Thursday, May 27, 2010

த. தே. கூவை தடை செய்யக் காரணங்கள் உள்ளன - ஒரு சிங்கள ஏடு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய போதுமான காரணங்கள் இருக்கின்றன என்று ஒரு சிங்கள இணைய ஏடு சொல்கிறது... இந்த "போதுமான" என்ற வார்த்தைக்கு லங்காவெப் அந்த சிங்கள ஊடகம் கையாண்டிருக்கிற அல்லது உதாரணம் காட்டியிருக்கிற சேதி இன்னமும் விசேடம்...

அதாவது , இந்திய நடுவண் அரசு "புலிகளை" தடை செய்ய அல்லது சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் பொருந்துமாம்....

இந்திய அரசு புலிகளை சட்டவிரோத அமைப்பாக அறிவித்ததற்குக் கூறியிருந்த காரணங்களை முழுவதுமாகப் படிக்க இங்கே க்ளிக்கவும்...

சீன அரவணைப்பில் சுகம் காணும் சிறிலங்கா அரசை திருப்திப் படுத்த இந்திய நடுவண் அரசும் , தமிழக அரசும் போட்ட உத்தரவை எடுத்துக்கொண்டு , தமிழீழ மக்களின் ஒரே குரலாக ( அது மட்டுப்படுத்தப்பட்ட , தணிக்கை செய்யப்பட்ட குரலாகவே இருந்தாலும்)  இன்று இலங்கைத் தீவினுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே தமிழருக்கான வாய்ப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சிங்கள் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் எழுதுகிறார் எனில் , சிங்களர்களின் மனப்போக்கு என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்...


ஜனநாயக ரீதியாகக் கூட தமது குரலை எடுத்தியம்ப தமிழர்களுக்கு அனுமதியளிக்கத் தயாராக இல்லை இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களச் சமுதாயம் என்பதை "தில்ருக் கன்னன்கரா" என்ற  சிங்கள எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...



Demonstrations regularly carried out by separatists elements and civil disobedience campaigns TNA has vowed to carry out.  More disquiet and threat is faced by Sri Lanka than by India by these harsh campaigns done under the guise of peaceful protest. Ultra racism associated with these is another grave concern for Lankans.

 விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்றார்கள்....ஏதோ , ஆயுதமெடுத்துப் போராடியது மட்டுமே குற்றமென்பதாகவும் , ஜனநாயக முறையில் போராடி இருந்தால் சுதந்திரத்தை சும்மா தூக்கிக்கொடுத்திருப்பார்கள் என்று சொல்லும் அகிம்சாவாதிகள் இந்த அநியாய வாதம் பற்றி என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும் போலவே இருக்கிறது....

இந்தியா தான் வழிகாட்டுகிறது சிறிலங்காவிற்கு எப்போதும் என்று வேறு சொல்கிறார் கட்டுரையாளர்......அதையும் பார்ப்போம்...

Indian concerns further give rise to yet another important issue that affects Sri Lanka more than India. India illegalized all separatist activity in 1962 whereas it took Sri Lanka another 21 years to follow suit. During this time Tamil separatists passed the Vaddukoddai Resolution in 1976. Had Sri Lanka followed India in 1962 in illegalizing all forms of separatism, this would not have happened.
இந்தியா 1962 லேயே அனைத்து தனிநாட்டுக் கோரிக்கைகளையும் தடை செய்து விட்டதாகவும் , ஆனால் சிறிலங்கா 21 வருடங்கள் கழித்தே அதைச் செய்ததாகவும்  சொல்கிறார்.....

இப்போது சில விடயங்களைப் பார்ப்போம்...

- விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்து விட்டு நிராயுதபாணியாக  "13 வது" சட்டதிருத்தத்தின் மூலம் "வட கிழக்கு " மாகாணங்களைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருந்துவிட வேண்டும் என்று சிங்களத்துக்குச் சார்பான தொரு ஒப்பந்தத்தை திணித்தது இந்தியா.....

- இலங்கை புலிகளைத் தடை செய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே தடை செய்தது இந்தியா..

- புலிகளை ஒடுக்க அனைத்து வகை ஆயுத , இராஜதந்திர உதவிகளைச் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்......அதை இன்று வரை இல்லை என்று நிருபிக்க முடியவில்லை இந்தியாவால்.....குறைந்தபட்சம் , தமிழகத் தமிழர்களின் திருப்திக்காவது நிருபிக்க முயலவில்லை.....லோக்கல் கதர்ச்சட்டைகள் தான் இல்லை இல்லை என்று கூவினார்கள்.......டெல்லி ஏறெடுத்தும் பார்க்கக் காணோம்...

- தமிழினத்திற்கெதிரான யுத்தத்தில் ஐநாவின் , மேற்குலகத்தின் அழுத்தங்கள் அத்தனையையும் குடைபோல நின்று சிங்களத்தைக் காத்தது இந்தியா என்பது உண்மைதானே.....அதன் மூலம் தமிழின அழிவுக்கு இந்தியாவும் காரணமே என்பதுவே தமிழர்களின் வாதம்....

இவ்வாதங்களை மறுக்கவோ , மறைக்கவோ செய்ய இயலாத இந்தியா "புலிகளால்" இந்தியத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் என்று அறிவிப்பது என்பது முறையோ இல்லையோ பிறகு பார்க்கலாம்....அது சிறிலங்காவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவே இருக்கலாம்....காரணம் இந்தியாவை விட்டு சிறிலங்கா சீனாவை தேடிப் போய்க் கொண்டிருக்கிறது...

அதை பன்னாட்டு பொருளாதார இதழான "பைனான்சியல் டைம்ஸ்"ல் இந்திய ஆய்வாளர்  இப்படிக் குறிப்பிடுகிறார்..

"China has been trying to jump in and seize more opportunities in Sri Lanka," says Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research, a New Delhi think-tank.
China was Sri Lanka's biggest source of foreign funding in 2009, providing $1.2bn - almost triple the amount given by the Asian Development Bank, the number two overseas lender

source : financial times

நிலைமை இவ்வாறிருக்க , சிங்களத்தைக் குளிர்விக்க இந்திய இராஜதந்திரிகள் புலிகள் மீது பாய்கிறார்கள்....அதைச் சற்றும் சட்டை செய்யாத சிங்களர்கள் 
இந்தியாவுடனான "செபா " ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்கிறார்கள்.......

President Mahinda Rajapaksa on Tuesday said Sri Lanka would not enter into trade agreements that would have an adverse effect on the country’s economy when he met a group of protestors against the implementation of a comprehensive economic partnership agreement (CEPA) with India.

ஆக , சீனாவிற்கு அம்பாந் தோட்டை துறைமுகம் , அனல்மின் நிலையம் என்று அள்ளிக்கொடுக்கும் சிறிலங்கா "இந்தியாவிற்கு" ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்ததிற்கு "பெப்பே" காட்டுகிறது என்றால் சிறிலங்கா செல்லும் திசையைப் புரிந்து கொள்ளாத இராஜதந்திரிகள் தான் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலைதானே????

அந்த இராஜதந்திரிகள்  , உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மறுப்பது மட்டுமின்றி இன்னமும் புலிப்பூச்சாண்டி காட்டுகிறார்கள்.......காட்டி தமிழக மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்...

அப்படித் திசை திருப்ப முயலும் இந்த இராஜதந்திரிகள் , ஒருவேளை சிங்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு "இந்தியா" சொன்ன அதே காரணங்களுக்காக தடை செய்யப்படுமானால் அதையும் வழிமொழிவார்களா என்பதே நம் கேள்வி......

யாருக்குத் தெரியும் ......த.தே.கூட்டமைப்பும் கூட சட்டவிரோத அமைப்பென்ற கெஜட் அறிவிப்பும் கூட கூடியவிரைவில் வரலாம் என்கிறீர்களா நண்பர்களே???

கோபாலபுரத்தாரின் ஆசியும் , சொக்கத்தங்கத்தின் ஆதரவும் இருக்கும் போது இந்திய இராஜதந்திரிகள் இதைக் கூட செய்ய மாட்டார்களா என்ன????

-கதிரவன்

1 comment:

Anonymous said...

சிந்திக்க வேண்டிய,

குறிப்பாக இந்தியர்கள் சிந்திக்க வேண்டிய ஆய்வு