Monday, December 05, 2011

அந்நிய முதலீடும்…அழிந்துபோகும் விவசாயமும்!


 அலங்கியம் அருகிருக்கும் வானம் பார்த்த கிணறு இருக்கும் ஒரு சின்ன ஊர் பெருமாவலசு….உழவோட்டி உழவோட்டியே திமில் தேய்ந்த காளைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வேப்பமர நிழலில் சாய்ந்திருந்தார் ராமசாமி…..காலமெல்லாம் உழைத்து உழைத்து தேய்ந்த கால்களில் செருப்புக் கூட போடுவதில்லை அவர்…

மேடென்பதால் ஓட்ட முடியாத மக்காச்சோளத்தட்டு வைத்துக்கட்டிய சைக்கிளை மூச்சிறைக்க தள்ளிக்கொண்டே வந்தார் பழனியப்பன்…..

‘ ஏம் பழனீப்பா, செத்த வெய்யச்சாஞ்சதுக்கப்புறந்தான் மேவெடுக்கறது….உச்சி வெய்யில்ல இப்பிடி கஷ்டப்படாட்டி என்னப்பா? ‘ என்றார் ராமசாமி…

‘ இல்லீங்கப்புச்சி , மேவெறக்கிப்போட்டுட்டு மறுக்கா ஒருக்கா வரோணுமுங்க………ஊட்டுக்கு போயி ஒருவா கஞ்சி குடுச்சுட்டு வந்து தட்டு வெட்டுணும்னா பொழுது சாஞ்சுரும்…’  காரணத்தை விளக்கினார் பழனியப்பன்…

‘ தட்டு நீயா வெட்டற?ஆள் போட்டு வெட்டற பன்னயமல்லய்யா உன்னுது? ‘

‘இதென்னமோ தெரியாத மாரியே கேக்குறீங்கப்புச்சி..இன்னிக்கெல்லாம் ஆளெங்க கெடைக்குது…ஆறுமணியாப்புல வந்தா ரெண்டு மணியப்புல கெள்ம்பிர்றாங்க…இதுல டீக்குடிக்க , சோறுங்கன்ணு ஆளு வச்சி வேல வாங்கறாப்பலயா இருக்கு? ‘

‘அதுஞ்செரித்தான்…இந்த காட்டுக்குள்ள அருகம்புல்லு மம்மேனியா வளர்ந்து கெடக்கே…இந்த செல்வனக்க்கூப்புட்டு அகந்து புடலாம்னு காலைல ஊட்டுக்குப் போனா , ‘ சாமி , நான் வரலீங்க…..அங்க வந்து நாள் பூராம் கஷ்டப்படறதுக்கு  ,குட்ட வேலைக்கு போனா சுளுவா இருக்குமுங்கோன்றான்…

‘இந்தக் குட்ட வேலை ( கிராமப்புற  வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்) வந்தாலும்வந்துச்சி தக்காளி பொறிக்ககூட ஆளுக்கெடைக்கலை….நேத்து இருந்து பொறிச்சி இருவத்தாறு பொட்டி ஆச்சி…போன வாரம் பொட்டி அருவதுக்கு போச்சி……..இந்த வாரம் இருவதுக்கு கூட எடுக்க ஆளில்லை..’

‘ ஆமாம்ப்பா பழனீப்பா , ஆனா கடைல எல்லாம் கிலோ பத்து பதினைஞ்சுக்குத்தான் விக்குறான்….நம்மகிட்டதான் அடிமாட்டு விலைக்கு வாங்கறான் இந்த வேவாரி…”
‘அது நெசந்தேன் அப்புச்சி…என்றகிட்டயே இருவதுக்கு பொட்டி வாங்கி அப்புடியே அம்பதுக்கு கைமாத்தறான் வேவாரி……புரோக்கருக்கு கமிசன் வேற…….கடசீலே கைல மிஞ்சுறது வெறும் கூலிக்காசு கூட இல்லை…இந்த வெவசாயம் பாக்குறதுக்கு வெறெதாச்சும் பண்ணலாம் போல’.

இது கற்பனை உரையாடல்தான்.. கற்பனை பழனியப்பனும் , ராமசாமியும்தான்…. ஆனால் , இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் அனேக இடங்களில் நிகழ்பவையே…விவசாயியிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கும் இடைத்தரகர்களின் அட்டூழியம் என்பது காலங்காலமாகவே நிகழ்கிறது……கடைநிலை சில்லறை வியாபாரிகளுக்கோ அந்த லாபத்தின் பெரும்பங்கு கிடைப்பதில்லை…இடையிலிருக்கும் பணமுதலைகளான இடைத்தரகர்களுக்கே பெரும்பாலான லாபத்தின் பங்கு செல்கிறது….

நாட்பட்ட நாட்பட்ட இந்திய விவசாயம் லாபமற்ற தொழிலாய் தவிக்கிறது……இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இந்திய விவசாயம் அழிந்துபோகும்…இந்திய விவசாயத்திறக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்துப்படவேண்டியது அவசியம்…இல்லாவிடில் , நாளை உணவினை இறக்குமதி செய்யும் அவலநிலைக்கு ஆளாவோம்…
.
இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் யார்? இத்தகைய இடைத்தரகர்கள் தான்……இவர்கள் சில்லறை வணிகர்கள்  முடங்குவார்கள் என்று ஒன்றும் கவலைப்படவில்லை….தமது பிழைப்பு போய்விடுமோ என்றே கவலைப்படுகிறார்கள்…
விவசாயிகளே நேரடியாக தமது பொருட்களை விற்றுக்கொள்ளும் நிலையினை என்றுமே இவர்கள் விரும்பப்போவதில்லை….சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் வடிகட்டிய பொய்…..வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன…இதுபோல சில்லறை வணிகங்களும் இருக்கின்றன….

எவ்வித படிநிலையுமின்றி , கண்காணிப்பும் இன்றி இந்த இடைத்தரகர்கள் போடும் ஆட்டத்தினை ஒரு முறைப்படுத்த உதவும் அந்நிய முதலீடுகளை வரவேற்பதே சமுகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்………..அதன் மூலம் இடைத்தரகர்களின் கொள்ளை குறைக்கப்படும்.!

ஆக ,  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகம் வேண்டாம்..

இந்திய பொருட்களை அந்நிய தேசத்தில் விற்பதுவும் , இந்திய இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை தருவதும் , வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர்களும் நமக்குத்தேவையெனில் , அந்நிய முதலீடுகளை எதிர்க்கும் நமது கொள்கை முற்றிலும் நியாயமற்றது…

ஒட்டுமொத்த முதலாளித்துவ கொள்கையினை எதிர்ப்புக்கொள்கையை எதிர்ப்பதில் நியாயம் உண்டு…அதற்கான காரணங்களும்  நிறையவே உண்டு...ஆனால் , எதிர்ப்பாளர்கள்  முன்வைக்கும் மாற்று என்ன? சீனா போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சமூகமா? இல்லை வெனிசூலா போன்ற கம்யூனிச முதலாளித்துவமா? இல்லை க்யூபா போன்ற செயலிழந்துபோன , மக்களுக்குப் பயனற்ற கம்யூனிசமா?

தெளிந்து எதிர்த்தால் , தெளிவான பார்வையிருப்பின் அப்போது வேண்டுமானால் முதலாளித்துவத்தை எதிர்க்கலாம்…அதுவரை நீங்கள் விரும்பினும் விரும்பாவிடினும் இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான எதிர்ப்புகள் தேவையற்றது…நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது.!!

Monday, November 14, 2011

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தெளிவான பார்வை!

நாம் நிறைய நிறைய ஈழ இணையப் பத்திரிக்கைகளை படிக்கிறோம்...சில கட்டுரையாளர்களின் கட்டுரைகளே எம்மைக் கவர்கின்றன......பல கட்டுரைகள் மிகவும் அமெச்சூர் தனமாக இருக்கின்றன....ஒரு இணைய பத்திரிக்கைகளே கூட மிகவும் அமெச்சூர் தனமாக , அடிப்படைகளேதுமின்றி இருக்கையில் ' சில நாள் முன்பு படித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்டுரை மிகவும் தெளிவான பார்வையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.....

உங்கள் பார்வைக்கு...இதுபோன்ற சிந்தனையாளர்களே தமிழர்களுக்கு உடனடித் தேவை...உணர்ச்சிக்கொந்தளிப்பில் எதையோ பேசி மக்களைக் குழப்பும் வைகோவோ , சீமானோ அல்ல..

பகுதி 1 : 

இன்றைய சர்வதேச அரசியல்:


தமிழ் மக்களுக்கு சர்வதேச அங்கீகாரம் எந்தளவுக்குத் தேவையானதோ அந்தளவுக்கு இலங்கையில் நகர்வுகளைச் செய்ய முயலும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தேவையாகவுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: கட்டுரை

தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் மிகப் பலமான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்ற கவலை இலங்கைத்தீவிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்கின்றது. சர்வதேச சமூகம் தனது பூகோள அரசியல் நலன்களை பேணுவதற்காக புலிகளை அழிக்க வேண்டும் என்ற தேவை அதற்கு இருந்த நிலையில், இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்தின் துணைகொண்டு அழிப்பதற்கான சந்தர்ப்பமானது இலங்கை அரசாங்கத்துக்குக் கிட்டியது. இதனையே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டது. இச் சம்பவங்களை ஏன் தற்போது நினைவுகொள்கின்றோமெனின் அன்று எவ்வாறு தமிழ் மக்களது போராட்டத்தை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்கள் கனிந்திருந்ததோ, அதேபோன்று இன்றைய பூகோள அரசியல் சூழலானது ஒருவகையில் தமிழர்களுக்கு வாய்ப்பான அரசியல் சூழலாக கனிந்துள்ளது என்பதனை எமது மக்களுக்கு வெளிப்படுத்தும், அதன் முக்கியத்துவத்தினை தெரியப்படுத்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்த வகையில் நோக்கினால், சர்வதேசம் பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறிக் கொண்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமைக்கான காரணம் பூகோள அரசியல் இலாப நட்டக்கணக்கில் அன்றைய சூழ்நிலையில் அதுவே தமது நலன்களுக்கு உகந்தது என அவர்கள் கணக்கிட்டமையே ஆகும். அதுவே போராட்டம் அழிக்கப்படக் காரணமாயிற்று. புலிகள் அமைப்பானது தேர்தல் அரசியலில் ஈடுபடாததன் காரணமாகவும் வேறு தரப்புக்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமையினாலும் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது ஜனநாயகத்திற்கு மாறானது என சர்வதேசம் வியாக்கியானப்படுத்திய அதேவேளை மக்கள் இப் போராட்டத்தின் பின்னால் நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தினையும் சர்வதேசம் நிராகரித்தே தனது முடிவுகளை எடுத்திருந்தது.

இதனை வேறுவிதமாக கூறுவதாயின்இ நாங்கள் தனித்தேசம் எனவும் எங்களுக்கு என்று தனித்துவமான இறைமை இருக்கின்றது எனவும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான விடயங்களுக்குப் பின் மக்கள் உள்ளனர் என்பதற்கான நியாயங்களை புலிகள் முன்வைத்தபோது, விடுதலைப் புலிகள் நேரடியாகத் தேர்தல்களில் பங்கெடுக்காத அமைப்பு என்பதனை சாட்டாகக் கூறி அவர்களது நியாயங்களை சர்வதேசம் நிராகரித்து விட்டது. இந்த இடத்தில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் போராட்டத்தின் கொள்கையினை சர்வதேசம் நிராகரிக்கவில்லை. எனினும் போராட்டத்தின் இலக்காக முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறியே போராட்டத்தினை நசுக்க சர்வதேசம் துணை நின்றது.

அடிப்படையில் சர்வதேச நியமங்களின் படி கருத்துச் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில் ஓர் அமைப்பின் கொள்கையினை தவறென வெளியுலகு ஓரங்கட்டிவிட முடியாது. எனினும் ஓரு அமைப்பின் கொள்கைக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறி அமைப்பின் செயற்பாடுகளை சர்வதேசம் கொச்சைப்படுத்தலாம். இதுவே எங்களது போராட்டத்திற்கும் நடந்தது. இது இவ்வாறிருக்க இன்றைய நிலையில் பல கேள்விகள் எம்முன் உள்ளன. அதில்இ மிகப் பலமாக இருந்த போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இப்போராட்டம் தாங்கி நின்ற கொள்கையினை தற்போதைய ஜனநாயக அரசியலுக்குள்ளாக நாம் முன்கொண்டுசெல்ல முடியுமா என்ற நம்பின்கையீனம் பலதரப்புக்களிடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே இது பற்றி கவனத்தினைச் செலுத்தவேண்டியுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் நாம் தெளிவுறவேண்டிய விடயங்கள் உள்ளன. அதாவது ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் அரசியலானது முழுக்க முழுக்க ஜனநாயக அரசியலாகவே இருக்கப் போகின்றது. எனவே தேர்தல் வாயிலாக கொள்கைக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பொன்றை பயங்கரவாதம் எனக்கூறி சர்வதேசம் நிராகரிக்கமுடியாது. எனவேதான் சொல்லிலும் செயலிலும் தமிழ்த்தேசியக் கொள்கையினை முன்வைக்கின்ற ஒரு தரப்பிற்கு மக்கள் முழுமையாக வாக்களித்தால் அந்தக் கொள்கை எதுவாக இருந்தாலும் எந்தவொரு தரப்பும் அதனை கொச்சைப்படுத்த முடியாது. காரணம் தேர்தல் வழியாக மக்கள் அங்கீகாரம் இருக்கின்றது குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதாரமாக இருக்கின்றது என்பதனாலாகும்.

போர் நடைபெற்ற போது நிலவிய அரசியல் சூழல்களைக் காட்டிலும் தமிழ்த் தரப்பு நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்தத் தக்க சூழ்நிலை இன்று உலக அரங்கில் காணப்படுகின்றது. எனவே எம் முன் உள்ள சர்வதேச அரசியல் சூழலை என்னவென நாம் விளங்கிக்கொண்டு பார்ப்போமானால் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழர் தரப்பினை பயங்கரவாதிகள் எனவும் சிங்களத் தரப்பினரை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுபவர்கள் எனவும் சர்வதேசம் காட்டிக்கொண்டது. ஆனால்இ இன்றைய சூழலில் நிலைமைகள் மாற்றமடைந்து தமிழ்த் தரப்பானது பாதிக்கப்பட்ட தரப்பாகவும் சிங்களத்தரப்பானது போர்க்குற்றங்களை இழைத்து தமிழர்களின் உரிமைகளை மறுத்துச் செயற்படுகின்ற தரப்பாகவும் சர்வதேசம் ஆராயத்தொடங்கியுள்ளது.

இப்படியாக சர்வதேசத்தில் ஓர் அரசியற் சூழல் மாற்றம் ஏற்பட்டது தமிழ்த் தரப்பிற்கு முதலாவது சாதகமான நிலைமையாகும். அடுத்து இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்கு இ பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நகர்வுகளை நாம் கூர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. இதேவேளை இந்த மூன்று தரப்பு நாடுகளினதும் நகர்வுகளையும் நாம் அவதானிக்கையில் அந் நாடுகள் அவர்கள் சார்ந்த அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவேயுள்ளன. இவ்வாறாக தமது நலன்களை சாதித்துக்கொள்வதில் மூன்று தரப்பு சர்வதேச நாடுகளிடையேயும் போட்டியுள்ள நிலையில் சில விடயங்களில் இம் மூன்று தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இவற்றை சீர்தூக்கிப் பார்க்கையில் போட்டித் தன்மைக்கு உரிய விடயங்களே அதிகமாகவுள்ளன. இப் போட்டியில் ஒவ்வொரு தரப்பும் தமது நலன்களை இலக்காகக் கொண்டே இலங்கை அரசினை வழிநடத்துவதில் கண்ணும் கருத்துமாகவுள்ளன.

அதேவேளை இம் மூன்று சர்வதேசத் தரப்புக்களும் இலங்கையை சரியாகக் கையாள்வதற்கு பல்வேறு உபாயங்களையும் கருவிகளையும் கையாள்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஒவ்வொரு நாடும் கையாளும் கருவிகளை நோக்குகையில் அதில் வர்த்தகம் மற்றும் நிதி மற்றும் நிதி சாராத உதவிகளை உதாரணப்படுத்திக் கூறமுடியும். எனினும் இவ் இடத்தில் தமது நலன்களை சிறந்த முறையில் நிறைவேற்றிக்கொள்வதில் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டும் நாடுகள் மனித உரிமைகள்இ சட்டத்தின் ஆட்சிஇ ஊடகச் சுதந்திரம்இ ஊழல் அற்ற நிர்வாகம் என்பற்றை ஏற்படுத்துதல் என்ற நீண்ட பட்டியலுக்கு உரிய விடயங்களையே அடுக்கிவிடலாம். இதே போன்று இலங்கை விவகாரங்களில் அக்கறை செலுத்தும் நாடுகள் இனப்பிரச்சினை என்பதனையும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக தாம் முன்வைக்கும் முக்கியமான விடயமாக பயன்படுத்துகின்றன. மேற்கூறப்பட்ட பட்டியலில் இருக்கத்தக்க விடயங்களில் இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்தும் மேற்குலகானது இலங்கை மீது மிகுந்த அதிருப்தியுடனேயே தனது அரசியல் நகர்வினை முன்னெடுத்து வருகின்றது.

கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டது போன்றுஇ இனப்பிரச்சினைத் தீர்வை மிக முக்கிய விடயமாக இலங்கையில் தலையீட்டைக்கொண்டுள்ள நாடுகள் முன்வைக்கையில்இ இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி சகல தரப்புக்களும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு என்று வரும்போது தமிழ்த் தரப்புக்களுக்கு இதில் ஓர் முக்கிய வகிபாகம் கிடைக்கின்றது. மேலும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பது தலையீடுகளுக்கு உரிய நாடுகளின் விடயத்தில் நின்று பார்க்கையில் எவ்வாறாகப் பெறுமானம் உடையது என்பது கூட மதிப்பிடத்தக்கது. இலங்கை விவகாரத்தில் தலையிடும் ஒரு சர்வதேசதரப்பு நாடுகள் எதாவது ஒருவகையில் தமது நலன்களை நோக்காகக் கொண்டேனும் சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றினை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த விளைவதை சர்வதேச அரங்கில் நாம் காணமுடிகின்றது. இப்படியாக சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பானது இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து நெருக்கடிகளை ஏற்படுத்த முயல்கையில், அந்த சர்வதேச தரப்புக்குப் போட்டியாக இலங்கையில் தலையிட விரும்பும் சர்வதேச சமூகத்தின் மறு தரப்பொன்று, நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் பாதிப்புக்களை இலகுவாக்கி நெருக்கடிக்குள் தள்ளிய விடயத்தினை தாம் நிவர்த்தி செய்துவிடலாம்.

குறிப்பாக பொருளாதார ரீதியாக ஒரு தரப்பு நாடுகள் கட்டுப்பாட்டை இலங்கை மீது விதிக்க முற்பட்டால், அதிலிருந்து மற்றொரு நாடு(சர்வதேசதரப்பு) தனது இலங்கை மீதான தலையீட்டுப் போட்டிக்காக பொருளாதார உதவிகளை வழங்கி காப்பாற்றி விடமுடியும். ஆனால் இலங்கை விவகாரங்கள் மீது அக்கறை கொண்டுள்ள சர்வதேச சமூகத்தின் ஏதாவதொரு தரப்பு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இனப்பிரச்சினை என்ற விடயத்தினை முன்வைக்கின்ற நிலை ஏற்பட்டால் போட்டியடிப்படையில் தலையிடுகின்ற நாடுகள் இவ்விடயத்தை பதில் செயற்பாடு ஒன்றின் மூலம் நிவர்திதிக்கமுடியாத விடயமாகவே அமையும். ஒரு தரப்பினால் இனப்பிரச்சினை தீர்வு விடயம் அங்கீகரிக்கப்படுமாயின் மற்றத்தரப்பினால் அதனைத் தமது உதவிகளை வழங்கித் தகர்க்க முடியாது.

எனவே தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயம் இலங்கையில் விவகாரத்தில் அக்கறை செலுத்தும் நாடுகள், அதனை தமக்குரிய சிறந்த வாய்ப்பாக பயன்படுத்த முயல்கின்ற செயற்பாடானது தமிழ் மக்களுக்கு தமது உரிமைகளை அடைந்து கொள்ளுவதற்கான மிகச் சிறந்த சந்தற்பமாக உருவாகி வருகின்றது. எனினும் தமிழ் தரப்பு தமக்கென உறுதியான அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்காவிடின் இனப்பிரச்சினை என்கின்ற விடயத்தை கையில் எடுக்க விரும்பும் ஒரு சர்வதேசத்தரப்பு தமது தேவைக்கு ஏற்ப குறைந்தபட்ச தீர்வை வலியுறுத்த முற்பட்டால் அதனை ஆதரிக்க வேண்டிய நிலை இன்னுமொரு சர்வதேச தரப்புக்கு ஏற்படுமாயின் தமிழ் தரப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகும். அதனால் தான் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி உறுதியாக இருக்க வேண்டும் என நாம் வற்புறுத்துவதற்கான காரணமாகும்.

தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கும் முக்கியத்துவமுடைய தரப்பினராக இன்று உள்ளனர். இவ்வாறான முக்கியத்துவத்திற்குரிய தமிழ்; மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் கிட்டியுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே கூட்;டமைப்பின் அமெரிக்க விஜயம் கூட அமைந்திருந்தது.

தமிழர்களுக்கு எவ்வகையில் சர்வதேச அங்கீகாரம் முக்கியத்துவமுடையதாக உள்ளதோ அதற்குச் சமமான அளவு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத் தரப்புக்களுக்கும் தமிழர் தரப்பு தவிர்க்க முடியாத தேவையாகவுள்ளது. இவ்வாறான மதிப்பீடுகளை சீர்தூக்கிப் பார்க்கையில் தமிழ் மக்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அரசியல் ரீதியாக மிகப் பலமான நிலையில் உள்ளோம் என்பதனை நாம் அனைவரும் மனதில் கொண்டு தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி எமது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். எமது மக்கள் நம்பிக்கையிழந்து துவண்டுவிட வேண்டியதில்லை.

நன்றி:கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 


சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம்,.....

....எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது, நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம். நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போகவேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
இக் கட்டுரையில் அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை எட்டிவிடலாம் என சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருவதனால் அதிகாரப் பகிர்வானது எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றி பார்வையைச் செலுத்துகின்றோம்.

சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் போசி தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியில் இருந்து சமஷ்டி ஆட்சியை நோக்கிய ஓர் தீர்வினை அடையலாம் என்ற ஓர் நம்பிக்கை ஒருசிலரிடம் உள்ளதாகத் தெரிகின்றது.
ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறானதோர் தீர்வினை அடையத்தக்கதாக அரசியலமைப்பினை மாற்றியமைக்க முடியுமா எனவும் அதற்கான மனநிலை சிங்கள பௌத்தர்களிடம் உள்ளதா எனவும் கேள்வியெழுகின்றது.

தீர்வு பற்றி நாம் கவனம் செலுத்துகையில் எமது முரண்பாட்டுக்கு உரிய தரப்பான சிங்களத் தரப்புக்களுடன் பேசியே ஓர் முடிவுக்கு வரமுடியும். இப்படியான ஓர் சூழ்நிலையில் தான் சிங்களத் தரப்பின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ்த் தரப்பிற்கு உள்ளது.

முரண்பாட்டில் மற்றொரு தரப்பாக உள்ள சிங்களத் தரப்பினை நாம் நன்கு புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் நாம் எமது நகர்வுகளை உரியவகையில் மேற்கொள்ள முடியும்.

சிங்களத் தரப்புக்களை நாம் விளங்கிக் கொள்ளும் அதேவேளை எம்மவர்களிடத்தில் உள்ள சில கருத்துக்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கும் கூட தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் பேசி அவர்களுக்கு எமது பிரச்சினைகளைத் தெளிவு படுத்த முடியும் என முனைகின்றனர்.

இதன்வாயிலாக சிங்கள பௌத்த அரசாக இருக்கின்ற இலங்கை அரசை மாற்றியமைத்து ஓர் தீர்வுக்கு வரமுடியும் எனவும் நம்புகின்றனர்.
இப்படியாக நிலைமைகள் தொடர்கையில் சிங்கள தேசம் எது என்பதை விளங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அல்லது பாதையை வகுத்துக்கொள்வது பற்றி வரலாற்று ரீதியான விடயங்களை முன்னிறுத்தி நாம் இக் கட்டுரையில் அவதானத்தினைச் செலுத்த வேண்டியுள்ளது.

சோல்பரி அரசியலமைப்பு
இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய போது தீவில் இருக்கின்ற பல்வேறு இனக்குழுக்களிடத்திலும் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தவகையில் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தீவில் இடமளிக்கும் வகையில் இலங்கை அரசு அமைய வேண்டும் என்ற நோக்குடன் சோல்பரி யாப்பானது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இனங்களிடையே பன்மைவாதம் (pluralism) ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் சோல்பரி அரசியலமைப்பில் 29 (2) சரத்தானது ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இது இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு ஆணிவேர் போன்றாக அமையும் என்றும் கூறப்பட்டது.

இது நாட்டில் உள்ள ஒரு மக்கள் குழுவுக்கு மேம்பட்ட உரித்துக்கள் வழங்கப்படுவதை தடைசெய்கிறது. ஒரு இனம் சமயம் மொழி சாதி பாதிக்கப்படாத வகையில் சட்டங்கள் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றது.

இதனை மேலுமொரு வகையில் கூறுவதாயின் பல தேசங்கள் கொண்ட இலங்கைத் தீவானது தேசிய இனங்களிடையே ஒரு புரிந்துணர்வை கொண்ட நாடாக உருவாக்குவதற்கு இந்த 29(2) சரத்து மிக முக்கியமானதாகுமெனவும் இனங்கிடையே சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கானதெனவும் நம்பினார்கள்.
இந்த சரத்தானது இனங்களுக்கிடையே சமத்துவத்தினை பேணும் ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் வரையிலேயே ஒரு நாட்டிற்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழமுடியும் எனக் கருதப்பட்டது.

இவ்வாறாக முக்கியத்துவமுடைய இந்தச் சரத்து மீறப்படுமானால் இலங்கை அரசின் அத்திபாரமே சிதறத்தக்கதாக அமைந்திருந்த போதும் இச் சரத்தினை மீறும் வகையில் சிங்களத் தரப்புக்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

அரசியலமைப்பில் இவ் ஏற்பாடுகள் இருக்கத்தக்கதாகவே மீறல்கள் பலசந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டம் அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை பறித்த நிகழ்வு, 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கருமமொழிச்சட்டம் எனக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் போன்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால் உண்மையில் அரசை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கையினை சிங்களத்தரப்பு ஆரம்பித்துள்ளது என்பதையேயாகும்.

இந்த இடத்தில் சிங்களத் தரப்புக்களிடத்தில் சிங்கள பௌத்த மனநிலை என்பது காணப்படும் வரை சோல்பரி யாப்பில் கூறப்பட்ட 29(2) போன்ற சமத்துவத்திற்கான எவ்வாறான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லை என்பதனையும் தமிழர் தரப்பு படிப்பினை ரீதியாக கண்டுகொண்டுவிட்டது. கட்டுரையில் மேற் சொன்ன உதாரணங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.

முதலாம் குடியரசு அரசியலமைப்பு-1972
அடுத்து 1972 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் நோக்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறப்பட்டபோதும் அது இலங்கை அரசினை சிங்கள பௌத்த மயப்படுத்துவதனை முழுமைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
இந்தவகையில் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்பது உத்தியோகபூர்வமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. ஓற்றையாட்சி என்று குறிப்பிட்டதன் மூலம் அரசின் ஆட்சி அதிகாரமானது ஒருமையத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றது.


இவ்வாறாக ஒருமையத்தினுள் ஆட்சி அதிகாரம் அமைகையில் பல்லினங்கள் வாழ்கின்ற தேர்தல் முறை ஜனநாயகத்தில் 75 சதவீதமாக வாழ்கின்ற சிங்களவர்கள் தான் முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள்.

அதுவே எமது விடயத்தில் நடந்தது. இலங்கை அரசு ஒரு சிங்கள அரசாகச் செயற்படுவதற்கான அத்திபாரமே மீண்டும் மீண்டும் சகலவகையிலும் போடப்பட்டது என்பதனை நாம் கண்டுகொள்ள முடிகின்றது.

இதேவேளை சோல்பரி அரசியலமைப்பில் காணப்பட்ட 29(2) ஆவது சரத்து முதலாவது குடியரசு யாப்பில் இருந்து அகற்றப்பட்ட போதும் அதற்கு ஈடான எந்தவொரு சரத்தும் மீண்டும் அவ்யாப்பில் உள்ளடக்கப்பட இல்லை என்பது கூட அவதானிக்கத்தக்கது.
மேலதிகமாக பௌத்த சமயத்திற்கு நடைமுறையிலும் யாப்பு ரீதியிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்களம் அரச கரும மொழி என்பதை அரசியலமைப்பில் கொண்டுவந்தனர். இது சாதாரண சட்டமாக இருந்த ஓர் விடயத்திற்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்ட நிலைமையாகும்.

இவ்வாறாக 1972 ஆம் ஆண்டு யாப்பு வழியாக இலங்கைத் தீவு முழுவதும் சிங்களத் தேசமாக மாற்றப்பட்டு அரசானது சிங்கள பௌத்த அரசாக மாற்றியமைக்கப்பட்டது. அடிப்படையில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே சிறிலங்கா அரசை ஆள்பவர்கள் என்ற நிலைமையும் 1972 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக உருவாக்கப்பட்டது.


இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு-1978
சிங்கள தேசத்தால் கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டு யாப்பின் வாயிலாகவும் தமிழ்தரப்புக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. அன்றைய காலத்திற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பலமான தலைமைத்துவத்திற்காக நிறைவேற்று அதிகாரத்தினை ஏற்படுத்துகின்றோம் எனக்கூறினர்.
இக்கூற்றை சாட்டாகக் கூறிக்கொண்டு முதலாவது குடியரசு யாப்பினைப் போன்றே இவ் இரண்டாம் குடியரசு யாப்பிலும் சிங்கள பௌத்த அரசிற்கான மாற்றங்களையே நிரந்தரமாகப் புகுத்தினர்.


இவ்வாறாக நடைபெற்ற விடயங்களை ஒற்றை ஆட்சியினைப் பிரகடனப்படுத்துவதற்கானது என்று மட்டும் நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதையும் நோக்காக் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் யாப்பில் இவ்விடயங்கள் தொடர்பான மாற்றங்கள் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஊடாகவும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே கொண்டுவரப்படமுடியும் எனக்கூறப்பட்டு பௌத்த சிங்களக் கட்டமைப்பு நிரந்தரமாக்கப்பட்டதும் பாதுகாக்கப்பட்டதும் கண்டுகொள்ளப்படவேண்டிய உண்மைகளாகும்.

மேலும் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தின் வாயிலாக இந்த நிலைமைகளை எதிர்த்து மாற்றுத்திட்டங்களை முன்வைக்கத்தக்க சூழலும் இல்லாமல் செய்யப்பட்டது.

இவ்வாறாக பிரித்தானியர் ஆட்சிக்குப் பின்பான கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நடந்தேறிய விடயங்கள்; சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களையே தீவிரப்படுத்தி முன்னெடுத்துவருகின்றனர் என்பதையே காட்டுகின்றது.

இலங்கை அரசினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றதாயின் அது மேலும் மேலும் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டமாகவேயுள்ளது. இதனை நாம் கடந்த கால அனுபவங்கள் ஊடு தெளிவாகக் கண்டுள்ளோம்.

இப்படியானதோர் அபாயமிக்க சூழலில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இலங்கை அரசு தன்னைத்தானே மாற்றியமைக்கும் என யாரும் நினைக்கின்றார்கள் ஆயின் அது நடைமுறையில் இலங்கையில் இருக்கின்ற பௌத்த சிங்கள மயமாக்கல் என்ற போக்கிற்கு நேர் எதிரான பாதையாகவே அமைகின்றது.
இந்த இடத்தில் எழுப்பப்படும் கேள்வி யாதெனில் இலங்கை அரசு பயணிக்கின்ற பாதைக்கு நேர் எதிரான விடயமாகவுள்ள அதிகாரப் பகிர்வுக்கு சாத்தியம் உள்ளதா என்பதாகும். இந்தக் கேள்விக்கான பதிலை சிங்கள தேசம் கடந்த அண்மைக்காலமாக நடந்துகொண்ட நடத்தையினை வைத்து நாம் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாகவுள்ளது.

அதாவது புலிகள் இருக்கும் வரையில் அவர்களுடன் சமரசத்திற்கு வந்தால் சிங்கள பௌத்த தேசம் என்ற இலக்கினை இழக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக சமரசம் என்பதைத் தவிர்த்து போரை அரசு நடத்தியது.

இவ்வாறாக சிங்கள பௌத்தம் என்ற பெயரை நிலை நாட்டுவதற்கான போரை அரசு நடத்தி இனப்படுகொலையாளர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதற்கு முகங்கொடுத்துள்ளது. உலக அரங்கில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் மிக வெறுக்கத்தக்க கீழ் நிலைச் செயலாகப் பார்க்கப்படுகின்ற போது சிங்கள பௌத்தம் என்பதை நிலைநிறுத்துவதற்காக எதற்கும் முகங்கொடுக்கத்தக்க நிலையில் தான் இலங்கை அரசு உள்ளது.

இதிலிருந்து எவ்வளவு தூரம் சிங்கள பௌத்தம் என்கின்ற கொள்கையில் ஆட்சியாளர் உறுதியாக உள்ளனர் என்பது எமக்குத் தெளிவாகிறது.

இப்படியான அவதானிப்புக்களிலும் அனுபவங்களிலும் தமிழர் தரப்பு நின்றுகொண்டு யதார்த்தத்தில் இலங்கை அரசானது தானாகவே தன்னை மாற்றியமைத்து ஓர் அதிகாரப் பகிர்வினை வழங்கும் என்று கருதினால் பகல் கனவாகவே அமையும்.

இவ்வாறாக நினைப்பவர்கள் அதனை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற ஓர் விடயமாக மட்டும் பார்க்கமுடியாது. மாறாக அது தமிழினத்தையே மிக மோசமாக ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தினை அணுகுகின்ற போது அதிகாரப்பகிர்வு என்ற அரசியல் பாதை நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.

இவ்விடத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி அதிக கரிசனை செலுத்தி பாடுபட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் கூட 1972 ஆம் ஆண்டிலேயே அதிகாரப் பகிர்வு வாயிலாக இனநெருக்கடிக்குத் தீர்வு பெறுவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து செயலாற்றியமை நோக்கத்தக்கது.

நன்றி : உயர்வு.காம் , தமிழ்வின் மற்றும் உயர்திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.  

Wednesday, November 02, 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்..!!

தமிழகத்தை ஆள்பவர்கள் அறிவுசார் சமூகத்தை அறவே விரும்பவில்லை என்பது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்விற்கு அளவேதுமில்லையோ என்ற வேதனை தான் மிஞ்சுகிறது... மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் செலவிடும் நேரத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக சிறிதேனும் செலவிடக்கூடாதோ என்ற எண்ணமே எஞ்சுகிறது!!!

சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அறிவு சார் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படு என்ற அறிவிப்பு நமது நெஞ்சில் வந்து நெருப்பாய் மோதுகிறது...

முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை என்கிறார்கள்....

இதோ ஒரு உதாரண பின்னூட்டம்...

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது!!

என்ன ஒரு கொடூரமான கண்ணூட்டம்...


இந்த வாசகத்தை படிக்கும் போதே நரகலைத்தின்றதோர் உணர்வு வருகிறது...இவர்களின் அரசியல் ஜால்ராவிற்காக உலகளாவிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையையே மாற்றத்தலைப்படுகிறார்கள் இவர்கள்....

அதே பக்கத்தில் வந்திருந்த அறிவுசார் பின்னூட்டமொன்றும் உங்கள் பார்வைக்கு.!!!

This is purely unethical and against education. This place is opt for library because Anna University and IIT are located near to Library. If the government is really interested to provide medical care means they can appoint doctors and worker in government hospitals instead of doing this type of conversions. This is purely actions against DMK party not for the benifit of peoples. All student communities and educationalist like this library. ADMK goverment may avoid this typed of actions in future. I too vote ADMK party for the last election but disappointed. Kindly think for the people not againt DMK.

யாழ்ப்பாணத்தில் ஆயிரமாரயிரம் புத்தகங்களை அழித்ததாலேயே விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்த தமிழர்களின் உணர்வு எங்கே போயிற்று..

என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழ் மக்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களோ அடியேன் நான் அறியேன்..

தமிழகம் , முட்டாள்களின் தேசமாக மாறிக்கொண்டே வருவதில் மெத்த வருத்தம்....தமிழினம் மெல்ல இனிச்சாகும்....அதை வேடிக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!!!

(பின்னூட்டங்களை அனுமதியில்லாமல் எடுத்தாண்டதற்கு உரியவர்கள் மன்னிக்க!!)

Saturday, October 22, 2011

ஆனந்தவிகடனின் அல்ப அலப்பறை!!


அய்யாமாரே , அம்மாமாரே...

சவுக்கியமா? ஆனந்த விகடனின் அல்ப அலப்பறை பற்றிய இந்தப்பதிவு நகைச்சுவைக்காக இடப்பட்டத்தல்ல...சிந்திப்பதற்காக இடப்பட்டது....

நாம் மட்டுமல்ல , அப்பத்திரிக்கையும் தான்....

வெறும் சினிமாவை வச்சி மட்டுமே கல்லா கட்டுவது ஆனந்தவிகடனும் , குமுதமும் , குங்குமமும் என்பது தெரிந்த செய்திதான்..

இதுல பாருங்க சார் . தனியா சினிமா ஸ்பெஷல் போடறாங்களாம்..!



முன்னாள் குத்தாட்ட நடிகை இந்நாள் முதல்வர்.......முன்னாள் பைட் ஏக்டர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்...இதையெல்லாம் பாத்துமாடா பத்திரிக்கைகள் திருந்த மாட்டேங்குது???? தமிழகத்தின் இழிவுக்கு காரணம் சினிமா..அதை விட்டொழியுங்கள் மக்களே.!!


Tuesday, October 04, 2011

நாங்கள் வெல்வோம்!

பொய்களாலும் , புரட்டுக்களாலும் மக்களின் மனதில் அம்மா ( யாருக்கு? ) வைப் பற்றி எழுதிய வார்த்தைகள் பொய்யாய்ப் போயின...தினமலர் தினமணி போன்ற அவா பத்திரிக்கைகள் மின்வெட்டு பற்றியோ , சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு பற்றியோ பேச முடியாமல் எதையோ தின்ற எதுவோ போன்று பேச முடியாமல் தவிக்கின்றன. மக்களை முட்டாளாக்கி ஓட்டுக்களை வேட்டையாடிய புரட்டுக்கட்சிகள் இன்று நெல்லிக்காய் மூட்டை போல சிதறிப்போயின.

சமச்சீர்க் கல்விக்குச் சமாதி....தலைமைச்செயலகக் கட்டிடம் வீணடிப்பு...கலைஞர் காப்பீட்டுத்திட்டம் காவு.........குடிசை விட்டை கான்கிரிட் வீடாக மாற்றும் திட்டம் அம்பேல்.....இப்படி அரிய சாதனைகளால் ஐந்து மாதங்களிலேயே அதிமுக ஆட்சி மக்களுக்கு கசந்து போனது......

பொடிப்பொடியாக கலைகிறது ஸ்பெக்டரம் மேகம்....எப்படி எதை எங்கே நடக்கவே நடக்காத ஒரு ஊழலை நிருபிப்பது என்று சிபிஐ தவிக்கிறது....

வெளிமாநிலங்களிலிருந்தும் , தனியாரிடமிருந்தும் மினசாரத்தை கழக ஆட்சி வாங்கியபோது , வெடித்த ஜெயலலிதா இன்று அதே திசையில் செல்கிறார்..........இது என்ன அநியாயம்? 2012 ல் மின்சார தட்டுப்பாடு நீங்குமாம்....எப்படி? திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அப்போதுதான் பலனுக்கு வரும்...அதை அதிமுக அறுவடை செய்யும்...!!!

மக்கள் விழித்துக்கொள்வார்கள்... தன்னிகரற்ற தொண்டர் பலம் கொண்ட திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்......

நாங்கள் வெல்வோம்...........தேர்தல் பற்றியதல்ல இந்த அறிவிப்பு...மக்கள் மனங்களை கூடிய விரைவில் நாங்கள் வெல்வோம்!!!!

திமுக மீதான பொய்யான அவதூறுகள் நீங்கும் காலம் வரும்...

காத்திருப்போம்!!!!!!! கதைமுடிப்போம்!!!!


Thursday, August 25, 2011

அதிமுக ஆட்சியின் முதல் நூறு நாட்கள்!

இந்நாட்டின் மன்னர்களாகிய மக்களும் ,
சனநாயகத் தூண்களாகிய தின, வார, மாதப் பத்திரிக்கைகளும் ,
ஊழல், அராஜக , குடும்ப ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியாளர்களும்,
அரசியலில் சினிமாவா? அரசியல்வாதிகள் சினிமா எடுப்பதா என்று அன்றாடம் அராஜகத்திற்கெதிராக பொங்கியெழுந்த புது இளைஞர்களும்
வேண்டி விரும்பி , தாழ்மையுடன் கொண்டுவந்த அதிமுக ஆட்சிக்கு ஆயுசு நூறு நாள் ஆகிறது.!!

இதுவரை ஊழலே செய்திருக்காத ' அம்மா ' அவர்களே நீங்கள் தான் இந்த தமிழ்த்திருநாட்டை தங்கவளம் கொழிக்கச் செய்ய வேண்டும் என்று 'ஊரான் காசில் வாங்கிக்கட்டிய கொடநாட்டு' மாளிகையில் உடன்பிறவா சகோதரி சகிதம்  உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி வந்து முதலமைச்சராக்கி ஆயிற்று ஒரு நூறுநாள்.

இதுகாறும் பொதுச் சொத்துக்களையே அபகரித்திருக்காத புரட்சித்தலைவி 'டான்சி' புகழ் ஜெயலலிதா அவர்களின் சிறுதாவூர் பங்களா முன் 'நில அபகரிப்புப் போராட்டம் நடத்தி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி மகிழ்ந்த கம்யூனிஸ்டுகளின் ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டம் வெற்றியடைந்து ஆகிறது நூறு நாள்.!!

குடும்ப ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் , மனைவி மச்சினன் சகிதம் வாளெடுத்துப் போராடிய சினிமாச் சிங்கம் விஜய்காந்த் எதிர்க்கட்சி ஆகி ஆகிறது நூறு நாள்.!!

அளவிட முடியாத சாதனைகளை , அள்ளிட முடியாத நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த நூறுநாட்களை மறந்திட முடியுமோ? மக்களின் மனதில் பசுமரத்தாணியாய பதிந்து கிடக்கும் அம்மாவின் அரிய சாதனைகளைச் சொல்லிட இந்த வலைப்பூதான் போதுமோ?

தலைமைச்செயலகத்தைத் தரிசாக்க பல நூறு கோடி  பணம் வீண்.....அம்மா ஆட்சியைத்தவிர வேறெந்த மடையன் ஆட்சியில் இது போன்று மக்கள் பணம் வீணடிக்கப்படும்?இஃதொன்று போதாதா அம்மாவின் ஆட்சிசிறப்பிற்கு?

சமச்சீர் கல்வி புத்தகம் சரியில்லையென்று  2மாதம் பள்ளிக்குழந்தைகளின் படிப்பை வீண்டித்த அம்மாவைப்போன்ற அற்புத சக்தியைத் தவிர வெறெவரால் முடியும்?



ஆண்டாண்டுகாலமாய் இருந்த மின்வெட்டை ஆட்சிக்கு வந்தவுடன் ச்சூ மந்திரக்காளி போட்டு தீர்த்துவைத்த பெருமையைத் தான் என் சொல்வது?

அகில பாரதமும் பாராட்டும் வண்ணம் , சிவில் வழக்குகளுக்காக அதில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் கைது செய்யும் அரசியல் சாசனத்திற்கெதிரான செயல்கள் அம்மாவின் ஆட்சி தவிர வேறெங்கும் நடப்பதற்கான வாய்ப்புதான் ஏது?

அடிப்படைச் சட்ட ஞானம் இல்லாமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தவறுதான் என்று அரசு வழக்கறிஞ்ரே ஒத்துக்கொள்ளும் அளவிற்கு பெருமைமிகு அமைச்சர்களைக் கொண்ட துக்ளக் அரசின் சாதனைகளைத்தான் என்னென்பது?

அதிகாரிகளை சேலத்திலிருந்து மாற்றலாகி சென்னைக்குச் ரயிலேறி போய்ச் சேருவதற்குமுன் மதுரைக்கு மாற்றியடிக்கும் கோமாளிக்கூத்துக்களின் பெருமைகளைத்தான் என்னவென்று சொல்லிச் சொல்லிப் புகழ்வது?

ஈழத்தாய் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றி அகில உலகையும் திரும்பிப்பார்க்க வைத்து புரட்சித்திலமான பெருமையைப் பற்றி ஸ்பெஷல் பதிவே போடலாம்!!

நில அபகரிப்பு அவசரச் சட்டத்தை அதிமுக சொம்புகளுக்கு மட்டும் செல்லாததாக்கிச் செய்த புரட்சி பற்றி பேசினால் இன்னொரு நூறு ஆள் ஆகிவிடும்!!!

ஆக, வளமும்  , செல்வமும் கொழிக்கும் இந்த மாதம் மும்மாரி பெய்யும் அதிமுக அம்மா ஆட்சிக்கு நூள் ஆகிறது......

ஆட்சிக்கு மட்டுமா நூறு நாள்....அம்மாவின் சொத்துக்குவிப்பு  வழக்கிலும் தான் நூறு வாய்தாவுக்கு மேல் ஆகிறது...

மென்மேலும் ஓங்குக அம்மாவின் புகழ்....
வளர்க அம்மாவின் செல்வம் ( சிறுதாவூர் , கொடநாட்டு , ஹைதராபாத் திரடசை தோட்டத்தையும் தாண்டி....)

வாழ்க மக்கள்...வளர்க மக்களாட்சி.........

Monday, June 06, 2011

திமுகவினருக்கு புத்துணர்வூட்டிய திருவாரூர்!

திட்டுங்கள்....உங்கள் வசவுகளெல்லாம் வாழ்த்துக்களாக எங்களுக்கு மாறும் என்றார் கலைஞர் ஒருமுறை. கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது தேர்தல் முடிவிற்குப் பிறகு. வெற்றி தோல்வி என்பது அரசியலில் எப்போதும் இருப்பதுவே. இருந்தாலும் தமிழக மக்கள் இந்த முறை தந்த தோல்வி என்பது செயற்கையானது....

ஒட்டுமொத்த நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகள் அனைத்துமே கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியத் தலைப்பட்டன. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியிருக்கிறார்கள்.. நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!

நேற்று திருவாருரில் நடந்த நன்றியறிவிப்புக் கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது...ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போதுதான் திமுக தொண்டன் வீறுகொண்டு எழுகிறான் என்பதைக் காட்டியது திரண்டிருந்த மக்கட்படை.!! சற்றேறக்குறைய மாநாடு போல் திரண்டிருந்த கூட்டத்தில் , வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி உணர்ச்சி பொங்க , எல்.கணேசன் சொன்னபோது நிகழ்ந்த கைதட்டல் விண்ணைப் பிளந்தது.!

திமுக உயிர்ப்புள்ள இயக்கம்...தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல அது...இன்றல்ல , ஆரம்பகாலம் தொட்டே அதன் உயிர்நாடி அதன் தொண்டர்கள்...அதற்கு அழிவென்று நினைப்பவன் காண்பது பகற்கனவு.....

நகைச்சுவையுணர்வோடு பேசிய பொன்முடி அவர்கள் சமச்சீர் கல்வி பற்றி தெளிவாக விளக்கினார். ஏன் அது கொண்டு வரப்பட்டது , எத்தகைய ஆய்வுக்களுக்குப் பின்னர் அது கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அவர் விளக்கினார். அத்தோடு இன்னொரு கேள்வியையும் சவாலாக வைத்தார்..."ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் சமச்சீர் கல்வி பற்றி விவாதிக்கத் தயார்....அவரால் முடியுமா? "

சில சவால்களும் , கேள்விகளும் எப்போதுமே திமுக முகாமில் இருக்கின்றன. ஆனால் , எதிர்முகாமில் தான் அதற்கான பதில்கள் எப்போதும் வருவதில்லை.!!

எப்போதும் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர் கலைஞர் , அதைப் பாராட்டாத பத்திரிக்கைகள் ஏதேனும் ஒருநாள் மக்களோடு மக்களாக செயலலிதா சென்றதைப் பாராட்டியதை இடித்துரைக்க தவறியதைச் சுட்டினார் அவர்..

பதவியேற்று பதினைந்து தினங்களுக்குள்ளாகவே பல்வேறு மக்களின் சிந்தனையை மாற்றும் விதமாக , செயலலிதாவின் துக்ளக் தர்பார் இருப்பதைச் சுட்டினார் திருச்சி என் சிவா..
தலைமைச்செயலகப் புறக்கணிப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்பதை சுவைப்படத்தெரிவித்தார் திரு.கே.என்.நேரு....

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவிற்கு அல்ல , மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , செம்மொழி நூலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , புதிய தலைமைச்செயலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , சமச்சீர் கல்விக்கு ஏற்பட்ட தோல்வி , வீடுகட்டும் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , கலைஞர் காப்பீட்டுத்திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றார் திரு.பரிதி இளம்வழுதி.

கலைஞர் மிகவும் சோர்வுற்றிருந்தார் என்பது பேச்சில் தெரிந்தது.......இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் அரசைக் கண்டித்தார்.....கவர்னர் அறிக்கையைக் கூட சரியாக அச்சடிக்கத் தெரியாத இந்த அரசா 'தமிழ்' மொழியை வளர்க்கப்போகிறது என்றார். 'பேரறிஞர்' என்பதற்கு பதிலாக 'பேராறிஞர் என்று அச்சடித்திருப்பதை அவர் சுட்டியதும் எழுந்த சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று....

அதிமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து நிகழ்ந்த குற்றச்செயல்களை பட்டியிலட்ட பிறகு அவர் சொன்ன கருத்துதான் அவரின் அரசியல் பெருந்தன்மையைக் காட்டியது!

இக்குற்றச்செயல்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை....எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் இருக்கும் என்றுதான் சொல்கிறேன்.....அதை சரிசெய்யவே , காவல்துறையும் , நீதிமன்றமும் இருக்கின்றன....ஆனால் , என்னவோ திமுகதான் அதைச் செய்கிறது என்று பத்திரிக்கைகள் திசைதிருப்பின என்றார்.

என்மீது , என் குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களால் திமுகவை அழிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்று சொன்ன அவர் ."மாற்றம்" வேண்டும் என்ற குரல் மாறவே மாறாது...நாளை நம்மிடமே மாற்றம் வேண்டும் என்று மக்கள் வருவார்கள் என்றும் சொன்னார்.

திமுகவினர் மக்களிடம் இருந்து சொத்துக்களைச் சூறையாடியாதாகவும் அதை திரும்பப்பெறுவோம் என்று  கவர்னர் அறிக்கையில் சொல்லப்பட்டத்தை வரவேற்பதாகவும் , அதில் சிறுதாவூரையும் சேர்த்தால் மகிழ்வேன் என்றும் தனக்கேயுரிய பாணியில் அவர் சொன்னபோது கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

கலைஞர் மிகவும் வருந்திச் சொன்ன ஒரு விடயம் ' குடிசை வீடுகளை கான்க்ரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கிடப்பில் போட்டதையொட்டித்தான். தேர்தலில் தோற்றபோது கொடுக்காத வேதனை இத்திட்டம் நிறுத்தப்பட்ட போது வந்ததென்று சொன்ன அவர் , இத்திட்டம் கூடகோபுரங்களில் வாழ்பவர்களுக்கு அல்ல , குடிசையில் வாழும் பாட்டாளிகளுக்கு...அதைக்கூட நிறுத்திவிட்டார்களே என்று வருந்திய போது கூட்டத்தில் மயான அமைதி...

மொத்தத்தில் டன் டன்னாக திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு பொதுக்கூட்டமாகவே திருவாரூர் பொதுக்கூட்டம் முடிவுற்றது....தேர்தலில் தோற்றதும் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ள திமுக ஒன்றும் அதிமுக அல்லவே...அது எப்போதும் போல மக்கள் இயக்கம்...மக்களோடு மக்களாக நிற்கின்ற இயக்கம்.......

Monday, May 16, 2011

திராவிட முன்னேற்றக் கழகம்.

கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு அகமகிழ்ந்து போகிறார்கள் அதிமுகவினரும் , தேமுதிகவினரும்...கொண்ட நோக்கம் நிறைவேறிய காரணத்தால் தினமணி தலையங்கம் தீட்டித்தீட்டி பெருமிதப்பட்டுக்கொள்கிறது..... இனி இனிப்பு ஆட்சி என்று தினமலர் செய்தி போட்டு தம் வாசகர் பரப்பை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது....


ராஜபக்சேவை கூண்டிலேற்றுவோம்...ஆனால் அதே சமயம் மாநில ஆட்சியால் மட்டும் எதுவும் செய்ய முடியாது என்கிறார் ஜெ..வாழ்த்துக்கள் ஈழத்தமிழரிடத்தில் இருந்து குவிகிறது.


இராமநாராயணன் பதவி விலகுகிறார்.......புதிய தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு...நடிகர் விஜய் புரட்சித்தலைவியையும் , புரட்சிக்கலைஞரையும் வாழ்த்துக்களால் குளிப்பாட்டுகிறார்....

சில பதிவர்கள் திமுக தமிழகத்தில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதாக சந்தோஷம் கொண்டு , இனி மூன்றாம் இடத்தையாவது திமுக தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று அக்கறை கொள்கிறார்கள்...

இனி கனிமொழிக்கு 'களி'தான் என்று மூத்த அரசியல்வாதிகள் சந்தோஷப்படுகிறார்கள். புதிய தலைமைச்செயலகம் வேக வேகமாகக் காலி செய்யப்படுகிறது...பழைய 'புனித ஜார்ஜ்' கோட்டை பட்டை தீட்டப்படுகிறது.....ஆட்சி மாறினால் அனைத்தும் மாறத்தான் வேண்டும் என்ற எழுதப்படாத ஜனநாயக விதி இங்கு நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.

சோனியாவும் , மன்மோகனும் , ப.சிதம்பரமும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச்சொல்ல க்யூ கட்டுகிறார்கள்...பெரிசுகள் அல்லது பெரிய பதிவர்கள் திமுகவின் நிலை கண்டு பரிதாபப்படுகிறார்கள்...

திமுக அழிந்து போனது என்று அழிக்கத்துடிப்பவர்கள் அகமகிழ்ந்து போகிறார்கள்....இவர்கள் மகிழ்ந்து போகும்படியா , பரிதாப்படும் படியா திமுக இருக்கிறது?


1991 தேர்தலில் 'ராஜிவ் காந்தியைக்கொன்றது திமுகதான் என்ற பொய்ப்பிரசாரத்திற்கு மயங்கிய மக்கள்  ஜெயலலிதாவிற்கு ஆதரவை அள்ளித்தந்தார்கள்.


இரண்டே இரண்டு எம்.எல்.ஏக்கள் கழகத்திற்கு...ஒருவர் கலைஞர் , பிரிதொருவர் பரிதி இளம்வழுதி....கலைஞர் பிற்பாடு தன் பதவியை இராஜினாமா செய்தார். பரிதி இளம்வழுதி தனி ஒருவராக சட்டமன்றத்தில் இருந்தார்... அப்போதும் கழகம் எதிர்க்கட்சி அல்ல......அதிமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரஸே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தது.


வரலாற்றை மறந்த சிலர் திமுக மூன்றாமிடத்திற்கு முதல் முறையாக தள்ளப்பட்டது என்ற போலித்தோற்றத்தை உருவாக்கி மகிழ்கிறார்கள்....வருங்காலத்தில் தேமுதிக தலைமையிலான அணியில் திமுக சேருமா என்ற விவாதத்தை சூடாகப் பேசி மகிழ்கிறார்கள்....


கழகத்திற்கு தோல்வி புதிதல்ல...ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெற்றியை விடத் தோல்வியையே அதிகம் சுவைத்திருக்கிறது....


ஐந்தாண்டு காலமும் கொடநாட்டில் இருந்துகொண்டே அறிக்கையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவருக்கு தமிழக மக்கள் அதீத பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையை உடன்பிறப்புக்கள் உணர்கிறார்கள்....தவறை மக்கள் மீது போட்டுத் தப்பித்துக்கொள்ள உடன்பிறப்புகளொன்றும் 'குஷ்பு' அல்ல...


நலத்திட்டங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்ததொரு குறைபாடு......ஈழத்தமிழர் நிலையின் பால் திரிசங்கு நிலை இன்னொரு குறைபாடு......தம் கையில் எதுவுமில்லை மின்வெட்டு ஒரு குறைபாடு......பலமேதுமில்லாத காங்கிரசுக்கு தொகுதிகளை அள்ளிக்கொடுத்ததொரு குறைபாடு...வெண்கலக் கடை பாத்திரங்களைப் போல ஒட்டாத தலைமை கொண்ட காங்கிரசுடன் கொண்ட கூட்டணி ஒரு குறைபாடு....


வட இந்திய , தென் இந்திய ஆரிய , பார்ப்பன பத்திரிக்கைகளின் அதீத திமுக எதிர்ப்பே அவர்களின் அதீத திமுக எதிர்ப்பு பிரச்சாரமே திமுகவின் மீதான மக்களின் கருத்து மாற்றத்திற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..எனினும் அவைகள் அப்படித்தான்...மாறப்போவதில்லை..மாற்றவும் இயலாது ....


மாற்றிக்கொள்ள வேண்டியது எம்மையே....எமது செய்லதிறன் மிக்க உடன்பிறப்புக்கள் இந்தத் தோல்வியைக் கண்டு துவண்டு போய்விடுவார்கள் என்று பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சியினரும் நினைப்பார்களாயேனில் அவர்கள் ஏமாந்து போவர்...இன்றிலும் , திமுக அணிக்கு விழுந்த ஓட்டுக்களில் 90 சதம் கழகத்தினரின் ஓட்டே....அதன் வாக்குவங்கியை தகர்க்க எம்.ஜி.ஆரிலிருந்து ஜெயலலிதா வரை முயன்று கொண்டே இருக்கிறார்கள்.....ஆனால் ஒவ்வொரு முறையும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்....

இது இன்னொரு முயற்சி...பல முனைத் தாக்குதல்கள் இருந்தாலும், ஊடகங்களின் மிதமீறிய அதிமுக ஆதரவுப் பிரச்சாரத்தின் இடையிலும் போட்டியிட்ட தொகுதிகளில் 25 சதவித வெற்றியை திமுக பெற்றிருக்கிறது.


அதனால் , திமுகவை நிலையைப் பார்த்து யாரும் ஒப்பாரி வைக்கவும் வேண்டியதில்லை..பிழைக்குமோ பிழைக்காதோ என்ற போலி கரிசனமும் தேவையில்லை. திமுக ஒன்றும் தேர்தலுக்கு தேர்தல் மக்களைப் பார்க்கும் கட்சியல்ல..எப்போதும் மக்களிடமே இருக்கும் கட்சி...இடையில் சிலபல நிகழ்வுகளால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. தவறுகளை எப்போதும் சரி செய்து கொள்வதால் தான் இன்னமும் 20 வயதொத்த பல இளைஞர்களை கட்சியில் கொண்டிருக்கிறது.ஆரம்பித்து அரை நூற்றாண்டானாலும் இன்னமும் தன் இளமையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது...


மக்கள் அதிமுக என்னும் கட்சியை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்...நல்லது அவர்கள் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடுப்பது சனநாயகத்தின் மூலக்கூறு...!!!


அதிமுக இதுவரை ஆண்ட 25 வருடங்களில் ஒட்டுமொத்தமாக எந்தவித சாதனையையும் நிகழ்த்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.........குறிப்பாக ஜெ.அ.தி.மு.க சாதித்தவைகள் என்று எதையுமே சொல்லமுடியாது என்பதை அக்கட்சிக்காரர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.... 

இதை முந்தைய ஒரு பதிவிலேயே சுட்டியிருந்தோம்!

இனிமேலாவது ஏதாவது செய்து மக்கள் நலப்பணிகளில் திமுகவின் சாதனைகளை முறியடிக்க முயல வேண்டும்.....திமுகவிற்கு மாற்றாக இருக்கும் கட்சிக்கான தகுதி அப்போதுதான் அதிமுகவிற்கு கிடைக்கும் என்பதே நமது ஆசை.


ஆனால் , ஜெ.அ.தி.முக.விடம் அதற்கான நோக்கம் கூட இல்லையென்பதையே புதிய தலைமைச்செயலக புறக்கணிப்பு காட்டுகிறது!!!!

வாழ்க தமிழர்கள்....வளர்க தமிழகம்!

Friday, April 29, 2011

தினமணி.... நெஞ்சில் நேர்மை கொள்!!

ஈழ விடயத்தில் கருணாநிதியின் மென்மையான போக்கு கடுகளவும் பிடிக்காதவனாக இருந்தாலும் , அவ்வப்போது நமது தமிழக பத்திரிக்கைகளின் பூணூல் வெளியே தெரியவேண்டும் என்ற ஆசை கொண்டவனாகையால் இந்தப்பதிவு!

முதலில் தினமணியின் தலையங்கம்!
 இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி

.இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...

தினமணி சொல்லியிருக்கும் கருத்துக்களில் மாறுபாடு யாருக்கும் இருக்கமுடியாது...ஆனால் ஜெயலலிதா உடைத்தால் மண்குடம் , திமுக உடைத்தால் பொன்குடம் என்று சொல்வதுதான் தினமணியின் பூணூல் பாசத்தைக் காட்டுகிறது.

அதெப்படி , சும்மா அறிக்கை விடுவது உருப்படியான செயலாகும்? ஒரு கட்சியின் உயர்நிலைக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போடுவது உருப்படியற்ற செயலாகும்?

முன்பெல்லாம் இலைமறை காயாய் திமுகவையும் , கருணாநிதியையும் கடிந்து கொண்டிருந்த தினமணி இப்போது வெளிப்படையாகத் தாக்குகிற மர்மமென்ன? ஒருவேளை மூத்த பத்திரிக்கையாளர் ( அதாங்க , ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருக்கிறாரே...) தினமணிக்கும் ஆலோசனை சொல்கிறாரோ?

எது எப்படியோ , இவர்கள் இப்படித்தான் , இவர்கள் இதுபோலத்தான் என்று இனம் பிரித்தறிய இதுபோன்ற தலையங்கங்கள் வாய்ப்பளிக்கிற வகையில் சந்தோஷமே.!!!

ஜெய் தினமணி.......ஜெய் தினமலர்....ஜெய் விகடன்....ஜெய் துக்ளக்.....வளர்க பூணூற்கொள்கை!

பூணூலார்கள் மீது நமக்கு துவேஷம் இல்லை.....அவர்களுக்குத்தான் நம் மீது எப்போதும் துவேஷம்...அவர்களைச் சொல்லி தவறேதுமில்லை....அத்துணை ஊடகங்களையும் அவர்களே ஆதிக்கம் செலுத்துமளவிற்கு அவர்களை உச்சாணியில் வைத்திருக்கிறோமே அதுவே தவறு

Monday, April 04, 2011

திமுகவின் சாதனைகள் இங்கே! அதிமுகவின் சாதனைகள் எங்கே?

கலைஞரின் பார்வையில்:

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!

அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.

அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் – தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.
அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;
1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சாரத் திட்டம்.
5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்.
8. குடிநீர் வாரியம்.
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு – அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.
16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் – பொறியியல் கல்லூரிகள் – மருத்துவக்கல்லூரிகள் – கலை அறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.
24. தைத் திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி
28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.
31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.
32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் – சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் – தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை. 

நன்றி : திமுக வலைத்தளம்!

இது 2010 கணக்கு....இதற்குப்பின்னர்தான் ஒரு வருடத்தில் எத்தனையெத்தனை அறிவிப்புக்கள்? எத்தனையெத்தனை சாதனைகள்......குறிப்பிடத்தகுந்த ஒன்று குடிசை வீடுகளை கான்கிரிட் வீடாக்குவது.....

மனச்சாட்சியுள்ள எவரேனும் கலைஞரின் இத்தனை திட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது பலனடைந்ததை ஒத்துக்கொள்வார்கள்....உங்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா நண்பரே?

திமுக சாதனைகள் இங்கே....அதிமுக சாதனைகள் எங்கே?

இப்படிக்கு
கலைஞரின்
திட்டங்களால்பலனடைந்த ஒருவன்!