Showing posts with label தமிழ்த்தேசியம். Show all posts
Showing posts with label தமிழ்த்தேசியம். Show all posts

Friday, August 27, 2010

கலைஞருக்கு செருப்படி கொடுக்கும் 'பினாங்கு' முதல்வர் ராமசாமி

நீண்ட நாட்களுக்குப் பிறகு , தெளிவான நீரோடை போன்றதொரு தமிழ்த்தலைவரின் பேச்சு... இது ஆனந்தவிகடனில் வந்திருப்பதால் சர்வ நிச்சயமாக கலைஞர் படிப்பார் என்றே நம்புவோம். இனியாவது உலகத்தமிழர்களூம் , உணர்வுள்ள தமிழர்களும் தம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கருணாந்தி உணர்ந்து கொள்வார் என்றே நம்புவோம்..

கலைஞரே , காலம் கடந்து விடவில்லை. உமக்குப் பின்பு வரும் அரசியல் மாற்றம் தமிழின விடுதலையைச் சாதித்துக்காட்டும் , ஆனாலும் , முதிர்ந்த அரசியல் தலைவரான நீங்களே இனிமேலும் சொந்த குடும்பததைப் பாராமால் , சொக்கத்தங்கம் சோனியா காந்திக்கு வால் பிடிக்காமல் தமிழர்களின் உள்ளக்கிடக்கைக்கு தீனி போடுங்கள்...எதிர்ப்பார்ப்பின்றி தமிழினத்துக்காக போர்க்குணம் கொள்ளுங்கள்..இதுவே எமது எதிர்ப்பார்ப்பு.

 

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.

பேராசிரியர் இராமசாமி, ‘பினாங்கு ராமசாமி’ என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!

செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், ‘மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபாய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்று அதிரடி அறிக்கை விட்டிருக்கிறார்.

பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, ஆனந்த விகடனுக்காக வழங்கிய செவ்வி வருமாறு:

கேள்வி: இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே… என்ன காரணம்?

பதில்: மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன். இலங்கையில் ராஜபக்ஷவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன்.

இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம்.

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.

கேள்வி: உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?

பதில்: மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது. இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது.

இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. பிரச்சினை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?

பதில்: எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன். அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ்மொழி பற்றியோ எந்தக் கவலையும் இல்லை.

செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்… வருகிறேன் என்று வாசலில் போய் நின்றது போலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.

ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.

புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன்.

இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி: பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?

பதில்: எனக்கு மட்டுமல்ல… உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான். தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப் பற்றியும் உலகத் தமிழர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.

பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!

கேள்வி: 30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?

பதில்: கடந்த காலங்களில் ‘தீவிரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம். அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்தரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!

கேள்வி: கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?

பதில்: மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்திரவதைகள் செய்கிறது.

தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன. இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?

பதில்: மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர்.

கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.

கேள்வி: உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?

பதில்: எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.

கேள்வி: ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர்களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்!
கேள்வி: இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?

பதில்: மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியவர்கள். ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது.

எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது.

கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார்.

இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்! என்றார்.

Friday, July 16, 2010

நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்...மனிதர்கள்..!

இந்திய , தமிழக அரசாங்கத்தின் "துக்ளக்" கோட்பாட்டு அரசியலானது சீமானின் இருப்பையும் , தேவையையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு..

Necessity is the mother of innovation.  
தமிழில் சொல்வதாயிருந்தால் ,தேவைகளே கண்டுபிடிப்புக்களுக்கு காரணமாகின்றன. 

காங்கிரஸ் பேரியக்கத்தின் " தமிழ் - தமிழர் " விரோத செயல்பாடு தான் திமுக என்னும் அரசியல் பேரியக்கத்தை உருவாக்கியது...கடந்த ஒரீரு வருடங்களுக்கு முன்பு வரை நாமும் கூட அதே திமுக என்னும் கட்சிக்குக் கொடி பிடித்து நடை நடந்தவர்கள் தான். 

அன்று எங்கள் நெஞ்சில் அண்ணா மூட்டிய தீயை அணைத்து ,  எங்களையெல்லாம் தமிழர் விரோதப்போக்கை கடைபிடிக்கத் தூண்டும்  தமிழர் விரோத சக்தியாக இன்று அதே கருணாநிதி அவர்களின் , தமிழ்நாட்டு அரசின் "துக்ளக்" தனமான செயல்பாடுகள் எள்ளி நகையாடும் வண்ணம் இருக்கின்றன.

ஜாமீனில் விட இயலாத அளவுக்கு "சீமான்" என்ன குற்றஞ் செய்தார்?

உணர்ச்சி கெட்ட ஜென்மங்களாய் , சேற்றினில் விழுந்த எருமை மாடுகளைப் போல் - எங்கு எது நடப்பினும் கவலையற்றுக் கிடக்கும் "தமிழா...கொஞ்சம் எழடா" என்று உரத்துக் கூவினார்....

அது குற்றமா?

அப்படியெனில் "தேசிய" மொழியாம் இந்தி மொழியை ( சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுவே அரியணையில் நிற்கும் மொழி...) திமுக எதிர்த்த போது இந்திய  இறையாண்மை எங்கே போனது?

அந்த இறையாண்மைக்கு பங்கம் வகிக்கும் செயலுக்கு மூல காரணமே இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் "திமுக" தானே? 

அந்தச் செயலுக்கு தண்டனை கொடுப்பது யார். ?

தண்ணிரில் பந்தைப் போட்டால் மிதக்கும். அதே பந்தை நீருக்குள் அமுக்கி அமுக்கி விட அது மேலும் எகிறும்...எகிறிக்குதிக்கும்...அதன் ஆட்டத்தை சுலபமாக அடக்கி விட முடியாது.

இது இயற்கையின் விதி....

அது போலத்தான் "சீமானும்", அவர் பின்னால் அணி வகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் எழுச்சியும்... பந்து அமைதியாகவே மிதக்கிறது. மிதந்தது....ஆனால் "துக்ளக்" தனமான திமுக அரசின் செயல்பாடுகள் அந்த இளைஞர்களை அமைதி குன்றச் செய்கின்றன. அதன்மூலம் அவர்களை மேலும் எழுச்சியுறச் செய்கின்றன.

இவையெல்லாம் திமு கழகத்திற்குத் தெரியாதவை அல்ல.........60 களில் உணர்ச்சிப் பெருக்காய் கொந்தளித்த தமிழ் இளைஞர்களால் "காங்கிரஸ்" காணாமல் போனது. அப்போதைய எழுச்சி , அதற்கு முன்னர் "விடுதலை உணர்வாளர்கள் அல்லது இந்தியர் என்ற பேச்சில் கட்டுண்ட இளைஞர்களால் நிறைவேறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்றைவிட அன்று இந்திய தேசியத்தின் மீதான நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்தச் சூழலிலேயே இளைஞர்களின் எழுச்சியை ஏற்படுத்திட "அண்ணா" வால் முடிந்தது.

அதற்காக அவர் வெறும் ஒற்றைச் சொல்லையே ஆயுதமாக்கினார் ...

அது "தமிழ்" என்ற சொல்....

அதே "தமிழ்" என்ற ஆயுதம் தான் இந்த "துக்ளக்" ஆட்சியாளர்களை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்றது. அன்றைக்கு அண்ணாவிற்கும் , கருணாநிதிக்கும் இருந்த காரணங்களை விட பலமடங்கு போராட வேண்டிய தேவை தமிழ் இளைஞர்களுக்கு இன்றைக்கு இருக்கிறது...

அந்தத் தேவையே "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் , சீமானின் எழுச்சிக்கும் அடிப்படை.

உணமையாகவே தமிழர் மீது இந்த துக்ளக் அரசுக்கு அக்கறை இருக்குமானால் எம்மைத் தமிழராக மதியுங்கள்.....தமிழராக மதித்து போராட விளைகின்ற காரணங்களுக்கு தீர்வு காண முயற்சியுங்கள்...!!

அதை விடுத்து "உமது" அரசியல் இருப்புக்கு பங்கம் வருகிறதென தவறாக நினைத்து "நாம் தமிழர்" மீது அடக்குமுறையினை ஏவாதீர்கள்.....

ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறை சீமானைக் கைது செய்யும் போதும் ஒரு சில ஆயிரம் இளைஞர்கள் " நாம் தமிழராய் " இணைத்துக் கொள்கிறார்கள்...எம்மைப் போல.

கைதுகளின் மூலம் , அந்த இளைஞர்களை பயப்படுத்த முனைவதாய் எண்ணிக்கொண்டு ஆத்திரமூட்டச் செய்யாதீர்கள்...அந்த ஆத்திரம் உம்மை அழித்துவிடும்..

உதாரணம் கேட்கிறீர்களா???

கண் முன்னே இருக்கிறது......

தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்ததும் , திமுக வென்றதுமான வரலாறே  உதாரணம்...

நிறைகுடமாக நீங்கள் இருப்பீர்கள் எனில் குடத்தை நிரப்ப வேண்டிய தேவை யாருக்கும் இருக்காது. ஆனால் குறைகுடமாக குற்றத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு யாரும் நீர் நிரப்பக் கூடாது என்று சொல்வீர்களானால் , இப்போது போலவே "தமிழ்" உணர்வாளர்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவீர்களானால்................ குறித்துக்கொள்ளுங்கள்...

உங்கள் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது..திமுக , அதிமுக , தேமுதிக என்று நீளும் தமிழ் விரோத , தமிழர் விரோத சக்திகளே உங்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது.

காரணம் , நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்....காலடி பட்டதும் தூள் தூளாய்ச் சிதறி காணாமல் போவதற்கு...

நாம் மனிதர்கள் ....

ரத்தமும் , சதையுமாக உணர்வால் உந்தப் பட்டு கொதிக்கும் "நாம் தமிழர்கள்"..

Wednesday, July 14, 2010

பாவிகள்.!

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு சும்மா அறிக்கை விடக்கூடாது என்று பொங்கி எழுந்திருக்கிறார் சினிமாக்காரி "அசின்."

அது சரி , யாழில் நீங்கள் யாருடன் சென்று தமிழர்களைப் பார்த்தீர்கள்? மகிந்தாவின் மனைவி ஷிராந்தி இராஜபக்சேவுடன்....யார் அவர் , அனுதினமும் நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கூட்டத்துக் காரர்.

உண்மையானதும் , நேர்மையானதுமான அக்கறை தமிழர்கள் மேலிருந்தால் நீங்கள் கண்டித்திருக்க வேண்டியது தமிழர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய இராஜபக்சேவைத்தான் . அதைச் செய்தீர்களா? இல்லையே ? ஊருக்கு நாங்கள் தமிழர்களுக்கு எல்லாம் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ள உங்களை உபயோகப்படுத்துகிறார்கள் அவர்கள். 

உங்கள் பிழைப்புக்காக தமிழ்த்திரையுலகத்தை இரண்டுபடுத்தப் பார்க்கிறீர்கள்.......உங்களைச் சொல்லி குற்றமில்லை....வந்தேறிகளையும் , வேற்றினத்தார்களையும் அன்றாடம் தம் ஆதர்ஷ புருஷனாக்கி மகிழும் தமிழர்கள் செய்த தவறு அது....நீங்கள் அயலவர்கள்...உங்களுக்கு எங்கள் கஷ்டமும் , வேதனையும் புரியாது. 

அப்பாவியல்ல அசின் , படுபாவி........முள்ளிவாய்க்காலில் உலாவும் ஆயிரக்கணக்கான தமிழ் ஆத்மாக்கள் உம்மை மன்னிக்காது.....

***

இலங்கைக்கு போய் தமிழர்களைச் சந்திப்பது பற்றி பரிசீலிப்போம் என்று அறிவித்திருக்கிறார் சினிமாக்காரர் திரு. சரத்குமார்.

சந்தியுங்கள்.....நிச்சயம் செய்ய வேண்டியதே........வேதனையில் உழலும் அவர்களுக்கான மருந்தாக இது கட்டாயம் செய்யப்பட வேண்டியது......அன்றாடம் கொத்துக்குண்டுகளுக்கிடையில் வாழ்ந்த நம் சனத்துக்கு ஆறுதல் தேவைதான்.

ஆனால் எப்போது இப்படிச் சொல்கிறீர்கள்? சினிமாக்காரர் திரு.கருணாநிதியைச் சந்தித்து வந்த பிறகு....கூடவே இன்னொன்றையும் சொல்கிறீர்கள் "இன்று என் பிறந்த நாள்...வாழ்த்துக்கள் வாங்கவே வந்தேன்...அதனால் அரசியல் பேச முடியாது என்று.." 

இலங்கைக்கு போய் தமிழர்களைச் சந்திப்போம் என்று இன்று சொல்வது அரசியல் இல்லையா? அதுவும் யாரைச் சந்தித்து விட்டு வந்த பிற்கு ? கலைஞரைச் சந்தித்து விட்டு வந்தபோது....அடக்குமுறையின் மூலம் இராஜபக்சேவை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் கருணாநிதியைச் சந்தித்து விட்டு வந்த பிறகு...ஆக , உங்களின் இந்த அறிவிப்பிற்கு பின்னணி என்னவென்று மக்களுக்குப் புரியாதா என்ன?

இராஜதந்திரி , இனவுணர்வாளர்களின் குரலை நசுக்கவே உங்களைப் பயன்படுத்துகிறார்....ஏற்கனவே , எம்.பிக்களின் குழுவை அனுப்பினார் அவர்...அதற்கு "யாழ்ப்பாணத்தில் சனீஸ்வரன் " என்று தலையகம் தீட்டியது வலம்புரி நாளிதழ்...என்ன பதில் ? பதிலேதும் இல்லை...

ஆனால் , நான்கே நாளில் ஈழத்தமிழர்களூக்கு விடுதலை பெற்றுத்தந்ததாக போஸ்டர் ஒட்டி மகிழ்ந்தார்கள் உடன்பிறப்புகள்........இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் வாடுகிறார்கள்...கண்டித்து ஏதேனும் அறிக்கை விட்டாரா உங்கள் தற்போதைய "அப்பா?" . இல்லை போஸ்டர்தான் ஒட்டினார்களா உடன்பிறப்புக்கள்...?

***

உத்தபுரத்தில் எல்லோரும் அமைதியாகத்தான் இருக்கிறார்களாம்....மார்க்சிஸ்டுகள் தான் அமைதியைக் கெடுக்கிறார்களாம்....கருணாநிதி சொல்கிறார்.

கலைஞர் கருணாநிதி எவ்வழி வந்தவர்? 

பெரியாரின் வழி

கலைஞரின் இயக்கம் திமுக எவ்வழி வந்தது?  

சுயமரியாதையை, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு


தீண்டாமைக் கொடுமையினை அனுதினமும் எதிர்த்த பெரியாரின் வழித்தோன்றல்கள் தான் "உத்தபுரத்தில்" அமைதி கூத்தாடுகிறது என்கிறார்கள்..

வைக்கத்திலும் அமைதி கூத்தாடிக்கொண்டிருந்தது. பிறகேன் வைக்கம் வீரர் என்று பெரியாரைப் புகழ்கிறீர்கள்???

கோயில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் சேவையில் அமைதியாகத்தான் இருக்கிறது..பிறகேன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றுகிறீர்கள்?

போலிஸை வைத்து அடக்குமுறையைக் கையாண்ட சர்வாதிகாரிகள் ஒருவனாவது புகழப்படுகிறானா என்று பாருங்கள் கலைஞரே...

ஸ்டாலினில் , ஹிட்லரில் ஆரம்பித்து இந்திராகாந்தி வரை வரலாற்றில் தூற்றப்படுகிறார்கள்....

தமது ஆட்சிக்காக எவ்வளவு தூரம் கீழிறங்கிப் போயிற்று இந்த திமு கழகம் என்ற வேதனை தொண்டையை அடைக்கிறது.

மொழியை வைத்து வயிறு வளர்த்த கூட்டமொன்று , எமக்கு இனவுணர்வை ஊட்டி வளர்த்த கூட்டமொன்று , இன்று ஊரைக் கொள்ளையடிக்க ஊமையனாய் நீ இருந்துகொள் என்று சொன்னால் நாம் சும்மா இருந்துவிடுவோம் என்று கனவு கண்டது.. காண்கிறது....அது பகல் கனவு....பலிக்காது பாவிகளே..!

Tuesday, July 13, 2010

சினிமாக்காரர் சீமான்..!

சினிமாக்காரர் சீமான் ஓட்டம் என்று முதலில் சொன்ன தினமலர் பின்பு சினிமாக்காரர் சீமான் கைது என்று மாற்றிப்போட்ட செய்தியை இங்கே சிலர் படித்திருப்பீர்கள். இருப்பினும் படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு.

முதலில் ஓட்டம் என்று செய்தி வெளியிட்ட தினமலர் , பின்பு காரில் வந்த சீமானை காத்திருந்த போலிசார் லபக் என்று பிடித்தததாக சொல்கிறது.
பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியது தான் ...ஆனால் தான் தோன்றித் தனமாக தனக்குத்தோன்றியவற்றை எல்லாம் மனம் போன போக்கில் எழுதித் தள்ளுவது தவறு...

அதே நிகழ்வில் பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்...சினிமாக்காரர் கலைஞர் கருணாநிதி அவர்களின் போலீசார் அராஜகம் என்று தினமலர் எழுதத்துணியுமா? 

துணியாது..

காரணம் இன்று கருணாநிதி அவர்கள் பக்கம்....!!

அந்தச் செய்தியிலேயே தினமலரின் இந்த பொல்லாப் புத்தியை பலர் இடித்துரைத்திருக்கிறார்கள்...

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. மற்ற முழுமையான பின்னூட்டங்களை மேற்கண்ட செய்தியின் இணைப்பை அழுத்தினால் முழுமையாகப் படிக்கலாம்.!

pavendhan - sydney,ஆஸ்திரேலியா 
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி நல்ல செய்திகளை தவிர்த்து,மற்ற செய்திகளை கிண்டலாக எழுதுவதாக நினைத்து தினமலர் தன்னைத்தானே தாழ்த்தி கொள்கிறது. முன்பு சீமான் முகத்தில் கரி என்று செய்தி. இப்பொழுது சினிமாகாரர்..உயிரை பணயம் வைத்து ஈழத்திற்கு சென்றவரை,சண்டையின்போது ஈழத்தின் கோரத்தை பதிவுசெய்யாத தினமலர்,கிண்டலடிப்பது துரதிர்ஷ்டவசமானது....
ஜெகதீஸ்வரன்.இரா - Dubai,யூ.எஸ்.ஏ 
சரியான செய்திகளை திரித்து கூறுவதில் தினமலரை மிஞ்ச ஆளில்லை என மீண்டும் நிருப்பித்து விட்டீர்கள். இந்த செய்தித்தாளை படித்தால் சரியான நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடியாது..!!... 

சாமீ - Sharjah,யூ.எஸ்.ஏ 
அது என்ன சினிமாகாரர் சீமான் ! அப்படி என்றால் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் இவர்கள் எல்லாம் யார். சூரிய குடும்பம் அத்தனையும் சினிமா தானே எடுக்குது. மீனவன் செத்தால் நீங்களும் கேட்க மாடீங்க. கேட்குரவனையும் கேவலமா எழுத வேண்டியது... கருத்தை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு அரசியல் வியாதியைப் போல ஆளை விமர்சனம் செய்ய கூடாது... 

poda - NewYork,உஸ்பெகிஸ்தான் 
 
இது வரை 400 க்கு மேலான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இதுவரை மத்திய அரசும் மாநில அரசும் எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுத்ததில்லை.இனியும் எடுக்க போவதும் இல்லை. சீமானின் பேச்சுக்கு கோபப்படும் அன்பர்கள், சற்று சிந்திக்க வேண்டும்.மௌனமாக இருந்தால் எதுவும் நடக்காது....

சாமி - bangkok,டோகோ

வர வர தினமலர் செய்திகளின் தலைப்பு ஒரு மாதிரியாக தான் இருக்கிறது. தமிழ் மாநாடு ஆரம்பிப்பதற்கு சில காலம் முன்பிருந்து தலைப்புகளை நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும். இன்றைக்கு வந்த சேதியும் அப்படி தான் இருக்கு. சீமானின் கோபம் நியாயமானது. அந்த கோபம் ஒவ்வொரு தமிழனுக்கு இருக்க வேண்டும். அவன் உப்பு போட்டு சாப்பிடுபவனாக இருந்தால். ஆனால் அவர் பேசிய அனைத்து வார்த்தைகளையும் ஒப்பு கொள்ள முடியாது. படிக்கும் மாணவர்களை கொல்வதாக கூறுவதை ஏற்க முடியாது. வேண்டுமானால் சிங்கள ராணுவத்தை கொல்வோம் என்று கூறலாம். நாளையிலிருந்து சினிமாகாரர் விஜயகாந்த் பேசினார். சினிமாகாரர் கருணாநிதி பேசினார். சினிமாகாரி ஜெயலலிதா பேசினார் என்று செய்தியை வெளி இடவும். நன்றி வணக்கம்....
 
k.senthilkumar - singapore,இந்தியா 
ஏங்க தினமலர் ஆசிரியர் அவர்களே ... நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என்று சொன்னால் உங்கள் செய்தித்தாள் விற்பனை குறைந்து விடுமா ?... 

மதன்ராஜ் - Pune,இந்தியா 
அவ்வாறு பேசியது தவறுதான். சீமானை கைதுசெய்ய துடிக்கும் அரசு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுப்பதில் ஏன் அக்கறை காட்டுவது இல்லை. சீமான் என்ன செய்வார் பாவம். தமிழ் ரத்தம் துடிக்கத்தான் செய்யும். இந்த கடலோர காவல் படையும் கடற்படையும் எங்கள் வரி பணத்தில் வாழ்ந்துகொண்டு எங்கள் மீனவரை காப்பாற்றாமல் இருப்பது ஏன்? இலங்கை கடற்படையுடன் கூட்டு ரோந்து மட்டும் செய்ய முடிகிறதோ? ஆஸ்திரேலியாவில் அடிவாங்கும் வடஇந்தியனுக்கும் பிரான்சில் சீக்கியர் முண்டாசு அணிய தடை செய்வதற்கு மட்டும் மன்மோகன் singh குரல் கொடுப்பாரா?... 

gansesh - chennai,இந்தியா 
இங்கே சீமான், என்னா தப்பு செய்தார்? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக என்ன கருத்துகள் முன் வைக்க படுகின்றன என்று உங்களில் யாருக்கு தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டு மீனவன் துடிக்க துடிக்க சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டான்- இப்போது புலிகள் அழிக்கப்பட்ட நிலையிலும் இந்த நிலைமை தொடர்வது ஏன்? இந்திய நாட்டு கடற்படை கூட இலங்கை மீனவர்களை கைது செய்து இருக்கிறது, ஆனால் கொல்லவில்லை. நண்பர்களே உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பன் யார் என்று....

நண்பர்கள் பலரும் தினமலரை "தினமலம்" என்று விளிப்பதுண்டு. அப்போதெல்லாம் அவர்களுடன் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையை இப்படி அவதூறாகப் பேசலாமா என்று விவாதித்தது உண்டு. இப்போது தான் அதன் முழுமையான அர்த்தம் புரிகிறது.

இனிமேலாவது , வெகுஜன , நியாயமான , நடுநிலையான செய்தித்தாள்கள் என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் பத்திரிக்கைகள் எவ்வளவு கீழ்த்தரமான நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன என்று அம்பலப்படுத்தவே இப்பதிவு.  !

Thursday, July 08, 2010

திராவிடத்தால் விளைந்த கேடுகள்.. - திரு.பிரின்ஸ் சாமாவுக்கு (மட்டுமல்ல)


எந்த  ஒரு தனிமனிதனுக்கும் அடையாளம் தேவைப்படுகிறது.  அதனால் தான் இன்று மனிதர்கள் சாதியால் கூடுவதும் , தம் ஊர் என்ற பெயரில் கூடுவதும். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணி பயம். இந்தச் சமூகம் தனி மனிதனின் குரலை செவி கொடுத்துக் கேட்பதே இல்லை. அவனவன் தனக்கென ஒரு கூட்டம் சேர்த்துக் கொடி பிடித்தால் தான் திரும்பியேனும் பார்க்கிறது. 

மொட்டனூத்து  என்ற கிராமத்திற்குள் , ஒரு கவுண்டன் அல்லது இன்ன சாதி என்பது அடையாளம் , அதே கிராமத்தை விட்டு வெளியே வந்தால் மொட்டனூத்துக்காரன் என்பது அடையாளம் , வெளிமாவட்டம் போனால் ஈரோட்டுக்காரன் என்பது அடையாளம்  , மற்ற மாநிலங்களுக்குப் போனால் தமிழ்நாட்டுக்காரன் என்பது அடையாளம் , வெளிநாடுகளுக்குப் போனால் இந்தியன் என்பது அடையாளம்.

ஆக , அடையாளம் என்பது இடத்திற்கு இடம் , சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது....ஆனால் , இறுதிவரை நம்மோடு பயணிக்கும்  , மாறாத அடையாளம் எது? விவாதத்திற்குரிய கேள்வி...

தமிழை , மலையாளத்தை, கன்னடத்தை , தெலுங்கை , துளுவைப் பேசுகிறவர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்றார் பெரியார். அதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் காலத்தின் கட்டாயத்தால் நம்மை அங்ஙனம் அழைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனென்றால் அவர் இருந்த காலம் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருக்காத காலம். 

ஒட்டுமொத்த திராவிட சமூகமும் , சென்னை மாகாணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட காலம்...... 

என்றைக்கு பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் தனி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கென உண்ணாவிரதம் இருந்து இறந்தாரோ அன்றைக்கே திராவிடம் செத்துப் போனது. அது செத்துப் போன பாம்பு....

என்றைக்கு மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றைக்கே திராவிடக் கொள்கைக்கு மூடுவிழா நடத்தியாகி விட்டது. அதை இன்றைய திமுகவும் ஒத்துக்கொண்டது. அதனால்தான் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதைப் பெரியாரே ஒத்துக்கொண்டிருக்கிறார்.  


இன்று கேரளம் முல்லைபெரியார் அணைக்கு தடை போடுவதும் , காவிரிக்கு கர்நாடகம் தடை போடுவதும் திராவிடவியல் கருத்தியலுக்கு சவாலாக விளங்குகின்றன. திராவிடம் என்கிற பெயரில் கட்சி நடத்தும் திமுகவுக்கோ , அதிமுகவுக்கோ ஒரு சட்டமன்ற , நாடாளுமன்ற பிரதிநிதி இருக்கின்றாரோ மற்றைய திராவிட மாநிலங்களில். இல்லை மற்றைய மாநிலங்கள் தான் இவர்களை தமது பிரதிநிதிகளாக , திராவிடத்தின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களா ????
இப்படி , செல்லாக் காசான திராவிடத்தை இக்கட்சிகள் சுமப்பது  திராவிடர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவா அல்லது இவர்களது பிழைப்பியலுக்கா?


நண்பர் பிரின்ஸ் உடனே  சொல்லக்கூடும் " ஆமாம் திராவிடம் என்று பிழைக்க திராவிடர் கழகம் என்ற ஓட்டரசியலிலா இருக்கிறது " என்று? இல்லைதான். ஆனால் பெரியாரின் சீடர்களை வெகுஜன அரசியலிலிருந்து மேலும் விலக்கிய சாதனையைத் தான் இன்றைய தி.க செய்கிறது.....செய்திருக்கிறது. 

பெரியார் என்னும்  மாமனிதர் மறைந்த  பிறகு "திராவிடர் கழகம்" தமிழ்நாட்டுக்கு , திராவிட நாட்டுக்கு செய்த அரும்பணிகளைப் பட்டியல் இட இயலுமா திரு. பிரின்ஸ் அவர்களே...

செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு "சமூக நீதிக் காவலர்" என்ற பட்டம் வழங்கிய சாதனை இதில் சேராது.

திராவிடம் என்று பேசும்  திகவோ , திமுகவோ , அதிமுகவோ திராவிடர்களை ஒன்றிணைக்க என்ன செய்திருக்க்கிறார்கள்??

தமிழ் தவிர மற்ற திராவிட மொழிகள் தழைக்க என்ன செய்திருக்கிறார்கள்??

ஈழத்தில் தமிழன் பிணமான போது திராவிடத்தின்  பெயரால்  தென் மாநிலங்களை ஒன்றிணைத்து தம் குரலை வலிமையாக ஓலிக்கச் செய்ய முயற்சி எடுத்தீர்களா திராவிடர்களே????

இப்படி சுக்குக்கும் உதவாத திராவிடத்தை வைத்து என்ன சாதிக்க முயல்கிறீர்கள்??? 

உங்கள் நோக்கம் தான் என்ன?

இவர்கள் சாதித்தது எல்லாம் , மாற்று மொழிக் காரர்களிடம் தமிழர்களை அடகு வைத்தது மட்டுமே...

தமிழர்களை ஆண்ட எம்.ஜி.ஆரில் தொடங்கி , ஜெயலலிதா , வைகோ , விஜயகாந்த் என தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களை தமிழ்த் தலைவர்கள் ஆக்கியதுதான்......

திராவிடக் கருத்துருவாக்கம் போலி என்பதல்ல நமது கருத்து. தீராவிடத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் போலியானவர்கள்.....அதன் மூலம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் என்பதே உண்மை...இதை உறுதிப்படுத்துவதாக இக்கட்டுரையின் அடுத்த பகுதி அமையும்..

இன்னும் வரும்........



தொடர்புபட்ட திரு.ப்ரின்ஸ் என்.ஆர் சாமா அவர்களின் கட்டுரையைப் படிக்க இங்கே செல்லவும்.

Tuesday, July 06, 2010

கொழும்பு ஐ.நா அலுவலகம் முற்றுகையில். !

கொழும்பு ஐ.நா அலுவலகம் இலங்கை அமைச்சர் விமல வீரவன்ச அவர்களால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.


ஐநா நியமித்த நிபுணர் குழுவை கலைக்கும் வரையில் முற்றுகையைத் தளர்த்தப் போவதில்லை என்று விமல வீரவன்ச அறிவித்திருக்கிறார்.


Massive protest outside UN


By Supun Dias

A large crowd has gathered outside the UN office in Colombo to stage a protest against UN Chief Ban Ki Moon’s decision to appoint an Expert Panel. Government Minister Wimal Weerawansa is leading the protest.

More than a 1000 protestors have gathered outside the UN office in Bauddhaloka Mawatha.

The protestors have put down a police barricade near the UN office and have got on top of the UN parapet wall and are staging the protest against the UN Secretary General.

The protestors have also begun a 'sathyagraha' until Ban Ki Moon reverts his decision.

Weerawansa had last week urged the public to surround the UN office in Sri Lanka and trap the staff inside until a decision was taken by the UN Secretary General to dissolve the panel he appointed on Sri Lanka.

The UN last week responded by saying its security officials were monitoring the comments made by Weerawansa and said there was an indication the government may apologise to the comments made by the government minister. (Daily Mirror online)
 
http://www.dailymirror.lk/index.php/news/4863-massive-protest-outside-un.html

The large number of protestors led by Minister Wimal Weerawansa who have gathered outside the UN office in Colombo have erected a stage, blocking the entrance of the office preventing UN members from entering or leaving the building.

Weerawansa speaking to reporters gathered in the area said that they will not move from outside the office till such time UN Secretary General Ban Ki Moon does not dissolve the Expert Panel.

The protestors have also started a fast unto death ‘sathyagraha’ outside the office

http://www.dailymirror.lk/index.php/news/4866-un-office-under-siege.html

ஒரு கை ஓசை என்ன செய்யப் போகிறது. தமிழர்கள் நீதி வேண்டும் என்று கேட்க இதைவிட சிறந்த தருணம் இருக்கப்போகிறது?

நீதி தேவதையின் கதவுகளைத் தட்ட ,உலகம் முழுமையும் ஒருங்கே இலங்கையின் மேல் பார்வை செலுத்துகின்ற இந்த நாள் தான் தமிழர்கள் /புலம்பெயர்கள் தமிழர்கள் தெருவிற்கு வந்து போராட வேண்டிய நாள்....

நிபுணர் குழுவைக் கலைக்கக் கூடாது என்று உரத்துக்குரல் கொடுக்க வேண்டும்

வாய்ப்பிருக்கும் இடமெல்லாம் ஐநா அலுவலகத்தின் முன்னால் கூடிக் கொடி பிடிக்கத் தயாராக வேண்டும்...

மக்களவை , உலகத்தமிழ் பேரவை , நாடு கடந்த தமிழீழ அரசு , நாம் தமிழர் இயக்கம் என்று நீண்டிருக்கும் தமிழ்த்தேசிய சகதிகள் சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது என்பதே நமது கருத்து.!!

Friday, June 04, 2010

கூலிக்கு மாரடிக்கிறார்களாம் தமிழர்கள்...!!!! கேட்டுக்குங்க...!!!

ஐ.ஐ.எப். ஏ விழா (IIFA 2010 ) கொழும்பு நகரில் நடப்பது தெரிந்ததே........

அதற்கு உணர்வால் ஒன்றுகூடிய மும்பைத் தமிழர்கள் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு முன்னே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்...ஆனால் அதைக் கூலிக்கு மாரடிப்பதாகக் கொச்சைப்படுத்துகிறார் விஸ்கிராப்ட் ( அந்நிகழ்விற்கான ஏற்பாட்டாளர்) நிறுவன மேலாளர் சபாஸ் ஜோசப்...

நம் செயல்படாத் தன்மையால் தான் உணர்வாளர்களுக்கு இந்த அவப்பெயர் வந்தது... நல்ல பெயர் தான் போங்கள். இதையாவது உணர்வோடு கண்டிப்போம்....!

இது பற்றிய மீனகம் செய்திக்கான இணைப்பிற்கு இங்கே சொடுக்கவும்.





Monday, May 24, 2010

"நாம் தமிழர் " இயக்கத்திற்கு "செக்" வைக்கிறது இந்தியா.

அனேகர் இந்த செய்தியை இப்போது படித்திருப்பீர்கள்......

ஊடகங்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பையும் தாண்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் மதுரையில் "நாம் தமிழர்" இயக்க மாநாட்டில் கூடினார்கள் என்ற செய்தி டெல்லி வரை எட்டியிருக்கிறது......

இது "நாம் தமிழர்" இயக்கத்திற்கு புதுதில்லியின் இந்திய மத்திய அரசாங்கம் வைத்த "செக்" என்று சொல்லலாம் என்று "பட்சி" சொல்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்ட விரோத அமைப்பு. 

சென்னை: இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு [^] அறிவித்துள்ளது. இது தொடர்பாக எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் புலிகளை ஆதரிப்போர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை [^] எடுப்பது மேலும் எளிதாகும்.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவரச அரசணையில் (எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும் எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசை பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;

2) புலிகள் மீது தடை அமலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

3) இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும்,

ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.

இவ்வாறு இந்த அவரச கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 03, 2010

மே 18 - அழிஞ்சுதான் போயினம்…ஆனா.........


தொப்பியும் , சீருடையும் , கவசமும் தரித்த அரசுப்படைகளுடன்,
பிய்ந்த ரப்பர் செருப்பினையும் , லுங்கிகளையும் தரித்துப் போரிட்ட
எமது புலிமறவக் கூட்டங்கள் சலிக்காமல் ரவையடித்தக் கதையதுகாண்.
எல்லாமும் கைமீறிப் போயிற்று…ஆம் , எல்லாமும் தான்.
எதிர்கால நம்பிக்கையாகவிருந்த  “கருணா”க்கள் குறிசொல்ல
அச்சமும் , பழியும் , பகையும் கொண்ட சிங்களன் சினம்கொண்டு வந்தனன்.
அதிர்வேட்டுக் கிளப்பி , அன்றாடம் அனல்காற்றென சுட்டெரித்த எம்
புலிக்கூட்டம் அந்தோ பரிதாபம் , விஷக்காற்றினால் வீழ்ந்தது காண்…!
வீரம் எம்மோடு விளைந்த தொன்றே….ஆனால் துரோகம் எமக்கு தூரமன்றோ?
சூழ்ச்சிக் களத்தில் சுருண்டு போயினர் எம் புலித்தலைவர்கள் ஆனந்தபுரத்தில்!.
நந்திக்கடலொரு புறமாய் , இந்து மகா சமுத்திரமொரு புறமாய்
நச்சுத்திட்டமிதையிட்டு எம் தலைமையிதை முற்றுகை செய்த சதியெது?
ஆரேனும் வந்து எம் சனத்தை , புலியை , போராளியை மீட்டுச்செல்வரென
ஆகாத நம்பிக்கையை ஊட்டி வளர்த்தது யார்? எச்சக்தியது?
கரந்தடிப்புலியாகி , இந்திய வல்லரசை இமை மூடாவண்ணம்
காத தூரம் ஓட்டிய பிரபாகரனின் பிள்ளைகள் காசுக்கு குரைக்கும்
சிங்களத்து சிறுபிள்ளைகளிடம் வீழ்ந்த கதை எப்படி நம்ப?
சீனத்து வெடிமருந்தோ , சீமையின் தந்திரமோ , ஆரியத்தின் சூழ்ச்சிதானோ…
சினம் மிகுந்து கேட்டுக்கொண்டேன்…சிக்கவில்லை விடையின்னும்….
ஆறாத காயமுண்டு……ஆற்றாமை நெஞ்சிலுண்டு….
ஆரியக் கூட்டத்தின் மேல் அடங்காத கோபமுண்டு…….
அப்போது சொல்லிப்போட்டான் அருகிலுள்ள என் நண்பன்.
ஊரை வெய்தென்ன உபயோகம்…. ஊட்டுக்குள்ளே இருந்தது துரோகம்.
ஊமை போல் அது நின்னு அழித்துப்போட்டது தமிழ்ப்பிள்ளைகளை.!
ஆறாத காயத்துக்கு மருந்தின்னும் போடவில்லை.
அதுக்குள்ளே வந்து நிற்குது அடுத்த மே மாசம்….
ஆம் , கடந்து போன மே – 18 , அழிந்துதான் போயினம்…
அக்குவேறு ஆணிவேறா பிரிந்துதான் போயினம்……..
வீரப்பிள்ளைகளை பரிகொடுத்துத் தவிக்கினம். ஆனாலும்
வீரமொன்னும் போகவில்லே…….வீரியமும் குறையவில்லே.
தமிழீழ மண்ணைத்தான் கொஞ்சம் பையிலே முடிஞ்சிகிட்டு
தக்க சமயத்துக்கு காத்திருக்கோம் கண்ணுறங்கும் வீரர்களே….
தமிழால ஒண்ணு சேர்ந்தோம்..தமிழுக்கே செத்துப்போனோம்…..ஆமாம்
தக்க சமய்த்துக்கும் காத்திருக்கோம் கண்மணிகளாள்…….
கொஞ்சம் பொறுத்துக்குங்கோ….கூடவந்து சேந்துடுவோம்….
சுதந்திரக் காற்றக்கொஞ்சம் கொண்டு வந்து சேத்துடுவோம்….!
அதுக்கான சபதமொன்னை இப்போதான் எடுத்திடுவோம்….!
ஆம். மே – 18 அழிஞ்சுதான் போயினோம்…ஆனால்
உயிர்த்தெழுவோம்…அடங்காத காளைகளாய்………!

Sunday, April 18, 2010

நேர்மையும் , வாய்மையும் அற்ற நிலைகெட்ட மனிதர்கள்.!

பிரபாகரனின் தாயார் அவர்களை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த விடயத்தில் இந்தியாவின் நாணயம் இன்னுமொருமுறை பல்லிளித்தை அனைவரும் அறிவோம். !

அஃதோடு சேர்ந்து இன்னமும் வெகுபலரின் நாணயமும் , நேர்மையும் , வாய்மையும் பல்லிளித்ததை அறிவீரோ? 

தெரிந்த செய்திதான்...அணுகிய கோணம் மட்டுமே வேறு. 

மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி , மக்கள் தொலைக்காட்சியின் மூலம் தமிழ்வளர்க்கும் தமிழர் திரு.இராமதாஸ் "தமிழக அரசு " இதைச் செய்திருக்காது என்று கட்டியம் கூறிவிட்டார். உலக தமிழர்களே, இதுதான் உண்மை என்று ஒத்துக்கொள்வார்கள் இனி...

அடுத்த அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டாகிவிட்டது. நல்லது , 

இவரது அரசியல் அணுகுமுறைதான் பல்லிளித்து விட்டதெனில் , ஈழத்தாய் புர்ட்ச்சி தலைவி தமது கருத்தைக் கூட கூறுவதற்கு நேரமின்றி கொடநாட்டு அலுவல்கள் கொத்துக்கொத்தாய்க் காத்திருக்கின்றன....விட்டுவிடுவோம் பாவம் - அவரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் நமது தவறே. 

மேட்டுமை தாங்கிய கேப்டன் தனது தொலைக்காட்சியின் முழக்கமாக "தமிழ்....தமிழ்" என்று முழங்கிவிட்டு "கேப்டன் டீவி" என்று அழகுத்தமிழில் பெயர் வைத்துக்கொண்டதைப் பற்றி நமக்கொன்றும் கவலையில்லை. ஆனால் வயதான ஒரு மூதாட்டியை / தமிழச்சியைத் திருப்பியனுப்பியது பற்றி கருத்துக்கூறாமல் விடுவதைப் பற்றி கவலைப்படுவதும் , அது குறித்த அரசியல் பார்வையைப் பற்றி கேள்வி எழுப்புவதும் தவறா என்ன? 

 திருமா அவர்களை விட்டுவிடுவோம். அவர் ஏதோ தர்மசங்கடத்தில் இருக்கிறார். பிழைப்புக்கு கூவியாக வேண்டும்....அப்புறம் மறந்து விடுவார். 

இதுகாறும் இதுபற்றி வாய்திறக்காததன் மூலம் , தமிழக அரசுதான் இக்காரியத்திற்கு மூல கர்த்தா என்று சொல்லாமல் சொல்லியாகிவிட்டது..

அடுத்து மிக முக்கிய தலைப்பிற்கு வருவோம்.

புலிகளின் தலைவரின் தாயார் இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வருவதை சிதம்ப்ர ரகசியமாக வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை வைகோவிற்கோ அல்லது நெடுமாறனுக்கோ எங்கிருந்து வந்தது என்பது கூர்ந்து நோக்கவேண்டிய கேள்வி..
அதற்கான பதிலாக அவர்களால் சொல்லப்படுவது " தாயாரின் பாதுகாப்பு...." 

இது சற்றும் சரியானதாகப் படவில்லை. வெகுபலருக்குச் சொல்வதன் மூலம் , அத்தாயாருக்கான ஆதரவு அதிகப்பட்டிருக்குமே ஒழிய , பாதுகாப்பு வலுப்பட்டிருக்குமே ஒழிய எவ்விதத்திலும் அதற்கு குறையிருக்காது.

ஏற்கெனவே , முத்துக்குமாரின் மரணத்தை , அதன் பின்னரான எழுச்சியை வீண்டித்த வைகோவும் , நெடுமாறனும் , திருமாவும் இப்பிரச்சினைக்கும் தக்கதொரு காரணத்தைக் கூறி அல்லது தெருமுக்கில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தத்தமது கடமைகளை முடித்துக்கொள்வர்.

அத்தோடு நாமும் மறந்துவிடுவோம்.


சரி , தமிழகத்தை விடுங்கள்...

புலம்பெயர் தமிழீழ மக்களிடையே ஏதேனும் வலுவான எதிர்ப்புக்குரல் எழும்பியதா?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் , உலகத்தமிழர் பேரவை எனப்படும் குளோபல் தமிழ் போரம் , நாடுகடந்த தமிழீழ அரசு இப்படி ஏதேனும் ஒரு சில அமைப்புகளாவது இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தார்களா எனில் அதுவும் இல்லை.....ஏன் என்று ஆராயப்போனால் , எமது அறிவுக்குதந்த காரணமொன்றும் தென்படவில்லை.

ஏதோ சில பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஊடகங்களில் எழுதுவதோடு அவர்களின் எதிர்ப்புக்குரலும் அடங்கிவிடுகிறது....

சரி , தாயக ஈழத்தமிழர்கள்?? முகாமிற்குள் முடங்கிக்கிடக்கும் தமிழர்களை விட்டுவிட்டாலும் கூட நமது பார்வை "தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை" நோக்கி நீள்வதில் தவறிருக்கவியலாது... குறைந்த பட்சம் இந்தியா தம் முடிவை மீள் பரிசீலனை செய்யவேண்டும்" என்ற அளவிற்காவது வலியுறுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை...!

எல்லோருக்கும் பயம் , இந்தியாவைக் கண்டு பயம்.....இந்தியாவை எதிர்க்கக் கூடாது , அதனால் தமது சொந்த நலனுக்கோ இல்லை புகலிட நலனுக்கோ பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பயம்...! 

ஆனால் எல்லோருக்கும் தமிழீழம் மேல் ஆசை , அதில் வாழ ஆசை...அதைப் பெற்றுக்கொள்ள ஆசை.....ஆனால் நமக்கு யாரேனும் வந்து பெற்றுத்தர வேண்டும்..........

இப்படிப்பட்ட ஒரு சுயநலச் சமூகத்திலிருந்துதான் அர்ப்பணிப்புள்ள 50 ஆயிரம் வீரர்களை உருவாக்கினார் தேசியத் தலைவர் பிரபாகரன்...........அதற்காக அவர் பட்ட கஷ்டமும் , தியாகமும் , உழைப்பும் இப்படி அணியணியாகப் பிறந்து கிடக்கும் தமிழர்களால் வீணடிக்கப்படுகின்றது..

நேர்மையும் , வாய்மையும் , உண்மையும் அற்ற சுயநல மனிதர்களால் இங்கே போராளிகளின் தியாகம் கானல் நீராகிப்போனது.

அத்தியாகம் மதிக்கப்பட வேண்டுமானால் , இளைஞர்களே , மாணவர்களே , நம்மால் மட்டுமே முடியும்...அரசியல் தலைமைகளைப் புறந்தள்ளி விட்டு நாமே முன் நிற்க வேண்டும்.....நாமே இனி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.......... அதுவே ஒரே வழி.

Friday, April 16, 2010

தமிழனுக்கு இதைவிட அவமானம் இனியேது?

ஆம்.

இதைவிட அவமானம் இனியொன்றுமில்லை. இதற்குப்பின் பொறுத்திருப்பின் இனி தமிழன் மானங்கெட்டுச் சாவதிலும் தவறில்லை..!!!

தேசியத் தலைவரின் தாயார் என்ற முறையில் அல்ல , தமிழச்சி என்ற முறையில் அல்ல , பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு நடைப்பிணமாய் திரிகிற ஒரு வயதான மூதாட்டியை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது இந்தியா.

தொடர்புபட்ட செய்திகள்....




இதற்கு மன்னிப்பே கிடையாது...மன்னிக்கவும் முடியாது....!!!! 

ஏன்?

இந்தியாவின் எதிரி நாட்டின் மட்டைப்பந்து விளையாட்டு வீரர் வாசிம் அகரமின் மனைவிக்கு வைத்தியம் பார்க்க விசா ஏதும் இல்லாமலே சென்னையில் இறங்க அனுமதித்த இந்திய அரசு , தகுந்த காரணம் எதுவுமின்றி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது என்றால் என்ன அர்த்தம்..?

தமிழ்நாட்டுத் தமிழனே , நீ சொரணை கெட்டவன்..
பிரியாணிக்கும் , நூறு ரூபாய் பணத்துக்கும் விலை போனவன்.....
 உன்னால் ஒரு "மசுரும்" புடுங்க முடியாது என்று சொல்வதாகத்தானே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது????????????

செம்மொழி மாநாடு கூட்டும் நம்ம தாத்தா என்ன சொல்லப்போகிறார்.? மனிதாபிமானம் சிறிதுமற்ற இந்தச் செயலைக் கூட காங்கிரஸ் கூட்டணிக்காக கண்டிக்காமல் விடப்போகிறாரா?

அய்யா , அரசியல்வியாதிகளே...

கொஞ்சமேனும் மனசாட்சியுடன் இருப்பீர்களானால் கட்சி வேறுபாடின்றி இந்த ஈனச்செயலை , தமிழ்நாட்டுக்கு தீராத அவமானத்தையும் , பழியையும் ஏற்படுத்திய இந்த வேதனைச் செயலை கண்டித்தே ஆகவேண்டும்..!

இந்தியாவுக்குள் நுழைய விடமாட்டோம் என்றால் என்ன எழவுக்கய்யா , விசா தருகிறீர்கள்???

ஏனய்யா அவர்களைச் சென்னை வரை வரவிட்டு திருப்பி அனுப்புகிறீர்கள்???

மானங்கெட்ட , சொரணை கெட்ட தமிழர்களைச் சீண்டிப்பார்க்கவா???

ஊடகதர்மங்களைக் கடைப்பிடிக்கும் வணிக நோக்குள்ள பார்ப்பனீய ஊடகங்களின் நிலைமையும் என்ன?நான் சொல்லும் பார்ப்பனீய ஊடகங்களில் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அடக்கமே...!!!

வழக்கம் போலவே , இருட்டடிப்பு செய்யப் போகின்றனவா????


கேள்விகள் நிறைய உண்டு......ஆனால் பதில் யாரிடம்?

Friday, February 19, 2010

இந்தியனாக இருப்பதில் உள்ள சிரமங்கள்.!

எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான். ஆனால் என்ன செய்வது? இந்தியனாக இருப்பதிலுள்ள சிரமங்கள் அதிகரித்துக்கொண்டே போகத்தான் செய்கின்றன. அதற்குக் காரணம் நாமில்லை என்பதை எல்லா இந்தியர்களும் அறியவே செய்வார்கள்.!

சில தினங்களுக்கு முன்னால் , இந்தியர்களாகவே ஹைதராபாத் சென்று "பெல்" நிறுவனத் தேர்வினை எழுதி விட்டு வந்த தமிழக மாணவர்களைக் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள் ஆந்திர மாணவர்கள். அங்கே கைகலப்பில் ஈடுப்பட்டது ஆந்திரமும் , தமிழகமும் -இதில் இந்தியன் எங்கே வந்திருக்கிறது. 

மும்பையில் ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் , உ.பி. மாநிலத்தாரை மகாராஷ்டிராவின் நவ் நிர்மாண் சேனாவினர் தாக்கிய போது வெகுண்டெழுந்த இந்திய மீடியாக்கள் , பத்திச் செய்தியாகக் கூட ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைச் செய்தியாக்க வில்லை. நாம் இந்தியர்களாகவே இருக்கிறோம். அவர்கள் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லை போலும்.!

தீவீரவாதத்திற்கெதிராகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்மக்கள் புலிகளை அங்கீகரிக்கவில்லை என்று சொன்ன இந்தியர்கள் - குறிப்பாக சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் சேலையைப் பிடித்து அரசியல் பாடம் படித்துக்கொண்டிருந்த பிதாமகர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று "யாழ்ப்பாண தமிழர்கள் " என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு இந்திய ஏடு எடுத்துப் போட்டிருக்கிறது பாருங்கள்.....!!! அதை அப்படியே கீழே தருகிறேன். 
A Jaffna man blames India for the defeat of the LTTE. “India had failed to stop the last leg of the war between the Lankan forces and the LTTE and prevent the killing of thousands of Tamil civilians,” they complained.Tamil Nadu Chief Minister M Karunanidhi only enacted a “drama” in support of the Tamils here, they sneered.

source : The New Indian Express  

தமிழில் அதை மொழி பெயர்த்திருக்கிறேன். அது கீழே.



யாழ்ப்பாண தமிழர் ஒருவர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவையே குற்றஞ்சாட்டுகிறார். இறுதிக்கட்ட போரை நிறுத்துவதற்கு இந்தியா தவறிவிட்டது , அதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதைத் தடுப்பதிலுமிருந்து தவறிவிட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை ஆதரிப்பது போல நாடகம் மட்டுமே நடாத்திக்கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார் என்று அந்த ஏடு பிரசுரித்திருக்கிறது.


அத்துடன் , யாழ்ப்பாண மக்களின் பொதுப்படையான கருத்தாக இருப்பதாக இன்னொரு பத்தியையும் பிரசுரித்திருக்கிறது.

The businessmen and others Express spoke to made it clear that they had fraternal feelings towards Indians. The issue was with the government in Delhi and the ruling party in Tamil Nadu, they stressed. The general feeling here is that Congress leader Sonia Gandhi had punished people for a crime they did not commit.
source :The New Indian Express , Date 18th Feb 2010

இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய வெகுபல யாழ்ப்பாண வாசிகளும் இந்தியாவின் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். இந்திய அரசாங்கத்தின் மீதும் , தமிழக ஆளுங்கட்சியின் மீதுமே அவர்கள் வெகுவாக குற்றஞ்ச்சாட்டினார்கள். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி அவர்கள் தம்மைத் தண்டித்து விட்டதாக வேதனைப் பட்டார்கள் என்றும் அந்த ஏடு எழுதியிருக்கிறது. 

தமிழ்த்தேசியவாதிகள் கதறியபோதும் , தமிழினம் அழிகிறது என்று ஓலமிட்ட போதும் வாய்மூடி மெளனியாக இருந்த இந்திய அரசினையும் , இந்திய அரசிற்குக் கப்பம் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் குறுநில மன்னனையொத்த தமிழக அரசினையும் , எவ்வாறு எமக்கான அரசாக ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லுங்கள். எந்த அடிப்படையில் நாம் இந்தியர்களாக இருப்பதில் பெருமை கொள்ள முடியும் சொல்லுங்கள்.

தமிழர்களின் மன வேதனையை தீர்க்கத்தவறிய மன்னனை மக்கள் இரசிப்பதிலும் , போற்றுவதிலும் நியாயம் ஏதும் உண்டா சொல்லுங்கள்... அப்படி போற்றுவதிலிருந்து மக்கள் தவறுகின்ற போது மனவேதனையைத் தீர்க்கத் தவறியது மன்னனின் தவறுதானேயொழிய மக்களின் தவறாக முடியுமா?

ராஜிவ்காந்தி என்ற ஒரு உயிருக்காக ஈழத் தமிழர்களை கொன்றொழித்தீர்கள். இந்திராகாந்தியைக் கொன்றொழித்தவனை இன்னமும் சீக்கியர்கள் தேசபக்தனாக போற்றும் போது அமைதியாக இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்ற இளந்தமிழர் இயக்கத்தினரின் நேர்மையான கேள்விக்கு பதில் சொல்வதற்கு துப்பிருக்கிறதா இந்திய காங்கிரஸ் காரர்களிடம்? 

இந்திராகாந்தியைக் கொன்ற பியாந்த் சிங்கை தியாகியாக வருணித்து பொற்கோவிலில் புகைப்படத்தை வைத்து சீக்கியர்கள் வழிபடுவதை ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர். இணைப்பு இதோ இங்கே.!

அதைப் பற்றி கேட்டதற்கு , பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது என்று பஜனை பாடியிருக்கிறார் இந்திய தேசிய வியாதி முத்திப்போனவர்களில் மூத்தவரான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.  ( ஆதாரம் : குமுதம் ரிப்போர்ட்டர் )
பஞ்சாப் என்பது உலகமானால் , அதில் தலையிட மாட்டோம் என்றால் ஏன் இலங்கைக்கு மட்டும் ஆயுதம் கொடுத்து ஈழத்தமிழர்களைக் கொன்றீர்கள் என்று கேட்டால் , ஆயுதமெல்லாம் கொடுக்கவில்லை , சும்மா ரேடார் மட்டுமே கொடுத்தோம் என்றீர்கள் . பிறகு இலங்கை இராணுவச் சாயம் பூசி அனுப்பின இரண்டு போர்க்கப்பல்களின் குட்டு வெளிப்பட்டது. பொன்சேகாவிற்கும் - இராஜபக்சேவும் பிரச்சினை என்றவுடன் கடல் தாண்டிப் போய் பஞ்சாயத்து பண்ணி வைத்தீர்கள்.

இப்படி இந்தியர்களாக நாங்கள் இருப்பதில் ஏகப்பட்ட சிரமங்களை நீங்களே உருவாக்கி விட்டு , தேசப்பற்றுடன் பேசுங்கள் என்றால் எங்கிருந்து வரும் தேசப்பற்று. ? 
அதென்ன சுக்கா , மிளகா - கடையில் போய் கால் கிலோ வாங்கிவர....? இன்னமும் கூட எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான்...
அப்படியாவது இருக்க விடுவார்களா இந்த இந்திய தேசிய வியாதிகள்?

இப்படிக்கு,
இன்னமும் ஒரு இந்தியன். !