Tuesday, June 15, 2010

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு : காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு?

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் அலிக்கு தொடர்பிருப்பதாகவும் , அதுபற்றிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஐந்து வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரினால் புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது பற்றிய நக்கீரன் செய்தி வருமாறு.

விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு: காங்கிரஸ் எம்எல்ஏ மீது புகார்


விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் வழக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம், தண்டவாள தகர்ப்பில் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இல்லை. விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று வழுக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். 


தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ மீது புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதுபற்றி நாம் எழுதிய இன்னொரு பதிவுக்கு இங்கே செல்லலாம்..


சரி யார் இந்த  ஹசன் அலி? 


மகிந்த இராஜபக்சே வின் மிக நெருங்கிய நண்பர். கடந்த மாதம் திரு.அசன் அலி அவர்களின் வீட்டைத் திருடர்கள் கொள்ளையடித்த போது மகிந்த இராஜபக்சேவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு நெருக்கம்...

இன்னும் அசன் அலியின் சிங்களத் தொடர்பு பற்றிய கட்டுரைகள். அக்கட்டுரைகளுக்கான ஆதாரங்களுக்கு நாம் பொறுப்பானவர்களில்லை. 



ஒருவேளை இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் , நிருபிக்கப்படும் பட்சத்தில் , தமிழ்த்தேசிய உணர்வாளர்களை ஒழித்துக்கட்டவே இந்த தண்டவாள தகர்ப்பு என்பதும் உறுதி செய்யப்படும்.

No comments: