Saturday, October 22, 2011

ஆனந்தவிகடனின் அல்ப அலப்பறை!!


அய்யாமாரே , அம்மாமாரே...

சவுக்கியமா? ஆனந்த விகடனின் அல்ப அலப்பறை பற்றிய இந்தப்பதிவு நகைச்சுவைக்காக இடப்பட்டத்தல்ல...சிந்திப்பதற்காக இடப்பட்டது....

நாம் மட்டுமல்ல , அப்பத்திரிக்கையும் தான்....

வெறும் சினிமாவை வச்சி மட்டுமே கல்லா கட்டுவது ஆனந்தவிகடனும் , குமுதமும் , குங்குமமும் என்பது தெரிந்த செய்திதான்..

இதுல பாருங்க சார் . தனியா சினிமா ஸ்பெஷல் போடறாங்களாம்..!



முன்னாள் குத்தாட்ட நடிகை இந்நாள் முதல்வர்.......முன்னாள் பைட் ஏக்டர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்...இதையெல்லாம் பாத்துமாடா பத்திரிக்கைகள் திருந்த மாட்டேங்குது???? தமிழகத்தின் இழிவுக்கு காரணம் சினிமா..அதை விட்டொழியுங்கள் மக்களே.!!


Tuesday, October 04, 2011

நாங்கள் வெல்வோம்!

பொய்களாலும் , புரட்டுக்களாலும் மக்களின் மனதில் அம்மா ( யாருக்கு? ) வைப் பற்றி எழுதிய வார்த்தைகள் பொய்யாய்ப் போயின...தினமலர் தினமணி போன்ற அவா பத்திரிக்கைகள் மின்வெட்டு பற்றியோ , சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு பற்றியோ பேச முடியாமல் எதையோ தின்ற எதுவோ போன்று பேச முடியாமல் தவிக்கின்றன. மக்களை முட்டாளாக்கி ஓட்டுக்களை வேட்டையாடிய புரட்டுக்கட்சிகள் இன்று நெல்லிக்காய் மூட்டை போல சிதறிப்போயின.

சமச்சீர்க் கல்விக்குச் சமாதி....தலைமைச்செயலகக் கட்டிடம் வீணடிப்பு...கலைஞர் காப்பீட்டுத்திட்டம் காவு.........குடிசை விட்டை கான்கிரிட் வீடாக மாற்றும் திட்டம் அம்பேல்.....இப்படி அரிய சாதனைகளால் ஐந்து மாதங்களிலேயே அதிமுக ஆட்சி மக்களுக்கு கசந்து போனது......

பொடிப்பொடியாக கலைகிறது ஸ்பெக்டரம் மேகம்....எப்படி எதை எங்கே நடக்கவே நடக்காத ஒரு ஊழலை நிருபிப்பது என்று சிபிஐ தவிக்கிறது....

வெளிமாநிலங்களிலிருந்தும் , தனியாரிடமிருந்தும் மினசாரத்தை கழக ஆட்சி வாங்கியபோது , வெடித்த ஜெயலலிதா இன்று அதே திசையில் செல்கிறார்..........இது என்ன அநியாயம்? 2012 ல் மின்சார தட்டுப்பாடு நீங்குமாம்....எப்படி? திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அப்போதுதான் பலனுக்கு வரும்...அதை அதிமுக அறுவடை செய்யும்...!!!

மக்கள் விழித்துக்கொள்வார்கள்... தன்னிகரற்ற தொண்டர் பலம் கொண்ட திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்......

நாங்கள் வெல்வோம்...........தேர்தல் பற்றியதல்ல இந்த அறிவிப்பு...மக்கள் மனங்களை கூடிய விரைவில் நாங்கள் வெல்வோம்!!!!

திமுக மீதான பொய்யான அவதூறுகள் நீங்கும் காலம் வரும்...

காத்திருப்போம்!!!!!!! கதைமுடிப்போம்!!!!