலமெல்லாம் புலிகளைக் கரித்துக்கொட்டுவதில் குறியாய் இருந்த இந்த அழகிரியா ராஜபக்சேவின் பஜ்ஜி சொஜ்ஜியை வேண்டாம் என்று சொன்னார் என்று கதையளக்கிறீர்கள்???


தமிழ்த்தேசியத்தையே சிதைக்கின்ற அளவிற்கு தன் கருத்துக்களால் விஷம் விதைத்த இவர்களைப் போன்றவர்கள் ,எல்லாம் அருமையாகவே இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரம் வாசித்த ஆருண் , சுதர்சன நாச்சியப்பன் போன்ற தமிழ்த் தேசிய விரோதிகள் எல்லோரும் ராஜபக்சேவிடம் விருந்துணவு சாப்பிட மறுத்தார்கள் என்ற தவறான கருத்தை நீங்கள் பதிவு செய்வதன் மூலம் உங்களை அவர்களோடு இணைத்துக்கொள்ள ஏன் துடிக்கிறீர்கள் திருமா?


உங்கள் நியாயப்படுத்தலுக்கு ஒரு அளவு   வேண்டாமா? கலைஞர்தான் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த சுயமரியாதையை விற்றுக் காசாக்கி எங்களைக் கண்ணீரில் தள்ளி விட்டார் என்றால் நீங்களுமா?


கலைஞரின் பாரிய முயற்சியால் எல்லாம் நன்றாக நடந்துவிட்டதாக  சொல்கிறீர்கள். அதை குறை சொல்வது எமது நோக்கமுமல்ல. யார் குத்தியாகிலும் அரிசியானால் போதும் என்ற அவல நிலையில் தான் தமிழினமும் இருக்கிறது. அது இனத்துரோகிகளால் வந்த இழிநிலை. அத்தகைய துரோகிகளில் ஒருவரால் தான் ஈழத்தமிழினம் பிழைக்கிறது என்று நீங்கள் சொல்வதை ரசிக்க முடியாவிட்டாலும் கடந்து போகிறோம்..



ஐரோப்பிய ஒன்றியமும் , அமெரிக்காவும் கொடுத்த அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இலங்கை இந்தியாவிடம் கையேந்த , அதன் மூலம் மத்திய அரசு போட்ட சூழ்ச்சிதான் இந்த ஆளுங்கட்சி எம்.பிக்களின் விஜயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதன் மூலம் தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொள்ள முயற்சித்தது இலங்கை அரசு என்பதும் நீங்கள் திரும்பி வந்த அடுத்த நாளே இலங்கைஅரசு கொடுத்த பேட்டிகளைப் பார்த்தாலே புரியும்.


அச்சூழலில் , உங்களின் சிறு எதிர்ப்போ , அல்லது முகாம்களின் , தமிழர்களின் அவல நிலை பற்றிய எந்தவொரு கருத்து அங்கிருந்து , இலங்கையிலிருந்து நீங்கள் பதிந்திருந்தாலும் அது உலக நாடுகளின் பாரிய கவனத்தைப் பெற்றிருக்கும் , இந்திய மீடியாக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் , உண்மைநிலை என்னவென்று உலகுக்கு விளங்கியிருக்கும் என்ற எளிய உண்மை கூட உங்களுக்குப் புரியவில்லையா அல்லது புரிந்தும் புரியாதவராகவே இருக்க விரும்புகிறீர்களா திருமா?



வாய்ப்புக்கிடைத்த போது பயன்படுத்தாமல் அமைதியாகவே இருந்துவிட்டு இங்கே வந்து தெருமுனையில் மைக் போட்டு உங்கள் தரப்பு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வதால் எள் முனையளவிற்காவது எம் இனத்திற்கு நன்மை உண்டா திருமா? அட வெகுஜன இதழ்களில் கூட அது அச்சேறாது என்ற உண்மை உங்களுக்கும் தெரிந்ததுதானே?


கடைசியில் தமிழினம் அது இதுவென்று வீராவேசம் பேசி நான்கைந்து பேரை தீயிற்கு இரையாக்கியதைத் தவிர வேறென்ன சாதித்தீர்கள் திருமா? உங்களை நியாயப்படுத்திக்கொள்வது விடுதலைச் சிறுத்தைகளின் இளைஞர் படையைத் தக்க வைத்துக்கொள்ள மட்டும் தானே உதவுகிறது? அதனால் தமிழ்த்தேசியப் போராட்டம் என்ன வலுப்பெற்றது என்று விளக்கமுடியுமா திருமா?


அட , பதினைந்தே பேராக இருந்தாலும் இலங்கைத் தூதகரத்தைத் தாக்கியதன் மூலம் உலக நாடுகளின் கவனமனைத்தையும் பெற்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட தனித்துத் தெரிகிறார்…..ஆனால் இன்று உங்களின் தமிழுணர்வைக்கூட சந்தேகப்படும்படியாக இன்று நாலுபேர் கேள்வி கேட்கும்போது அதற்கெல்லாம் பதில் சொல்லுமளவிற்கு நீங்கள் தாழ்ந்து போனதற்கு யார் காரணம்? எது காரணம்?


சில விடயங்களீல் பதிலைப் பேசுவதைவிட அமைதியாக தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்வதே சிறந்த மருந்தாகும். தவறுகளைத் திருத்திக்கொள்வதே சிறந்த மனிதப் பண்பாகும். நாம் மனிதர்கள்..தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்லர்.


அதனால் உங்கள் நியாயப்படுத்தல்களையும் , பசப்பு வாதங்களையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள். தமிழின விடுதலைக்கு எதிரானவர்கள் உங்களை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளூங்கள்…..


உங்களைப் போன்ற போர்க்குணம் மிக்க தலைமைகள் தமிழினத்திற்குத் தேவை…. ஆயுதம் ஏந்தா விடுதலைச் சிறுத்தைகளாய் சமரசமற்ற விடுதலைப்பாதையில் நீங்கள் பயணியுங்கள்….! வெற்றீகளை வீர மறவர்கள் வீடு கொண்டு சேர்ப்பார்கள்..


கவலை விடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டு வாருங்கள்…… தமிழகத்தைத் திரட்டி முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பதில் சொல்லச் சொல்லி உலகத்தின் மனச்சாட்சியை உலுக்குங்கள்..!!!


இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாளில் உலகம் பதில் சொல்லும்..! சொல்லித்தான் ஆகவேண்டும்….
 
அதுகாறும் உணர்வுள்ள எந்தவொரு தமிழனும் அடங்கமாட்டான்….
 
யார் அடக்கினாலும் , அது நேற்றைய தமிழினத் தலைவராகவே இருந்தாலும் அடங்க மறுப்பான்….அத்து மீறுவான்.!



கதிரவன்

ஒரு தமிழ்த்தேசியன்

Sunday, October 25, 2009

யாழ்ப்பாணத்தில் கலைஞர் கொடும்பாவி எரிக்கும் நிலை வரலாம்!- வலம்புரி நாளிதழ்!

இலங்கைக்கு வருகை தந்த தமிழக நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

எனினும் இலங்கைக்கு விஜயம் செய்த தமிழகக் குழுவில் இடம்பெற்றிருந்த தொல்.திருமாவளவன் பிரதமருடனான சந்திப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.
பிரதமருடனான சந்திப்பில் திருமாவளவனை வெட்டிவிட்டார் கலைஞர் கருணாநிதி. ஆக தமிழக நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தமை,  தடுப்பு முகாம்களில் உள்ள மக்களைச் சென்று பார்வையிட்டமை போன்றவற்றால் ஏதேனும் நடந்ததோ இல்லையோ தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகக் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதால் எதனை அடையக் கலைஞர் முயன்றாரோ அது நடைபெறவில்லை. ஈழத்தமிழர் விடையத்தில் அண்மைக்காலமாக கலைஞரின் நட்டுவாங்கம் சுருதிமாறி நடனத்தைக் குழப்புகின்றது.

உண்ணாவிரதம் இருந்ததில் தொட்ட நாசம் இன்னமும் முடியவில்லை. ஈழத்தமிழர் தொடர்பில் அவர் சுருதி பிழைப்பதற்கான காரணம் எதுவெனில் யாரோ செய்ய கலைஞர் உரிமை கோர முற்படுவதுதான் எனலாம்.

தமிழகக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய கலைஞர் அதனுடாக ஈழத் தமிழருக்கு உதவ இம்மியும் நினைத்தாரில்லை. மாறாக முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களின் பரிதாப நிலைகண்டு மேற்குலகமும் ஐ.நா சபையும் கலங்கிப் போயுள்ளது.

உலகம் முழுவதும் அந்த நாடுகள் பிரசாரம் செய்கின்றன. இப்பிரசாரம் உச்சமடையும் தறுவாயில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகும்.

அவ்வாறு நடவடிக்கை எடுப்பது இருவேறு தாக்கத்தை இந்தியாவிற்கு தோற்றுவிக்கும். அதில் ஒன்று ஈழத் தமிழர்களின் இந்நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். எனவே குற்றக் கூண்டில் ஆளும் இந்திய மத்திய அரசை ஏற்றவேண்டி வரும்.

இதனால் இந்திய மத்திய அரசுக்கு துணைபோன தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ் என் மூச்சு என்ற போலிப் பேச்சும் உடைபட்டுப் போகும். அடுத்து ஈழத் தமிழரின் அவலத்தைப் போக்க மேற்குலகம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த அண்டை நாட்டின் மீதான தன் செல்வாக்கு சிதைவடையும் என்பது இந்திய நிலைப்பாடு.

எனவே முதல்வர் கருணாநிதி ஊடாகத் தமிழரின் வாயால் தமிழருக்கு எத்துன்பமும் இல்லை எனறு கூறவைத்தால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு எட்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கலைஞர் நிறைவேற்ற முற்பட்டார்.

ஆனால் தொடர்ந்தும் பேய்க்கூத்தாடினால் அவரின் கொடும்பாவி யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டதென்ற செய்தியை அவர் கேட்க,  அதுவே அவரின் ஆயுளுக்கு வினையாக மாறும் நிலையும் உருவாகலாம்.



இப்போதாவது உலகத்தமிழர்கள் கலைஞரின் நாடகத்தினையொட்டி எவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதை கலைஞர் புரிந்து கொண்டு செயலாற்றுவாரானால் நல்லது. இல்லாவிடில் உலகத் தமிழர்கள் முதலில் கலைஞருக்கு எதிராக கிளர்ந்தெழுவதை தவிர்க்கவியலாது....அத்தகைய கிளர்ச்சிக்குக் காரணமும் அவரே என்பதை யாரும் மறுக்கவியலாது. !


Friday, October 23, 2009

ரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன்...!

இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கின்றது!: கலைஞர்



இலங்கை முகாம்களில் இருந்து தமிழர்கள் வீடு திரும்புகிறார்கள். சண்டை ஒழிந்தது சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்! என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்   பருவ மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், இலங்கைத் தீவில் ஆடிக்காற்று வீசிக் கொண்டிருந்தது.


அந்தி வானத்திலே சிவப்பு; அந்தப் பூமியெங்கும் பரவியிருந்தது. அந்த வண்ணத்தை அந்தத் தீவின் தெருக்களில் தீட்டுவதற்கு தமிழ் ஈழ உரிமைப் போரில் ஈடுபட்ட இலங்கை வாழ் மக்களின் படைவரிசை இருபக்கமும் நின்று குருதி பொழிந்தவண்ணம் இருந்தன.


சகோதர யுத்தத்தை, பாண்டவர்கள்   கௌரவர்கள் கதையிலே படித்த மக்கள்; கடந்த சில ஆண்டுக்காலமாக காட்சியாகவே அந்த சின்னஞ்சிறு தீவில் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள்  அந்தோ; கொடுமை! எதிரியின் அடையாளங்கண்டு; ஏறிமிதிக்கப் புறப்பட்ட அணிவகுப்பு; திசைமாறித் திரும்பி தன் படை வரிசையையே குலைத்துக் கொண்ட கொடுமையை என்னவென்று கூறிக் குமுறி அழுவது!


அங்கே சண்டை நடந்தால்தான்; மண்டைகள் உருண்டால்தான்; அதுவும் தமிழினத்தின் பிணங்கள் குவிந்தால்தான்; ஒப்பாரிப் பாட்டு ஒலிக்கவே சுருதி சேருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்த எட்டப்பர்கள்   தாங்கள் விரும்பியவாறு அண்ணன் தம்பிகளை அந்த மண்ணில் சவமாகச் சாயவிட்ட பிறகே; சந்தோஷம் கொண்டார்கள்   மனச்சாந்தி பெற்றார்கள்.


ஆனால், அய்யகோ; அந்த மயான அமைதிக்குப் பிறகும்   அந்த மண்ணில் திக்கற்றுத் தவிக்கும் தமிழ்க் குடும்பங்களைக் கைதூக்கி விட்டுக் காப்பாற்றும் முயற்சியிலாவது ஓரளவு வெற்றி பெற முடிந்ததே என்று மனம் ஆறுதல் பெறுகிறது.



காங்கிரசார், கழகத்தினர் எனப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பேரரசின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு அனுப்பும்போதுகூட; இவர்கள் போய் என்ன செய்யப் போகிறார்கள்; ஏமாற்றத்தைத்தான் கப்பலேற்றி வந்து இங்கே இறக்குமதி செய்வார்கள் என்று எண்ணியவர்கள், எண்ணியதையெல்லாம் பேசியவர்கள், இன்று நாவடங்கி நாடறியாமல் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.


நமது நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை சென்றபோது வாக்குறுதி வழங்கப்பட்டது. போர் முடிந்துவிட்டது; இனி அமைதியான அரசியல் தீர்வுதான்   என வாக்களித்தார்கள்.


முகாம்களில் முள்வேலிக்குள்ளிருந்தோர்; நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார்.


வாக்குறுதி நிறைவேற்றியவர்களை நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.


தொப்பூழ்க்கொடி உறவுகளைத் தொட்டுத் தழுவி; தொடர்கின்றோம் நமது லட்சியப் பயணத்தை.


ரத்தம் சிந்திடும் இனத்தின் பரிதாப நிலை கண்டு விம்மி அழுத   அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே? சண்டை ஒழிந்தது   சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்!


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 ****



Thursday, October 15, 2009

யாழ்ப்பாணத்தில் சனீஸ்வரனும் , தமிழகத்தில் சகுனியும்!

மஹாபாரதத்தில் சகுனி என்ற ஒரு பாத்திரம் இருப்பதை மிகப்பலரும் அறிவார்கள். மஹாபாரதத்தின் அடிப்படையே சகுனியின் சூழ்ச்சிதான் என்பதையும் பலரும் ஒத்துக்கொள்வார்கள். அத்தினாபுரத்தினை வீழ்த்துவதே அச்சகுனியின் உள்நோக்கமாக இருந்தது. நெஞ்சில் வஞ்சகத்தை வைத்துக்கொண்டே ஒவ்வொரு சதியாலோசனையாக துரியோதனனுக்குச் சொல்வான் சகுனி.

தெரிந்தோ , தெரியாமலோ சுயமரியாதை இயக்கமே மஹாபாரதம் பற்றிய எனது கருத்துருவாக்கத்தை வடிவமைக்க உதவியது. கற்பனைக்கெட்டாத பொய்களும் , புரட்டுக்களும் நிரம்பியிருந்த அப்புராணத்தின் ஒரு கேரக்டர் இன்று நம் கண் முன்னே நடக்கின்ற ஒரு அசிங்கத்தை , ஒரு அவலத்தை , சுட்டிக்காட்ட உதவுகின்ற நிலை பற்றிய வருத்தம் எனக்குண்டுதான்.

சகுனியாவது வேற்றுநாட்டுக்காரன் ,  வேற்றினத்தான் , வஞ்சகம் கொண்டான். ஆனால் , எங்களுக்கு வாய்த்த சகுனியோ எங்களுக்குள்ளேயே பிறந்தவர். எங்களிடையேயே வளர்ந்தவர்.எங்கள் – எங்கள் என்று நான் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கின்ற எங்களை இணைக்கின்ற சக்தியான தமிழைச் சொல்லியே பிழைத்தவர். எங்களுக்கெல்லாம் சுயமரியாதையையும் , பகுத்தறிவையும் போற்றிப்போற்றி வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர்.

ஒவ்வொரு முறையும் அச்சகுனியானவர் அதைச் செய்யப்போகிறேன் , இதைச் செய்யப்போகிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு வழக்கம்போலவே எங்களின் முதுகில் குத்தி எங்கள் எதிரியுடன் சமரசம் பேசிக்கொள்கிறார். சர்வ வல்லமை படைத்த தனது மீடியாக்களின் உதவியுடன் எங்களின் முதுகில் குத்தியதையே தனது சாதனையாக்கி எங்களின் எலும்புகளின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். அப்பாவி மக்கள் , அதையே உண்மையென எண்ணி அவரைத் தங்கள் சாதனையாளராக நம்பி ஏமாந்து போகிறார்கள். தங்களை நரபலியெடுத்தவனின் கூட்டாளி அவர் என்பதை வரலாறு பதிவு செய்தாலும் கூடவே எமது மக்களுக்கு அச்செய்தி போய்ச் சேருவதே இல்லை. அதன்மூலம் , எமது தமிழ் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க முயல்கிறார்.

தம் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க விரும்பும் யாருமே தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியற்றவர்கள். ஆகவே , 60 ஆண்டுகாலம் நாம் தலைவன் என்று சொன்ன ஒருவரை அவரது இறுதிக்காலத்தில் நீங்கள் தலைவனாகவே இருக்க லாயக்கற்றவர் என்று சொல்லும் துர்பாக்கிய நிலைக்கு அவர் நம்மைத் தள்ளி விட்டிருக்க வேண்டாம்…!



ஏனோ இந்த நிலை காழ்ப்புணர்ச்சியாலோ , உணர்ச்சி வேகத்தாலோ எடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் கீழிருக்கும் கேள்விகளை சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்

கொல்லப்படுகின்ற எமது இனத்துக்காக முத்துக்குமரனின் வழிகாட்டுதலில் தம்மையே அழித்துக்கொண்டு அழிந்தவர்களின் தியாகத்தையும் , அதன் மூலம் எழுந்த மாணவர் எழுச்சியையும் எம்பிக்களின் ராஜினாமா என்ற நாடகத்தின் மூலமும் , அதிகாரத்தின் மூலமும் கொன்றொழித்தார். அதன் மூலம் தமிழகத்தில் பொங்கியெழுந்த இனவுணர்வினைச் சிதைத்தார்.

எங்களின் இனவுணர்வினை சிதைத்த ஒருவரை எப்படி நாங்கள் தலைவராக ஏற்க முடியும்?

முள்ளிவாய்க்காலில் பாரிய மனித அவலம் ஒன்று நடைபெற்ற போது திடிரென அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் அமர்ந்து கொண்டார். அன்றும் கூட ஏதாவது மாற்றம் நடந்துவிடாதா என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம். ஆனால் அந்த நாடகத்தையும் விரைவில் முடித்து போர் நின்றுவிட்டதாக ப்லிம் காட்டினார். ஆனால் அடுத்த நாளே முள்ளிவாய்க்கால் முழுதுமே தமிழனின் இரத்தம் பரவிச் சிவந்தது. இன்றுவரை அதற்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரில்லை.

தமிழனின் வரலாறு இதுவரை கண்டிராத பாரிய மனிதப் பேரவலத்தைப் பற்றி இன்றுவரை வாய் திறவாத ஒருவரை எங்களில் ஒருவராகவே ஏற்கவியலாது என்ற சூழலில் எங்ஙனம் எங்களின் தலைவர் என்று சொல்வது?

சிங்களனைக் கோபப்படுத்தும் படி பேசி விடாதீர்கள் என்று சொல்லி கதைகதையாக அவர் சொல்லிவந்த புறநானூற்று வரலாற்றை புதைகுழியில் தள்ளிச் சென்றார். ஒட்டுமொத்த தமிழினத்தை கோழையாக்கி குறுகுறுக்க வைத்தார். கோழைத்தனத்தின் வெளிப்பாடாய் வீரத்தையும் , விவேகத்தை இழந்து போனார்.

மனச்சாட்சியுள்ளவர்களே சொல்லுங்கள்……..ஒரு கோழையை எங்களின் தலைவர் என்று நாங்கள் எப்படித்தான் சொல்வது?

அரைலட்சம் மக்களை ஒரே நாளில் பரிகொடுத்துவிட்டு , மூன்று லட்சம் மக்கள் திறந்தவெளிச் சிறையில் பரிதவிக்கும் போது உலகத் தமிழ் மாநாடு எடுத்து உச்சி மகிழ நினைப்பவரை நாங்கள் என்ன சொல்லி அழைப்பது? தமிழனென்றா இல்லை தமிழினத் தலைவரென்றா?

நேற்றும் கூட தமிழகத்து எம்.பிக்களை இலங்கைக்கு அனுப்பினார். அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த சனீஸ்வரனின் தூதுவர்கள் என்று வலம்புரி நாளிதழ் வர்ணித்தது. ஆதரவற்று கண்ணீர் மல்கி , போக்கிடம்  தெரியாமல் புலம்பும் மக்களுக்கு நீங்கள் ஆதரவுக் குரல் தராவிடினும் பரவாயில்லை. அதட்டாமல் இருந்தால் போதும். ஆனால் எத்தகைய அணுகுமுறையை இவர்கள் உபயோகித்தார்களளென்பதை உதயன் நாளிதழ் கிழித்தெறிந்து இருக்கிறது.


எவ்வளவு சூழச்சிகரமாக இந்த எம்.பிக்களின் பயணம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உணர முடியும்….

தமிழக எம்.பிக்கள் யாழ்ப்பாணம் போனார்கள்….மானிக் பார்ம் போனார்கள்…….மலையகம் போனார்கள்.

இலங்கையில் உட்கார்ந்து கொண்டு ஜே.எம்.ஆரூணும் , சுதர்சன நாச்சியப்பனும் இலங்கை அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றும், மலையகம் சொர்க்க லோகமாக மாறிப் போனது என்றும் உலகநாடுகளுக்கு ஒரு சேதி சொன்னார்கள். வெளிக்கிடைக்கும் செய்திகள் பொய்யென்று ஆருண் சொல்லி சிங்களத்துச் சேவகனானார். அது உலகப் பத்திரிக்கைகள் அனைத்திலும் வெளிவந்தது. சிங்களம் தமிழக எம்பிக்கள் பாராட்டுப் பத்திரம் வாசித்ததாக சொல்லி மகிழ்ந்தது.

ஆனால் , இறுதியாக முதல்வரிடம் கொடுத்த அறிக்கைகள் எம்.பிக்கள் கொடுத்த அறிக்கையில் நேர்மாறான ஒரு நிலையினை எடுத்து வைத்தார்கள். இந்நிலையில் இலங்கையில் மேற்கண்ட பேட்டியினைக் கொடுத்த ஜே.எம்.ஆருணுக்கும் , சுதர்சன நாச்சியப்பனுக்கும் எவ்வித மறுப்பும் கொடுக்கப்படாமை தீவிர நோக்குதலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

இலங்கையில் ஒரு நிலை , தமிழகத்துக்கு வந்தபிறகு இன்னொரு நிலை என்று இரட்டை வேடம் போடுவது யார் நலனுக்காக என்பதையும் அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஆறுமாதங்களில் மக்கள் எல்லோரையும் மீள்குடியேற்றம் செய்யப்போகிறோம் என்று ஐநாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வெளிப்படையாகவே மறுக்கும் மகிந்த ராஜபக்சே 58000 மக்களை விடுவிக்க ஒத்துக்கொண்டதாக அகமகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்.

துன்பத்தில் உழலும் மக்களில் ஓரிருவர் விடுவிக்கப்பட்டாலும் மகிழ்ச்சியே. ஆனால் நேற்று அக்கட்சி சார்பு தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்ததும் நரகலைத் தின்ற உணர்வே மிகுதியானது.

தமிழக அரசின் அயராத முயற்சியால் , 600 தமிழர்கள் விடுவிக்கப்பட்டார்களாம். இந்தச் செய்தியை இவ்வளவு கோலாகலமாக வெளியிடும் இந்தத் தொலைக்காட்சி முள்ளீவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மடிந்த போது எங்கே போயிருந்தது? ஏன் அதை இருட்டடிப்பு செய்தது? இக்கேள்விக்குப் பதிலுண்டா? சரி அதை விடுங்கள். இன்று இலங்கை அரசு 58000 அகதிகளை விடுவிப்பதாகச் சொன்னதைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்கிறதே…..போர் நிறுத்தம் போன்றதொரு கண் துடைப்பு அறிவிப்புதானா அது?

எந்நேரமும் ஆட்சி , ஓட்டு , பதவி என்று எழவு கொட்டிக் கொண்டிருப்பவர்களின் பின்னால் தமிழர்கள் இருக்கப் போகிறார்களா இல்லை வீரமும் , ஈரமும் நிறைந்த போராட்டம் ஒன்றை நடத்தி உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த போராளிக்கூட்டமொன்றின் வீர மறவர்களுக்கு புகழ் சேர்க்கப் போகிறார்களா என்ற கேள்வியை உங்கள் ஆய்வுக்கு வைத்து விடை பெறுகிறேன்.

கதிரவன் – ழகரத்துக்காக.

Tuesday, October 13, 2009

கலைஞரும் , மன்மோகன்சிங்கும் சோனியாவுக்கு நிகழ்த்திக்காட்டிய பொம்மலாட்டம்!

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன - சுதர்சன நாச்சியப்பன்


சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர் என இந்திய நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். இவர் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி; இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?


பதில்; சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

கேள்வி; முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?

பதில்; சுதந்திரமாக சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.

கேள்வி; முகாம்களின் நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?

பதில்; அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.

உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.

கேள்வி; தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?

பதில்; அதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.

கேள்வி; தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?

கேள்வி; நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?

பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?

கேள்வி; அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?

பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.

கேள்வி; நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?

பதில்; நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

கேள்வி; தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?

பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

கேள்வி; விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?

பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.

கேள்வி; மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .

பதில்; மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.

மூலம்: வீரகேசரி

***

கலைஞரும் , மன்மோகன் சிங்கும் சோனியாவுக்கு நிகழ்த்திக்காட்டிய இந்தக் கேவலமான பொம்மலாட்ட நிகழ்வு வேதனைக்கு உள்ளாக்குகிறது.

முதன் முதலில் தமிழகத்தில் தமிழனாக பிறந்தமைக்காக ஒவ்வொரு தமிழகத்து தமிழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் , வேதனைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். இந்த இனத்துரோகிகளை  தேர்ந்தெடுத்ததன் மூலம் தீராப்பழியை சுமக்கிறோம் நாம்.!

உலகளவில் இந்த தமிழக எம்பிக்களின் இலங்கை விஜயம் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தையே சூனியமாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் தமிழனாக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறோம். அவமானப் படுகிறோம்.

இது தவிர்த்த வேறெந்த வார்த்தைகளும் சொல்லக்கிடைக்காத அளவிற்கு "ழகரம்" ஏமாற்றத்தில் மூழ்குகிறது.

Monday, September 28, 2009

ஸ்ரீ அனுமன் சாலிஸா - தமிழில்.!

ஸ்ரீ துளசிதாசர் இயற்றிய ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ் , ஆஞ்சநேய வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று நடந்த சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகாரம் அனுமன் வழிபாடு என்றே பெரியவர்கள் சொல்கிறார்கள்.....ஆகவே உங்களின் பார்வைக்கு.......இதன் மூல வடிவத்தை தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பினை அழுத்தவும்.


ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ்





குருவின் தாமரைப்பாதம் பணிவேன்..
உருவிலா மனதின் மாசு நீக்குவேன்.

ராமனின் அருளின் திறனை வியப்பேன்.
வீடுபேறினை அடைந்திடல் செய்வேன்.!

எத்துணை சின்னஞ்சிறியவன் நானே…
அத்துணை சான்றோர் ஆன்றோர் நடுவே.

அத்துணை திறனையும் எனக்களித்தருள்வாய்.
அகிலத்தின் துன்பம் அனைத்தும் நீக்குவாய்..

மூவுலகையும் நீ வென்றது சரித்திரம்……
உனை வணங்கிட நெருங்குமோ தரித்திரம்?

வாயு புதல்வனே…அஞ்சனை மைந்தனே..
உனை வென்றிட உலகினில் யாருளர்.

ரகுவரன் தூதனே , இராம பக்தனே
வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றாய்..!

தைரிய புருஷனே , அறிவின் அடக்கமே…
உன்னை நம்பியே பணிந்திங்கு வேண்டினோம்!

தீயவை எரிந்திட தீயிட்டுக்கொளுத்திடு..
நல்லவை செய்திட நாளும் துணைசெய்..

அல்லாதவைகளை அகற்றிட உதவு..
எல்லா மனிதரும் உயர்ந்திட உதவு.!

தங்கம் வார்த்த தகதக தோளினன்.
அங்கம் போர்த்திய அழகுநல் உடையினன்.

காதினில் தொங்கிடும் அழகுக்குண்டலம்.
காரிருள் ஒத்த உன் மேகக் கேசம்.

உன் வெற்றீயைச் சொல்வது கதாயுதம்தானே.
உன் வெற்றியால் பறப்பது கொடியது தானே.

உன் மார்பினில் நெளியும் முப்புரி நூலோ….
உன் புகழினைப் பாடி பூரிப்படையும்….

அழகுச்சிவனாரின் அம்சம் நீயே…
அறிவுக்கேசரியின் பெருமை  நீயே….

அண்டமெங்கிலும் உன் ஆட்சியைச்செலுத்தினாய்.
அதனால் உலகைச் சாந்தப்படுத்தினாய்…!

அறிவுக்கடலே , கல்வியின் பிறப்பே…
அடங்காப் புகழுடன் நீ இங்கு வாழ்ந்தாய்.

இராமன் உனைத் தன் சேவகன் ஆக்கினார்.
அவர் இட்ட கட்டளையை இசைவுடன் செய்தாய்.!

ராம , லஷ்மணர் சீதையைப் பணிந்தாய்.
அவர்களை உந்தன் நெஞ்சினில் கொண்டாய்.

ராமர் தம் புகழை பாடுதல்  கடனே…..
உன்னைப் பாடுதல் என் தவப் பயனே….

அளவற்ற சக்தியால் சிற்றுருவம் கொண்டாய்.
ஆக்ரோஷ சக்தியால் இலங்கை எரித்தாய்.

அடக்கம் மேலிட சீதையைக் கண்டாய்…
அன்புடன் இராமனின் சேதியை உரைத்தாய்…


உன் ஒப்பிலா வீரத்தால் அசுரரை அழித்தாய்
இராமனின் கட்டளை நிறைவேற்றி முடித்தாய்..

சஞ்சீவி பெயர்த்து சரித்திரம் ஆனாய்.
இலஷ்மணின் உயிரை மீட்கவே செய்தாய்.

இராமனின் தம்பியை மீட்டுக் கொடுத்ததால்
பரதனை யொத்தவன் நீயெனச் சொல்லி மகிழ்ந்தார்…

அனுமனைத் தொழுதல் இராமனைத் தொழுதலே..
அனுமனின் ஆசிதான் இராமனின் அருளே…!

சிவனும் , பிரம்மனும் , நாரதமுனியும்..
உன் புகழ் அளக்கவே அனுதினம் முயன்றார்..

யமன் , குபேரன் சரஸ்வதி தேவியும்
உன்புகழ் காணாது இயலாது நின்றார்…..

சுக்ரீவன் , இராமன் இருவரை இணைத்தாய்…
சுகப்பட்ட இராஜ்யம் உன் அரசனுக்களித்தாய்..

வீர விபிஷணன் உன் சொல் கேட்டான்…
அதனால் அவனோ இலங்கையை மீட்டான்.

இராமனின் மோதிரம் சுமந்தவன் நீயே…
சூரியன் சாட்சியாய் கடல் கடந்தவன் நீயே…

அரிய வித்தைகளின் இருப்பிடம் நீயே…
அதனால் வியந்தவர் பலகோடிப் பேரே…


உன் அருள் இருப்பின் துயரம் போகும்.
என் கடின இலக்கது பனியாய் விலகும்.

இராம இராஜ்யத்தைக் காத்தவன் நீயே…
எனையும் காப்பாய் காற்றின் சேயே..

என்னைக் காப்பதால் கவலை தீரும்…
எனக்கருள்வதால் மகிழ்ச்சியும் சேரும்…

உனை நான் வணங்கிட அச்சம் அகலும்..
உனை நான் தொழுதிட இன்பம் பெருகும்..


மூவுலகுமே உன் ஒரு சொல் கேட்கும்…..
நவ கோள்களும் உன் அசைவுக்குப் பணியும்…

பூதம் , பிசாசு , பலவகை முனிகளூம்
உன் நாமம் சொல்லிட தூரவே விலகும்…

வலிகள் , நோய்கள் , பலவகை பிணிகள்
வாயு புதல்வனின் பேருக்கு அஞ்சும்…!

வாயு புத்திரா , அஞ்சனை மைந்தா……
உன் பெயரது சொல்லிட பிணியது தீரும்…

மனதில் , கருத்தில்  அனுமனை வைத்தோர்…
மகிழ்வுடன் அவனது பாதம் பணிந்தோர்….
பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடப்பார்…
வாழ்வின் துயரங்கள் வாராது களிப்பார்..!

இராஜன் இராமனின் பாதம் வணங்கிட…
உண்மை உணர்வுடன் தொழுது பணிந்திட…
உலகக்காரியங்கள் வெல்வது சத்தியம்…
ஊமைத் துயரங்கள் கடப்பது நிச்சயம்….

நால்வகை காலமுன் பெயரது சொல்லும்…
அண்டமனைத்தும் உன் புகழது உரைக்கும்…

இராமனின் விருப்ப தேவதை ஆனாய்….
இராஜ்யம் , முனிகள்  , மக்களைக் காத்தாய்…

சீதாப்பிராட்டியின் மகனென ஆனாய்….
அட்டமா சித்திகளை அதனால் பெற்றாய்…

நவ நிதிகளை ஒருங்கே பெற்றாய்…
நல்லவர் வாழ தீயவை ஒழித்தாய்…..

இராமனை வணங்கி பக்தனாய் ஆனாய்….
இராமநாதத்தை பணிவுடன் சொல்வாய்…

இனிவரும் பிறப்பிலும் இசைவுடன் செய்வாய்…
உன்னை தொழுதால் இராமன் மகிழ்வார்…

மரணச் சமயத்தில் இராமனை வணங்குவோர்…
வரும்பல பிறப்பிலும் பக்தனாய் பிறப்பார்..

முக்தியின் திறவுகோல் ஆஞ்சநேயன் அவனே…
அவனை வணங்குதல் மோக்சத்தின் கடனே…

அனுமனின் பக்தனாய் ஆனவன் எவனோ
அடுத்த  பிறப்பிலும் துயரது விலக்குவான்…

வெல்க வெல்க அனுமனே வெல்க…
வெல்க வெல்க ஆஞ்சநேயனே வெல்க…

உணர்ச்சியின் கடவுளே உண்மை வெல்க..
உன்னை வணங்கினேன் உன் அருளது வெல்ல..

உன்னை வணங்கிட அணுகுமோ திது?
என் குரு நீயே இனி கவலை ஏது….?

அனுதினம் அனுமனை வணங்கிக் களித்தோர்..
அனுமன் சாலிஸா இதை பக்தியாய் படித்தோர்….
அனுமனின் ஆசியை அன்புடன் பெறுவார்….
சிவனார் அருள்வார்…..சித்திகள் புரிவார்…!

காற்றின் கடவுளே , அஞ்சனை சேயே…
தெய்வீகப் பிறப்பாய் தீயவை அழித்தாய்….

துளசிதாசர் போல் உன் சேவகன் ஆனேன்.
துன்பம் விலக உன் அடியேன் ஆனேன்….

இறைக்கு இறையே , இன்முகக் கடவுளே..
இராமனும் , நீயும் எம் நெஞ்சில் உறைவீர்.

போற்றி போற்றி ஆஞ்சநேயா போற்றி.
போற்றி போற்றி குருவே போற்றி
போற்றி போற்றி வாயுபுத்ரா போற்றி..
போற்றி போற்றி அறிவே போற்றி.
போற்றி போற்றி அருளே போற்றி.



இந்த மொழிபெயர்ப்பை முடிந்தளவு சரியாகவே செய்திருப்பதாக நம்புகிறேன். எங்கேனும் தவறு இருப்பின்  தாயுள்ளத்தோடு சுட்டிக்காட்டவும். 



மொழி பெயர்த்தவர் - பாலசுப்பிரமணியன்

இதற்கான உழைப்பும் , செலவிட்ட நேரத்தையும் நீங்கள் மதீப்பீர்களானால் , இதை பிரதியெடுத்து வேறு தளத்தில் பதியும் போது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் , யாரால் மொழி பெயர்க்கப்பட்டது என்றும் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறோம்.

'ழ'கரம்

தமிழ்த்தேசியமும் , இந்திய - இலங்கைக் கூட்டுச்சதியும் !


நேற்று மெனிக் பார்ம் முகாமில் நிகழ்ந்த ஒரு சம்பவம் , வேதனையை மேலும் கிளப்புகிறது. அருகிலிருக்கும் முகாமொன்றில் சுள்ளி பொருக்கப் போன ஏழைத் தமிழர்களை சுட்டிருக்கிறது. காயம் பட்டவர்களின் எண்ணிக்கையோ , இறந்தவர்களின் எண்ணிக்கையோ சரியாகத் தெரியாத அளவிற்கு அங்கே ஊடகங்களின் பிரசன்னம் இல்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் உதய நாணயக்காரா கூட்டத்தினர் கையெறி குண்டுகளை வீசியதாகச் சொல்லியிருக்கிறார். இதை இந்தச் செய்தியை நாம் உன்னித்துப் பார்க்க வேண்டிய கடமை இருக்கிறது.

கடந்த வாரம் யாழ்ப்பாண முகாமொன்றிற்கருகில் மூன்று இளைஞர்கள் இலங்கை இராணுவம் அமைத்திருந்த கண்ணீ வெடியில் சிக்கினார்கள். யுத்தம் நிறைவுற்ற சூழலில் உலக நாடுகள் பலவும் மீள் குடியேற்றத்தை வலியுறுத்துகின்ற சூழலில் தான் கையிலெடுத்திருக்கிற கண்ணி வெடி அகற்றுதல் என்ற வாதத்திற்கு வலுச் சேர்க்க நடந்த ஒரு சதி வேலையாகவே இதைக்கருதுவதற்கான வாய்ப்பிருக்கிறது. மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவமும் கூட அதன் தொடர்ச்சியாகவே இருக்கலாம்.

அல்லது தொடர்ச்சியாக மக்களை அடைத்துவைப்பதால் விரக்தியுற்ற மக்கள் வெளியேற முயற்சித்திருக்கலாம். அவர்களை எச்சரிக்கும் முகமாக இதுபோன்ற கடும் எதிர்ப்பினை இராணுவம் காட்டியிருக்கலாம்.

எது எப்படியாக இருந்தாலும் , போரினால் அவதியுற்று நிராயுதபாணிகளாய் இருக்கும் மக்களை நாயைச் சுடுவது போல சுடும் அதிகாரம் (உலக நாடுகள் கடும் நெருக்குதலை கொடுக்கின்ற சூழலில் , உலகநாடுகள் அனைத்தும் விழிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கையில் ) இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்குமானால் போர்க்கால சமயங்களில் அவர்கள் எவ்வளவு வெறித்தனத்துடன் நடந்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவே அஞ்சுகிறது.

ஆனால் உலக நாடுகளோ குற்றத்திற்கு முழுப் பொருப்பாளியான இராஜபக்சேவையே அவரது இராணுவத்தைப் பற்றி விசாரிக்கச்சொல்கிறது. அதற்கும் கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறார் அவர். மூன்றாம் தரப்பின் சுதந்திரமான விசாரணை ஒன்று மிக நிச்சயமாகத் தேவை என்பதையே போருக்குப்பின்னரான இலங்கை அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நிருபிக்கின்றன.

உலகநாடுகளின் நேரடிப்பார்வைக்கு முற்றுமுழுதாக தடை ஏற்படுத்துவது இந்தியாதான் என்பதை நிச்சயமாக தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள். அது மட்டுமின்றி , புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லும் நாராயண்கள் இலங்கையும் , பாகிஸ்தானும் கொண்டுள்ள உறவு அச்சுறுத்தல் என்று சொல்லாதது ஏன்? அத்தோடு நிற்காமல் இராகுல் காந்தி உயிருக்குப் புலிகளால் ஆபத்து என்று "ரோ" செய்தி பரப்புகிறதே அது ஏன்?

இந்தியாவும் , இலங்கையும் சேர்ந்து தமிழ்த்தேசிய இறையாண்மையை ஒழிக்கப் பார்க்கின்றன என்பதே நேரடிப் பதில். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழர்கள் அறிவித்த சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே வெளிப்படையான ஒரு நிலைப்பாடு. மற்றபடி ஈழத்தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்க உதவுவோம் என்றெல்லாம் இந்தியா சொல்வது சும்மா பேச்சளவிற்கு மட்டுமே.

தோற்றுப் போனாயே இனி உனக்கென்ன சுதந்திரம் ? சும்மா கிட....என்று உதறிவிடப் பார்க்கின்றன. அதன் மூலம் அவர்கள் ஒரு சேதியை தெளிவாக உலகுக்குச் சொல்கிறார்கள் , புலிகளைத் தீவிரவாதிகள் என்று சொன்னாலும் , அவர்கள்தான் தமிழர்களின் ஒரே குரலாக இருந்தார்கள் என்ற செய்திதான் அது.

புலியெதிர்ப்புக்குரல்களும் , சித்தாந்தம் பேசும் வறட்டு கொள்கைவாதிகளும் இனியாவது மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு சும்மா இருப்பதே சிறந்தது. இவர்களால் இழந்தது கோடி....

மேற்குலகம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்ளத் துவங்கும் இவ்வேளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பொன்னான வேளை.

இந்தியாவை நோக்கியும் , இலங்கையை கண்டித்தும் எதிர்ப்புக்கணைகளாக நமது குரல் விண்முட்டி உள்ளத்தில் தீ மூட்டவேண்டும்...அந்தத்தீ தான் தீயவர்களின் கூடாரமான தென்னிலங்கையைச் சுட்டெரிக்கும்...! அதன் மூலமே நாம் தமிழ்த்தேசியத்தை தொடர்ந்தும் இயங்க வைத்திருக்க இயலும்.

உரக்கச் சொல்லுங்கள் உண்மையை....

இந்தியாவும் , இலங்கையுமே ஈழத்தமிழினத்தின் எதிரி.

அப்படியானால் தமிழகச் சகோதரர்கள் ?

"ழகரத்துக்காக" ரங்கன் - விருந்தினர் பக்கம்

Thursday, September 24, 2009

இன அழித்தலின் சாட்சியாக இருக்கிறான் இவன்.!

17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற
தமிழ்நாட்டு உறவுகளே!


vaநான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள் ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.


கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.
வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.


நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.


தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை.

பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள்.

சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்
.
அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார் களோ, என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன்.


நன்றி - ஈழத் தமிழ் ஊடகங்கள்.

Monday, September 21, 2009

ஆய்வு : உலகத் தமிழ்மாநாட்டை புறக்கணிப்போம் என்ற அறைகூவல் முறையா ?

நாம் முதன்முதலாக வெளியிட்டதொரு தலையங்கத்தில் ( உலகத்தமிழ் மாநாடு.) தோழர் டேவிட் என்பவர் இம்மாநாட்டை வாராது வந்த மாமணியாய் எண்ணி தமிழுணர்வு கொண்டவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

நாம் தமிழர் இயக்கத்தலைவர் தோழர். சீமானும் கூடவே இது உலகத்தமிழர்களை ஏமாற்ற நடக்கும் சதித்திட்டம் என்றே சொல்லியிருந்தார்.. மிகச்சமீபமாக , ஈழத்தமிழர்களிடையே மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக பாரிஸில் இருந்து வெளிவரும் ஈழ நாடு பத்திரிக்கை "உலகத் தமிழ் மாநாட்டை" புறக்கணிக்க அறைகூவல் விட்டிருந்தது. அதையொட்டிய விவாதங்கள் அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் குடிகொண்டிருப்பதாகவே அறிகிறோம்.

கடந்த தலையங்கத்தில் கூட , கலைஞர் அவர்கள் தமது இழந்து போன தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் முயற்சியாகவே இந்த உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கிறார் என்று உலகத் தமிழர்கள் சந்தேகம் கொள்வதாகவே நாம் சொல்லி வந்தோம்.. அந்த சந்தேகத்தின் பாலாக எழுந்த புறக்கணிப்பு அறைகூவல்கள் தான் இவை.

கலைஞர் தாம் இழந்துவிட்ட தமிழர்களின் நம்பிக்கையை மீளப்பெற்றாக வேண்டும் , அதன்பின்னர்தான் அனைவராலும் நடாத்தப்படுகின்ற வெற்றி மாநாடாக அமையும் என்பதே எம் உறுதிப்பாடு.

சரி , நம்பிக்கையை மீளப்பெற என்னதான் கலைஞர் செய்தாக வேண்டும்?

கொஞ்சம் எளிதான கேள்விதான். கலைஞர் செய்யவேண்டியது என்பதற்கான பதில் அவர் செய்யத் தவறியது என்ன என்ற ஆய்விலேயே இருக்கிறது.

அவர் என்ன செய்யத் தவறினார். ?

- முள்ளிவாய்க்காலில் மக்கள் ஆயிரக்கணக்கில் மடிந்த போது இவர் அண்ணா சமாதியில்  உண்ணாவிரதம் இருந்தார். இவரது உண்ணாவிரதத்தின் பின்னர் போர் நின்றுவிட்டதாக  தமிழக மக்களிடையே சொன்னார். அதன்பின்னர் போர் நிற்காமல் பிரபாகரனும் மற்ற தமிழ் மக்களும் மடிந்து போயினர். அதற்காக ,பொய்ப்பரப்புரைக்காக  அவர் தார்மீக பொறுப்பேற்றுக்கொள்வது.

- வணங்கா மண் கப்பலில் இருந்து சென்ற பொருட்கள் இதுகாறும் இடம்பெயர் மக்களை சென்று சேரவில்லை என்ற உண்மை வெளிப்படையாக தெரிந்த போதும் , கடந்த இருவாரங்களுக்குமுன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் போய்ச்சேர்ந்துவிட்டது என்று சொன்னார். அதை எப்படி ஏற்றுக்கொள்வது ?

- வதைமுகாம்களில் வாடுகின்ற மக்கள் மூன்று லட்சம் பேர் இருக்கிற சூழலில் இலங்கையில் சுமூக சூழல் நிலவுவதாக தொடர்ந்து  பரப்புரை செய்வது.

சரி , அவர் என்ன செய்யலாம்...?

- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் . நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் கோட்பாட்டிற்கு இணங்க , பழசை மறந்துவிட்டு இனியாவது வதைமுகாம்களில் சிக்கித் தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களை விடுவிக்கிற முயற்சியில் இறங்க வேண்டும்...டெல்லியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகபட்ச நெருக்கடியை தந்து சிறிலங்கா அரசை நெருக்கடிக்குள்ளாக்குவது.

- தமது  கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நடக்கும் ஈழநிலவரம் பற்றிய இருட்டடிப்பை நீக்குவது.

- வதைமுகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் , தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் அறப்போராட்டங்களுக்கு பின்னணியாக , பின்புலமாக இருக்க முயல்வது.

- தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குகின்ற இலங்கைக்கடற்படையினரின் அட்டூழியத்தை நிறுத்த உறுதியான நடவடிக்கை , கடிதம் - தந்தி - தொலைநகல் இவைகளைத் தாண்டிய நடவடிக்கை எடுக்க முயல்வது.


இன்று கலைஞரைப் புறக்கணிக்கச் சொல்லும் ஈழநாடு பத்திரிக்கையாகட்டும் , தோழர் சீமான் , நெடுமாறன் ஆகட்டும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கலகக்குரல்களை விட இராஜதந்திரக்குரல்களே இன்றைய நிலைமையை மாற்றும் சக்தி வாய்ந்தது என்று புரிந்து கொள்ளுதல் இன்றைய நிலையில் மிக அடிப்படையான தேவையாகிறது.

இராஜதந்திர நெருக்குதலை தமிழர்கள் இலங்கைக்குத் தரப்போவதாய்ச் சொல்லிக்கொண்டு நமக்குள்ள மிகப்பெரிய ஆதார சக்தியையும் எதிரி என்ற வகையில் மாற்றிக்கொள்வது எவ்வகையிலும் சரியாகாது.

கடந்த பொதுத்தேர்தலிலும் கூட , ஜெயலலிதாவை முழு மூச்சாக ஆதரித்து கலைஞரை எதிரியாக்கிக்கொண்டீர்கள். தனி ஈழம் , தனி ஈழம் என்று மேடைக்கு மேடை முழங்கினார் ஜெயலலிதா. அந்தக்குரல் கூட ஏதோ ஒருவகையில் புலிகளின் அழிவிற்கும் , பாரிய மக்கள் அழிவிற்கும் ஒரு காரணம் ஆகியிருக்கிறது என்ற உண்மை யாராலும் மறுக்கவியலாதது. இன்று அவர் அதீத அமைதிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.  ஆனால் , எந்தவிதக்குற்றச்சாட்டுகளும் அவரை நோக்கி எழவில்லை.

ஆக, எதிர்ப்புக்குரல் என்பது நம்பிக்கைத்துரோகத்தின் இருபக்கங்களிலும் போய்ச்சேருவதே ஆரோக்கியமான இராஜதந்திரமாக இருக்க முடியும். அடிக்கடி மாறும் நிலைப்பாட்டினால் தமிழர்களின் , ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்றுமே வலுவான முன்னேற்றத்தினைத் தரப் போவதில்லை.

உலகத் தமிழ் மாநாட்டினை புறக்கணிப்பது சரியா என்ற கேள்விக்கான பதிலை ஆராய முற்பட்டோம்.

- உலகத்தமிழ் மாநாடு என்பது தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது. மிக அத்தியாவசியமான ஒரு மாநாடு இது என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

- கணினிப் புரட்சிக்குப்பின்னரான மாநாடு என்பதால் , தமிழை இன்னொரு உச்சத்திற்குக் கொண்டு செல்வது என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.


ஆனால் , நடத்துகின்ற காலச்சூழலும் , தமிழினம் ஒரு பாரிய அழிவைச் சந்திக்கிற வேளையில் அதற்கென காத்திர நடவடிக்கைகள் ஏதும் எடுக்காதவர்களின் (வெற்றுப் பேச்சளவில் தமிழ் என்று சொல்லிப் பிழைக்கப் பாக்கிறவர்களின்) முயற்சிக்கு துணை போவது தவறு என்ற அளவிலும் , உங்கள் செயல்பாட்டில் எமக்குத் திருப்தி இல்லை என்ற உலகத்தமிழர்களின் எண்ணத்தை ஏற்பாட்டாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முன்னெடுக்கப்படும் புறக்கணிப்பிற்கான அறைகூவல் எவ்வகையிலும் தவறானதல்ல என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது.

ழகரம் - ஆய்வு ( 22 செப்டம்பர் 2009 ) .