Wednesday, November 11, 2009

சிறிலங்காவிடம் போர்க்கப்பல்களை திருப்பிக்கேட்கிறது இந்தியா.!

சிறிலங்காவின் டெய்லி மிரர் பத்திரிக்கை தலைப்பிலிருக்கும் செய்தியை இவ்வாறு வெளியிட்டிருக்கிறது.


India wants warships it lent to Sri Lanka returned

  
The Indian Coast Guard is uncertain about getting back two warships that it leased out to the Sri Lankan Navy in 2007 on an annually renewable contract. The two vessels, Coast Guard Ship (CGS) Varaha and CGS Vigraha, equipped with helicopters and rapid-fire machine guns, were leased out when Colombo was preparing for the offensive against the Liberation Tigers of Tamil Eelam (LTTE). But now the Sri Lankan Navy appears to be clueless about the Coast Guard’s demand for returning the warships and renamed the Varaha as Sagara and the Vigraha as Sayurala. Sri Lankan Navy spokesperson Captain Athula Senarath said on phone from Colombo that his country was grateful to India for making the two vessels available to it.
ஈரோட்டில் பிடிப்பட்ட  டாங்கிகள் இலங்கைக்குப் போகிறது என்றோம்..

இல்லையென்றார்கள்...!

கோவையில் பிடிப்பட்ட இராணுவ வாகனங்கள் இலங்கைக்குப் போகிறது என்றோம்

இல்லையென்றார்கள்...!

இரண்டு இந்தியர்கள் , அனுராதபுர தாக்குதல்களில் காயம்  பட்டார்கள்...அவர்கள்  இந்திய ரேடார்களை இயக்கினார்கள் , இது இலங்கைக்குச் செய்த உதவி என்றோம்....

இல்லை போருக்கான ஆயுத உதவிகளைச் செய்யவில்லை.....வெறும் தற்காப்பு உதவிகளைத் தான் செய்தோம் என்றார்கள்..

இப்போது இந்த இரண்டு போர்க் கப்பல்களை கொடுத்திருந்தார்களாம். அதை திருப்பிக் கேட்கிறார்களாம்.

போர்க் கப்பல்கள் என்ன கேடயங்களா ? தற்காப்புக் கருவிகளா ?


இப்படி பொய்க்கு மேல் பொய் சொல்லி தமிழகத் தமிழர்களை மடையர்களாகவும் , முட்டாள்களாகவும் மாற்றத் துடிப்பது ஏன்?

இவர்களின் அதிகாரப்பூர்வ தமிழக ஏஜெண்டாக  முதல்வர் கருணாநிதி மாறிப்போனது ஏன்?

இதே முதல்வர் கருணாநிதி அவர்கள் அன்று சொன்னது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிகிறது.....

"போருக்கு உதவி செய்யவில்லை" என்று இந்திய அரசு பலமுறை சொல்லிவிட்டது என்றார்...

இப்போது என்ன சொல்கிறார்..????

கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும்..!!!

இப்போது வந்திருக்கிறது.........


அடப்பாவிகளா.............உங்கள் விளையாட்டுக்கு நாங்கள் தான் கிடைத்தோமா? தமிழர்கள் தான் கிடைத்தார்களா?

இனியும் நியாயம் இந்திய அரசின் மூலம்தான் கிடைக்கும் என்று சொல்லித் திரிபவர்கள் யார் என்று அடையாளம்  கண்டு கொள்வது அவசர அத்தியாவசியம் என்று இன்னொரு  முறை கட்டியம் கூறுகிறது இந்தச் செய்தி.!

No comments: