Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

Tuesday, October 04, 2011

நாங்கள் வெல்வோம்!

பொய்களாலும் , புரட்டுக்களாலும் மக்களின் மனதில் அம்மா ( யாருக்கு? ) வைப் பற்றி எழுதிய வார்த்தைகள் பொய்யாய்ப் போயின...தினமலர் தினமணி போன்ற அவா பத்திரிக்கைகள் மின்வெட்டு பற்றியோ , சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு பற்றியோ பேச முடியாமல் எதையோ தின்ற எதுவோ போன்று பேச முடியாமல் தவிக்கின்றன. மக்களை முட்டாளாக்கி ஓட்டுக்களை வேட்டையாடிய புரட்டுக்கட்சிகள் இன்று நெல்லிக்காய் மூட்டை போல சிதறிப்போயின.

சமச்சீர்க் கல்விக்குச் சமாதி....தலைமைச்செயலகக் கட்டிடம் வீணடிப்பு...கலைஞர் காப்பீட்டுத்திட்டம் காவு.........குடிசை விட்டை கான்கிரிட் வீடாக மாற்றும் திட்டம் அம்பேல்.....இப்படி அரிய சாதனைகளால் ஐந்து மாதங்களிலேயே அதிமுக ஆட்சி மக்களுக்கு கசந்து போனது......

பொடிப்பொடியாக கலைகிறது ஸ்பெக்டரம் மேகம்....எப்படி எதை எங்கே நடக்கவே நடக்காத ஒரு ஊழலை நிருபிப்பது என்று சிபிஐ தவிக்கிறது....

வெளிமாநிலங்களிலிருந்தும் , தனியாரிடமிருந்தும் மினசாரத்தை கழக ஆட்சி வாங்கியபோது , வெடித்த ஜெயலலிதா இன்று அதே திசையில் செல்கிறார்..........இது என்ன அநியாயம்? 2012 ல் மின்சார தட்டுப்பாடு நீங்குமாம்....எப்படி? திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அப்போதுதான் பலனுக்கு வரும்...அதை அதிமுக அறுவடை செய்யும்...!!!

மக்கள் விழித்துக்கொள்வார்கள்... தன்னிகரற்ற தொண்டர் பலம் கொண்ட திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்......

நாங்கள் வெல்வோம்...........தேர்தல் பற்றியதல்ல இந்த அறிவிப்பு...மக்கள் மனங்களை கூடிய விரைவில் நாங்கள் வெல்வோம்!!!!

திமுக மீதான பொய்யான அவதூறுகள் நீங்கும் காலம் வரும்...

காத்திருப்போம்!!!!!!! கதைமுடிப்போம்!!!!


Thursday, August 25, 2011

அதிமுக ஆட்சியின் முதல் நூறு நாட்கள்!

இந்நாட்டின் மன்னர்களாகிய மக்களும் ,
சனநாயகத் தூண்களாகிய தின, வார, மாதப் பத்திரிக்கைகளும் ,
ஊழல், அராஜக , குடும்ப ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியாளர்களும்,
அரசியலில் சினிமாவா? அரசியல்வாதிகள் சினிமா எடுப்பதா என்று அன்றாடம் அராஜகத்திற்கெதிராக பொங்கியெழுந்த புது இளைஞர்களும்
வேண்டி விரும்பி , தாழ்மையுடன் கொண்டுவந்த அதிமுக ஆட்சிக்கு ஆயுசு நூறு நாள் ஆகிறது.!!

இதுவரை ஊழலே செய்திருக்காத ' அம்மா ' அவர்களே நீங்கள் தான் இந்த தமிழ்த்திருநாட்டை தங்கவளம் கொழிக்கச் செய்ய வேண்டும் என்று 'ஊரான் காசில் வாங்கிக்கட்டிய கொடநாட்டு' மாளிகையில் உடன்பிறவா சகோதரி சகிதம்  உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி வந்து முதலமைச்சராக்கி ஆயிற்று ஒரு நூறுநாள்.

இதுகாறும் பொதுச் சொத்துக்களையே அபகரித்திருக்காத புரட்சித்தலைவி 'டான்சி' புகழ் ஜெயலலிதா அவர்களின் சிறுதாவூர் பங்களா முன் 'நில அபகரிப்புப் போராட்டம் நடத்தி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி மகிழ்ந்த கம்யூனிஸ்டுகளின் ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டம் வெற்றியடைந்து ஆகிறது நூறு நாள்.!!

குடும்ப ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் , மனைவி மச்சினன் சகிதம் வாளெடுத்துப் போராடிய சினிமாச் சிங்கம் விஜய்காந்த் எதிர்க்கட்சி ஆகி ஆகிறது நூறு நாள்.!!

அளவிட முடியாத சாதனைகளை , அள்ளிட முடியாத நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த நூறுநாட்களை மறந்திட முடியுமோ? மக்களின் மனதில் பசுமரத்தாணியாய பதிந்து கிடக்கும் அம்மாவின் அரிய சாதனைகளைச் சொல்லிட இந்த வலைப்பூதான் போதுமோ?

தலைமைச்செயலகத்தைத் தரிசாக்க பல நூறு கோடி  பணம் வீண்.....அம்மா ஆட்சியைத்தவிர வேறெந்த மடையன் ஆட்சியில் இது போன்று மக்கள் பணம் வீணடிக்கப்படும்?இஃதொன்று போதாதா அம்மாவின் ஆட்சிசிறப்பிற்கு?

சமச்சீர் கல்வி புத்தகம் சரியில்லையென்று  2மாதம் பள்ளிக்குழந்தைகளின் படிப்பை வீண்டித்த அம்மாவைப்போன்ற அற்புத சக்தியைத் தவிர வெறெவரால் முடியும்?



ஆண்டாண்டுகாலமாய் இருந்த மின்வெட்டை ஆட்சிக்கு வந்தவுடன் ச்சூ மந்திரக்காளி போட்டு தீர்த்துவைத்த பெருமையைத் தான் என் சொல்வது?

அகில பாரதமும் பாராட்டும் வண்ணம் , சிவில் வழக்குகளுக்காக அதில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் கைது செய்யும் அரசியல் சாசனத்திற்கெதிரான செயல்கள் அம்மாவின் ஆட்சி தவிர வேறெங்கும் நடப்பதற்கான வாய்ப்புதான் ஏது?

அடிப்படைச் சட்ட ஞானம் இல்லாமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தவறுதான் என்று அரசு வழக்கறிஞ்ரே ஒத்துக்கொள்ளும் அளவிற்கு பெருமைமிகு அமைச்சர்களைக் கொண்ட துக்ளக் அரசின் சாதனைகளைத்தான் என்னென்பது?

அதிகாரிகளை சேலத்திலிருந்து மாற்றலாகி சென்னைக்குச் ரயிலேறி போய்ச் சேருவதற்குமுன் மதுரைக்கு மாற்றியடிக்கும் கோமாளிக்கூத்துக்களின் பெருமைகளைத்தான் என்னவென்று சொல்லிச் சொல்லிப் புகழ்வது?

ஈழத்தாய் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றி அகில உலகையும் திரும்பிப்பார்க்க வைத்து புரட்சித்திலமான பெருமையைப் பற்றி ஸ்பெஷல் பதிவே போடலாம்!!

நில அபகரிப்பு அவசரச் சட்டத்தை அதிமுக சொம்புகளுக்கு மட்டும் செல்லாததாக்கிச் செய்த புரட்சி பற்றி பேசினால் இன்னொரு நூறு ஆள் ஆகிவிடும்!!!

ஆக, வளமும்  , செல்வமும் கொழிக்கும் இந்த மாதம் மும்மாரி பெய்யும் அதிமுக அம்மா ஆட்சிக்கு நூள் ஆகிறது......

ஆட்சிக்கு மட்டுமா நூறு நாள்....அம்மாவின் சொத்துக்குவிப்பு  வழக்கிலும் தான் நூறு வாய்தாவுக்கு மேல் ஆகிறது...

மென்மேலும் ஓங்குக அம்மாவின் புகழ்....
வளர்க அம்மாவின் செல்வம் ( சிறுதாவூர் , கொடநாட்டு , ஹைதராபாத் திரடசை தோட்டத்தையும் தாண்டி....)

வாழ்க மக்கள்...வளர்க மக்களாட்சி.........

Monday, June 06, 2011

திமுகவினருக்கு புத்துணர்வூட்டிய திருவாரூர்!

திட்டுங்கள்....உங்கள் வசவுகளெல்லாம் வாழ்த்துக்களாக எங்களுக்கு மாறும் என்றார் கலைஞர் ஒருமுறை. கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது தேர்தல் முடிவிற்குப் பிறகு. வெற்றி தோல்வி என்பது அரசியலில் எப்போதும் இருப்பதுவே. இருந்தாலும் தமிழக மக்கள் இந்த முறை தந்த தோல்வி என்பது செயற்கையானது....

ஒட்டுமொத்த நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகள் அனைத்துமே கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியத் தலைப்பட்டன. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியிருக்கிறார்கள்.. நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!

நேற்று திருவாருரில் நடந்த நன்றியறிவிப்புக் கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது...ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போதுதான் திமுக தொண்டன் வீறுகொண்டு எழுகிறான் என்பதைக் காட்டியது திரண்டிருந்த மக்கட்படை.!! சற்றேறக்குறைய மாநாடு போல் திரண்டிருந்த கூட்டத்தில் , வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி உணர்ச்சி பொங்க , எல்.கணேசன் சொன்னபோது நிகழ்ந்த கைதட்டல் விண்ணைப் பிளந்தது.!

திமுக உயிர்ப்புள்ள இயக்கம்...தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல அது...இன்றல்ல , ஆரம்பகாலம் தொட்டே அதன் உயிர்நாடி அதன் தொண்டர்கள்...அதற்கு அழிவென்று நினைப்பவன் காண்பது பகற்கனவு.....

நகைச்சுவையுணர்வோடு பேசிய பொன்முடி அவர்கள் சமச்சீர் கல்வி பற்றி தெளிவாக விளக்கினார். ஏன் அது கொண்டு வரப்பட்டது , எத்தகைய ஆய்வுக்களுக்குப் பின்னர் அது கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அவர் விளக்கினார். அத்தோடு இன்னொரு கேள்வியையும் சவாலாக வைத்தார்..."ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் சமச்சீர் கல்வி பற்றி விவாதிக்கத் தயார்....அவரால் முடியுமா? "

சில சவால்களும் , கேள்விகளும் எப்போதுமே திமுக முகாமில் இருக்கின்றன. ஆனால் , எதிர்முகாமில் தான் அதற்கான பதில்கள் எப்போதும் வருவதில்லை.!!

எப்போதும் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர் கலைஞர் , அதைப் பாராட்டாத பத்திரிக்கைகள் ஏதேனும் ஒருநாள் மக்களோடு மக்களாக செயலலிதா சென்றதைப் பாராட்டியதை இடித்துரைக்க தவறியதைச் சுட்டினார் அவர்..

பதவியேற்று பதினைந்து தினங்களுக்குள்ளாகவே பல்வேறு மக்களின் சிந்தனையை மாற்றும் விதமாக , செயலலிதாவின் துக்ளக் தர்பார் இருப்பதைச் சுட்டினார் திருச்சி என் சிவா..
தலைமைச்செயலகப் புறக்கணிப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்பதை சுவைப்படத்தெரிவித்தார் திரு.கே.என்.நேரு....

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவிற்கு அல்ல , மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , செம்மொழி நூலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , புதிய தலைமைச்செயலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , சமச்சீர் கல்விக்கு ஏற்பட்ட தோல்வி , வீடுகட்டும் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , கலைஞர் காப்பீட்டுத்திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றார் திரு.பரிதி இளம்வழுதி.

கலைஞர் மிகவும் சோர்வுற்றிருந்தார் என்பது பேச்சில் தெரிந்தது.......இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் அரசைக் கண்டித்தார்.....கவர்னர் அறிக்கையைக் கூட சரியாக அச்சடிக்கத் தெரியாத இந்த அரசா 'தமிழ்' மொழியை வளர்க்கப்போகிறது என்றார். 'பேரறிஞர்' என்பதற்கு பதிலாக 'பேராறிஞர் என்று அச்சடித்திருப்பதை அவர் சுட்டியதும் எழுந்த சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று....

அதிமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து நிகழ்ந்த குற்றச்செயல்களை பட்டியிலட்ட பிறகு அவர் சொன்ன கருத்துதான் அவரின் அரசியல் பெருந்தன்மையைக் காட்டியது!

இக்குற்றச்செயல்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை....எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் இருக்கும் என்றுதான் சொல்கிறேன்.....அதை சரிசெய்யவே , காவல்துறையும் , நீதிமன்றமும் இருக்கின்றன....ஆனால் , என்னவோ திமுகதான் அதைச் செய்கிறது என்று பத்திரிக்கைகள் திசைதிருப்பின என்றார்.

என்மீது , என் குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களால் திமுகவை அழிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்று சொன்ன அவர் ."மாற்றம்" வேண்டும் என்ற குரல் மாறவே மாறாது...நாளை நம்மிடமே மாற்றம் வேண்டும் என்று மக்கள் வருவார்கள் என்றும் சொன்னார்.

திமுகவினர் மக்களிடம் இருந்து சொத்துக்களைச் சூறையாடியாதாகவும் அதை திரும்பப்பெறுவோம் என்று  கவர்னர் அறிக்கையில் சொல்லப்பட்டத்தை வரவேற்பதாகவும் , அதில் சிறுதாவூரையும் சேர்த்தால் மகிழ்வேன் என்றும் தனக்கேயுரிய பாணியில் அவர் சொன்னபோது கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

கலைஞர் மிகவும் வருந்திச் சொன்ன ஒரு விடயம் ' குடிசை வீடுகளை கான்க்ரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கிடப்பில் போட்டதையொட்டித்தான். தேர்தலில் தோற்றபோது கொடுக்காத வேதனை இத்திட்டம் நிறுத்தப்பட்ட போது வந்ததென்று சொன்ன அவர் , இத்திட்டம் கூடகோபுரங்களில் வாழ்பவர்களுக்கு அல்ல , குடிசையில் வாழும் பாட்டாளிகளுக்கு...அதைக்கூட நிறுத்திவிட்டார்களே என்று வருந்திய போது கூட்டத்தில் மயான அமைதி...

மொத்தத்தில் டன் டன்னாக திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு பொதுக்கூட்டமாகவே திருவாரூர் பொதுக்கூட்டம் முடிவுற்றது....தேர்தலில் தோற்றதும் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ள திமுக ஒன்றும் அதிமுக அல்லவே...அது எப்போதும் போல மக்கள் இயக்கம்...மக்களோடு மக்களாக நிற்கின்ற இயக்கம்.......

Monday, May 16, 2011

திராவிட முன்னேற்றக் கழகம்.

கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு அகமகிழ்ந்து போகிறார்கள் அதிமுகவினரும் , தேமுதிகவினரும்...கொண்ட நோக்கம் நிறைவேறிய காரணத்தால் தினமணி தலையங்கம் தீட்டித்தீட்டி பெருமிதப்பட்டுக்கொள்கிறது..... இனி இனிப்பு ஆட்சி என்று தினமலர் செய்தி போட்டு தம் வாசகர் பரப்பை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது....


ராஜபக்சேவை கூண்டிலேற்றுவோம்...ஆனால் அதே சமயம் மாநில ஆட்சியால் மட்டும் எதுவும் செய்ய முடியாது என்கிறார் ஜெ..வாழ்த்துக்கள் ஈழத்தமிழரிடத்தில் இருந்து குவிகிறது.


இராமநாராயணன் பதவி விலகுகிறார்.......புதிய தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு...நடிகர் விஜய் புரட்சித்தலைவியையும் , புரட்சிக்கலைஞரையும் வாழ்த்துக்களால் குளிப்பாட்டுகிறார்....

சில பதிவர்கள் திமுக தமிழகத்தில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதாக சந்தோஷம் கொண்டு , இனி மூன்றாம் இடத்தையாவது திமுக தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று அக்கறை கொள்கிறார்கள்...

இனி கனிமொழிக்கு 'களி'தான் என்று மூத்த அரசியல்வாதிகள் சந்தோஷப்படுகிறார்கள். புதிய தலைமைச்செயலகம் வேக வேகமாகக் காலி செய்யப்படுகிறது...பழைய 'புனித ஜார்ஜ்' கோட்டை பட்டை தீட்டப்படுகிறது.....ஆட்சி மாறினால் அனைத்தும் மாறத்தான் வேண்டும் என்ற எழுதப்படாத ஜனநாயக விதி இங்கு நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.

சோனியாவும் , மன்மோகனும் , ப.சிதம்பரமும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச்சொல்ல க்யூ கட்டுகிறார்கள்...பெரிசுகள் அல்லது பெரிய பதிவர்கள் திமுகவின் நிலை கண்டு பரிதாபப்படுகிறார்கள்...

திமுக அழிந்து போனது என்று அழிக்கத்துடிப்பவர்கள் அகமகிழ்ந்து போகிறார்கள்....இவர்கள் மகிழ்ந்து போகும்படியா , பரிதாப்படும் படியா திமுக இருக்கிறது?


1991 தேர்தலில் 'ராஜிவ் காந்தியைக்கொன்றது திமுகதான் என்ற பொய்ப்பிரசாரத்திற்கு மயங்கிய மக்கள்  ஜெயலலிதாவிற்கு ஆதரவை அள்ளித்தந்தார்கள்.


இரண்டே இரண்டு எம்.எல்.ஏக்கள் கழகத்திற்கு...ஒருவர் கலைஞர் , பிரிதொருவர் பரிதி இளம்வழுதி....கலைஞர் பிற்பாடு தன் பதவியை இராஜினாமா செய்தார். பரிதி இளம்வழுதி தனி ஒருவராக சட்டமன்றத்தில் இருந்தார்... அப்போதும் கழகம் எதிர்க்கட்சி அல்ல......அதிமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரஸே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தது.


வரலாற்றை மறந்த சிலர் திமுக மூன்றாமிடத்திற்கு முதல் முறையாக தள்ளப்பட்டது என்ற போலித்தோற்றத்தை உருவாக்கி மகிழ்கிறார்கள்....வருங்காலத்தில் தேமுதிக தலைமையிலான அணியில் திமுக சேருமா என்ற விவாதத்தை சூடாகப் பேசி மகிழ்கிறார்கள்....


கழகத்திற்கு தோல்வி புதிதல்ல...ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெற்றியை விடத் தோல்வியையே அதிகம் சுவைத்திருக்கிறது....


ஐந்தாண்டு காலமும் கொடநாட்டில் இருந்துகொண்டே அறிக்கையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவருக்கு தமிழக மக்கள் அதீத பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையை உடன்பிறப்புக்கள் உணர்கிறார்கள்....தவறை மக்கள் மீது போட்டுத் தப்பித்துக்கொள்ள உடன்பிறப்புகளொன்றும் 'குஷ்பு' அல்ல...


நலத்திட்டங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்ததொரு குறைபாடு......ஈழத்தமிழர் நிலையின் பால் திரிசங்கு நிலை இன்னொரு குறைபாடு......தம் கையில் எதுவுமில்லை மின்வெட்டு ஒரு குறைபாடு......பலமேதுமில்லாத காங்கிரசுக்கு தொகுதிகளை அள்ளிக்கொடுத்ததொரு குறைபாடு...வெண்கலக் கடை பாத்திரங்களைப் போல ஒட்டாத தலைமை கொண்ட காங்கிரசுடன் கொண்ட கூட்டணி ஒரு குறைபாடு....


வட இந்திய , தென் இந்திய ஆரிய , பார்ப்பன பத்திரிக்கைகளின் அதீத திமுக எதிர்ப்பே அவர்களின் அதீத திமுக எதிர்ப்பு பிரச்சாரமே திமுகவின் மீதான மக்களின் கருத்து மாற்றத்திற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..எனினும் அவைகள் அப்படித்தான்...மாறப்போவதில்லை..மாற்றவும் இயலாது ....


மாற்றிக்கொள்ள வேண்டியது எம்மையே....எமது செய்லதிறன் மிக்க உடன்பிறப்புக்கள் இந்தத் தோல்வியைக் கண்டு துவண்டு போய்விடுவார்கள் என்று பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சியினரும் நினைப்பார்களாயேனில் அவர்கள் ஏமாந்து போவர்...இன்றிலும் , திமுக அணிக்கு விழுந்த ஓட்டுக்களில் 90 சதம் கழகத்தினரின் ஓட்டே....அதன் வாக்குவங்கியை தகர்க்க எம்.ஜி.ஆரிலிருந்து ஜெயலலிதா வரை முயன்று கொண்டே இருக்கிறார்கள்.....ஆனால் ஒவ்வொரு முறையும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்....

இது இன்னொரு முயற்சி...பல முனைத் தாக்குதல்கள் இருந்தாலும், ஊடகங்களின் மிதமீறிய அதிமுக ஆதரவுப் பிரச்சாரத்தின் இடையிலும் போட்டியிட்ட தொகுதிகளில் 25 சதவித வெற்றியை திமுக பெற்றிருக்கிறது.


அதனால் , திமுகவை நிலையைப் பார்த்து யாரும் ஒப்பாரி வைக்கவும் வேண்டியதில்லை..பிழைக்குமோ பிழைக்காதோ என்ற போலி கரிசனமும் தேவையில்லை. திமுக ஒன்றும் தேர்தலுக்கு தேர்தல் மக்களைப் பார்க்கும் கட்சியல்ல..எப்போதும் மக்களிடமே இருக்கும் கட்சி...இடையில் சிலபல நிகழ்வுகளால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. தவறுகளை எப்போதும் சரி செய்து கொள்வதால் தான் இன்னமும் 20 வயதொத்த பல இளைஞர்களை கட்சியில் கொண்டிருக்கிறது.ஆரம்பித்து அரை நூற்றாண்டானாலும் இன்னமும் தன் இளமையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது...


மக்கள் அதிமுக என்னும் கட்சியை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்...நல்லது அவர்கள் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடுப்பது சனநாயகத்தின் மூலக்கூறு...!!!


அதிமுக இதுவரை ஆண்ட 25 வருடங்களில் ஒட்டுமொத்தமாக எந்தவித சாதனையையும் நிகழ்த்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.........குறிப்பாக ஜெ.அ.தி.மு.க சாதித்தவைகள் என்று எதையுமே சொல்லமுடியாது என்பதை அக்கட்சிக்காரர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.... 

இதை முந்தைய ஒரு பதிவிலேயே சுட்டியிருந்தோம்!

இனிமேலாவது ஏதாவது செய்து மக்கள் நலப்பணிகளில் திமுகவின் சாதனைகளை முறியடிக்க முயல வேண்டும்.....திமுகவிற்கு மாற்றாக இருக்கும் கட்சிக்கான தகுதி அப்போதுதான் அதிமுகவிற்கு கிடைக்கும் என்பதே நமது ஆசை.


ஆனால் , ஜெ.அ.தி.முக.விடம் அதற்கான நோக்கம் கூட இல்லையென்பதையே புதிய தலைமைச்செயலக புறக்கணிப்பு காட்டுகிறது!!!!

வாழ்க தமிழர்கள்....வளர்க தமிழகம்!

Wednesday, February 23, 2011

சொத்துக்குவிப்பு வழக்கில் தப்பிக்க அதிமுக நீதிபதியிடம் பேரம்?

மக்கள் திமுக  ஆட்சி மீது வெறுப்பாக இருக்கிறார்கள்...ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான்.......ஊழலற்ற ஆட்சிக்கு அப்பழுக்கற்ற புரட்சித்தலைவிதான் வேண்டும் என்று வலையுலக இரத்தத்தின் இரத்தங்களும் , இன்னபல வலையுலகப் புரட்சியாளர்களும் , பத்திரிக்கைகளும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்...

அவர்களுக்கெல்லாம் "டான்சி" நிலம் பற்றியோ இல்லை பிற ஊழல்களைப்  பற்றியோ நாம் சொல்லி அப்பழுக்கற்ற  புரட்சித்தலைவியை அவமானப்படுத்துவது நம் நோக்கமல்ல..

அத்தகைய ஊழல்களிலிருந்து வெளியே வர  அம்மாவின்  தொண்டர் திரு.மைத்ரேயன் அவர்கள் ஒருவரிடம் அவர் தான் நீதிபதி  என்று நினைத்து பேரம் பேசியிருக்கிறாராம்....அந்தப் போலி நீதிபதியை  பிடித்துவிட்டார்களாம்...இப்படியொரு செய்தியை தினமலர் வெளியிட்டிருக்கிறது.....


மதுரை: பெங்களூருவில் நடக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க மைத்ரேயன் எம்.பி.,யிடம் பேரம் பேசிய போலி நீதிபதி முத்து விஜயகுமார் (52) மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த இவர், மேலூர் கோர்ட்டில் ஜூனியர் பெய்லீப்பாக பணியாற்றுகிறார். கடந்த 2006ல், எழுமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவின் மகன், மருமகனுக்கு மதுரை கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 45 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்தார். இவரை மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜேசுஜெயபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்ட போது, வேலை மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான 15 விண்ணப்பங்கள், மூன்று மொபைல் போன்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முகவரி, போன் எண்கள் கொண்ட புத்தகம், கார் "சைரன்' இருந்தது. அவரை தீவிரமாக விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், கமிஷனர் பாரி உத்தரவிட்டனர்.

எம்.பி.,யிடம் பேச்சுவார்த்தை: கடந்த ஜனவரியில், அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, "நான் நீதிபதி தினகரன் பேசுகிறேன். ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து தருகிறேன்' என முத்து விஜயகுமார் பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து 10 நாட்களில் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.நன்றி : தினமலர்

அவர் பேசியதாலேயே ஜெயலலிதா புழக்கடை  வழியாக வெளியே வர முயற்சிக்கிறார் என்று  நாம் சொல்லவில்லை...ஆனால், அத்தகைய பேர்வழியிடம் தொடர்ந்து நான்கு முறை திரு.மைத்ரேயன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ( தெரிந்து இவ்வளவு...தெரியாதது???) என்றால் அதுபோன்ற முயற்சிகளில் அம்மாவின் ஆதரவின்றி எப்படி முடியும் என்பதே நமது கேள்வி!!!!

சிக்கிக்கொண்டது போலி நீதிபதி மட்டும்தானா?

Friday, February 18, 2011

அரசியற்களம்! முந்தும் திமுக!

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுவதிலும், உங்களையெல்லாம் சந்திப்பதிலும் மகிழ்ச்சி.

நன்று...தமிழகம் மீண்டுமொரு தேர்தலைச் சந்திக்கிறது.....தேர்தல் சூழலில் பெரிதான  விவாதக்களமோ இல்லை விடயங்களே இல்லாமல் வித்தியாசமான தேர்தலாகவே இருக்கிறது...

திமுக, காங்கிரஸ் , பாமக , விடுதலைச்சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஓரணியாக நிற்கின்றன.

இந்த அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி இன்னபல சின்னச்சின்ன கட்சிகள் இடம் பெற வாய்ப்புக்கள் உண்டு.....

அதிமுக அணி இன்றைய சூழலில் குழப்பத்தில் தத்தளிப்பதாகவே தெரிகிறது....பொதுவாக அந்த அணி இப்படி அமையலாம்...

அதிமுக , தேமுதிக , மதிமுக,மூ.மு.க., ம.ம.க,நா.ம.கட்சி,இந்திய குடியரசுக்கட்சி  ,புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள்...!!

திமுகவிற்கு தனது இலவசத்திட்டங்களும் , அங்கிங்கெனாதபடி எங்கும் சீர்திருத்தப்பட்ட கிராமச்சாலைகளும் ,விவசாயக்கடன் தள்ளுபடியும் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.........

காங்கிரஸுக்கோ ராகுலின் வருகையால் உத்வேகம் பெற்றிருக்கும் இளைஞர் காங்கிரஸூம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.....

பாமகவோ பெண்ணாகரம் தேர்தலில் இரண்டாம் இடம்   பெற்ற நம்பிக்கையில் திமுகவுடன் இணைந்து களம் காண்கிறது.

விடுதலைச்சிறுத்தைகளுக்கான வாக்குவங்கி வடமாவட்டங்களில் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதிமுக கணிசமான மாவட்டத்தலைவர்களை திமுகவிடம் இழந்திருந்தாலும் இன்னமும் கூட தனித்துவத்தை  இழந்துவிடவில்லை......இரட்டை இலைக்கான குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியுடன் ஆட்சிக்கெதிரான வாக்குக்களும் நிச்சயமாக கூடுதல் பலமே.

வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் கேப்டன்....ஒருவேளை விஜயகாந்த் அதிமுக அணியில் சேருவாரானால் அவருக்கு தற்போது கிடைக்கும் நடுநிலை வாக்குகள் சிதறிப்போகும் என்பது என் கணிப்பு.....எப்போதுமே இரு கட்சிகளையும் விமர்சித்து "எனக்கு ஒரு வாய்ப்புக்க்கொடுங்க" என்று ஓட்டுக்கேட்கும் விஜயகாந்த் இப்போது இரட்டை இலைக்கு வாக்குச் சேகரித்தால் மக்கள் அதை எங்ஙனம் எடுத்துக்கொள்வார்கள் என்பது  ஆய்வுக்குரியது.!


இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரையும் இழந்து பரிதாப நிலையில் களம் காணும் கட்சி வைகோவின் மதிமுக.....அதிகம் பேசவேண்டிய  நிலையில் அவரும் இல்லை...அவரது கட்சியும்  இல்லை...


எப்போதுமே  அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் முக்குலத்தோரின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கப்போவது புதிய தமிழகத்துடனான கூட்டு என்பது  என்   வத்தலக்குண்டு நண்பரொருவரின் கருத்து....!

ஆக , தமிழகத்தை மூன்று மண்டலமாகப் பிரித்தால்  ஒருவேளை முடிவு எப்படி இருக்கலாம் என்பதற்கான என் கணிப்பு...


சென்னை + வடமாவட்டங்கள்.......

பாமக, வி.சி. பலத்துடன் பாரம்பரிய திமுக வாக்குகளுடன் இலவசத்திட்டங்களும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக திமுக கூட்டணியே இருக்கப்போகிறது...

அதிமுக+தேமுதிக + மக்களின் ஆளுங்கட்சி அதிருப்தி கூட்டணி சர்வநிச்சயமாக சரியான போட்டியைக்கொடுக்கும்...ஒருவேளை தேமுதிகவுடனான கூட்டணி இல்லையென்றால் அனேகமாக அனைத்துத்தொகுதிகளும்  திமுகவிற்கே செல்லும்!

தென்மாவட்டங்கள்...

என்னதான் மூவேந்தர் முன்னேற்றக்கழகமும் , கார்த்திக்கும்,  புதிய  தமிழகமும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டாலும் , தலித்களும் முக்குலத்தோரும் ஒரணிக்கு  வாக்களிப்பதில் சிரமம் இருக்கிறது....ஆனாலும் , அழகிரியின் சமிபத்திய அதிருப்தியும், சரத்குமார்  இணைந்தால் கொண்டுவரும் நாடார் ஓட்டுக்களும் அதிமுக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பிலிருப்பதாக கணிக்க வைக்கிறது.....

ஒருவேளை அழகிரி பார்முலா முழுவீச்சில் வேலை செய்தால் சரிசமமான போட்டி இருக்கலாம்.......கிராமங்கள் நிறைந்த இந்த பெல்ட்டில் ஸ்பெக்டரமோ ஊழலோ தேர்தல் விடயமாக இருக்கப்போவதில்லை என்பதுவும்  ஒரு கூடுதல்  பாயிண்ட்.

கொங்குமண்டலம்...

எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவான இந்த மண்டலம் இம்முறை எப்படி இருக்கப்போகிறது...

அதற்குமுன் செல்லுமுன் கடந்த தேர்தலைவிட மாறுபட்ட காட்சியொன்று இங்கே இருக்கிறது...இப்போது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியொன்று வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது....ஆரம்பித்த ஒரே வருடத்தில் அனேக பாராளுமனறத்தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளை வாங்கிக்குவித்த கட்சியான இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...

ஒட்டுமொத்த தமிழகத்தில் இன்றைய சூழலில் மிகவும் முன்னேறிய சமுகமாகவும் , பொருளாதார வளம் மிக்கவர்களாகவும் கருதப்படும் கவுண்டர்களின் கடசி எந்தக்கூட்டணியில் இடம்பெறும் என்பதையிட்டு முடிவுகள் மாற வாய்ப்புண்டு...

ஒருவேளை கொமுக ,  திமுக கூட்டணியில் இடம்பெறுமானால் சரிசமமான போட்டியே  நிலவும்.....தனித்து நிற்குமானால் அது ஆட்சிக்கெதிரான வாக்குக்களைப் பிரிப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கே  சாதகமாக இருக்கும்.......கொங்குமண்டலத்தின் அனேக சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிமுகவினர் என்பதும் அவர்களின் பாலான  அதிருப்தியும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ் ஆக அமையும்...கொங்கு மண்டலத்தின் தலித்களின் பெருமபாலானவர்கள் அருந்ததியர் என்பதுவும் அனேகர் அதிமுக ஆதரவாளர்கள் என்பதுவும் தெரிந்த ஒன்றே. அவர்களுக்கான உள் ஒதுக்கீடு ம், செம்மொழி மாநாடும் திமுகவிற்கு கணிசமாக வாக்குக்களை பெற்றுத்தரும் என்பதுவும் என் கணிப்பு!

ஒருவேளை அதிமுக, தேமுதிக , மதிமுக ,கொமுக இணைந்தால் கொங்கு மண்டலத்தில் இலை மலருவதைத் தவிர்க்க முடியாது...!!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பற்றிய பெரிதான அரசியல் அறிவு எனக்கு இல்லை.

வடமாவட்டங்களில் திமுக முந்துவதும், தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில்  சரிசமமான போட்டியும் தற்சமய நிலவரமே...

கூட்டணிக்கணக்குகள் மாறும்போது கணிப்பும் மாறும்..அணிகள் இறுதியாகும்போது இன்னொருமுறை அலசுவோம்...

Thursday, May 27, 2010

த. தே. கூவை தடை செய்யக் காரணங்கள் உள்ளன - ஒரு சிங்கள ஏடு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய போதுமான காரணங்கள் இருக்கின்றன என்று ஒரு சிங்கள இணைய ஏடு சொல்கிறது... இந்த "போதுமான" என்ற வார்த்தைக்கு லங்காவெப் அந்த சிங்கள ஊடகம் கையாண்டிருக்கிற அல்லது உதாரணம் காட்டியிருக்கிற சேதி இன்னமும் விசேடம்...

அதாவது , இந்திய நடுவண் அரசு "புலிகளை" தடை செய்ய அல்லது சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் பொருந்துமாம்....

இந்திய அரசு புலிகளை சட்டவிரோத அமைப்பாக அறிவித்ததற்குக் கூறியிருந்த காரணங்களை முழுவதுமாகப் படிக்க இங்கே க்ளிக்கவும்...

சீன அரவணைப்பில் சுகம் காணும் சிறிலங்கா அரசை திருப்திப் படுத்த இந்திய நடுவண் அரசும் , தமிழக அரசும் போட்ட உத்தரவை எடுத்துக்கொண்டு , தமிழீழ மக்களின் ஒரே குரலாக ( அது மட்டுப்படுத்தப்பட்ட , தணிக்கை செய்யப்பட்ட குரலாகவே இருந்தாலும்)  இன்று இலங்கைத் தீவினுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே தமிழருக்கான வாய்ப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சிங்கள் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் எழுதுகிறார் எனில் , சிங்களர்களின் மனப்போக்கு என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்...


ஜனநாயக ரீதியாகக் கூட தமது குரலை எடுத்தியம்ப தமிழர்களுக்கு அனுமதியளிக்கத் தயாராக இல்லை இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களச் சமுதாயம் என்பதை "தில்ருக் கன்னன்கரா" என்ற  சிங்கள எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...



Demonstrations regularly carried out by separatists elements and civil disobedience campaigns TNA has vowed to carry out.  More disquiet and threat is faced by Sri Lanka than by India by these harsh campaigns done under the guise of peaceful protest. Ultra racism associated with these is another grave concern for Lankans.

 விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்றார்கள்....ஏதோ , ஆயுதமெடுத்துப் போராடியது மட்டுமே குற்றமென்பதாகவும் , ஜனநாயக முறையில் போராடி இருந்தால் சுதந்திரத்தை சும்மா தூக்கிக்கொடுத்திருப்பார்கள் என்று சொல்லும் அகிம்சாவாதிகள் இந்த அநியாய வாதம் பற்றி என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும் போலவே இருக்கிறது....

இந்தியா தான் வழிகாட்டுகிறது சிறிலங்காவிற்கு எப்போதும் என்று வேறு சொல்கிறார் கட்டுரையாளர்......அதையும் பார்ப்போம்...

Indian concerns further give rise to yet another important issue that affects Sri Lanka more than India. India illegalized all separatist activity in 1962 whereas it took Sri Lanka another 21 years to follow suit. During this time Tamil separatists passed the Vaddukoddai Resolution in 1976. Had Sri Lanka followed India in 1962 in illegalizing all forms of separatism, this would not have happened.
இந்தியா 1962 லேயே அனைத்து தனிநாட்டுக் கோரிக்கைகளையும் தடை செய்து விட்டதாகவும் , ஆனால் சிறிலங்கா 21 வருடங்கள் கழித்தே அதைச் செய்ததாகவும்  சொல்கிறார்.....

இப்போது சில விடயங்களைப் பார்ப்போம்...

- விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்து விட்டு நிராயுதபாணியாக  "13 வது" சட்டதிருத்தத்தின் மூலம் "வட கிழக்கு " மாகாணங்களைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருந்துவிட வேண்டும் என்று சிங்களத்துக்குச் சார்பான தொரு ஒப்பந்தத்தை திணித்தது இந்தியா.....

- இலங்கை புலிகளைத் தடை செய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே தடை செய்தது இந்தியா..

- புலிகளை ஒடுக்க அனைத்து வகை ஆயுத , இராஜதந்திர உதவிகளைச் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்......அதை இன்று வரை இல்லை என்று நிருபிக்க முடியவில்லை இந்தியாவால்.....குறைந்தபட்சம் , தமிழகத் தமிழர்களின் திருப்திக்காவது நிருபிக்க முயலவில்லை.....லோக்கல் கதர்ச்சட்டைகள் தான் இல்லை இல்லை என்று கூவினார்கள்.......டெல்லி ஏறெடுத்தும் பார்க்கக் காணோம்...

- தமிழினத்திற்கெதிரான யுத்தத்தில் ஐநாவின் , மேற்குலகத்தின் அழுத்தங்கள் அத்தனையையும் குடைபோல நின்று சிங்களத்தைக் காத்தது இந்தியா என்பது உண்மைதானே.....அதன் மூலம் தமிழின அழிவுக்கு இந்தியாவும் காரணமே என்பதுவே தமிழர்களின் வாதம்....

இவ்வாதங்களை மறுக்கவோ , மறைக்கவோ செய்ய இயலாத இந்தியா "புலிகளால்" இந்தியத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் என்று அறிவிப்பது என்பது முறையோ இல்லையோ பிறகு பார்க்கலாம்....அது சிறிலங்காவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவே இருக்கலாம்....காரணம் இந்தியாவை விட்டு சிறிலங்கா சீனாவை தேடிப் போய்க் கொண்டிருக்கிறது...

அதை பன்னாட்டு பொருளாதார இதழான "பைனான்சியல் டைம்ஸ்"ல் இந்திய ஆய்வாளர்  இப்படிக் குறிப்பிடுகிறார்..

"China has been trying to jump in and seize more opportunities in Sri Lanka," says Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research, a New Delhi think-tank.
China was Sri Lanka's biggest source of foreign funding in 2009, providing $1.2bn - almost triple the amount given by the Asian Development Bank, the number two overseas lender

source : financial times

நிலைமை இவ்வாறிருக்க , சிங்களத்தைக் குளிர்விக்க இந்திய இராஜதந்திரிகள் புலிகள் மீது பாய்கிறார்கள்....அதைச் சற்றும் சட்டை செய்யாத சிங்களர்கள் 
இந்தியாவுடனான "செபா " ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்கிறார்கள்.......

President Mahinda Rajapaksa on Tuesday said Sri Lanka would not enter into trade agreements that would have an adverse effect on the country’s economy when he met a group of protestors against the implementation of a comprehensive economic partnership agreement (CEPA) with India.

ஆக , சீனாவிற்கு அம்பாந் தோட்டை துறைமுகம் , அனல்மின் நிலையம் என்று அள்ளிக்கொடுக்கும் சிறிலங்கா "இந்தியாவிற்கு" ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்ததிற்கு "பெப்பே" காட்டுகிறது என்றால் சிறிலங்கா செல்லும் திசையைப் புரிந்து கொள்ளாத இராஜதந்திரிகள் தான் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலைதானே????

அந்த இராஜதந்திரிகள்  , உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மறுப்பது மட்டுமின்றி இன்னமும் புலிப்பூச்சாண்டி காட்டுகிறார்கள்.......காட்டி தமிழக மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்...

அப்படித் திசை திருப்ப முயலும் இந்த இராஜதந்திரிகள் , ஒருவேளை சிங்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு "இந்தியா" சொன்ன அதே காரணங்களுக்காக தடை செய்யப்படுமானால் அதையும் வழிமொழிவார்களா என்பதே நம் கேள்வி......

யாருக்குத் தெரியும் ......த.தே.கூட்டமைப்பும் கூட சட்டவிரோத அமைப்பென்ற கெஜட் அறிவிப்பும் கூட கூடியவிரைவில் வரலாம் என்கிறீர்களா நண்பர்களே???

கோபாலபுரத்தாரின் ஆசியும் , சொக்கத்தங்கத்தின் ஆதரவும் இருக்கும் போது இந்திய இராஜதந்திரிகள் இதைக் கூட செய்ய மாட்டார்களா என்ன????

-கதிரவன்

Monday, May 10, 2010

வக்கற்ற நிலையிலும் மானம் காத்த பார்வதியம்மாள்.!

எண்பது வயதிற்கும் மூத்த உயர்திரு தேசியத்தலைவரின் தாயார் இந்தியா வருவதற்கு மத்திய அரசாங்கம் போட்ட நிபந்தனைகளைப் பார்த்தால் , அது கோபாலபுரத்தில் எழுதித்தரப்பட்டு சொக்கத்தங்கம் சோனியாவின் ஒப்புதலை பெற்றுவந்த ஒன்றாகவே தோற்றமளிக்கிறது....



அந்த  நிபந்தனைகள்:

பார்வதி தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். மருத்துவமனையில் தான் தங்க வேண்டும், வேறெங்கும் அவர் தங்கக் கூடாது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் விரும்பினால், அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

எந்த அரசியல் கட்சியினருடனும் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடன், எந்த தொடர்பும் அவர் வைத்துக் கொள்ளக் கூடாது.

பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே, தொடர்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட  நிபந்தனைகளுடன் நண்பன்  கூப்பிட்டால் கூட போகத்தோன்றாது. இதில் எமது தேசியத்தலைவரைப் பெற்றெடுத்த பார்வதி அம்மையார் அவர்கள் செல்வார்களா என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. இருப்பினும் போக்கிடம் இல்லா ஒரு கேவலமான சூழலுக்கு அவரை நம்  தமிழினத்துரோகிகள் கொண்டு வந்து விட்டார்கள் என்ற உண்மை சுட்டதால் அமைதி காத்தோம்.

ஆனால் , அந்த வீரத்தாய் , இத்தகைய கேவலமான நிபந்தனைகளுடன் இந்தியா வரத்தேவையில்லை என்று இந்தியா அளித்த "விசா"வை தூக்கி எறிந்து இலங்கைக்கே சென்று விட்டார் அவ்வம்மையார்


NEW DELHI/CHENNAI: Parvathi Ammal, mother of slain LTTE chief V Prabhakaran, has rejected the conditions that the Centre has attached to her visit to Tamil Nadu, Home Ministry sources said on Monday.

Parvathi Ammal flew from Malaysia to Sri Lanka on Monday after rejecting the Centre’s conditions for her stay in India. Sources told Express that Parvathi has has gone back to her home in Valvettithurai in Jaffna, where she hopes to live the rest of her life.


இதுகாறும் எமக்கு பெரிதான கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஒருவேளை அப்படியொருவர் இருந்தால் இந்த தமிழகத்தின் ஈனப்பிறப்புக்களை கண்டிப்பாக மன்னிக்கவே மன்னிக்காதீர்கள்....அப்படி மன்னித்தால் , நாங்கள் உங்களின் நேர்மையைக்கூட சந்தேகிக்க நேரிடும்.

வக்கற்ற நிலையிலும் கூட வாய்மை காத்த , வீரம் காத்த , மானம் காத்த பார்வதி அம்மையார் இருக்கும் திசை நோக்கி மனம்  வருந்தி  வணங்குகிறோம்....நாங்கள் எல்லாம் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற துக்கம் பொங்குகிறது.....!!!

நாடுபோற்றும் நல்லதொரு பிள்ளையை பெற்றெடுத்த தாயே , உமது இந்த வலிக்கு இந்த நயவஞ்சகர்கள் பதில் சொல்லும் காலம் வரும்...அதை உங்கள் காலத்திலேயே பார்ப்பீர்கள் என்று மட்டும் சொல்லி விடைபெறுகிறோம். 

Sunday, April 18, 2010

நேர்மையும் , வாய்மையும் அற்ற நிலைகெட்ட மனிதர்கள்.!

பிரபாகரனின் தாயார் அவர்களை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த விடயத்தில் இந்தியாவின் நாணயம் இன்னுமொருமுறை பல்லிளித்தை அனைவரும் அறிவோம். !

அஃதோடு சேர்ந்து இன்னமும் வெகுபலரின் நாணயமும் , நேர்மையும் , வாய்மையும் பல்லிளித்ததை அறிவீரோ? 

தெரிந்த செய்திதான்...அணுகிய கோணம் மட்டுமே வேறு. 

மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி , மக்கள் தொலைக்காட்சியின் மூலம் தமிழ்வளர்க்கும் தமிழர் திரு.இராமதாஸ் "தமிழக அரசு " இதைச் செய்திருக்காது என்று கட்டியம் கூறிவிட்டார். உலக தமிழர்களே, இதுதான் உண்மை என்று ஒத்துக்கொள்வார்கள் இனி...

அடுத்த அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டாகிவிட்டது. நல்லது , 

இவரது அரசியல் அணுகுமுறைதான் பல்லிளித்து விட்டதெனில் , ஈழத்தாய் புர்ட்ச்சி தலைவி தமது கருத்தைக் கூட கூறுவதற்கு நேரமின்றி கொடநாட்டு அலுவல்கள் கொத்துக்கொத்தாய்க் காத்திருக்கின்றன....விட்டுவிடுவோம் பாவம் - அவரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் நமது தவறே. 

மேட்டுமை தாங்கிய கேப்டன் தனது தொலைக்காட்சியின் முழக்கமாக "தமிழ்....தமிழ்" என்று முழங்கிவிட்டு "கேப்டன் டீவி" என்று அழகுத்தமிழில் பெயர் வைத்துக்கொண்டதைப் பற்றி நமக்கொன்றும் கவலையில்லை. ஆனால் வயதான ஒரு மூதாட்டியை / தமிழச்சியைத் திருப்பியனுப்பியது பற்றி கருத்துக்கூறாமல் விடுவதைப் பற்றி கவலைப்படுவதும் , அது குறித்த அரசியல் பார்வையைப் பற்றி கேள்வி எழுப்புவதும் தவறா என்ன? 

 திருமா அவர்களை விட்டுவிடுவோம். அவர் ஏதோ தர்மசங்கடத்தில் இருக்கிறார். பிழைப்புக்கு கூவியாக வேண்டும்....அப்புறம் மறந்து விடுவார். 

இதுகாறும் இதுபற்றி வாய்திறக்காததன் மூலம் , தமிழக அரசுதான் இக்காரியத்திற்கு மூல கர்த்தா என்று சொல்லாமல் சொல்லியாகிவிட்டது..

அடுத்து மிக முக்கிய தலைப்பிற்கு வருவோம்.

புலிகளின் தலைவரின் தாயார் இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வருவதை சிதம்ப்ர ரகசியமாக வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை வைகோவிற்கோ அல்லது நெடுமாறனுக்கோ எங்கிருந்து வந்தது என்பது கூர்ந்து நோக்கவேண்டிய கேள்வி..
அதற்கான பதிலாக அவர்களால் சொல்லப்படுவது " தாயாரின் பாதுகாப்பு...." 

இது சற்றும் சரியானதாகப் படவில்லை. வெகுபலருக்குச் சொல்வதன் மூலம் , அத்தாயாருக்கான ஆதரவு அதிகப்பட்டிருக்குமே ஒழிய , பாதுகாப்பு வலுப்பட்டிருக்குமே ஒழிய எவ்விதத்திலும் அதற்கு குறையிருக்காது.

ஏற்கெனவே , முத்துக்குமாரின் மரணத்தை , அதன் பின்னரான எழுச்சியை வீண்டித்த வைகோவும் , நெடுமாறனும் , திருமாவும் இப்பிரச்சினைக்கும் தக்கதொரு காரணத்தைக் கூறி அல்லது தெருமுக்கில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தத்தமது கடமைகளை முடித்துக்கொள்வர்.

அத்தோடு நாமும் மறந்துவிடுவோம்.


சரி , தமிழகத்தை விடுங்கள்...

புலம்பெயர் தமிழீழ மக்களிடையே ஏதேனும் வலுவான எதிர்ப்புக்குரல் எழும்பியதா?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் , உலகத்தமிழர் பேரவை எனப்படும் குளோபல் தமிழ் போரம் , நாடுகடந்த தமிழீழ அரசு இப்படி ஏதேனும் ஒரு சில அமைப்புகளாவது இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தார்களா எனில் அதுவும் இல்லை.....ஏன் என்று ஆராயப்போனால் , எமது அறிவுக்குதந்த காரணமொன்றும் தென்படவில்லை.

ஏதோ சில பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஊடகங்களில் எழுதுவதோடு அவர்களின் எதிர்ப்புக்குரலும் அடங்கிவிடுகிறது....

சரி , தாயக ஈழத்தமிழர்கள்?? முகாமிற்குள் முடங்கிக்கிடக்கும் தமிழர்களை விட்டுவிட்டாலும் கூட நமது பார்வை "தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை" நோக்கி நீள்வதில் தவறிருக்கவியலாது... குறைந்த பட்சம் இந்தியா தம் முடிவை மீள் பரிசீலனை செய்யவேண்டும்" என்ற அளவிற்காவது வலியுறுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை...!

எல்லோருக்கும் பயம் , இந்தியாவைக் கண்டு பயம்.....இந்தியாவை எதிர்க்கக் கூடாது , அதனால் தமது சொந்த நலனுக்கோ இல்லை புகலிட நலனுக்கோ பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பயம்...! 

ஆனால் எல்லோருக்கும் தமிழீழம் மேல் ஆசை , அதில் வாழ ஆசை...அதைப் பெற்றுக்கொள்ள ஆசை.....ஆனால் நமக்கு யாரேனும் வந்து பெற்றுத்தர வேண்டும்..........

இப்படிப்பட்ட ஒரு சுயநலச் சமூகத்திலிருந்துதான் அர்ப்பணிப்புள்ள 50 ஆயிரம் வீரர்களை உருவாக்கினார் தேசியத் தலைவர் பிரபாகரன்...........அதற்காக அவர் பட்ட கஷ்டமும் , தியாகமும் , உழைப்பும் இப்படி அணியணியாகப் பிறந்து கிடக்கும் தமிழர்களால் வீணடிக்கப்படுகின்றது..

நேர்மையும் , வாய்மையும் , உண்மையும் அற்ற சுயநல மனிதர்களால் இங்கே போராளிகளின் தியாகம் கானல் நீராகிப்போனது.

அத்தியாகம் மதிக்கப்பட வேண்டுமானால் , இளைஞர்களே , மாணவர்களே , நம்மால் மட்டுமே முடியும்...அரசியல் தலைமைகளைப் புறந்தள்ளி விட்டு நாமே முன் நிற்க வேண்டும்.....நாமே இனி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.......... அதுவே ஒரே வழி.

Saturday, April 03, 2010

தமிழில் பொறியியல் கல்வி : வாழ்த்துவோம்..!

அகம் , புறம் அனைத்திலும் , ஒரு மனிதனின் சிந்தனை முழுக்கவும் நிரம்பியிருப்பது தாய்மொழி. அது ஆங்கிலம் ஆனாலும் , பிரெஞ்ச் ஆனாலும் , தெலுங்கு ஆனாலும் , தமிழ் ஆனாலும் ஒரு மனிதன் சிறு வயது முதல் சிந்திக்க ஆரம்பிக்கும் பருவம் வரையும் ஒவ்வொன்றையும் தனது தாய் புகட்டிய மொழி மூலமாகவே கற்கிறான்.

சிந்தனை ஊறுவதும் , செழிப்புற வாழ்வதும் ஒரு விடயத்தை எவ்வாறு அவன் கிரகித்துக்கொள்கிறான் அல்லது புரிந்து கொள்கிறான் என்பதை ஒட்டியுமே ஆகும்!

அப்படி புரிந்து கொள்வதற்கு , சரியான முறையிலான கல்வி அவசியமும் , அடிப்படையும் ஆகும். ஆனால் தமிழ்த் தேசத்தில்  , பத்தாவது , பனிரெண்டாவது வரை எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்கும் ஒருவன் கல்லூரி சென்றதும் ஆங்கில வழியிலேயே கல்வி கற்கும் விநோதமான , வேடிக்கையான , நகைப்புக்குரிய செயல் நிகழ்கிறது. அதற்கு கூறப்படும் காரணமோ அதைவிட நகைப்புக்குரியது. உலகளாவிய முறையில் ஆங்கிலம் தான் சிறந்தது என்ற குருட்டுத்தனமான , பிற்போக்கான நம்பிக்கைதான் அதற்கு அடிப்படை.

உலகில் சிறந்த சாதனைகளைப் படைத்து வரும் ஜப்பானியர்களும் , ஜெர்மானியர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , தத்தமது தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்கிறார்கள். அவர்கள் சாதிக்கின்ற போது தமிழர்கள் மட்டும் சாதிக்கவியலாது , போட்டியில் முன்னேறவியலாது என்ற நம்பிக்கையை குருட்டுத்தனமான நம்பிக்கை என்று நான் விளிப்பது சரிதானே நண்பர்களே?

அடுத்து ஆங்கிலமே உலக மூலம் என்ற கருத்தும் மிகத் தவறானது. உலகின் பெரும்பான்மையான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சீனாவாகட்டும் , லத்தீன் அமெரிக்காவாகட்டும் , ஐரோப்பாவாகட்டும் ஆங்கிலத்தை ஒரு வணிக மொழியாகக் கூட அவர்கள் கையாள்வதில்லை.


இத்தகைய சூழலில் தான் நாகர்கோவில் அண்ணா பல்கலையில் இயந்திரவியல் படிப்பும் , கட்டிடவியல் படிப்பும் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழில் கற்பிக்கப்படும் என்ற தேனான அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. இதைவிட இனிப்பான சேதியொன்று சமீப காலத்தில் இருக்க முடியுமா? நாம் பேசுகின்ற மொழியில் , நாம் புரிந்து கொள்கின்ற மொழியில் கல்வியைக் கற்பதன் மூலமே கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் என்ற பாரிய உண்மை வெளிப்படப் போகிற வேளையிது.

இதன் மூலம் தமிழில் டெக்னிக்கல் புக்ஸ் என்கின்ற தொழில்நுட்ப நூல்கள் பெருகும் , அங்கு கல்வி கற்கின்ற மாணாக்கர்களின் அறிவுத்திறன் பெருகும். அந்த முயற்சிக்கான ஆதரவை வழங்க வேண்டியது தமிழ்ப்பெற்றோர்களின் கடமையாகும். மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சர்வ நிச்சயமாக அந்த முயற்சி தமிழகம் முழுமைக்கும் பரவும்.....

இனி தமிழகம் செழிக்கும் .........கண்டுபிடிப்புக்களில் தலை நிமிரும் ....விரைவில் !

Friday, March 19, 2010

தமிழக பட்ஜெட்...வாக்குச்சீட்டுக்களுக்கு வந்த மவுசு.!

பொதுவாகவே , தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டுகள் எப்படி இருக்குமோ , அப்படியே இருக்கிறது தமிழக பட்ஜெட்.!

கடன் வாங்கி சோறு போடலாம்....பாலம் கட்டலாம்.....விவசாயிகளுக்கு கடன் கொடுக்கலாம்...வேலை வாய்ப்பை ஊக்குவிக்கலாம்..........ஆனால் கடன் வாங்கி கலர் டீவி சும்மா கொடுக்கலாம் என்பதை  உலகுக்கு அறிவித்து உயர்ந்த நாகரீகமொன்றை ஏற்படுத்தியது தமிழகமே என்பதை நினைத்து எல்லோரும் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.! 

மற்றபடி , மத்திய பட்ஜெட்டில் திருப்பூருக்கு கவனம் , மாநில பட்ஜெட்டில் செம்மொழி மாநாடு வாயிலாக கோவைக்கு கவனம் என்பதில் கொங்கு மாவட்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுகவும் , காங்கிரசும் தீவிரமாக முயல்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் , கொங்குச் சீமைக்காரர்கள் , தங்களுக்கு இலவசத்திலோ , வார்த்தை ஜாலங்களிலோ அக்கறையில்லை என்பதை தொடர்ந்து சொல்கிறார்கள்....

சீரான மின்சாரம் , கள் இறக்க அனுமதி , சுயதொழிலுக்கான ஊக்கம் மற்றும் கடன்  இவையிருந்தால் நாங்களே எங்களை சீர்படுத்திக்கொள்வோம் என்பதை எப்போதுமே சொல்லி வருகிறார்கள். 

குறிப்பாக , கள் இறக்க அனுமதி கேட்கும் விவசாயிகள் , இந்திய நிதி நிலை அறிக்கையின் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைப் பார்த்தால் , தமது போராட்டம் எந்தவித பலனையும் தராது என்று புரிந்து கொள்ளலாம்.!

துரதிஷ்டவசமாக , இந்தியாவில் பதவியில் இருக்கும் எந்த அரசும் அடுத்த தேர்தலைத் தாண்டி சிந்திப்பது இல்லை. அடுத்த தேர்தலில் மக்களின் வாக்குக்களை பெறுவது எப்படி என்ற கவனமே பெரும்பாலும் இருக்கிறது. அதனால் தான் தொலைநோக்குள்ள திட்டங்கள் எதுவுமே எந்த நிதி நிலை அறிக்கையிலும் இடம்பெறுவதில்லை. 

அரசு நிர்வாகம் என்பது மக்களின் அமைப்பு..............அந்த நிர்வாகம் புரிகிறவர்கள் மக்களால் தமக்காக உழைக்கும்படி பணிக்கப்பட்டவர்கள். ஏதோ சில இலவசங்களைக் கொடுத்து விட்டு உடனே தம்மை மக்களைக் காப்பாற்ற வந்த இரட்சகர்கள் போல விளம்பரம் தேடிக்கொள்வதென்பது தமிழகத்தில் புதிதல்ல.! 

அத்தகைய விளம்பரங்களின் முன் , உண்மையான மக்கள் சேவை புரியும் குழுக்களோ , மனிதர்களோ மறைந்து போகிறார்கள். இன்றைய அரசியல் சூழல் , நல்லவர்களை அரசியலுக்கு வர விடாமலும் , வந்தாலும் அவர்களை அடக்கியும் வைத்திருக்கிறது. ! 


அப்படி அடக்குவதற்கான கருவியாகவே அரசின் இலவசத் திட்டங்கள் இருக்கின்றன. தமது சுயநலனுக்காக , தாம் மக்களீடத்தே ஓட்டுக்களைப் பெறுவதற்காக , விளம்பரங்களைத் தேடிக்கொள்வதற்காக இலவசத் திட்டங்களைப் உபயோகிப்பதும் ஒரு அதிகாரத் துஷ்பிரயோகமே.!

கழிவரைகளில்லாத வீடுகள் இன்னமும் இருக்கின்றன.  அவர்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன். சராசரியாக ஒரு வீட்டிற்கு 2500 ருபாய்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. சுகாதாரத்தைப் பேணும் வகையில் சிறிய அளவிலான கழிவறைகளை இந்தக் காசுக்கு அமைத்துக்கொடுத்திருந்தால் , அக்கம் பக்கம் ஆள் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு அமரும் துர்பாக்கிய நிலை தாய்மார்களுக்கு நீங்கியிருக்கும்.!

மற்றபடி ஒருசில பாராட்ட வேண்டிய அம்சங்களும் இருக்கின்றன.....சென்னை அண்ணாசாலை மேம்பாட்டுக்கு 500 கோடி , சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இன்னும் பலகோடி , சென்னை ராஜிவ் காந்தி சாலையில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதே சமயம் , சென்னையைச் சுற்றியே மேம்பாலங்களைப் பற்றீ சிந்திக்கிற தமிழக அரசாகவே இன்னும் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 


தமிழக பட்ஜெட் : 

புதிய மொந்தையில் பழைய கள்....
மாற்றமடைந்த கட்டிடத்தின் வடிவமைப்பு , பட்ஜெட்டின் மனப்பாங்கை மாற்றவில்லை.!




Friday, February 19, 2010

இந்தியனாக இருப்பதில் உள்ள சிரமங்கள்.!

எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான். ஆனால் என்ன செய்வது? இந்தியனாக இருப்பதிலுள்ள சிரமங்கள் அதிகரித்துக்கொண்டே போகத்தான் செய்கின்றன. அதற்குக் காரணம் நாமில்லை என்பதை எல்லா இந்தியர்களும் அறியவே செய்வார்கள்.!

சில தினங்களுக்கு முன்னால் , இந்தியர்களாகவே ஹைதராபாத் சென்று "பெல்" நிறுவனத் தேர்வினை எழுதி விட்டு வந்த தமிழக மாணவர்களைக் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள் ஆந்திர மாணவர்கள். அங்கே கைகலப்பில் ஈடுப்பட்டது ஆந்திரமும் , தமிழகமும் -இதில் இந்தியன் எங்கே வந்திருக்கிறது. 

மும்பையில் ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் , உ.பி. மாநிலத்தாரை மகாராஷ்டிராவின் நவ் நிர்மாண் சேனாவினர் தாக்கிய போது வெகுண்டெழுந்த இந்திய மீடியாக்கள் , பத்திச் செய்தியாகக் கூட ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைச் செய்தியாக்க வில்லை. நாம் இந்தியர்களாகவே இருக்கிறோம். அவர்கள் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லை போலும்.!

தீவீரவாதத்திற்கெதிராகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்மக்கள் புலிகளை அங்கீகரிக்கவில்லை என்று சொன்ன இந்தியர்கள் - குறிப்பாக சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் சேலையைப் பிடித்து அரசியல் பாடம் படித்துக்கொண்டிருந்த பிதாமகர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று "யாழ்ப்பாண தமிழர்கள் " என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு இந்திய ஏடு எடுத்துப் போட்டிருக்கிறது பாருங்கள்.....!!! அதை அப்படியே கீழே தருகிறேன். 
A Jaffna man blames India for the defeat of the LTTE. “India had failed to stop the last leg of the war between the Lankan forces and the LTTE and prevent the killing of thousands of Tamil civilians,” they complained.Tamil Nadu Chief Minister M Karunanidhi only enacted a “drama” in support of the Tamils here, they sneered.

source : The New Indian Express  

தமிழில் அதை மொழி பெயர்த்திருக்கிறேன். அது கீழே.



யாழ்ப்பாண தமிழர் ஒருவர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவையே குற்றஞ்சாட்டுகிறார். இறுதிக்கட்ட போரை நிறுத்துவதற்கு இந்தியா தவறிவிட்டது , அதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதைத் தடுப்பதிலுமிருந்து தவறிவிட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை ஆதரிப்பது போல நாடகம் மட்டுமே நடாத்திக்கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார் என்று அந்த ஏடு பிரசுரித்திருக்கிறது.


அத்துடன் , யாழ்ப்பாண மக்களின் பொதுப்படையான கருத்தாக இருப்பதாக இன்னொரு பத்தியையும் பிரசுரித்திருக்கிறது.

The businessmen and others Express spoke to made it clear that they had fraternal feelings towards Indians. The issue was with the government in Delhi and the ruling party in Tamil Nadu, they stressed. The general feeling here is that Congress leader Sonia Gandhi had punished people for a crime they did not commit.
source :The New Indian Express , Date 18th Feb 2010

இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய வெகுபல யாழ்ப்பாண வாசிகளும் இந்தியாவின் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். இந்திய அரசாங்கத்தின் மீதும் , தமிழக ஆளுங்கட்சியின் மீதுமே அவர்கள் வெகுவாக குற்றஞ்ச்சாட்டினார்கள். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி அவர்கள் தம்மைத் தண்டித்து விட்டதாக வேதனைப் பட்டார்கள் என்றும் அந்த ஏடு எழுதியிருக்கிறது. 

தமிழ்த்தேசியவாதிகள் கதறியபோதும் , தமிழினம் அழிகிறது என்று ஓலமிட்ட போதும் வாய்மூடி மெளனியாக இருந்த இந்திய அரசினையும் , இந்திய அரசிற்குக் கப்பம் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் குறுநில மன்னனையொத்த தமிழக அரசினையும் , எவ்வாறு எமக்கான அரசாக ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லுங்கள். எந்த அடிப்படையில் நாம் இந்தியர்களாக இருப்பதில் பெருமை கொள்ள முடியும் சொல்லுங்கள்.

தமிழர்களின் மன வேதனையை தீர்க்கத்தவறிய மன்னனை மக்கள் இரசிப்பதிலும் , போற்றுவதிலும் நியாயம் ஏதும் உண்டா சொல்லுங்கள்... அப்படி போற்றுவதிலிருந்து மக்கள் தவறுகின்ற போது மனவேதனையைத் தீர்க்கத் தவறியது மன்னனின் தவறுதானேயொழிய மக்களின் தவறாக முடியுமா?

ராஜிவ்காந்தி என்ற ஒரு உயிருக்காக ஈழத் தமிழர்களை கொன்றொழித்தீர்கள். இந்திராகாந்தியைக் கொன்றொழித்தவனை இன்னமும் சீக்கியர்கள் தேசபக்தனாக போற்றும் போது அமைதியாக இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்ற இளந்தமிழர் இயக்கத்தினரின் நேர்மையான கேள்விக்கு பதில் சொல்வதற்கு துப்பிருக்கிறதா இந்திய காங்கிரஸ் காரர்களிடம்? 

இந்திராகாந்தியைக் கொன்ற பியாந்த் சிங்கை தியாகியாக வருணித்து பொற்கோவிலில் புகைப்படத்தை வைத்து சீக்கியர்கள் வழிபடுவதை ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர். இணைப்பு இதோ இங்கே.!

அதைப் பற்றி கேட்டதற்கு , பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது என்று பஜனை பாடியிருக்கிறார் இந்திய தேசிய வியாதி முத்திப்போனவர்களில் மூத்தவரான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.  ( ஆதாரம் : குமுதம் ரிப்போர்ட்டர் )
பஞ்சாப் என்பது உலகமானால் , அதில் தலையிட மாட்டோம் என்றால் ஏன் இலங்கைக்கு மட்டும் ஆயுதம் கொடுத்து ஈழத்தமிழர்களைக் கொன்றீர்கள் என்று கேட்டால் , ஆயுதமெல்லாம் கொடுக்கவில்லை , சும்மா ரேடார் மட்டுமே கொடுத்தோம் என்றீர்கள் . பிறகு இலங்கை இராணுவச் சாயம் பூசி அனுப்பின இரண்டு போர்க்கப்பல்களின் குட்டு வெளிப்பட்டது. பொன்சேகாவிற்கும் - இராஜபக்சேவும் பிரச்சினை என்றவுடன் கடல் தாண்டிப் போய் பஞ்சாயத்து பண்ணி வைத்தீர்கள்.

இப்படி இந்தியர்களாக நாங்கள் இருப்பதில் ஏகப்பட்ட சிரமங்களை நீங்களே உருவாக்கி விட்டு , தேசப்பற்றுடன் பேசுங்கள் என்றால் எங்கிருந்து வரும் தேசப்பற்று. ? 
அதென்ன சுக்கா , மிளகா - கடையில் போய் கால் கிலோ வாங்கிவர....? இன்னமும் கூட எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான்...
அப்படியாவது இருக்க விடுவார்களா இந்த இந்திய தேசிய வியாதிகள்?

இப்படிக்கு,
இன்னமும் ஒரு இந்தியன். !

Thursday, January 07, 2010

செம்மொழி மாநாட்டை புறக்கணிப்போம்.....! மலேசிய துணைமுதல்வர்...!



செய்தி.....

“ மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் ”


இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார்.

“ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி கூறினார்.

ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்.

“தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான்.

இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.


செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளப்போவதில்லை


தமிழ் நாட்டில் நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிலும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.


“தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர்”, என்றார் இராமசாமி.


கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.


இன்று இது போன்ற மாநாடு அவசியமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட பொது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?”, என்று அவர் வினவினார்.


“கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்”, என்றாரவர்.

உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் கோவையில் நடபெறவிருக்கும் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக கூறினார்.

மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“மலேசிய தமிழர்களான நாம், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்கு கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தை கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது”, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்.

http://www.malaysiaindru.com/?p=30202

Tuesday, November 17, 2009

தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்


[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 04:44.28 AM GMT +05:30 ]



முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக  அழுவதாகப் புலம்புகிறார்.

இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-

மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை

இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.

நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.


  "இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.


இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.

இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani - November 18,2009)


கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது  "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப்  புதுக் கதை பேசுகிறார்.


வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.


இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.


இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள். 


இந்த ரணில் விக்கிரமசிங்கதான் .  தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.


விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை  நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர். 


மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.


இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான்  தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள்.  இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும்  அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.


விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.


இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார்.

இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும்  விடுதலையில் (17-11-2009)  வந்த செய்தி.


கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.
எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
நக்கீரன்

நன்றி : தமிழ்வின்