Sunday, February 27, 2011

திமுக கூட்டணி மைனஸ் காங்கிரஸ்? வெற்றி நிச்சயம்!


திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் "ராகுல்" பார்முலாவால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது...


தமது தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் எப்போதும்  வென்றதாக சரித்திரமில்லை....மாவட்டத்திற்கு ஒரு கோஷ்டியாக , ஊருக்கு ஒரு பிரிவாக பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர் பலம் மிக்க கட்சியா என்று கேட்டால் இல்லை என்பதே வெகுபலரின் பதிலாக இருக்கலாம்...


இருப்பினும் குறிப்பிட்ட சத வாக்குவங்கியை எப்போதும் தன்னகத்தே வைத்திருக்கும் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம்! ஆனால், அந்த வாக்குவங்கியும் கூட ஈழத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தால்    குறைந்திருக்கலாம்  என்பதே உண்மை! அதுதான் கடந்த    நாடாளுமன்றத்தேர்தல் சொல்லும் சேதி…பெருந்தலைகளே தோல்வி கண்டன என்பது வரலாறு!


 இந்த முறை ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட திமுக நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் விழுமா என்பது சந்தேகம்தான்...அதேதான் திமுகவினரின்  நிலையும்! யாரும் மனசளவில் காங்கிரஸுக்கு பல்லக்குத்தூக்க  தயாரில்லை.


களநிலைமை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சியோ கனவு காண்கிறது….90 தொகுதிகள் என்ற அபத்தமான கோரிக்கையை வைக்கிறது….ஆட்சியில் பங்கு என்பதை வேண்டுமானால் நியாயமான  கோரிக்கை என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம்…அதைக்கூட தேர்தலுக்குப்பின்பு முடிவு செய்வதே சரியாக இருக்கமுடியும்?


காங்கிரசுக்கு கொடுக்கும் அதிக தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்லும் என்பதையே கடந்த நாடாளுமன்றத்தேர்தல் காட்டுகிறது…..காரணம் என்ன?  அர்பணிப்பு ஏதுமற்ற அதன் கட்சிப்பணியாளர்களும் , எப்போது யாரை  வாரிவிடலாம் என்று காத்துக்கிடக்கும் அதன் கோஷ்டிச்சண்டைகளும்தான்.!  ஆக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதி கொடுப்பதென்பது  திமுகவைப் பொறுத்தவரை அரசியல் தற்கொலை.!!




அப்படி ராகுல் பார்முலா தான் என்ன? அது இதுவரை சாதித்தது   தான்  என்ன?


காங்கிரஸ் வீழ்ந்துகிடக்கும் மாநிலங்களில் வெற்றிக்கொடி கட்டுவது!!! பீகாரில் லல்லுவைக் கழட்டிவிட்டு தனியே  நின்று ஆட்சிக்கெதிரான வாக்குகளைப் பிரித்ததன் மூலம் நிதிஷ்குமாரை மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற்றியதுதான் “ராகுல் பார்முலா” சாதித்த பாரிய சாதனை!! அதைத்தான் தமிழகத்திலும் செய்துகாட்டப்பார்க்கிறார் அவர்…….


களநிலை வேறாக இருக்கும் , காங்கிரஸ் மீது தனிப்பட்ட வெறுப்பேதுமற்ற பீகாரிலே அதுதான் நிலையென்றால் காங்கிரஸ் மீத்  ஈழநிலையின்பால் இயல்பாகவே  வெறுப்புற்றிருக்கும்  தமிழகத்தில் என்ன நடக்கும்?




நமது கருத்தின் படி , கடந்த தேர்தலைக்காட்டிலும் ஒருதொகுதி கூட காங்கிரசுக்கு  அதிகம் கொடுக்கக்கூடாது!! அறிவாலயம் வரை சிபிஐ வந்ததைக்க்காட்டிலும் வேறென்ன பெரிய அவமானத்தை காங்கிரஸ்     தரக்கூடும்??


காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை…ஏனென்றால் அந்தக்கட்சியையும் தூக்கிச்சுமக்கப்போவது எப்போதும் போல திமுக தொண்டர்கள்தான்..
ஒருவேளை காங்கிரஸ் தனியே வேறுசில சின்னக்கட்சிகளைச் சேர்த்து தனியே நின்றால் கிடைக்கப்போவது திமுகவிற்கு நிச்சய வெற்றியே…!!


ஏன்?


1. திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடும். தனது சாதனைகளை பட்டி  தொட்டி எங்கும் பரப்பிட வழி பிறக்கும்!!!!
2. முறையற்ற,நேர்மையற்ற மீடியாக்களின் ஆட்சிக்கெதிரான பிரச்சாரங்களால் எழுந்திருக்கின்ற  ஆட்சிக்கெதிரான வாக்குகள்  இரண்டாகப்பிரியும்……..!!!1
3. சுருக்கமாகச் சொன்னால் கடந்த தேர்தலில் தேமுதிக செய்த வேலையை இம்முறை “காங்கிரஸ்’ செய்யும்!!
4. ஒருவேளை , காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையுமானால்..வைகோ+கம்யூனிஸ்டுகள் வெளியேறும் சூழல் உருவாகும்……திமுகவுடன் இணைய வாய்ப்பேதுமற்ற நிலையில்  இவர்கள் தனியே நிற்பது அதிமுகவுக்குத்தான் பாதகமாகும்..


ஒருவேளை தோற்றாலும் தவறேதுமில்லை…


வெற்றியைவிட தோல்வியால் கிடைக்கும் லாபங்கள் அதைவிடப்பெரிது!!  
1. சுயமரியாதையற்ற காங்கிரசுக்கூட்டணியில் இருப்பதால் சோர்ந்துகிடக்கும் திமுக தொண்டர்கள் புத்தெழுச்சி பெற வழிவகுக்கும்!!!
2. ஈழத்தில் இதுகாறும் கூட்டணிதர்மத்துக்காக  சுமந்துவந்த பழியைப் போக்கிக்கொள்ள ஒரு வழிபிறக்கும்!
3. காங்கிரஸ் என்ற தமிழர்களுக்கெதிரான கட்சி முகவரி ஏதுமற்று முடங்கிப்போகும்!!


ஆக, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவது என்பது திமுகவிற்கு எவ்வகையில்  பார்த்தாலும் நிச்சய வெற்றியையே அளிக்கப்போகிறது….


இனிமேலும்  திமுகவின் முதுகிலேறி காங்கிரஸ் என்னும் நொண்டிக்குதிரை கரையைக்கடக்காமல் பார்த்துக்கொள்வதில் தான் கலைஞரின் இராஜதந்திரத்தின் வெற்றி இம்முறை இருக்கிறது!!! 


வெல்வாரா? பார்ப்போம்!


Friday, February 25, 2011

சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்!

டைசியில் சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்!!!!இப்படி  நாம எல்லாம் சொல்லலீங்க... படிச்சேன் , அதை உங்களுக்கு படிக்கக்கொடுக்கிறேன்..!! அம்புட்டுதான்!

சென்னை: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று ஒரு படத்தில் கவுண்டமணி கூறுவார். அதை விஜயகாந்த்தின் அரசியல் நிரூபிப்பதாக உள்ளது.

2005ம் ஆண்டு விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது அவர் மீது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பும் மிகப் பெரிதாக இருந்தது.

யாருடனும் சேர மாட்டேன், கூட்டணி அமைக்க மாட்டேன், மக்களும், தெய்வமும்தான் எனது கூட்டணி என்று சொன்னார் விஜயகாந்த்.

இது மக்களிடையே அவருக்கு மரியாதையை பெற்றுத் தந்தது. அவருக்கு ஓட்டுக்கள் சேர ஆரம்பித்தன. எந்தப் பெரிய வெற்றியையும் பெறவில்லை என்ற போதிலும் அவரது வாக்கு வங்கி வீங்க ஆரம்பித்தது. அதிமுக ஆட்டம் காண ஆரம்பித்தது. திமுகவுக்கு அது பலமாக மாறியது.

இதனால் புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்பட்டார் விஜயகாந்த். இங்கு ஒரு விஷயத்தை அனைவரும் கவனிக்க வேண்டும். இத்தனை பேரும் விஜயகாந்த்துக்கு வாக்களித்தார்கள் என்றால் அது ஏன். ஒரு அரசியல் சக்தி என்ற அளவுக்கு விஜயகாந்த் உயர என்னக் காரணம். அது மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கை மட்டுமே - இவர் வித்தியாசமான அரசியல்வாதி, தனியாக நின்கிறார், கூட்டணி என்ற பெயரில் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க மாட்டார். அதிமுக, திமுக என்று மாறி மாறி சலித்துப் போன நமக்கு இவர் நிச்சயம் நல்ல மாற்று சக்தியாக விளங்குவார் என்ற ஒரே நம்பிக்கைதான்.

ஆனால் அத்தனையையும் அப்படியே குழி தோண்டிப் புதைத்து விட்டார் விஜயகாந்த். கடைசியில் சந்தர்ப்பவாத கூட்டணி அரசியலுக்கே அவரும் புகுந்து விட்டார். மது போதையில் சட்டசபைக்கு வருகிறார் என்று சொன்ன ஜெயலலிதாவும், ஆமாம், அவர்தான் ஊற்றிக் கொடுத்தார் என்று கூறிய விஜயகாந்த்தும் அதை மறந்து போயிருக்கலாம். ஆனால் மக்கள் எப்படி மறப்பார்கள்.

அதற்கு முன்பு வரை 'இந்த லெவலுக்கு' தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் பேசியதாக தெரியவில்லை. அப்படிப் பேசிக் கொண்டார்கள் இவர்கள் இருவரும். ஆனால் இன்று கை கோர்த்து தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள். இது பச்சை சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இதை விட மோசமான சந்தர்ப்பவாத கூட்டணிகள் தமிழகத்தில் அமையவில்லையா, பாமகவை விடவா ஒரு சந்தர்ப்பவாத கட்சி வந்து விடப் போகிறது என்று கேட்கலாம். அதனால்தான் அவர்கள் எல்லாம் வழக்கமான அரசியல் கட்சிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் விஜயகாந்த்தை மக்கள் பார்த்த பார்வை வேறு. அவரை புதிய சக்தியாக, புத்தம் புது மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் தலைவாராகத்தான் பார்த்தார்கள்.

ஆனால் இப்போது தான் வித்தியாசமானவன் இல்லை, நானும் பத்தோடு பதினொன்றுதான், பேரம் பேசித்தான் அரசியல் செய்யப் போகிறேன், முன்பு என்ன பேசினாலும் அதை மறந்து விடுவேன், தேவைக்கேற்றப்படி கூட்டணி சேருவேன் என்று மறைமுகமாக சொல்லி விட்டார் விஜயகாந்த்.

அதை விட முக்கியமாக, அவரை நம்பி, அவருக்காக வாக்களித்த அந்த ஜனங்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டார். நிச்சயம் இது நம்பிக்கைத் துரோகம்தான். விஜயகாந்த்தின் வித்தியாசமான அணுகுமுறையை மட்டுமே நம்பி வாக்களித்தவர்கள் இவர்கள். அவரது ரசிகர்கள் மட்டும் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. வித்தியாசத்தை விரும்பிய அப்பாவி ஜனங்களும்தான் வாக்களித்துள்ளனர். அதை விஜயகாந்தோ அல்லது தங்களது வாக்கு வங்கி குறித்து பெருமைப்படும் தேமுதிகவினரோ கண்டிப்பாக மறந்து விடக் கூடாது.

அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் விஜயகாந்த் வித்தியாசமாக இருப்பார், புதிய அரசியலை அமைப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு ஆதரவாக திரண்டனர். ஆனால் அவர் இன்று அதிமுகவில் போய் சேர்ந்துள்ளது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமையும்.

கட்சியைக் காப்பாற்ற வேறு வழியில்லை, கூட்டணி சேர்ந்தால்தான் அதிகார பலமும் பெற முடியும், திமுகவை விரட்ட வேறு வழியில்லை என்று எந்த சப்பைக் காரணத்தை விஜயகாந்த் கூறினாலும், அந்த விளக்கத்தை மக்கள், குறிப்பாக அவரை நம்பி வாக்களித்த, நடுநிலை மக்கள் முழுமையாக ஏற்பார்கள் என்று கூறுவதற்கில்லை. காரணம், விஜயகாந்த்தின் கூட்டணி முடிவு என்பதே அவரது அடித்தளத்தை அவரே தகர்த்துக் கொண்டது போலாகும்.

தேமுதிக மீதான மக்களின் ஆதரவுக்கு முதல் காரணமே, அடிப்படைக் காரணமே அது தனித்து நிற்கிறது என்பதுதான். ஆனால் அதையே இன்று விஜயகாந்த் தகர்த்து விட்டார்.

சேலத்தில் அவர் முழங்குகையில், நாங்கள் பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று என்று கூறியவர்களுக்கெல்லாம் நான் கூறும் பதில், நாங்கள் ஒன்றுதான் என்று கூறி பெருவிரலை உயர்த்திக் காட்டி தொண்டர்களின் கரகோஷத்தை வாங்கிக் கொண்டார் விஜயகாந்த்.

ஆனால் வருகிற தேர்தலில் விஜயகாந்த்துக்கு நடுநிலை வாக்காளர்கள் கட்டை விரலை காட்டுவார்களா என்பது சந்தேகமே.

'பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்' என்ற வடிவேலு பட வசனம் போலாகி விட்டது விஜயகாந்த்தின் அடிப்படை அரசியல் கொள்கை.

இவரைப் பார்த்தால் அதிமுக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து, இப்போது 'வெத்து வேட்டு' ஆகிப் போன வைகோ தான் நினைவுக்கு வருகிறார்.

நன்றி  : தட்ஸ்தமிழ்

 

 இனிமேல் வைகோ இப்படிச்சொல்வாரோ....

ன்புச்சகோதரியை முதல்வராகவும் , புரட்சிக்கலைஞரை  துணை முதல்வராகவும் ஆக்காமல்  விட மாட்டான் அப்படீன்னு????

Thursday, February 24, 2011

பிரபல பதிவர்கள் படிக்க விரும்பாத ஒரு செய்தி.!

எல்லா செய்திகளையும் அக்குவேறாக , ஆணிவேறாக ஆராய்ந்து   பதிவெழுதும் சிலருக்கு  பிடிக்காத செய்தி ஒன்று ஒரு சில (உண்மையாகவே ஒருசில) பத்திரிக்கைகளில் மட்டும்  வந்திருக்கிறது..


நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமும் கருணாநிதியையும் , அவர்தம் அரசையும் குறைகூறிப் பொழுது போக்குபவர்களுக்கும்  , உலகத்தின் சிறந்த முதல்வர் நரேந்திர மோடி என்று பில்ட் அப் காட்டுபவர்களுக்கும் பதில் சொல்லும் அந்தச் செய்திதான் என்ன?

பிரபல வட  இந்திய  ஆங்கிலத் தொலைக்காட்சியான சி.என்.என். ஐ.பி.என் வழங்கும் இந்தியாவின் சிறந்த மாநிலம் ( CNN-IBN's Diamond states award ) விருதினை தமிழகம் பெற்ற செய்திதான் அது.


ஒட்டுமொத்த விருதினை தமிழகம் பெற்றதோடு மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. 



இதுபற்றிய செய்தி.
சென்னை: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின், சிறந்த இந்திய மாநிலத்திற்கான வைர மாநில விருது தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த விருதை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு வைர மாநில விருதுகள் வழங்கி வருகிறது.

2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், தமிழ்நாடு-இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் 23.2.2011 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற சிறப்புமிகு விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் துணைத்தலைவர் அமீத் அன்சாரி அவர்கள், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் வழங்கியதுடன், முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குத் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறும் கூறினார்.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருதுகளை -முதல்வர் கருணாநிதியிடம் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார்.

இந்நிகழ்வின்போது, நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவு அமைச்சர் எ.வ.வேலு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கான நீதிபதிகள் யார்...? தேர்வு செய்த முறையென்ன?

The selection process for ‘IBN7 Diamond States Awards 2011’ was a credible multi-pronged approach involving secondary data from authentic sources and primary data from a nationwide research exercise conducted by Nielsen, the research partner for the awards. KPMG, the independent Knowledge Partner managed the process, methodology and the data for arriving at the best states for the various categories of the awards.

The list of parameters in each category were evaluated by the best journalistic brains in the country from IBN18 Network Editorial Board & the Outlook Editorial Board comprising of Raghav Bahl, Rajdeep Sardesai, Ashutosh, Vinod Mehta & Neelabh Mishra. A five member jury comprising well-known personalities drawn by different walks of life, deliberated on the categories, criteria and parameters to finalize the framework of selection and ranking of states across the different categories.

The Jury included eminent citizens like Dr. Bimal Jalan – Former RBI Governor & Chairman of the Jury, Mr. M Damodaran – Former Chairman SEBI, Dr. Bakul H Dholaki - Former Director IIM-A, Mr. TSR Subramanium – Ex- Cabinat Secretary, Govt of India, Dr. Shaibal Gupta – Secretary Asian Development Research Institute.

At the occasion, Rajdeep Sardesai, Editor-in-Chief, IBN18 Network said, “IBN7 Diamond States Awards celebrate excellence in human and social development among Indian states. They truly signify the diamond standard for good governance in India. These winners have been arrived at through a rigorous and credible evaluation process.”

Ashutosh, Managing Editor, IBN7 added, “We congratulate the states, on this wonderful acknowledgement of their work. Their story illustrates not only the Indian dream but also their mission to improve the human and social standards of the country.”

ALCHEMIST Group, one of India’s fastest growing publicly traded Conglomerates with interests in Food Processing, Hotels & Resorts, Restaurants, Road Technologies and Healthcare is the presenting sponsor for the awards.
முழுச்செய்திக்கு இணைப்பினை அழுத்தவும்!



Winners of IBN7 Diamond States Awards 2011
Category Best Big State Best Small State
Citizen Security Tamil Nadu Sikkim
Core Infrastructure Gujarat Delhi
Education Kerala Himachal Pradesh
Employment Andhra Pradesh Mizoram
Environment N/A Jammu & Kashmir
Healthcare Kerala Goa
Poverty Reduction Chhattisgarh Himachal Pradesh
Water and Sanitation Tamil Nadu Tripura
Women Empowerment Tamil Nadu Nagaland 

குடும்ப ஆட்சியை வீழ்த்த கூட்டணி : பண்ரூட்டியார்..!!

அ.தி.மு.க., வுடன் கூட்டணி மக்கள் விருப்பம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க., சார்பில், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர் ராஜன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும், அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாலை 5.30 முதல் 7 மணி வரை நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் கட்சித்தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்குப்பின் அமையும் ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் எதுவும் தே.மு.தி.க.,விடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.  நன்றி தினமலர்!


கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சுதீஷ்....அப்பாலிக்கா பிரேமலதா மேடம் , இவுக எல்லாம் யாரு பண்ரூட்டி சார்??

கேட்கறவன் கேனையா இருந்தா எலி ஏரோப் ப்ளேன் ஓட்டுமாம்....

சுத்துங்க...சுத்துங்க...மக்கள் கேட்குற வரைக்கும் சுத்துங்க...

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு...ஆனா இப்படி எல்லாம் ஃசோக் அடிக்கக் கூடாதப்பா...!!! இதையும் கிண்டலடிச்சி துக்ளக் பத்திரிக்கைல கேள்வி-பதில் வருமா வராதா? ?

Wednesday, February 23, 2011

சொத்துக்குவிப்பு வழக்கில் தப்பிக்க அதிமுக நீதிபதியிடம் பேரம்?

மக்கள் திமுக  ஆட்சி மீது வெறுப்பாக இருக்கிறார்கள்...ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான்.......ஊழலற்ற ஆட்சிக்கு அப்பழுக்கற்ற புரட்சித்தலைவிதான் வேண்டும் என்று வலையுலக இரத்தத்தின் இரத்தங்களும் , இன்னபல வலையுலகப் புரட்சியாளர்களும் , பத்திரிக்கைகளும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்...

அவர்களுக்கெல்லாம் "டான்சி" நிலம் பற்றியோ இல்லை பிற ஊழல்களைப்  பற்றியோ நாம் சொல்லி அப்பழுக்கற்ற  புரட்சித்தலைவியை அவமானப்படுத்துவது நம் நோக்கமல்ல..

அத்தகைய ஊழல்களிலிருந்து வெளியே வர  அம்மாவின்  தொண்டர் திரு.மைத்ரேயன் அவர்கள் ஒருவரிடம் அவர் தான் நீதிபதி  என்று நினைத்து பேரம் பேசியிருக்கிறாராம்....அந்தப் போலி நீதிபதியை  பிடித்துவிட்டார்களாம்...இப்படியொரு செய்தியை தினமலர் வெளியிட்டிருக்கிறது.....


மதுரை: பெங்களூருவில் நடக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க மைத்ரேயன் எம்.பி.,யிடம் பேரம் பேசிய போலி நீதிபதி முத்து விஜயகுமார் (52) மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த இவர், மேலூர் கோர்ட்டில் ஜூனியர் பெய்லீப்பாக பணியாற்றுகிறார். கடந்த 2006ல், எழுமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவின் மகன், மருமகனுக்கு மதுரை கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 45 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்தார். இவரை மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜேசுஜெயபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்ட போது, வேலை மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான 15 விண்ணப்பங்கள், மூன்று மொபைல் போன்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முகவரி, போன் எண்கள் கொண்ட புத்தகம், கார் "சைரன்' இருந்தது. அவரை தீவிரமாக விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், கமிஷனர் பாரி உத்தரவிட்டனர்.

எம்.பி.,யிடம் பேச்சுவார்த்தை: கடந்த ஜனவரியில், அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, "நான் நீதிபதி தினகரன் பேசுகிறேன். ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து தருகிறேன்' என முத்து விஜயகுமார் பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து 10 நாட்களில் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.நன்றி : தினமலர்

அவர் பேசியதாலேயே ஜெயலலிதா புழக்கடை  வழியாக வெளியே வர முயற்சிக்கிறார் என்று  நாம் சொல்லவில்லை...ஆனால், அத்தகைய பேர்வழியிடம் தொடர்ந்து நான்கு முறை திரு.மைத்ரேயன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ( தெரிந்து இவ்வளவு...தெரியாதது???) என்றால் அதுபோன்ற முயற்சிகளில் அம்மாவின் ஆதரவின்றி எப்படி முடியும் என்பதே நமது கேள்வி!!!!

சிக்கிக்கொண்டது போலி நீதிபதி மட்டும்தானா?

Monday, February 21, 2011

உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்....!

ரொம்ப நாளாவே மனச அரிச்சிகிட்டுக் கீற விஷயமுங்கோ , அதுனால கேட்டுப்புடலாம்னு இருக்கேன்.!

ஸ்பெக்டரமை  சி.பி.ஐ. ஆராய்ஞ்சதை விட அதிகமா ஆராய்ஞ்சி கிழித்திருக்கும் உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்!!

அடிப்படையான கேள்விகள் என்பதால் ஒதுக்கிவிடாமல் என்னைப் போன்ற பாமரனுக்கு புரியும் படி விளக்கிச் ( ஸபீனா பவுடர் போட்டாலும் ஓக்கே...விம் பார் போட்டாலும் ஓக்கே.!!!) சொன்னால் நலம்!

2 ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன? அது செல்போன் கண்டுபிடிச்சாப்ல இருந்தே இருக்கா? இல்லன்னா அதுக்கு முன்னாடி எப்படி செல்போன் உபயோகிச்சாங்க?

நாம உபயோகப்படுத்தற எல்லா செல்பேசிகளிலும் 2ஜியை உபயோகப்படுத்துறோமா? அப்படீன்னா , அது கரீக்டா இன்னா வேலை செய்யுது?  இல்லேன்னா சுமார் எத்தினி சதவீதம் பேர் 2ஜி உபயோகிப்பாங்க?

ஜி.எஸ்.எம் ந்னா இன்னா? சி.டி.எம்.ஏன்னா இன்னா? அதுக்கும் 2ஜிக்கும் தொடர்ப்பிருக்கா?

இப்ப 3ஜின்னு ஒரு டெக்னாலஜி வந்திருக்கே , இத வச்சி இன்னா பண்ணலாம்.....? 

பல லட்சம் கோடி நஷ்டம்ங்கிறாங்களே.......ராசாவுக்கு முன்னாடி யாரும் 2ஜியே பேசலையா...அதுமூலமா வருசா வருசம் வந்த லட்சக்கணக்கான கோடி ரூவா வருமானத்தை இந்தியா கவுருமெண்டு எந்த பேங்க்க்குல போட்டிச்சி? அதுக்கெல்லாம் எங்க கணக்கு? ( நன்றி , பட்டாபட்டியோட பதிவுல வந்த பின்னூட்டம்!)

ஒரு வேளை ராசாவுக்கு முன்னாடி அந்த ஸ்பெக்டரத்த ஒதுக்கீடு செய்யவே இல்லன்னா ,   பல லட்சம் கோடிக்கு போகும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்யாம அது மூலமா கவுருமெண்டுக்கு வந்த நட்டத்துக்கு யாரு பொறுப்பு?


கடேசியா ஒரு கேள்வி......"ராசாவை" ஒரு கருவியா உபயோகப்படுத்தினாங்கன்னே வச்சிக்கிடலாம்....அவரை உங்களால் தண்டிக்க முடியும்? ஆனா அதுமூலமா பலனடைஞ்ச கார்ப்பரேட் கனவான்களை என்ன செய்யலாம்? ஏன்னா அவுங்களுக்குத்தான் இதில் பெரும்பங்கு.....ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் "ராசா"வை மட்டுமே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பது உண்மையிலேயே சமூகத்தின் மீதான அக்கறையா இல்லை உங்கள் காழ்ப்புணர்வா?

பதில்  சொல்ல் விருப்பமிருந்தா நீங்க சொல்லலாம்....இங்கேயே பின்னூட்டத்திலும் சொல்லலாம்..இல்லை தனிப்பதிவிட்டும் சொல்லலாம்....உங்களை பதிலையொட்டியே நாம் மீண்டும் பேசமுடியும்!!

பதில் படிக்கும்படியும் இருக்கலாம்..இல்லையென்றால் உங்களின் வழக்கமான ஸ்டைலின் நீளத்துக்கும் இருக்கலாம்...படிக்க நான் ரெடி , இந்த ஒருமுறையாவது முழுதும் !!!

ஹிஹிஹி....

ஆவலுடன்

உங்கள் அன்புத்தம்பி...

Friday, February 18, 2011

அரசியற்களம்! முந்தும் திமுக!

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுவதிலும், உங்களையெல்லாம் சந்திப்பதிலும் மகிழ்ச்சி.

நன்று...தமிழகம் மீண்டுமொரு தேர்தலைச் சந்திக்கிறது.....தேர்தல் சூழலில் பெரிதான  விவாதக்களமோ இல்லை விடயங்களே இல்லாமல் வித்தியாசமான தேர்தலாகவே இருக்கிறது...

திமுக, காங்கிரஸ் , பாமக , விடுதலைச்சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஓரணியாக நிற்கின்றன.

இந்த அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி இன்னபல சின்னச்சின்ன கட்சிகள் இடம் பெற வாய்ப்புக்கள் உண்டு.....

அதிமுக அணி இன்றைய சூழலில் குழப்பத்தில் தத்தளிப்பதாகவே தெரிகிறது....பொதுவாக அந்த அணி இப்படி அமையலாம்...

அதிமுக , தேமுதிக , மதிமுக,மூ.மு.க., ம.ம.க,நா.ம.கட்சி,இந்திய குடியரசுக்கட்சி  ,புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள்...!!

திமுகவிற்கு தனது இலவசத்திட்டங்களும் , அங்கிங்கெனாதபடி எங்கும் சீர்திருத்தப்பட்ட கிராமச்சாலைகளும் ,விவசாயக்கடன் தள்ளுபடியும் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.........

காங்கிரஸுக்கோ ராகுலின் வருகையால் உத்வேகம் பெற்றிருக்கும் இளைஞர் காங்கிரஸூம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.....

பாமகவோ பெண்ணாகரம் தேர்தலில் இரண்டாம் இடம்   பெற்ற நம்பிக்கையில் திமுகவுடன் இணைந்து களம் காண்கிறது.

விடுதலைச்சிறுத்தைகளுக்கான வாக்குவங்கி வடமாவட்டங்களில் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதிமுக கணிசமான மாவட்டத்தலைவர்களை திமுகவிடம் இழந்திருந்தாலும் இன்னமும் கூட தனித்துவத்தை  இழந்துவிடவில்லை......இரட்டை இலைக்கான குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியுடன் ஆட்சிக்கெதிரான வாக்குக்களும் நிச்சயமாக கூடுதல் பலமே.

வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் கேப்டன்....ஒருவேளை விஜயகாந்த் அதிமுக அணியில் சேருவாரானால் அவருக்கு தற்போது கிடைக்கும் நடுநிலை வாக்குகள் சிதறிப்போகும் என்பது என் கணிப்பு.....எப்போதுமே இரு கட்சிகளையும் விமர்சித்து "எனக்கு ஒரு வாய்ப்புக்க்கொடுங்க" என்று ஓட்டுக்கேட்கும் விஜயகாந்த் இப்போது இரட்டை இலைக்கு வாக்குச் சேகரித்தால் மக்கள் அதை எங்ஙனம் எடுத்துக்கொள்வார்கள் என்பது  ஆய்வுக்குரியது.!


இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரையும் இழந்து பரிதாப நிலையில் களம் காணும் கட்சி வைகோவின் மதிமுக.....அதிகம் பேசவேண்டிய  நிலையில் அவரும் இல்லை...அவரது கட்சியும்  இல்லை...


எப்போதுமே  அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் முக்குலத்தோரின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கப்போவது புதிய தமிழகத்துடனான கூட்டு என்பது  என்   வத்தலக்குண்டு நண்பரொருவரின் கருத்து....!

ஆக , தமிழகத்தை மூன்று மண்டலமாகப் பிரித்தால்  ஒருவேளை முடிவு எப்படி இருக்கலாம் என்பதற்கான என் கணிப்பு...


சென்னை + வடமாவட்டங்கள்.......

பாமக, வி.சி. பலத்துடன் பாரம்பரிய திமுக வாக்குகளுடன் இலவசத்திட்டங்களும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக திமுக கூட்டணியே இருக்கப்போகிறது...

அதிமுக+தேமுதிக + மக்களின் ஆளுங்கட்சி அதிருப்தி கூட்டணி சர்வநிச்சயமாக சரியான போட்டியைக்கொடுக்கும்...ஒருவேளை தேமுதிகவுடனான கூட்டணி இல்லையென்றால் அனேகமாக அனைத்துத்தொகுதிகளும்  திமுகவிற்கே செல்லும்!

தென்மாவட்டங்கள்...

என்னதான் மூவேந்தர் முன்னேற்றக்கழகமும் , கார்த்திக்கும்,  புதிய  தமிழகமும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டாலும் , தலித்களும் முக்குலத்தோரும் ஒரணிக்கு  வாக்களிப்பதில் சிரமம் இருக்கிறது....ஆனாலும் , அழகிரியின் சமிபத்திய அதிருப்தியும், சரத்குமார்  இணைந்தால் கொண்டுவரும் நாடார் ஓட்டுக்களும் அதிமுக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பிலிருப்பதாக கணிக்க வைக்கிறது.....

ஒருவேளை அழகிரி பார்முலா முழுவீச்சில் வேலை செய்தால் சரிசமமான போட்டி இருக்கலாம்.......கிராமங்கள் நிறைந்த இந்த பெல்ட்டில் ஸ்பெக்டரமோ ஊழலோ தேர்தல் விடயமாக இருக்கப்போவதில்லை என்பதுவும்  ஒரு கூடுதல்  பாயிண்ட்.

கொங்குமண்டலம்...

எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவான இந்த மண்டலம் இம்முறை எப்படி இருக்கப்போகிறது...

அதற்குமுன் செல்லுமுன் கடந்த தேர்தலைவிட மாறுபட்ட காட்சியொன்று இங்கே இருக்கிறது...இப்போது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியொன்று வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது....ஆரம்பித்த ஒரே வருடத்தில் அனேக பாராளுமனறத்தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளை வாங்கிக்குவித்த கட்சியான இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...

ஒட்டுமொத்த தமிழகத்தில் இன்றைய சூழலில் மிகவும் முன்னேறிய சமுகமாகவும் , பொருளாதார வளம் மிக்கவர்களாகவும் கருதப்படும் கவுண்டர்களின் கடசி எந்தக்கூட்டணியில் இடம்பெறும் என்பதையிட்டு முடிவுகள் மாற வாய்ப்புண்டு...

ஒருவேளை கொமுக ,  திமுக கூட்டணியில் இடம்பெறுமானால் சரிசமமான போட்டியே  நிலவும்.....தனித்து நிற்குமானால் அது ஆட்சிக்கெதிரான வாக்குக்களைப் பிரிப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கே  சாதகமாக இருக்கும்.......கொங்குமண்டலத்தின் அனேக சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிமுகவினர் என்பதும் அவர்களின் பாலான  அதிருப்தியும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ் ஆக அமையும்...கொங்கு மண்டலத்தின் தலித்களின் பெருமபாலானவர்கள் அருந்ததியர் என்பதுவும் அனேகர் அதிமுக ஆதரவாளர்கள் என்பதுவும் தெரிந்த ஒன்றே. அவர்களுக்கான உள் ஒதுக்கீடு ம், செம்மொழி மாநாடும் திமுகவிற்கு கணிசமாக வாக்குக்களை பெற்றுத்தரும் என்பதுவும் என் கணிப்பு!

ஒருவேளை அதிமுக, தேமுதிக , மதிமுக ,கொமுக இணைந்தால் கொங்கு மண்டலத்தில் இலை மலருவதைத் தவிர்க்க முடியாது...!!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பற்றிய பெரிதான அரசியல் அறிவு எனக்கு இல்லை.

வடமாவட்டங்களில் திமுக முந்துவதும், தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில்  சரிசமமான போட்டியும் தற்சமய நிலவரமே...

கூட்டணிக்கணக்குகள் மாறும்போது கணிப்பும் மாறும்..அணிகள் இறுதியாகும்போது இன்னொருமுறை அலசுவோம்...