Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, December 05, 2011

அந்நிய முதலீடும்…அழிந்துபோகும் விவசாயமும்!


 அலங்கியம் அருகிருக்கும் வானம் பார்த்த கிணறு இருக்கும் ஒரு சின்ன ஊர் பெருமாவலசு….உழவோட்டி உழவோட்டியே திமில் தேய்ந்த காளைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வேப்பமர நிழலில் சாய்ந்திருந்தார் ராமசாமி…..காலமெல்லாம் உழைத்து உழைத்து தேய்ந்த கால்களில் செருப்புக் கூட போடுவதில்லை அவர்…

மேடென்பதால் ஓட்ட முடியாத மக்காச்சோளத்தட்டு வைத்துக்கட்டிய சைக்கிளை மூச்சிறைக்க தள்ளிக்கொண்டே வந்தார் பழனியப்பன்…..

‘ ஏம் பழனீப்பா, செத்த வெய்யச்சாஞ்சதுக்கப்புறந்தான் மேவெடுக்கறது….உச்சி வெய்யில்ல இப்பிடி கஷ்டப்படாட்டி என்னப்பா? ‘ என்றார் ராமசாமி…

‘ இல்லீங்கப்புச்சி , மேவெறக்கிப்போட்டுட்டு மறுக்கா ஒருக்கா வரோணுமுங்க………ஊட்டுக்கு போயி ஒருவா கஞ்சி குடுச்சுட்டு வந்து தட்டு வெட்டுணும்னா பொழுது சாஞ்சுரும்…’  காரணத்தை விளக்கினார் பழனியப்பன்…

‘ தட்டு நீயா வெட்டற?ஆள் போட்டு வெட்டற பன்னயமல்லய்யா உன்னுது? ‘

‘இதென்னமோ தெரியாத மாரியே கேக்குறீங்கப்புச்சி..இன்னிக்கெல்லாம் ஆளெங்க கெடைக்குது…ஆறுமணியாப்புல வந்தா ரெண்டு மணியப்புல கெள்ம்பிர்றாங்க…இதுல டீக்குடிக்க , சோறுங்கன்ணு ஆளு வச்சி வேல வாங்கறாப்பலயா இருக்கு? ‘

‘அதுஞ்செரித்தான்…இந்த காட்டுக்குள்ள அருகம்புல்லு மம்மேனியா வளர்ந்து கெடக்கே…இந்த செல்வனக்க்கூப்புட்டு அகந்து புடலாம்னு காலைல ஊட்டுக்குப் போனா , ‘ சாமி , நான் வரலீங்க…..அங்க வந்து நாள் பூராம் கஷ்டப்படறதுக்கு  ,குட்ட வேலைக்கு போனா சுளுவா இருக்குமுங்கோன்றான்…

‘இந்தக் குட்ட வேலை ( கிராமப்புற  வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்) வந்தாலும்வந்துச்சி தக்காளி பொறிக்ககூட ஆளுக்கெடைக்கலை….நேத்து இருந்து பொறிச்சி இருவத்தாறு பொட்டி ஆச்சி…போன வாரம் பொட்டி அருவதுக்கு போச்சி……..இந்த வாரம் இருவதுக்கு கூட எடுக்க ஆளில்லை..’

‘ ஆமாம்ப்பா பழனீப்பா , ஆனா கடைல எல்லாம் கிலோ பத்து பதினைஞ்சுக்குத்தான் விக்குறான்….நம்மகிட்டதான் அடிமாட்டு விலைக்கு வாங்கறான் இந்த வேவாரி…”
‘அது நெசந்தேன் அப்புச்சி…என்றகிட்டயே இருவதுக்கு பொட்டி வாங்கி அப்புடியே அம்பதுக்கு கைமாத்தறான் வேவாரி……புரோக்கருக்கு கமிசன் வேற…….கடசீலே கைல மிஞ்சுறது வெறும் கூலிக்காசு கூட இல்லை…இந்த வெவசாயம் பாக்குறதுக்கு வெறெதாச்சும் பண்ணலாம் போல’.

இது கற்பனை உரையாடல்தான்.. கற்பனை பழனியப்பனும் , ராமசாமியும்தான்…. ஆனால் , இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் அனேக இடங்களில் நிகழ்பவையே…விவசாயியிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கும் இடைத்தரகர்களின் அட்டூழியம் என்பது காலங்காலமாகவே நிகழ்கிறது……கடைநிலை சில்லறை வியாபாரிகளுக்கோ அந்த லாபத்தின் பெரும்பங்கு கிடைப்பதில்லை…இடையிலிருக்கும் பணமுதலைகளான இடைத்தரகர்களுக்கே பெரும்பாலான லாபத்தின் பங்கு செல்கிறது….

நாட்பட்ட நாட்பட்ட இந்திய விவசாயம் லாபமற்ற தொழிலாய் தவிக்கிறது……இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இந்திய விவசாயம் அழிந்துபோகும்…இந்திய விவசாயத்திறக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்துப்படவேண்டியது அவசியம்…இல்லாவிடில் , நாளை உணவினை இறக்குமதி செய்யும் அவலநிலைக்கு ஆளாவோம்…
.
இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் யார்? இத்தகைய இடைத்தரகர்கள் தான்……இவர்கள் சில்லறை வணிகர்கள்  முடங்குவார்கள் என்று ஒன்றும் கவலைப்படவில்லை….தமது பிழைப்பு போய்விடுமோ என்றே கவலைப்படுகிறார்கள்…
விவசாயிகளே நேரடியாக தமது பொருட்களை விற்றுக்கொள்ளும் நிலையினை என்றுமே இவர்கள் விரும்பப்போவதில்லை….சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் வடிகட்டிய பொய்…..வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன…இதுபோல சில்லறை வணிகங்களும் இருக்கின்றன….

எவ்வித படிநிலையுமின்றி , கண்காணிப்பும் இன்றி இந்த இடைத்தரகர்கள் போடும் ஆட்டத்தினை ஒரு முறைப்படுத்த உதவும் அந்நிய முதலீடுகளை வரவேற்பதே சமுகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்………..அதன் மூலம் இடைத்தரகர்களின் கொள்ளை குறைக்கப்படும்.!

ஆக ,  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகம் வேண்டாம்..

இந்திய பொருட்களை அந்நிய தேசத்தில் விற்பதுவும் , இந்திய இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை தருவதும் , வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர்களும் நமக்குத்தேவையெனில் , அந்நிய முதலீடுகளை எதிர்க்கும் நமது கொள்கை முற்றிலும் நியாயமற்றது…

ஒட்டுமொத்த முதலாளித்துவ கொள்கையினை எதிர்ப்புக்கொள்கையை எதிர்ப்பதில் நியாயம் உண்டு…அதற்கான காரணங்களும்  நிறையவே உண்டு...ஆனால் , எதிர்ப்பாளர்கள்  முன்வைக்கும் மாற்று என்ன? சீனா போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சமூகமா? இல்லை வெனிசூலா போன்ற கம்யூனிச முதலாளித்துவமா? இல்லை க்யூபா போன்ற செயலிழந்துபோன , மக்களுக்குப் பயனற்ற கம்யூனிசமா?

தெளிந்து எதிர்த்தால் , தெளிவான பார்வையிருப்பின் அப்போது வேண்டுமானால் முதலாளித்துவத்தை எதிர்க்கலாம்…அதுவரை நீங்கள் விரும்பினும் விரும்பாவிடினும் இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான எதிர்ப்புகள் தேவையற்றது…நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது.!!

Wednesday, November 02, 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்..!!

தமிழகத்தை ஆள்பவர்கள் அறிவுசார் சமூகத்தை அறவே விரும்பவில்லை என்பது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்விற்கு அளவேதுமில்லையோ என்ற வேதனை தான் மிஞ்சுகிறது... மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் செலவிடும் நேரத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக சிறிதேனும் செலவிடக்கூடாதோ என்ற எண்ணமே எஞ்சுகிறது!!!

சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அறிவு சார் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படு என்ற அறிவிப்பு நமது நெஞ்சில் வந்து நெருப்பாய் மோதுகிறது...

முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை என்கிறார்கள்....

இதோ ஒரு உதாரண பின்னூட்டம்...

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது!!

என்ன ஒரு கொடூரமான கண்ணூட்டம்...


இந்த வாசகத்தை படிக்கும் போதே நரகலைத்தின்றதோர் உணர்வு வருகிறது...இவர்களின் அரசியல் ஜால்ராவிற்காக உலகளாவிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையையே மாற்றத்தலைப்படுகிறார்கள் இவர்கள்....

அதே பக்கத்தில் வந்திருந்த அறிவுசார் பின்னூட்டமொன்றும் உங்கள் பார்வைக்கு.!!!

This is purely unethical and against education. This place is opt for library because Anna University and IIT are located near to Library. If the government is really interested to provide medical care means they can appoint doctors and worker in government hospitals instead of doing this type of conversions. This is purely actions against DMK party not for the benifit of peoples. All student communities and educationalist like this library. ADMK goverment may avoid this typed of actions in future. I too vote ADMK party for the last election but disappointed. Kindly think for the people not againt DMK.

யாழ்ப்பாணத்தில் ஆயிரமாரயிரம் புத்தகங்களை அழித்ததாலேயே விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்த தமிழர்களின் உணர்வு எங்கே போயிற்று..

என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழ் மக்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களோ அடியேன் நான் அறியேன்..

தமிழகம் , முட்டாள்களின் தேசமாக மாறிக்கொண்டே வருவதில் மெத்த வருத்தம்....தமிழினம் மெல்ல இனிச்சாகும்....அதை வேடிக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!!!

(பின்னூட்டங்களை அனுமதியில்லாமல் எடுத்தாண்டதற்கு உரியவர்கள் மன்னிக்க!!)

Saturday, October 22, 2011

ஆனந்தவிகடனின் அல்ப அலப்பறை!!


அய்யாமாரே , அம்மாமாரே...

சவுக்கியமா? ஆனந்த விகடனின் அல்ப அலப்பறை பற்றிய இந்தப்பதிவு நகைச்சுவைக்காக இடப்பட்டத்தல்ல...சிந்திப்பதற்காக இடப்பட்டது....

நாம் மட்டுமல்ல , அப்பத்திரிக்கையும் தான்....

வெறும் சினிமாவை வச்சி மட்டுமே கல்லா கட்டுவது ஆனந்தவிகடனும் , குமுதமும் , குங்குமமும் என்பது தெரிந்த செய்திதான்..

இதுல பாருங்க சார் . தனியா சினிமா ஸ்பெஷல் போடறாங்களாம்..!



முன்னாள் குத்தாட்ட நடிகை இந்நாள் முதல்வர்.......முன்னாள் பைட் ஏக்டர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்...இதையெல்லாம் பாத்துமாடா பத்திரிக்கைகள் திருந்த மாட்டேங்குது???? தமிழகத்தின் இழிவுக்கு காரணம் சினிமா..அதை விட்டொழியுங்கள் மக்களே.!!


Tuesday, October 04, 2011

நாங்கள் வெல்வோம்!

பொய்களாலும் , புரட்டுக்களாலும் மக்களின் மனதில் அம்மா ( யாருக்கு? ) வைப் பற்றி எழுதிய வார்த்தைகள் பொய்யாய்ப் போயின...தினமலர் தினமணி போன்ற அவா பத்திரிக்கைகள் மின்வெட்டு பற்றியோ , சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு பற்றியோ பேச முடியாமல் எதையோ தின்ற எதுவோ போன்று பேச முடியாமல் தவிக்கின்றன. மக்களை முட்டாளாக்கி ஓட்டுக்களை வேட்டையாடிய புரட்டுக்கட்சிகள் இன்று நெல்லிக்காய் மூட்டை போல சிதறிப்போயின.

சமச்சீர்க் கல்விக்குச் சமாதி....தலைமைச்செயலகக் கட்டிடம் வீணடிப்பு...கலைஞர் காப்பீட்டுத்திட்டம் காவு.........குடிசை விட்டை கான்கிரிட் வீடாக மாற்றும் திட்டம் அம்பேல்.....இப்படி அரிய சாதனைகளால் ஐந்து மாதங்களிலேயே அதிமுக ஆட்சி மக்களுக்கு கசந்து போனது......

பொடிப்பொடியாக கலைகிறது ஸ்பெக்டரம் மேகம்....எப்படி எதை எங்கே நடக்கவே நடக்காத ஒரு ஊழலை நிருபிப்பது என்று சிபிஐ தவிக்கிறது....

வெளிமாநிலங்களிலிருந்தும் , தனியாரிடமிருந்தும் மினசாரத்தை கழக ஆட்சி வாங்கியபோது , வெடித்த ஜெயலலிதா இன்று அதே திசையில் செல்கிறார்..........இது என்ன அநியாயம்? 2012 ல் மின்சார தட்டுப்பாடு நீங்குமாம்....எப்படி? திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அப்போதுதான் பலனுக்கு வரும்...அதை அதிமுக அறுவடை செய்யும்...!!!

மக்கள் விழித்துக்கொள்வார்கள்... தன்னிகரற்ற தொண்டர் பலம் கொண்ட திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்......

நாங்கள் வெல்வோம்...........தேர்தல் பற்றியதல்ல இந்த அறிவிப்பு...மக்கள் மனங்களை கூடிய விரைவில் நாங்கள் வெல்வோம்!!!!

திமுக மீதான பொய்யான அவதூறுகள் நீங்கும் காலம் வரும்...

காத்திருப்போம்!!!!!!! கதைமுடிப்போம்!!!!


Thursday, August 25, 2011

அதிமுக ஆட்சியின் முதல் நூறு நாட்கள்!

இந்நாட்டின் மன்னர்களாகிய மக்களும் ,
சனநாயகத் தூண்களாகிய தின, வார, மாதப் பத்திரிக்கைகளும் ,
ஊழல், அராஜக , குடும்ப ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியாளர்களும்,
அரசியலில் சினிமாவா? அரசியல்வாதிகள் சினிமா எடுப்பதா என்று அன்றாடம் அராஜகத்திற்கெதிராக பொங்கியெழுந்த புது இளைஞர்களும்
வேண்டி விரும்பி , தாழ்மையுடன் கொண்டுவந்த அதிமுக ஆட்சிக்கு ஆயுசு நூறு நாள் ஆகிறது.!!

இதுவரை ஊழலே செய்திருக்காத ' அம்மா ' அவர்களே நீங்கள் தான் இந்த தமிழ்த்திருநாட்டை தங்கவளம் கொழிக்கச் செய்ய வேண்டும் என்று 'ஊரான் காசில் வாங்கிக்கட்டிய கொடநாட்டு' மாளிகையில் உடன்பிறவா சகோதரி சகிதம்  உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி வந்து முதலமைச்சராக்கி ஆயிற்று ஒரு நூறுநாள்.

இதுகாறும் பொதுச் சொத்துக்களையே அபகரித்திருக்காத புரட்சித்தலைவி 'டான்சி' புகழ் ஜெயலலிதா அவர்களின் சிறுதாவூர் பங்களா முன் 'நில அபகரிப்புப் போராட்டம் நடத்தி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி மகிழ்ந்த கம்யூனிஸ்டுகளின் ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டம் வெற்றியடைந்து ஆகிறது நூறு நாள்.!!

குடும்ப ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் , மனைவி மச்சினன் சகிதம் வாளெடுத்துப் போராடிய சினிமாச் சிங்கம் விஜய்காந்த் எதிர்க்கட்சி ஆகி ஆகிறது நூறு நாள்.!!

அளவிட முடியாத சாதனைகளை , அள்ளிட முடியாத நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த நூறுநாட்களை மறந்திட முடியுமோ? மக்களின் மனதில் பசுமரத்தாணியாய பதிந்து கிடக்கும் அம்மாவின் அரிய சாதனைகளைச் சொல்லிட இந்த வலைப்பூதான் போதுமோ?

தலைமைச்செயலகத்தைத் தரிசாக்க பல நூறு கோடி  பணம் வீண்.....அம்மா ஆட்சியைத்தவிர வேறெந்த மடையன் ஆட்சியில் இது போன்று மக்கள் பணம் வீணடிக்கப்படும்?இஃதொன்று போதாதா அம்மாவின் ஆட்சிசிறப்பிற்கு?

சமச்சீர் கல்வி புத்தகம் சரியில்லையென்று  2மாதம் பள்ளிக்குழந்தைகளின் படிப்பை வீண்டித்த அம்மாவைப்போன்ற அற்புத சக்தியைத் தவிர வெறெவரால் முடியும்?



ஆண்டாண்டுகாலமாய் இருந்த மின்வெட்டை ஆட்சிக்கு வந்தவுடன் ச்சூ மந்திரக்காளி போட்டு தீர்த்துவைத்த பெருமையைத் தான் என் சொல்வது?

அகில பாரதமும் பாராட்டும் வண்ணம் , சிவில் வழக்குகளுக்காக அதில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் கைது செய்யும் அரசியல் சாசனத்திற்கெதிரான செயல்கள் அம்மாவின் ஆட்சி தவிர வேறெங்கும் நடப்பதற்கான வாய்ப்புதான் ஏது?

அடிப்படைச் சட்ட ஞானம் இல்லாமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தவறுதான் என்று அரசு வழக்கறிஞ்ரே ஒத்துக்கொள்ளும் அளவிற்கு பெருமைமிகு அமைச்சர்களைக் கொண்ட துக்ளக் அரசின் சாதனைகளைத்தான் என்னென்பது?

அதிகாரிகளை சேலத்திலிருந்து மாற்றலாகி சென்னைக்குச் ரயிலேறி போய்ச் சேருவதற்குமுன் மதுரைக்கு மாற்றியடிக்கும் கோமாளிக்கூத்துக்களின் பெருமைகளைத்தான் என்னவென்று சொல்லிச் சொல்லிப் புகழ்வது?

ஈழத்தாய் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றி அகில உலகையும் திரும்பிப்பார்க்க வைத்து புரட்சித்திலமான பெருமையைப் பற்றி ஸ்பெஷல் பதிவே போடலாம்!!

நில அபகரிப்பு அவசரச் சட்டத்தை அதிமுக சொம்புகளுக்கு மட்டும் செல்லாததாக்கிச் செய்த புரட்சி பற்றி பேசினால் இன்னொரு நூறு ஆள் ஆகிவிடும்!!!

ஆக, வளமும்  , செல்வமும் கொழிக்கும் இந்த மாதம் மும்மாரி பெய்யும் அதிமுக அம்மா ஆட்சிக்கு நூள் ஆகிறது......

ஆட்சிக்கு மட்டுமா நூறு நாள்....அம்மாவின் சொத்துக்குவிப்பு  வழக்கிலும் தான் நூறு வாய்தாவுக்கு மேல் ஆகிறது...

மென்மேலும் ஓங்குக அம்மாவின் புகழ்....
வளர்க அம்மாவின் செல்வம் ( சிறுதாவூர் , கொடநாட்டு , ஹைதராபாத் திரடசை தோட்டத்தையும் தாண்டி....)

வாழ்க மக்கள்...வளர்க மக்களாட்சி.........

Monday, June 06, 2011

திமுகவினருக்கு புத்துணர்வூட்டிய திருவாரூர்!

திட்டுங்கள்....உங்கள் வசவுகளெல்லாம் வாழ்த்துக்களாக எங்களுக்கு மாறும் என்றார் கலைஞர் ஒருமுறை. கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது தேர்தல் முடிவிற்குப் பிறகு. வெற்றி தோல்வி என்பது அரசியலில் எப்போதும் இருப்பதுவே. இருந்தாலும் தமிழக மக்கள் இந்த முறை தந்த தோல்வி என்பது செயற்கையானது....

ஒட்டுமொத்த நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகள் அனைத்துமே கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியத் தலைப்பட்டன. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியிருக்கிறார்கள்.. நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!

நேற்று திருவாருரில் நடந்த நன்றியறிவிப்புக் கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது...ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போதுதான் திமுக தொண்டன் வீறுகொண்டு எழுகிறான் என்பதைக் காட்டியது திரண்டிருந்த மக்கட்படை.!! சற்றேறக்குறைய மாநாடு போல் திரண்டிருந்த கூட்டத்தில் , வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி உணர்ச்சி பொங்க , எல்.கணேசன் சொன்னபோது நிகழ்ந்த கைதட்டல் விண்ணைப் பிளந்தது.!

திமுக உயிர்ப்புள்ள இயக்கம்...தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல அது...இன்றல்ல , ஆரம்பகாலம் தொட்டே அதன் உயிர்நாடி அதன் தொண்டர்கள்...அதற்கு அழிவென்று நினைப்பவன் காண்பது பகற்கனவு.....

நகைச்சுவையுணர்வோடு பேசிய பொன்முடி அவர்கள் சமச்சீர் கல்வி பற்றி தெளிவாக விளக்கினார். ஏன் அது கொண்டு வரப்பட்டது , எத்தகைய ஆய்வுக்களுக்குப் பின்னர் அது கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அவர் விளக்கினார். அத்தோடு இன்னொரு கேள்வியையும் சவாலாக வைத்தார்..."ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் சமச்சீர் கல்வி பற்றி விவாதிக்கத் தயார்....அவரால் முடியுமா? "

சில சவால்களும் , கேள்விகளும் எப்போதுமே திமுக முகாமில் இருக்கின்றன. ஆனால் , எதிர்முகாமில் தான் அதற்கான பதில்கள் எப்போதும் வருவதில்லை.!!

எப்போதும் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர் கலைஞர் , அதைப் பாராட்டாத பத்திரிக்கைகள் ஏதேனும் ஒருநாள் மக்களோடு மக்களாக செயலலிதா சென்றதைப் பாராட்டியதை இடித்துரைக்க தவறியதைச் சுட்டினார் அவர்..

பதவியேற்று பதினைந்து தினங்களுக்குள்ளாகவே பல்வேறு மக்களின் சிந்தனையை மாற்றும் விதமாக , செயலலிதாவின் துக்ளக் தர்பார் இருப்பதைச் சுட்டினார் திருச்சி என் சிவா..
தலைமைச்செயலகப் புறக்கணிப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்பதை சுவைப்படத்தெரிவித்தார் திரு.கே.என்.நேரு....

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவிற்கு அல்ல , மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , செம்மொழி நூலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , புதிய தலைமைச்செயலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , சமச்சீர் கல்விக்கு ஏற்பட்ட தோல்வி , வீடுகட்டும் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , கலைஞர் காப்பீட்டுத்திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றார் திரு.பரிதி இளம்வழுதி.

கலைஞர் மிகவும் சோர்வுற்றிருந்தார் என்பது பேச்சில் தெரிந்தது.......இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் அரசைக் கண்டித்தார்.....கவர்னர் அறிக்கையைக் கூட சரியாக அச்சடிக்கத் தெரியாத இந்த அரசா 'தமிழ்' மொழியை வளர்க்கப்போகிறது என்றார். 'பேரறிஞர்' என்பதற்கு பதிலாக 'பேராறிஞர் என்று அச்சடித்திருப்பதை அவர் சுட்டியதும் எழுந்த சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று....

அதிமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து நிகழ்ந்த குற்றச்செயல்களை பட்டியிலட்ட பிறகு அவர் சொன்ன கருத்துதான் அவரின் அரசியல் பெருந்தன்மையைக் காட்டியது!

இக்குற்றச்செயல்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை....எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் இருக்கும் என்றுதான் சொல்கிறேன்.....அதை சரிசெய்யவே , காவல்துறையும் , நீதிமன்றமும் இருக்கின்றன....ஆனால் , என்னவோ திமுகதான் அதைச் செய்கிறது என்று பத்திரிக்கைகள் திசைதிருப்பின என்றார்.

என்மீது , என் குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களால் திமுகவை அழிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்று சொன்ன அவர் ."மாற்றம்" வேண்டும் என்ற குரல் மாறவே மாறாது...நாளை நம்மிடமே மாற்றம் வேண்டும் என்று மக்கள் வருவார்கள் என்றும் சொன்னார்.

திமுகவினர் மக்களிடம் இருந்து சொத்துக்களைச் சூறையாடியாதாகவும் அதை திரும்பப்பெறுவோம் என்று  கவர்னர் அறிக்கையில் சொல்லப்பட்டத்தை வரவேற்பதாகவும் , அதில் சிறுதாவூரையும் சேர்த்தால் மகிழ்வேன் என்றும் தனக்கேயுரிய பாணியில் அவர் சொன்னபோது கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

கலைஞர் மிகவும் வருந்திச் சொன்ன ஒரு விடயம் ' குடிசை வீடுகளை கான்க்ரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கிடப்பில் போட்டதையொட்டித்தான். தேர்தலில் தோற்றபோது கொடுக்காத வேதனை இத்திட்டம் நிறுத்தப்பட்ட போது வந்ததென்று சொன்ன அவர் , இத்திட்டம் கூடகோபுரங்களில் வாழ்பவர்களுக்கு அல்ல , குடிசையில் வாழும் பாட்டாளிகளுக்கு...அதைக்கூட நிறுத்திவிட்டார்களே என்று வருந்திய போது கூட்டத்தில் மயான அமைதி...

மொத்தத்தில் டன் டன்னாக திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு பொதுக்கூட்டமாகவே திருவாரூர் பொதுக்கூட்டம் முடிவுற்றது....தேர்தலில் தோற்றதும் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ள திமுக ஒன்றும் அதிமுக அல்லவே...அது எப்போதும் போல மக்கள் இயக்கம்...மக்களோடு மக்களாக நிற்கின்ற இயக்கம்.......

Monday, May 16, 2011

திராவிட முன்னேற்றக் கழகம்.

கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு அகமகிழ்ந்து போகிறார்கள் அதிமுகவினரும் , தேமுதிகவினரும்...கொண்ட நோக்கம் நிறைவேறிய காரணத்தால் தினமணி தலையங்கம் தீட்டித்தீட்டி பெருமிதப்பட்டுக்கொள்கிறது..... இனி இனிப்பு ஆட்சி என்று தினமலர் செய்தி போட்டு தம் வாசகர் பரப்பை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது....


ராஜபக்சேவை கூண்டிலேற்றுவோம்...ஆனால் அதே சமயம் மாநில ஆட்சியால் மட்டும் எதுவும் செய்ய முடியாது என்கிறார் ஜெ..வாழ்த்துக்கள் ஈழத்தமிழரிடத்தில் இருந்து குவிகிறது.


இராமநாராயணன் பதவி விலகுகிறார்.......புதிய தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு...நடிகர் விஜய் புரட்சித்தலைவியையும் , புரட்சிக்கலைஞரையும் வாழ்த்துக்களால் குளிப்பாட்டுகிறார்....

சில பதிவர்கள் திமுக தமிழகத்தில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதாக சந்தோஷம் கொண்டு , இனி மூன்றாம் இடத்தையாவது திமுக தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று அக்கறை கொள்கிறார்கள்...

இனி கனிமொழிக்கு 'களி'தான் என்று மூத்த அரசியல்வாதிகள் சந்தோஷப்படுகிறார்கள். புதிய தலைமைச்செயலகம் வேக வேகமாகக் காலி செய்யப்படுகிறது...பழைய 'புனித ஜார்ஜ்' கோட்டை பட்டை தீட்டப்படுகிறது.....ஆட்சி மாறினால் அனைத்தும் மாறத்தான் வேண்டும் என்ற எழுதப்படாத ஜனநாயக விதி இங்கு நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.

சோனியாவும் , மன்மோகனும் , ப.சிதம்பரமும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச்சொல்ல க்யூ கட்டுகிறார்கள்...பெரிசுகள் அல்லது பெரிய பதிவர்கள் திமுகவின் நிலை கண்டு பரிதாபப்படுகிறார்கள்...

திமுக அழிந்து போனது என்று அழிக்கத்துடிப்பவர்கள் அகமகிழ்ந்து போகிறார்கள்....இவர்கள் மகிழ்ந்து போகும்படியா , பரிதாப்படும் படியா திமுக இருக்கிறது?


1991 தேர்தலில் 'ராஜிவ் காந்தியைக்கொன்றது திமுகதான் என்ற பொய்ப்பிரசாரத்திற்கு மயங்கிய மக்கள்  ஜெயலலிதாவிற்கு ஆதரவை அள்ளித்தந்தார்கள்.


இரண்டே இரண்டு எம்.எல்.ஏக்கள் கழகத்திற்கு...ஒருவர் கலைஞர் , பிரிதொருவர் பரிதி இளம்வழுதி....கலைஞர் பிற்பாடு தன் பதவியை இராஜினாமா செய்தார். பரிதி இளம்வழுதி தனி ஒருவராக சட்டமன்றத்தில் இருந்தார்... அப்போதும் கழகம் எதிர்க்கட்சி அல்ல......அதிமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரஸே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தது.


வரலாற்றை மறந்த சிலர் திமுக மூன்றாமிடத்திற்கு முதல் முறையாக தள்ளப்பட்டது என்ற போலித்தோற்றத்தை உருவாக்கி மகிழ்கிறார்கள்....வருங்காலத்தில் தேமுதிக தலைமையிலான அணியில் திமுக சேருமா என்ற விவாதத்தை சூடாகப் பேசி மகிழ்கிறார்கள்....


கழகத்திற்கு தோல்வி புதிதல்ல...ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெற்றியை விடத் தோல்வியையே அதிகம் சுவைத்திருக்கிறது....


ஐந்தாண்டு காலமும் கொடநாட்டில் இருந்துகொண்டே அறிக்கையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவருக்கு தமிழக மக்கள் அதீத பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையை உடன்பிறப்புக்கள் உணர்கிறார்கள்....தவறை மக்கள் மீது போட்டுத் தப்பித்துக்கொள்ள உடன்பிறப்புகளொன்றும் 'குஷ்பு' அல்ல...


நலத்திட்டங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்ததொரு குறைபாடு......ஈழத்தமிழர் நிலையின் பால் திரிசங்கு நிலை இன்னொரு குறைபாடு......தம் கையில் எதுவுமில்லை மின்வெட்டு ஒரு குறைபாடு......பலமேதுமில்லாத காங்கிரசுக்கு தொகுதிகளை அள்ளிக்கொடுத்ததொரு குறைபாடு...வெண்கலக் கடை பாத்திரங்களைப் போல ஒட்டாத தலைமை கொண்ட காங்கிரசுடன் கொண்ட கூட்டணி ஒரு குறைபாடு....


வட இந்திய , தென் இந்திய ஆரிய , பார்ப்பன பத்திரிக்கைகளின் அதீத திமுக எதிர்ப்பே அவர்களின் அதீத திமுக எதிர்ப்பு பிரச்சாரமே திமுகவின் மீதான மக்களின் கருத்து மாற்றத்திற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..எனினும் அவைகள் அப்படித்தான்...மாறப்போவதில்லை..மாற்றவும் இயலாது ....


மாற்றிக்கொள்ள வேண்டியது எம்மையே....எமது செய்லதிறன் மிக்க உடன்பிறப்புக்கள் இந்தத் தோல்வியைக் கண்டு துவண்டு போய்விடுவார்கள் என்று பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சியினரும் நினைப்பார்களாயேனில் அவர்கள் ஏமாந்து போவர்...இன்றிலும் , திமுக அணிக்கு விழுந்த ஓட்டுக்களில் 90 சதம் கழகத்தினரின் ஓட்டே....அதன் வாக்குவங்கியை தகர்க்க எம்.ஜி.ஆரிலிருந்து ஜெயலலிதா வரை முயன்று கொண்டே இருக்கிறார்கள்.....ஆனால் ஒவ்வொரு முறையும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்....

இது இன்னொரு முயற்சி...பல முனைத் தாக்குதல்கள் இருந்தாலும், ஊடகங்களின் மிதமீறிய அதிமுக ஆதரவுப் பிரச்சாரத்தின் இடையிலும் போட்டியிட்ட தொகுதிகளில் 25 சதவித வெற்றியை திமுக பெற்றிருக்கிறது.


அதனால் , திமுகவை நிலையைப் பார்த்து யாரும் ஒப்பாரி வைக்கவும் வேண்டியதில்லை..பிழைக்குமோ பிழைக்காதோ என்ற போலி கரிசனமும் தேவையில்லை. திமுக ஒன்றும் தேர்தலுக்கு தேர்தல் மக்களைப் பார்க்கும் கட்சியல்ல..எப்போதும் மக்களிடமே இருக்கும் கட்சி...இடையில் சிலபல நிகழ்வுகளால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. தவறுகளை எப்போதும் சரி செய்து கொள்வதால் தான் இன்னமும் 20 வயதொத்த பல இளைஞர்களை கட்சியில் கொண்டிருக்கிறது.ஆரம்பித்து அரை நூற்றாண்டானாலும் இன்னமும் தன் இளமையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது...


மக்கள் அதிமுக என்னும் கட்சியை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்...நல்லது அவர்கள் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடுப்பது சனநாயகத்தின் மூலக்கூறு...!!!


அதிமுக இதுவரை ஆண்ட 25 வருடங்களில் ஒட்டுமொத்தமாக எந்தவித சாதனையையும் நிகழ்த்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.........குறிப்பாக ஜெ.அ.தி.மு.க சாதித்தவைகள் என்று எதையுமே சொல்லமுடியாது என்பதை அக்கட்சிக்காரர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.... 

இதை முந்தைய ஒரு பதிவிலேயே சுட்டியிருந்தோம்!

இனிமேலாவது ஏதாவது செய்து மக்கள் நலப்பணிகளில் திமுகவின் சாதனைகளை முறியடிக்க முயல வேண்டும்.....திமுகவிற்கு மாற்றாக இருக்கும் கட்சிக்கான தகுதி அப்போதுதான் அதிமுகவிற்கு கிடைக்கும் என்பதே நமது ஆசை.


ஆனால் , ஜெ.அ.தி.முக.விடம் அதற்கான நோக்கம் கூட இல்லையென்பதையே புதிய தலைமைச்செயலக புறக்கணிப்பு காட்டுகிறது!!!!

வாழ்க தமிழர்கள்....வளர்க தமிழகம்!

Friday, April 29, 2011

தினமணி.... நெஞ்சில் நேர்மை கொள்!!

ஈழ விடயத்தில் கருணாநிதியின் மென்மையான போக்கு கடுகளவும் பிடிக்காதவனாக இருந்தாலும் , அவ்வப்போது நமது தமிழக பத்திரிக்கைகளின் பூணூல் வெளியே தெரியவேண்டும் என்ற ஆசை கொண்டவனாகையால் இந்தப்பதிவு!

முதலில் தினமணியின் தலையங்கம்!
 இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி

.இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...

தினமணி சொல்லியிருக்கும் கருத்துக்களில் மாறுபாடு யாருக்கும் இருக்கமுடியாது...ஆனால் ஜெயலலிதா உடைத்தால் மண்குடம் , திமுக உடைத்தால் பொன்குடம் என்று சொல்வதுதான் தினமணியின் பூணூல் பாசத்தைக் காட்டுகிறது.

அதெப்படி , சும்மா அறிக்கை விடுவது உருப்படியான செயலாகும்? ஒரு கட்சியின் உயர்நிலைக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போடுவது உருப்படியற்ற செயலாகும்?

முன்பெல்லாம் இலைமறை காயாய் திமுகவையும் , கருணாநிதியையும் கடிந்து கொண்டிருந்த தினமணி இப்போது வெளிப்படையாகத் தாக்குகிற மர்மமென்ன? ஒருவேளை மூத்த பத்திரிக்கையாளர் ( அதாங்க , ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருக்கிறாரே...) தினமணிக்கும் ஆலோசனை சொல்கிறாரோ?

எது எப்படியோ , இவர்கள் இப்படித்தான் , இவர்கள் இதுபோலத்தான் என்று இனம் பிரித்தறிய இதுபோன்ற தலையங்கங்கள் வாய்ப்பளிக்கிற வகையில் சந்தோஷமே.!!!

ஜெய் தினமணி.......ஜெய் தினமலர்....ஜெய் விகடன்....ஜெய் துக்ளக்.....வளர்க பூணூற்கொள்கை!

பூணூலார்கள் மீது நமக்கு துவேஷம் இல்லை.....அவர்களுக்குத்தான் நம் மீது எப்போதும் துவேஷம்...அவர்களைச் சொல்லி தவறேதுமில்லை....அத்துணை ஊடகங்களையும் அவர்களே ஆதிக்கம் செலுத்துமளவிற்கு அவர்களை உச்சாணியில் வைத்திருக்கிறோமே அதுவே தவறு

Monday, April 04, 2011

திமுகவின் சாதனைகள் இங்கே! அதிமுகவின் சாதனைகள் எங்கே?

கலைஞரின் பார்வையில்:

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!

அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.

அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் – தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.
அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;
1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சாரத் திட்டம்.
5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்.
8. குடிநீர் வாரியம்.
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு – அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.
16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் – பொறியியல் கல்லூரிகள் – மருத்துவக்கல்லூரிகள் – கலை அறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.
24. தைத் திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி
28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.
31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.
32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் – சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் – தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை. 

நன்றி : திமுக வலைத்தளம்!

இது 2010 கணக்கு....இதற்குப்பின்னர்தான் ஒரு வருடத்தில் எத்தனையெத்தனை அறிவிப்புக்கள்? எத்தனையெத்தனை சாதனைகள்......குறிப்பிடத்தகுந்த ஒன்று குடிசை வீடுகளை கான்கிரிட் வீடாக்குவது.....

மனச்சாட்சியுள்ள எவரேனும் கலைஞரின் இத்தனை திட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது பலனடைந்ததை ஒத்துக்கொள்வார்கள்....உங்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா நண்பரே?

திமுக சாதனைகள் இங்கே....அதிமுக சாதனைகள் எங்கே?

இப்படிக்கு
கலைஞரின்
திட்டங்களால்பலனடைந்த ஒருவன்!

Thursday, March 17, 2011

பிரபலங்கள் ஆதரிக்கும் கட்சி!

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளும் ,  நடிகர் , நடிகைகளும் பிரபலமானவர்கள்.........பதிவுலகத்தைப் பொறுத்தவரை சில பல நடுநிலையான பதிவர்களே பிரபலங்கள்....அவர்களது நடுநிலையான அதிமுக ஆதரவு நிலைப்பாடு  வெகு பிரசித்தம்.

பத்துக்கட்டுரைகள்  எழுதினால் அதில் ஒன்பது திமுகவை எதிர்க்கும்,கலைஞரை  வசைபாடும் நடுநிலைக்கட்டுரைகளாகவே இருக்கும்..

அத்தகைய பிரபலங்கள்/ பிரபல பதிவர்கள் ஆதரிக்கும் கட்சியான அதிமுகவின் , அதன் தலைவியின் அருமையை, பெருமையை அவர்களின் வாயாலேயே கேட்பதன்  மூலம்   அவர்களின்  நிலையினை மக்கள் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!

ஸ்டார்ட் மீயுசிக்.

கலைஞர் கருணாநிதியைப் போலவே ஆட்சி நடத்தும் தகுதியே இல்லாத புரட்சித் தலைவி ஜெயலலிதா, கட்சி நடத்தும் தகுதியும் தனக்கு இல்லாததை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்..!


இவர் கணிப்பில் கட்சி நடத்தும் தகுதியே இல்லாத  ஜெ....ஆட்சி நடத்தினால் எப்படி இருக்கும் என்று மக்கள் தான் சொல்லவேண்டும்!

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுவதற்கு முன்பு வரையிலும் தமிழினத்தின், தமிழகத்தின் பொது எதிரியான கருணாநிதி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றுதான் தமிழகமே நம்பிக் கொண்டிருந்தது.

இவரது கணிப்புப்படி தமிழினத்தின் , தமிழகத்தின் பொது எதிரியை கூட்டணி சேர்ந்துதான் எதிர்க்கவேண்டுமோ? ஒருவேளை இவர் கருணாநிதியை பற்றி    சொல்பவை உண்மை எனில் மக்களே அவர்களை ஏன் புறக்கணிக்க மாட்டார்கள்?...எதற்கு கூட்டணி???


தனது கட்சிக்காரர்களை மட்டும்தான் ஜெயலலிதா இதுவரையில் மதிக்காமல் இருந்திருக்கிறார் என்றால், இப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அதேபோல் நினைத்துவிட்டார்..! ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இதுதான் வித்தியாசம்..!
 
 
தனது வீடு திறந்த வீடு என்பதை வெளிக்காட்டி தமிழகத்தின் கலாச்சாரத்திற்கேற்றவாறு, நாகரிகமான முறையில் யார் வந்தாலும் வரவேற்கிறார் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாவோ தான் சந்திர மண்டலத்தில் குடியிருப்பதைப் போல காட்டிக் கொண்டு இறுக மூடிய வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு பொது வாழ்க்கைப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்..!

நிறைய சந்தோஷம்......அதிமுக சார்பான மறைமுக அஜெண்டா வைத்திருக்கும்   நடுநிலையாளர்களைக் கூடகருணாநிதி கவர்ந்திருக்கிறார் .
 

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு ஒன்று சேரும் அனைத்துக் கட்சிக்காரர்களையும்

இங்கே தான் உண்மையான சுயரூபம் வெளிப்படுகிறது........இது மட்டுமே ஒரே கொள்கை இவர்களுக்கு....ஊழல், இலவசம் , குடும்ப ஆதிக்கம் இதுவெல்லாம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மட்டுமே!



ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். அதனை பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்று நேற்று பட்டவர்த்தனமாக சி.பி.ஐ.யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இதனைவிடவும் மிகக் கேவலமான ஒரு விஷயம் தமிழகத்து மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் இதுவரையில் நடந்ததில்லை..!

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் , தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தாரே அதெல்லாம் கேவலக்கணக்கில்  சேர்த்தியில்லையா? பொம்மையாக ஜீரோ.பன்னீர்செல்வத்தை  இயக்கினாரே? இது கேவலமில்லையா? அப்பேர்ப்பட்ட செயலலிதாவை முதல்வராக்க தூக்கிப்பிடிக்கும் உங்கள் செயல் கேவலமில்லையா....??


ஊழல் விஷயத்தில் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சில வருடங்களுக்கு முன்புவரையிலும் முன்னணியில் இருந்தார்.


அஹாஹஹாஹாஹஹ......இதுதான் என்னை மிகவும் கவர்ந்த அறிவுப்பூர்வமான வாசகம்.....!! சிலவருடங்களுக்கு முன்புவரை ஆட்சியில்  இருந்தார் , அதனால் ஊழல் புகார்.......இப்ப கொடநாட்டில் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறார் ,,,,,இப்படி எப்படி ஊழல் புகார் இருக்கும்???



இன்னொரு பக்கம் இத்தனை வருடங்களாக தனக்கென்று எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக் கொண்டு ஆதரவை அளித்து வந்த வைகோ தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார். தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!
 
 
முழுதும் ஒத்துப்போகிறேன்....வருத்தம்தான்..நேரம் தாண்டிவிட்டது...இல்லாவிடில் தாய்க்கழகம் வைகோவை அரவணைத்திருக்கும்..........செயலலிதாவின் பாசிசம் பற்றிப் பேச மேடையாவது கிடைத்திருக்கும் அவருக்கு!

ஊர்க் காசை அடித்து உலையில் போடும் வித்தையில் கரை கண்ட முதல் தமிழகத்து அரசியல் பெண்மணி என்ற கெட்ட பெயரோடு ஜெயலலிதா ஜெயிலுக்குள் வாசம் செய்யப் போவதும் உறுதிதான்..! இத்தனை விஷயங்கள் தனக்காகக் காத்திருக்கும்போது அதனை எதிர்கொள்ள எத்தனை ராஜதந்திர விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்..? கருணாநிதியிடம் இத்தனை நாட்களாக அரசியல் நடத்திய ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொண்டதுதான் என்ன..?

நல்லது , இதன் மூலம் உ.த. சார் சொல்லவிளைவது ஆட்சிக்கு வந்து வழக்குகளை தமக்கு சார்பாக முடித்துக்கொள்வதை விட்டுவிட்டு கூட்டணிக்கு  ஆப்பு வைக்கிறாரே ஜே.. ...ஆக, ஊழலோ , ஊழல் வழக்குகளோ கவலை இல்லை....ஆட்சிக்கு ஜெ வந்து அவர் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்!!
  .....அவ்வளவு மட்டுமே....!!! 
 
கருணாநிதியின் மீதான , பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சனங்களின் மீதான  பரம்பரை எதிர்ப்பு வியாதி இவர் போன்ற நடுநிலைவியாதிகளை பீடித்திருக்கிறது... அது அவரது இன்னொரு பதிவில் தெளிவாக வெளிப்படுகிறது...
 
இப்படிச்சொல்கிறார் அவர்...
 


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, துறைமுகம், கொளத்தூர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என்ற சென்னை தொகுதிகளெல்லாம் இருக்கும் நிலையிலேயே தாத்தா, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு ஓடிப் போயிருக்கும் விஷயத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது..!

ஜெயல்லிதா தன் சமுதாய    மக்களை நம்பி ,ஸ்ரீரங்கம் ஓடிப்போனதை  அவர் காதில் கொஞ்சம் போடுங்களேன்....ஆண்டிப்பட்டி இல்லேன்னா தேனி , உசிலம்பட்டி இல்லையா?அங்கு ஏன் அவர் போட்டியிடவில்லை.....
இஹிஹிஹிஹி....இதைத்தான் செலக்டிவ் அம்னீசியா என்பார்களோ???

நமக்கு உண்மைத்தமிழன் சார் மீது தனிப்பட்ட எந்தக்காழ்ப்புணரவும் இல்லை...இது முழுதும் அரசியல்ரீதியான   எதிர்வாதங்களே......எப்போதும் போல் நண்பர்களாகவே சண்டையிட்டுக்கொள்வோம்....
 
ஆனால், நடுநிலை  வேசம் மட்டும் போடாதீங்க உ.த சார்...!! தாங்க  முடியலை!!
 
ஸ்டாப் த மியுசிக்!!!

Tuesday, March 15, 2011

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்!

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள்
குறித்த விவரம் இன்று வெளியானது.


முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கும் இடையே இன்று இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் உடன்பாடு கையெழுத்தானது. இதையடுத்து தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

  1. திருத்தணி
  2. பூந்தமல்லி (தனி)
  3. ஆவடி
  4. திரு.வி.க.நகர் (தனி)
  5. ராயபுரம்
  6. அண்ணா நகர்
  7. தியாகராய நகர்
  8. மயிலாப்பூர்
  9. ஆலந்தூர்
  10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
  11. மதுராந்தகம் (தனி)
  12. சோளிங்கர்
  13. வேலூர்
  14. ஆம்பூர்
  15. கிருஷ்ணகிரி
  16. ஓசூர்
  17. செங்கம் (தனி)
  18. கலசப்பாக்கம்
  19. செய்யாறு
  20. ரிஷிவந்தியம்
  21. ஆத்தூர் (தனி)
  22. சேலம் வடக்கு
  23. திருச்செங்கோடு
  24. ஈரோடு மேற்கு
  25. மொடக்குறிச்சி
  26. காங்கேயம்
  27. உதகை
  28. அவிநாசி (தனி)
  29. திருப்பூர் தெற்கு
  30. தொண்டாமுத்தூர்
  31. சிங்காநல்லூர்
  32. வால்பாறை (தனி)
  33. நிலக்கோட்டை (தனி)
  34. வேடசந்தூர்
  35. கரூர்
  36. மணப்பாறை
  37. முசிறி
  38. அரியலூர்
  39. விருத்தாச்சலம்
  40. மயிலாடுதுறை
  41. திருத்துறைப்பூண்டி (தனி)
  42. பாபநாசம்
  43. பட்டுக்கோட்டை
  44. பேராவூரணி
  45. திருமயம்
  46. அறந்தாங்கி
  47. காரைக்குடி
  48. சிவகங்கை
  49. மதுரை வடக்கு
  50. மதுரை தெற்கு
  51. திருப்பரங்குன்றம்
  52. விருதுநகர்
  53. பரமக்குடி (தனி)
  54. ராமநாதபுரம்
  55. விளாத்திகுளம்
  56. ஸ்ரீவைகுண்டம்
  57. வாசுதேவநல்லூர் (தனி)
  58. கடையநல்லூர்
  59. நாங்குனேரி
  60. ராதாபுரம்
  61. குளச்சல்
  62. விளவங்கோடு
  63. கிள்ளியூர்
2 நாள் விருப்ப மனு தரலாம்:

தொகுதிப் பட்டியலை வெளியிட்டுக் கூறிய காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நாளையும், நாளை மறுநாளும் விருப்ப மனுக்கள் பெறப்படும். சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.

பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 5000 கட்டியும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500 கட்டியும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு ரூ. 2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விருப்ப மனுக்களை ஐவர் குழு பரிசீலித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கும். வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

Saturday, March 05, 2011

கலைஞருக்கு நன்றி..நன்றி!

ஊரில் கெட்டது நல்லதுக்கு கூட ஒன்றுகூடாத ராமண்ணனும் , சடையப்பனும் இன்று ஒன்றுகூடி பட்டாசு வெடித்தார்கள்...

சில வருடங்களாகவே கொடியேற்றாமல் கிடக்கும் கம்பத்திற்கு இன்று வெகுவேகமாகப் பூச்சு வேலை நடக்கிறது.....நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ்டாலில் நான் 7 மணிக்கு லட்டு வாங்கப்போனால் தீர்ந்து போனது என்று சொல்லிவிட்டான்...இருங்க இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடும்ங்கறான்...!

சரக்கு வாங்கச் சொல்லி செயலாளர் காசு கொடுத்தனுப்பி கனநேரமாயிற்று...செல்பேசியில் நண்பன் சொல்கிறான் , அண்ணே......சரியான கூட்டம் , பூரா கரைவேட்டிதான். இம்புட்டு சந்தோஷமா கட்சிக்காரங்கள நான் பாத்ததே கெடையாதுங்கறான்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து கரை வேட்டி கட்டுவதை நிறுத்தியிருந்த சலூன் கடை நாச்சியப்பன் இன்று சலவை போட்ட கரைவேட்டியுடன் ஊரில் மிடுக்காக நடந்து போகிறான்......
தொலைபேசியில் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் என் பள்ளித்தோழனும் , கட்சி அனுதாபியுமான பார்த்தசாரதியுடன் பேசினேன்...

"டேய் மாப்ளே , நீ கூப்பிடுவேன்னு தெரியும்........நைட்டு தலைவரு அறிக்க வந்தவுடனே முடிவாயிருச்சுடா மாப்ளே...எழுதி வச்சிக்க...இனி எலக்சன் வரைக்கும் ஒரு நைட்டு கூட தூங்கப்போறதில்ல நான்...இன்னிக்கு நைட்டு கூட செவரு ரிசர்வ் பண்ண கெளம்பிட்டேன்..நெறயா நாளைக்கு பின்னாடி திமுககாரன் எப்படி வேல செய்வான்னு ஊருக்கு காட்டணும்டா மாப்ள....!!"

டீக்கடை , பெட்டிக்கடை எங்கு திரும்பினாலும் இதேதான் பேச்சு........வலையுலக கட்சி அனுதாபிகளுக்கும் ஒரு பெருமூச்சு...

இன்றல்ல நேற்றல்ல...கடந்த சில வருடங்களாகவே வெளியில் சொல்லாமல் தொண்டையிலேயே வைத்திருந்தோம். .எந்தத் தேர்தலிலும் நாம் எமக்குழைப்பதை விட காங்கிரசுக்காரர்களுக்கு உழைப்பதே அதிகம்.........இனி நாம் எமக்கு உழைப்போம்...முழுவெறியுடன் உழைப்போம்.............திமுக பட்டுப்போன செடியல்ல.......கூட்டணி விலங்குகளால் சிறிதே வாடிப்போன செடி...அதற்கான உரம் தன்னம்பிக்கைதான்...அது டன் டன்னாக காங்கிரஸ் வெளியேறியதில் இருந்து கிடைத்திருக்கிறது....

எப்போதும் திராவிடக்கட்சிகளின் முதுகிலேறி சவாரி செய்யும் காங்கிரசுக்கு அவர்கள் பலமென்ன என்பது தெரியத்தான் போகிறது!!!தனியே நின்றாலும் சரி........அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தாலும் சரி!

நடுநிலையான அதிமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல...திமுக தொண்டர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இப்போது பெரிய நிம்மதி!!

வேண்டாத சுமையான காங்கிரசைக் விட்டு விலகிய போது ஏற்பட்ட நிம்மதி திமுக ஆட்சியமைக்கும் போது கூட இருந்ததில்லை..வந்ததுமில்லை.!!!

தொண்டர்களின் குரலுக்கு மதிப்புக்கொடுப்பதில் கலைஞருக்கும் , பேராசிரியருக்கும் நிகரேது....என்ன கொஞ்சம் தாமதமாகிவிட்டது...அவ்வளவுதான்...

ஒற்றை டீயைக்குடித்துவிட்டு விடிய விடிய உதயசூரியன் சின்னத்தை தெருவெங்கும் வரைந்த காலம் நினைவில் இருக்கிறது....இந்தத் தேர்தலில் மீண்டும் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த கலைஞருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி....

நம்புங்கள் தலைவர்களே..வெற்றி நமது கையில்.!!

Thursday, March 03, 2011

ஆனந்தவிகடனின் அதர்ம யுத்தம்.!

பத்திரிக்கைகள் நடுநிலையாக இருக்க வேண்டும்.......அல்லது கலைஞர் தொலைக்காட்சி அல்லது செயா  தொலைக்காட்சி அல்லது நமது எம்.ஜி.ஆர் என்ற பெயரில் நாம் இந்தக்கட்சி சார்பானவர்கள் என்று சொல்லிக்கொள்ள  வேண்டும்...

அந்த விடயத்தில் "தினமலர் மற்றும் துக்ளக்" எப்போதும் தெளிவாகவே இருக்கும்.....நாம் அன்றும் , இன்றும்  என்றும் அவாளுக்கு ஆதரவு என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவை அவை...

ஆனால், நடுநிலைமை என்ற பெயரில் இன்று விகடன் குருப் "திமுக"  எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறது    என்று சொல்கிறார்கள்....அதை      நம் பதிவர்கள் சுட்டியும் காட்டுகிறார்கள்!!! 

தி.மு.க வை எதிர்த்து ஆனந்த விகடன் தர்ம யுத்தம்..? 

 

ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

தோழர் ரஸீம் கஸாலியின் ஆனந்த விகடனின் அடிப்படைக்கணக்கே தவறு என்கிறார்...

உண்மைதானே? 130 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி  வாங்கும் வாக்குச்சதவீதத்தையும்  , 182 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி வாங்கும் வாக்கு சதவீதத்தையும் எப்படி  ஒப்பிட முடியும்? இந்த அடிப்படை கூட தெரியாமல் ஒரு பெரிய பத்திர்க்கை தவறான தகவல்களை சொல்வது தவறல்லவா?

 

இதுபற்றி நண்பர் கொக்கரக்கோவின் பின்னூட்டம் இந்தப்பதிவில்


வணக்கம் சதீஷ்குமார், ஆ.வி, ஜூவி, வகையறாக்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை ஜெ. ஆதரவு நிலையை எடுத்திருக்கின்றன. ஜூனியர் போஸ்ட் காலத்திலிருந்தே இவைகளைப் படித்துவரும் என் போன்றவர்களுக்கு இது நன்றாகப் புரியும். அவர்கள் போட்டிருக்கும் இந்த கணக்கு அடிப்படையிலேயே தவறு என்பது அவர்களுக்கும் நன்றாகப் புரிந்து தான் இருக்கும். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டை அப்பாவி வாசகர்களிடம் நடுநிலை போர்வையோடு திணிக்கும் செயலை வெற்றிகரமாக செய்து கொண்டுமிருக்கிறார்கள். அந்தக் கணக்கை கீழ் வருவது போல் தான் போட வேண்டும். எல்லா கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் பொழுது, ஒரு கட்சி வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை மொத்த தொகுதிகளான 234 வுடன் பெருக்கி, அதை அக்கட்சி நின்ற தொகுதியால் வகுக்கும் பொழுது வருமே ஒரு விடை அது தான் ஒருவேளை அக்கட்சி 234 தொகுதிகளில் நின்றிருந்தால் அக் கட்சி பெறும் மொத்த வாக்கு சதவிகிதம் ஆகும். உதாரணத்திற்கு தி.மு.க நின்ற தொகுதிகள் = 132 மொத்த தொகுதிகள் = 234 132 இல் வாக்கு சதவீதம் = 26.46% ஆகவே 26.46 x 234 / 132 = 46.90% அ.தி.மு.க நின்ற தொகுதிகள் = 188 மொத்த தொகுதிகள் = 234 188 இல் சதவீதம் = 32.64% ஆகவே 32.64 x 234 / 188 = 40.62% எனவே 2006 தேர்தலில் தி.மு.க வாங்கிய வாக்கு சதவிகிதம் = 46.9% அ.தி.மு.க வாங்கிய வாக்கு சதவீதம் = 40.62% இப்பொழுது புரிகிறதா? விகடன் சொல்வது போல் பயப்படுகின்ற தி.மு.க தலைமையா மூன்று சுற்றுகளாக காங்கிரஸை அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியும்?! ஒவ்வொரு சுற்று பேச்சு வார்த்தையின் முடிவிலும் ஒவ்வொரு கூட்டனி கட்சியாக அழைத்து தன்னிச்சையாக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியும்?

நேர்மையில்லாத இவர்கள், தமது மறைமுக அஜண்டாவிற்காக உழைக்கும் இவர்களை பத்திரிக்கையாளர்கள் என்றழைப்பது தகுமோ?

 ****

அடுத்த அதர்ம யுத்தம் , காங்கிரஸின் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வட இந்திய ரெடிப்.காம் வெளியிட்டிருக்கும் ஜோக்...தமிழ்நாட்டில் 70  இடங்கள் தான் திமுக கூட்டணிக்காம்...அதை ஒட்டிய திரு.சுரேஷ்குமார் பதிவில் படித்த  சில பின்னூட்டங்கள் .....!!!

மாதவன் said...

கோவை, ஈரோடு , திருப்பூர்,சேலம் , தர்ம்புரி, நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல்,நீலகிரி மாவட்டங்களில் புதிதாக திமுகவில் இணைந்திருக்கும் கொமுக அத்துணை கணக்குகளையும் மாற்றி எழுதப்போகிறது...காரணம் அது கடந்த தேர்தலில் வாங்கியிருக்கும் வாக்குகள்!!!

உதாரணத்திற்கு கோவையை எடுத்துக்கொள்வோம்! கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸுக்குமுள்ள ஓட்டுவித்தியாசம் 40000 மட்டுமே...ஆனால், கொமுக பெற்ற ஓட்டுக்கள் 130000 , தேமுதிக பெற்ற 70000 ஓட்டுக்களைக் கழித்தாலும் கூட 20000 ஓட்டுக்கள் அதிகமிருக்கிறது....இதேபோலத்தான் கொங்குமண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணக்கு மாறுகிறது..டெல்லியில் உக்கார்ந்து ஆராய்ச்சி செய்யும் கம்பெனிகளுக்கு கொமுக என்ற கட்சீயைப்பத்தியே தெரியாது, ஹிஹிஹிஹிஹிஹி.!!

1 RAMASUBRAMANIAN. K BSP 2937
2 SELVAKUMAR.G.K.S BJP 37909
3 NATARAJAN.P.R. CPM 293165
4 PRABHU.R INC 254501
5 ESWARAN.E.R KNMK 128070

அதனால் தான் 2 சீட்டு , 3 சீட்டு என்று பத்திரிக்கைகள் சொல்லும்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் கொமுகவிற்கு 7 சீட்டுக்கள் கொடுத்திருக்கிறார் கலைஞர்......

பொறுத்திருந்து பாருங்கள்.....கூடவே கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்குள்ள மு.கண்ணப்பன்,திருப்பூர் மாவட்டத்தில் கோவிந்தசாமி , ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமி, சேலத்தில் செல்வகணபதி , கரூரில் சின்னச்சாமி என்ற பெருந்தலைகள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்..

சும்மா வீட்டில் உட்கார்ந்து திமுக கனவு காணவில்லை...கடந்த மூன்றாண்டுகளாகவே அறிவியற்பூர்வ கணக்கின்மூலம் சட்டசபைத்தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டது அது..பற்றாக்குறைக்குச் செம்மொழி மாநாடு...கோவை நகரெங்கும் பளபளக்கும் சாலைகள்....திருப்பூருக்கு தனிமாவட்ட அந்தஸ்து , திருப்பூர், ஈரோடு இவைகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம் என்று பணிகள்...

சும்மா கொடநாட்டில் தூங்கிவிட்டு வந்து தேர்தலின் போது மட்டும் பிரச்சாரம் செய்யும் கட்சி திமுக அல்ல நண்பரே.

ஆக, கொங்குநாட்டில் சமன் செய்கிறது......வடமாவட்டங்களில் பாமக , வி.சி ஆதரவுடன் முந்துகிறது....இதுதான் நிலைமை....!!!

நினைவிருக்கட்டும், போனமுறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்தமுறை திமுக கூட்டணியில்!!!
பத்திரிக்கைகள் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் கட்சிகள் மக்களை முட்டாள்களாக்குகின்றன என்று சொல்லிக்கொண்டு , தமது மறைமுக அஜண்டாவை மக்கள் மீது  திணிக்கின்றன....


கடந்தமுறையை விட இம்முறை தேர்தல் களம் வித்தியாசமாகவே  இருக்கிறது.....பலம் வாய்ந்த இரு   அணிகள்  மோதுகின்றன...கூட்டணி பலம் இங்கே சமநிலையில் இருக்கும்போது , ஆளுங்கட்சிக்கெதிரான எதிர்ப்பு மற்றும் ஆளுங்கட்சியின் பணிகள் இவைகளே முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன...அதில் அடித்தட்டு மக்களின் தேவைகளைத் தேடித்தேடி பூர்த்தி செய்திருக்கும் திமுகவே முந்தப்போகிறது...

எந்தக் கருத்துக்கணிப்புகளும் இங்கே செல்லுபடியாகப் போவதில்லை........!!