Wednesday, September 09, 2009

"ழ"கரம் - வேராய் நம் தமிழ்.விழுதுகளாய் நாம்!

முதல் வணக்கம்….!

தமிழால் தமிழராய் இணைவோம்!

முதன் முதலில் இவ்வலையுலகில் தனது காலடியைப் பதித்து உங்கள் கணினித்திரையில் தவழும் இந்த ‘ழ’கரம் வலையிதழ் சில சமுதாய நோக்கம் கொண்ட இளைஞர்களின் தவம் என்றால் அது மிகையன்று.

சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் தாங்கவொணா துன்பங்கள் நிறைந்து கிடக்கின்றன. சமுதாயத்தை திருத்த வேண்டிய கடமையும் , பொருப்பும் உள்ள தலைமைத்துவங்களோ ஏனோ அப்பொருப்பை உணர்ந்தவர்களாயில்லை.

அத்தகைய தலைமைத்துவங்களை இடித்துரைத்து திருத்தும் வண்ணம் மக்களாட்சியின் நான்காம் தூண்களான பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் இன்னபல ஊடகங்களும் இருந்திருக்க வேண்டும். அப்படியொரு கனவுடன் தான் இன்றைக்கு ‘ழ’கரம் உங்கள் கண்முன் காட்சியளிக்கிறது.

சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ழகரம் தழுவிச்செல்வாள். நீங்களும், நாங்களும் , இணைந்துதான் இந்த வலையிதழை , மின்னிதழை நடத்தப் போகிறோம்.

‘ழ’ என்பது தமிழின் சிறப்பு. தமிழின் சிறப்பே தமிழனின் சிறப்பு. ஆகவேதான் இந்த வலைப்பூவின் பெயர் ‘ழ’கரமாயிற்று. இது இப்போதைக்கு வலைப்பூ.....ஆனாலும் கூடிய விரைவில் இதை மின்னிதழாகவும் , அச்சிதழாகவும் வெளிப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. அதுவரை அவ்வப்போது சில பதிவுகளுடன் உங்களோடு தொடர்பிலிருப்பாள் ழகரம்.!

1 comment:

South-Side said...

சோதனைப் பின்னூட்டம்.!