Wednesday, May 12, 2010

படித்தவை (பிடித்தவையும் கூட)


படித்ததில் பிடித்தது.....

ஊருக்குத்தான் உபதேசம்.........! 


வெளுத்துக்கட்டுகிறார் திரு. நம்பி அவர்கள் திரு.கருணாநிதியின் அடேங்கப்பா கட்டளையை......பி.டி.எப் இணைப்பை படிக்கத்தவறாதீர்கள்.......!



****

சுயநலப் பேய்களடா தம்பி...சுக்குக்கும் உதவாரடா...!

ஈழத் தமிழர்களுக்காக வீரமரணம் அடையத் தயாராக இருக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் பண்ணிய , சிவப்புச்சட்டைகளிலேயே கொஞ்சம் மாறுபட்ட வாய்ச்சவடால் வீரராக தோற்றமளிக்கும் திரு.தா.பாண்டியன் அவர்கள் இப்போது என்ன செய்கிறார் என்று அவர்கள் பத்திரிக்கையிலாவது போட்டால் படித்துத் தெரிந்து கொள்வோம்....


தமிழர்களுக்காக வீரமரணத்துக்கு தயாராகுங்கள் - தா.பாண்டியன்

எழவெடுத்த சுயநலக் கூட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகளீலும் பஞ்சமில்லை தான் போங்கள்.

****

நம்மில் ஒற்றுமை நீங்கின்?

யார் இந்த சேரமான் ? எங்கிருந்து வந்தார் திடீரென்று ? யாருடைய விருப்பமாக திரு.ஜெயானந்த மூர்த்தி அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்??

என்னதான் நடக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசில்? யார்தான் பிரச்சினை செய்கிறார்கள்??? யாராவது தெளிவு படுத்தினால் நலம்....இப்படிப்பட்ட குழப்பங்கள் தொடருமானால் , சத்தியமாக தமிழர்களின் விடுதலை உணர்வும் , தேசியத்தின் பாலான விருப்பும் மழுங்கப்பட்டுவிடும்......

அதையொட்டி படித்ததில் பிடித்தது திரு.ஜெயானந்த மூர்த்தி அவர்களின் அறிக்கை...

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்.

சமீபத்திய காமெடிகள்...
திரு.ஜெயராம் ரமேஷ் அவர்களின் சீன விஜயமும் , உள்துறை அமைச்சகம் பற்றிய கமெண்ட்டும்.....

திரு. திக் விஜய்சிங் அவர்களின் ப.சிதம்பரம் பற்றிய கமெண்ட்.....அராஜகமாக நடந்து கொள்கிறாராம் திரு.சிதம்பரம் மாவோயிஸ்டுகள் விடயத்தில்.....


உச்சகட்ட காமெடி....

சிறிலங்காவைப் போல் அராஜகமாகவும் , மனசாட்சியின்றியும் மாவோயிஸ்டுகளின் விடயத்தில் நடந்து கொள்ள மாட்டோம்.....

- உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 

ஆனால்  , போரில் மகிந்தா வென்றவுடன் முதல் பாராட்டு டெல்லியிடமிருந்து....

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வந்த போது , அதை முழுமூச்சாக தோல்வி அடையச் செய்த பெருமை இந்திய காங்கிரஸ் அரசுக்கே உண்டு.....அப்படியானால் அராஜகத்திற்கு மனச்சாட்சியின்றி ஆதரவு நல்கியதா இந்திய நடுவண் அரசு என்ற கேள்வி நம்மில் எழுந்தால் அது தேசத்துரோகமா என்ற எமது கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் வைத்திருக்கிறதா?

1 comment:

அ. நம்பி said...

//வெளுத்துக்கட்டுகிறார் திரு. நம்பி அவர்கள் திரு.கருணாநிதியின் அடேங்கப்பா கட்டளையை......பி.டி.எப் இணைப்பை படிக்கத்தவறாதீர்கள்.......!//

குறிப்புக்கு மகிழ்ச்சி ஐயா.

அன்புடன்
அ. நம்பி