Wednesday, February 24, 2010

ஜய்ய்ய்ஞ் ஜக்க்க்க்க்க்க்க்!

பொதுவாகவே , இந்திய அரசியலில் , குறிப்பாக தமிழக அரசியலில் ஆளுங்கட்சியோ , எதிர்க்கட்சியோ , எதிரிக்கட்சியோ தத்தமது கூட்டணித்தாளங்களுக்கு ஏற்பவே விமர்சனங்களை வைப்பது புதிய காட்சியல்ல. அதையே மீண்டும் உணர்த்துகிறது நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்...!


தமிழகத்தை பொறுத்தவரை இந்த ரயில்வே பட்ஜெட் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது' என, ரயில்வே பட்ஜெட் குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்

ரயில்வே பட்ஜெட் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை வெறும் வணிகக் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்காது, ஒரு சமூகப் பார்வையோடு கருத வேண்டும் என்ற கொள்கை கோட்பாட்டை கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டிலும், இக்கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, நாடு முழுவதும் புது ரயில்வே பாதைகளையும், ஏற்கனவே இருக்கும் பாதைகளுக்கு இரண்டாவது பாதை அமைக்க அறிவித்து இருப்பதை பாராட்டுகிறேன் என்று பாராட்டியிருக்கிறார்.

ஆனால் உண்மை நிலை என்ன?

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கென்று உருப்படியான திட்டங்கள் எதுவுமே இல்லாத நிலை காணப்படுவது வெள்ளிடை மலை.


Railway Minister Mamata Banerjee announced that 54 new trains will be introduced.

Here is a list of the trains with their origin and destination points:
Tanakpur - Jauljobi
Bilaspur - Leh
Amethi - Shahganj via Sultanpur
Bahadurgarh - Jhajhar
Ajmer - Kota
Vyas - Kapurthala
Guwahati - Mumbai Karambhumi train
New Jalpaiguri - Amritsar Karambhumi train
Janambhumi trains will run once a week
Ahmedabad - Udhampur Janambhumi train
16 Bharat Tirth train between Himachal - Kanyakumari
Indore - Mumbai New Duranto
Sultanpur - Mumbai
Sultanpur - Ajmer
Kolkotta - Ajmer
Hardwar - Mumbai
Sambhalpur - Hawarh
Gwalior - Pune
Ahmedabad - Jodhpur
Kolkotta - Darbhanga
Gwalior - Chindwara
Hawarh - Shirdi
Trains will be named after great leaders
First rail line in Andaman and Nicobar
to connect Port Blair to Diglipur, farthest town of North Andaman


இதில் தமிழகத்துக்கான உருப்படியான திட்டம் எது என்று தெரியவில்லை.....ஆனால் , ஆளுங்கட்சியும் , எதிர்க்கட்சியும் விழுந்து விழுந்து பாராட்டுகின்றன. ஆளுங்கட்சிக்கோ , காங்கிரஸை தன் பக்கமே வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்....எதிர்க்கட்சிக்கோ காங்கிரஸை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற கட்டாயம். !!! இதில் தமிழகத்தின் நலனைப் பற்றி கவலைப்படுவதற்கு நேரமில்லை....!


மேற்கு வங்கத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்ற இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கான எந்தவித உருப்படியான திட்டங்களும் இல்லை....ஏற்கனவே கடந்த நிதியாண்டில் பேசப்பட்ட திட்டங்களையே மேல்பூச்சு பூசி அறிவித்திருப்பதை உச்சத்தில் வைத்துக்கொண்டாடும் தமிழக முதல்வர் அவர்கள் " தனது மகனும் , இராசனயத்துரை அமைச்சருமான திரு.அழகிரி அவர்களின் கோரிக்கையான "உர விலை " உயர்வை ரத்து செய்ய வேண்டும் " என்பதை புறந்தள்ளி விட்டு மத்திய அரசாங்கம் செயல்படுவதை மறந்துவிட்டாரா எனத்தெரியவில்லை.!

ஒரு துறையின் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள வில்லையெனில் அந்த அமைச்சர் பதவிதான் எதற்கு? பன்னாட்டுக்கம்பெனிகள் உயர்வு பெற நம் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கத்துணிகிற இந்த நடுவண் அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்கமுடியும்?

இப்படியான கேள்விகள் , இந்திய அரசியலில் , ஜனநாயகத்தில் எழப்போவதே இல்லை..............இது போன்ற ஜய்ய்ய்ய்ய்ய்ய்ஞ்......ஜக்க்க்க்க்க்க்க்குகள் இருக்கும் வரை....!

சுயநலப்பேய்களடா  தம்பி இவர்கள்
சுக்குக்கும் உதவாராடா தம்பி...........

பன்னாட்டு முதலாளிகள் தான் இவர்க்கு
படியளந்து கொடுப்பாரடா தம்பி.........

பலபேரை ஏமாற்றி நீ பலகோடி
பணம் பெற்றால் அரசுதான் உனதாகும்....
பாவம் ஏழை விவசாயி பிணமாவான்.
உண்ணவோ உணவுமில்லை.....
உடுத்தவோ உடையுமில்லை...
ஒதுங்கவோ கூரையில்லை.....ஆனால்
இந்தியன் நிலவுக்குப் போறானடா....

புண்ணாக்கு அரசியல்வாதிகளால் நாம்
புவியாள்வோமென்பது பொல்லாத புரளியடா....

தம்பி...........

சுயநலப்பேய்களடா  தம்பி இவர்கள்
சுக்குக்கும் உதவாராடா தம்பி...........

No comments: